வணக்கம் வணக்கம்... வராக நதியை படிக்க வரும் அனைவருக்கும் வணக்கம்... டைப்பிங் ல இருக்கும் எல்லா வகையான கஷ்டத்தையும் உணர்ந்தாச்சு... அதுக்காக நான் திருந்துவேன்னு நினைக்காதீங்க.. நான் மற்றவர்களை கேட்க தான் செய்வேன்...
வராக நதி - 25
ஹோட்டலில் தன் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்த முகிலனிற்கு ருத்ராவிடம் பேசி நான்கு நாட்கள் ஆனதால் பேசவேண்டும் போல் இருந்தது.
உடனே அழைக்க... அந்த பக்கம் ருத்ரா ஆபீசில் முக்கியமான ஆட்களுடன் அமர்ந்து... ஆப்பிள் கம்பெனி
ப்ராஜெக்ட் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டியதிருந்ததால், அதில் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும்
சவால்களை எடுத்து சொல்லி அதை எப்படி தீர்ப்பது என்றும் கலந்துரையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளருகே இருந்த போன் வைரேட் மோடில் இருந்து சத்தமில்லாமல் அதிர்ந்து தான் இருப்பதை
உணர்த்தியது.
அதில் முகிலன் அழைப்பதை பார்த்தவள்...
இந்த நாலு நாளா குடும்பத்தையே மறந்து இப்போ எதுக்கு கூப்பிடுறாங்க... என்று தான் நினைத்தாள்.
அவளுக்கெங்கே தெரியும்... அவனிற்கு குடும்பத்துடன் பேசும் பழக்கம் எல்லாம் இல்லை என்று. வெளியூர்
எப்போதெல்லாம் கிளம்புகிறானோ அப்போது தாயிடம் மட்டும் கூறிக் கிளம்புவான்... தந்தை இருந்தால்
அவரிடமும், இல்லையென்றால் தாய் கூறிக்கொள்வார் என்றுவிட்டு கிளம்பிவிடுவான். வரும்போதும் இதே
கதை தான்... தாயிடம் எப்போது வீட்டிற்கு வருவேன் என்பதை மட்டும் தகவலாக சொல்வான். அதுவும் தாய்
கண்டிப்பாக சொல்லித்தான் போகவேண்டும்.. வரவேண்டும் என்று கூறியதால்... இல்லையென்றால் அதுவும்
இல்லை.
"எஸ்கியுஸ் மீ... நீங்க கண்டினியு பண்ணுங்க"
என்றவாறு வெளியேறினாள்.
தன்னுடைய காபினுக்கு சென்று போனை உயிர்பித்தாள் ருத்ரா. அடுத்த நொடி...
“ஹலோ... ருத்”
என்ற முகிலனின் உற்சாக குரல் செவியினில் மோதியது.
அவள் ஒன்றும் சொல்லாமல் ருத் என்ற அழைப்பை தன்னை அறியாமல் ரசித்தவாறு அவனை கவனிக்க...
"என்ன பேச மாட்டியா...? ரிஷி கோமால இருந்தான்... அந்த அதிர்ச்சில பேச மறந்துட்டேன்... ஆபீஸ் எப்படி
போகுது.. ஒன்னும் கஷ்டமா இல்லையே..."
என்று அக்கறையுடன் கேட்க...
"ஹ்ம்ம்... நல்லா தான் போகுது... எனக்கு தான் புதுசா இருக்கு..."
என்று கூறியவள்.. பின்
"ஆமா உங்க ப்ரண்ட் இப்போ எப்படி இருக்காங்க..."
என்று நலம் விசாரித்தாள்.
"ரெண்டு நாள் முன்னாடி தான் கண் முழிச்சான்... இன்று இரவு கோவை வந்துருவோம்"
என்றான் கார்முகிலன்
ருத்ராவும்...
"ம்ம்ம்... ஓகே... நான் வீட்டுக்கு சொல்லவா இல்லை நீங்களே அவங்ககிட்ட பேசுறீங்களா...?"
என்று கேட்க...
"நீயே சொல்லிரு ருத்... நான் இப்போ ஹோச்பிடல் கிளம்பனும். கொஞ்சம் வேலை இருக்கு"
என்றான்.
"சரிங்க..."
என்று போனை வைக்க போக..
"ருத்... ஒரு நிமிஷம்..."
என்றான் தீவிரமாய்...
"சொல்லுங்க..."
என்று இவள் ஏதேனும் முக்கிய விஷியமோ என்று அவன் குரலில் அலெர்ட் ஆக...
"என் பெயர் என்ன...?"
என்றான் அவன்...
.................. ???? இந்த பக்கம் பதிலே இல்லை...
"ஹலோ ருத்... என் பெயர் கூட தெரியாதா ?"
என்று சீண்ட...
"முகில..."
என்று கூறுவதற்குள்..
"முழுபெயர்..."
என்று கத்தரித்தான்...
"கார்முகிலன் ..." என்று முணுமுணுத்தாள்.
"தெரியுதுல... நானும் பார்த்துட்டே இருக்கேன்... என்கிட்ட மொட்டையா வாங்க.. போங்க... இப்படியே பேசிட்டு
இருக்க... பேர் சொல்லி கூப்பிடு"
என்று கோரிக்கை வைத்தான்.
வீட்டுக்கு பேச நேரமில்லை என்றவன்... இவளுடன் பேச்சை முடிக்க விருப்பமின்றி வளர்த்துக்
கொண்டிருந்தான்.
அப்படி அவன் சொல்லும் போதே... இந்த நான்கு நாட்கள் அவனை அதிகம் நினைத்ததால்,
ருத்ராவிற்குஅவனை மனதிற்குள் அழைக்கும் பெயர் நினைவுக்கு வந்தது.
சிறு புன்னகையோடு அவள்..
"மாட்டேன்.."
என்று கூற...
"அப்போ.. மாமா.. மச்சான்.. அத்தான்...டார்லிங்.. டியர்... இதெல்லாம் ஓகே வா...?"
என்றான். ( இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்.. ?? )
அவள் அதை கேட்டு... முகம் சிவக்க...
"இன்னக்கி உங்களுக்கு என்னமோ ஆகிருச்சி... நான் எப்படியும் கூப்பிடமாட்டேன்... போனை வையுங்க"
என்று வைக்க போக..
"நீ கூப்பிட்டாத் தான் இன்று வீட்டுக்கு வருவேன்... இல்லைனா வர மாட்டேன்"
என்று அடம் பிடித்தான்.
( போச்சு போச்சு... முத்திப் போச்சு... படிக்குறவங்க காண்டாக போறாங்க )
"என்ன நீங்க..."
என்று சலித்தவள்...
"சரி முகிலன்... போதுமா"
என்றாள்.
"போதாது... இப்போ நான் எப்படி உன்னை ருத்ன்னு டிபரென்ட்டா கூப்பிடுறேன்... நீயும் அதே மாதிரி ட்ரை
பண்ணு"
என்றான்.
"சரி... முகில்..."
"வேணாம்... அது ரிஷியோடது..."
"ஹ்ம்ம்... முகிலா..."
"ம்ஹ்ம்... அது அம்மாவோடது..."
யோவ்... என்று எகிற வந்து உதட்டை கடித்தவள்...
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு... ஏற்கனவே மிருதுவான குரலை இன்னும் மிருதுவாக்கி...
"முகி...."
என்றழைத்தவள்... மனதின் படபடப்பில் பட்டென்று போனை கட் செய்தாள்.
இந்த பக்கம் அவள் போனை கட் செய்ததே தெரியாமல் அவளின் குழைவான முகி என்ற அழைப்பிலேயே
லயித்திருந்தான் கார்முகிலன் வெகுநேரமாய்.
அனைவரும் கோவை செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருக்க.. அந்த நேரத்தில் ரிஷி தங்கள்
தொழிலை பற்றி பெற்றோரிடம் கேள்வி எழுப்பினான்... இருவரும் சற்று அமைதியாக இருந்தனர்.
விகாஷினி எதிலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
முகிலன் தான்..
“உன் கம்பெனி இப்போ என்கிட்ட தான் பத்திரமா இருக்கு.. கூடிய சீக்கிரம் உன்கிட்ட திரும்ப வரும்”
என்றான்.
“உன்கிட்டயா.. என்னடா சொல்ற.. அபி கன்ஸ்ட்ரக்ஷன்னா”
என்றான் திகைப்பாக.. விகாஷினி நடந்ததை எல்லாம் கூறியிருந்தாலும் இதனை கூறவில்லையே.
"ஆமா.. உங்க அப்பா அதை விற்க போயிட்டாரு... சோ அதை நான் வாங்கிட்டேன்.. புதுசா தொடங்குன மாதிரி
இருக்கணும்னு பேர் மாற்றி வச்சேன்.. விகாஷினி மேல இருக்குற கோபத்துல அவளை மறைமுகமா எதிர்க்க
ஆரம்பித்து போன வாரம் தான் நேரிடையா பார்த்தோம்..”
என்றான்.
விகாஷினிக்கே இது புதிய செய்தி.. இவன் ரிஷியின் கம்பெனியை வாங்கியிருக்கான் என்பது.
இனி எனக்கு இது தேவை இல்லை.. என்னோட கனவான கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்க போறேன்..
என்றான் புன்னகையோடு.
ரிஷி ஒன்றும் சொல்லாமல் நண்பனை இறுகி அணைக்க...
அதை பார்த்த விகாஷினி..
“சரி.. கம்பெனிய திருப்பி குடுத்துட்டா... நீ ருத்ராவை என்ன பண்றதாக உத்தேசம்... வீட்டுக்குள்ள போட்டு பூட்ட
போறியா.. அதுக்காகவா அவளை விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை விட்டு தூக்கி.. உன் கம்பெனில சேர்த்த..”
என்று சற்று கோபமாக வினவ..
ரிஷி இது எப்போ..!!! என்றவாறு பரிதாபமாக முழித்தான்.
“நீ ரொம்ப நியாயம் பண்ணுற மாதிரி பேசாத.. அவளோட டிசைன் உன் பேர்ல மாற்றி.. அவளுக்கு கிடைக்க
வேண்டிய பணத்தையும் அபேஸ் பண்ணுனவ தான நீ...”
என்று குற்றம் சாற்ற...
“வாட்... பணத்தை நான் அபேஸ் பண்ணுனேன்னா..”
என்றவள்...
“அவளுக்கு குடுக்க வேண்டிய பணத்தை கரெக்ட்டா செட்டில் பண்ணிட்டேன்... பேர் மாத்துறது கேட்டால்... அவ
இங்க ஒர்க் பண்ணியிருந்தா அவ பேர் சேர்த்திருப்பேன்... எங்கயோ இருந்து டிசைன் பண்ணி தந்தா.. கஸ்டமர்
கிட்ட எப்படி சொல்றது.. அதான் என் பேரை போட்டேன்.. இது என்ன அவ்ளோ பெரிய தப்பா..”
என்று கேட்டாள் விகாஷினி.
என்ன தான் தாயின் இன்னொரு முகம் தெரிந்தாலும்... அவர் சிறுவயதில் இருந்து கற்று கொடுத்த தொழில்
அப்போ அப்போ எட்டித்தான் பார்த்தது.
கிருஷ்ணகுமாரும் அங்கு இருந்ததால்... மகளிடம்..
“விகாஷினி... உனக்கு தொழில்ல எது சரி எது தப்புன்னு இனிமே தான்மா புரியும்..”
என்றவர்..
“நான் அவளிற்கு சொல்லித்தறேன்.. இப்போ சண்டை போடாதீங்க...”
என்றார் முகிலனிடம்.
அமைதியாக சிறிது நேரம் இருந்தவன்.. ரிஷியிடம் திரும்பி..
“நான் கம்பெனிய உன் பேருக்கு எழுதி தருவேன்.. ஆனா என் மனைவி அங்கதான் வேலை பார்ப்பாள். அவள்
மற்றும் இல்லை.. அங்க வேலை பார்ப்பவங்க யாரையும் வெளிய போக சொல்ல கூடாது”
என்றான்.
இப்போது விகாஷினியை பார்த்து..
“நீ பணத்தை ஒழுங்கா குடுத்திருந்தா சந்தோசம்..ஆனா ருத்ராக்கு சரியா வந்து சேரலை... உன் தொழில்ல
நிறைய கருப்பு ஆடுகள் இருக்கு.. அதுவும் பணத்துக்காக நீ நான்னு போட்டிப்போட்டு போட்டுக்குடுக்க வராங்க..
அவங்களை எல்லாம் தூக்கிட்டு நம்பிக்கையான மனுசங்களை பார்த்து வேலைக்கு வை..”
என்று இலவச டிப்ஸ்சும் கொடுத்தான்.
அதற்குள் இவர்கள் ஏற வேண்டிய விமானம் வர... ரிஷி தான் முதல் ஆளாக விடைப்பெற ஆரம்பித்தான்.
முகில் பேசியதால் சுணங்கியிருந்தவளை ஏதேதோ பேசி சிரிக்க வைத்து விட்டே கிளம்பினான்.
முகிலிடமும்..
“கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் கம்பெனி வாங்கிக்குறேன்.. அது வரை நீயே பாரு..”
என்று தொழில் பற்றிய பேச்சை முடித்தான். ( ஷப்பா.. இப்போவே கண்ணை கட்டுதே... )
கோவையில் ரிஷி மீண்டும் வந்ததை முகிலன் தன் வீட்டினரிடம் கூற.. அவர்களும் ஆச்சரியப்பட்டு பின்
மனம் மகிழ்ந்தனர்.
வராக நதி - 25
ஹோட்டலில் தன் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்த முகிலனிற்கு ருத்ராவிடம் பேசி நான்கு நாட்கள் ஆனதால் பேசவேண்டும் போல் இருந்தது.
உடனே அழைக்க... அந்த பக்கம் ருத்ரா ஆபீசில் முக்கியமான ஆட்களுடன் அமர்ந்து... ஆப்பிள் கம்பெனி
ப்ராஜெக்ட் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டியதிருந்ததால், அதில் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும்
சவால்களை எடுத்து சொல்லி அதை எப்படி தீர்ப்பது என்றும் கலந்துரையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளருகே இருந்த போன் வைரேட் மோடில் இருந்து சத்தமில்லாமல் அதிர்ந்து தான் இருப்பதை
உணர்த்தியது.
அதில் முகிலன் அழைப்பதை பார்த்தவள்...
இந்த நாலு நாளா குடும்பத்தையே மறந்து இப்போ எதுக்கு கூப்பிடுறாங்க... என்று தான் நினைத்தாள்.
அவளுக்கெங்கே தெரியும்... அவனிற்கு குடும்பத்துடன் பேசும் பழக்கம் எல்லாம் இல்லை என்று. வெளியூர்
எப்போதெல்லாம் கிளம்புகிறானோ அப்போது தாயிடம் மட்டும் கூறிக் கிளம்புவான்... தந்தை இருந்தால்
அவரிடமும், இல்லையென்றால் தாய் கூறிக்கொள்வார் என்றுவிட்டு கிளம்பிவிடுவான். வரும்போதும் இதே
கதை தான்... தாயிடம் எப்போது வீட்டிற்கு வருவேன் என்பதை மட்டும் தகவலாக சொல்வான். அதுவும் தாய்
கண்டிப்பாக சொல்லித்தான் போகவேண்டும்.. வரவேண்டும் என்று கூறியதால்... இல்லையென்றால் அதுவும்
இல்லை.
"எஸ்கியுஸ் மீ... நீங்க கண்டினியு பண்ணுங்க"
என்றவாறு வெளியேறினாள்.
தன்னுடைய காபினுக்கு சென்று போனை உயிர்பித்தாள் ருத்ரா. அடுத்த நொடி...
“ஹலோ... ருத்”
என்ற முகிலனின் உற்சாக குரல் செவியினில் மோதியது.
அவள் ஒன்றும் சொல்லாமல் ருத் என்ற அழைப்பை தன்னை அறியாமல் ரசித்தவாறு அவனை கவனிக்க...
"என்ன பேச மாட்டியா...? ரிஷி கோமால இருந்தான்... அந்த அதிர்ச்சில பேச மறந்துட்டேன்... ஆபீஸ் எப்படி
போகுது.. ஒன்னும் கஷ்டமா இல்லையே..."
என்று அக்கறையுடன் கேட்க...
"ஹ்ம்ம்... நல்லா தான் போகுது... எனக்கு தான் புதுசா இருக்கு..."
என்று கூறியவள்.. பின்
"ஆமா உங்க ப்ரண்ட் இப்போ எப்படி இருக்காங்க..."
என்று நலம் விசாரித்தாள்.
"ரெண்டு நாள் முன்னாடி தான் கண் முழிச்சான்... இன்று இரவு கோவை வந்துருவோம்"
என்றான் கார்முகிலன்
ருத்ராவும்...
"ம்ம்ம்... ஓகே... நான் வீட்டுக்கு சொல்லவா இல்லை நீங்களே அவங்ககிட்ட பேசுறீங்களா...?"
என்று கேட்க...
"நீயே சொல்லிரு ருத்... நான் இப்போ ஹோச்பிடல் கிளம்பனும். கொஞ்சம் வேலை இருக்கு"
என்றான்.
"சரிங்க..."
என்று போனை வைக்க போக..
"ருத்... ஒரு நிமிஷம்..."
என்றான் தீவிரமாய்...
"சொல்லுங்க..."
என்று இவள் ஏதேனும் முக்கிய விஷியமோ என்று அவன் குரலில் அலெர்ட் ஆக...
"என் பெயர் என்ன...?"
என்றான் அவன்...
.................. ???? இந்த பக்கம் பதிலே இல்லை...
"ஹலோ ருத்... என் பெயர் கூட தெரியாதா ?"
என்று சீண்ட...
"முகில..."
என்று கூறுவதற்குள்..
"முழுபெயர்..."
என்று கத்தரித்தான்...
"கார்முகிலன் ..." என்று முணுமுணுத்தாள்.
"தெரியுதுல... நானும் பார்த்துட்டே இருக்கேன்... என்கிட்ட மொட்டையா வாங்க.. போங்க... இப்படியே பேசிட்டு
இருக்க... பேர் சொல்லி கூப்பிடு"
என்று கோரிக்கை வைத்தான்.
வீட்டுக்கு பேச நேரமில்லை என்றவன்... இவளுடன் பேச்சை முடிக்க விருப்பமின்றி வளர்த்துக்
கொண்டிருந்தான்.
அப்படி அவன் சொல்லும் போதே... இந்த நான்கு நாட்கள் அவனை அதிகம் நினைத்ததால்,
ருத்ராவிற்குஅவனை மனதிற்குள் அழைக்கும் பெயர் நினைவுக்கு வந்தது.
சிறு புன்னகையோடு அவள்..
"மாட்டேன்.."
என்று கூற...
"அப்போ.. மாமா.. மச்சான்.. அத்தான்...டார்லிங்.. டியர்... இதெல்லாம் ஓகே வா...?"
என்றான். ( இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்.. ?? )
அவள் அதை கேட்டு... முகம் சிவக்க...
"இன்னக்கி உங்களுக்கு என்னமோ ஆகிருச்சி... நான் எப்படியும் கூப்பிடமாட்டேன்... போனை வையுங்க"
என்று வைக்க போக..
"நீ கூப்பிட்டாத் தான் இன்று வீட்டுக்கு வருவேன்... இல்லைனா வர மாட்டேன்"
என்று அடம் பிடித்தான்.
( போச்சு போச்சு... முத்திப் போச்சு... படிக்குறவங்க காண்டாக போறாங்க )
"என்ன நீங்க..."
என்று சலித்தவள்...
"சரி முகிலன்... போதுமா"
என்றாள்.
"போதாது... இப்போ நான் எப்படி உன்னை ருத்ன்னு டிபரென்ட்டா கூப்பிடுறேன்... நீயும் அதே மாதிரி ட்ரை
பண்ணு"
என்றான்.
"சரி... முகில்..."
"வேணாம்... அது ரிஷியோடது..."
"ஹ்ம்ம்... முகிலா..."
"ம்ஹ்ம்... அது அம்மாவோடது..."
யோவ்... என்று எகிற வந்து உதட்டை கடித்தவள்...
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு... ஏற்கனவே மிருதுவான குரலை இன்னும் மிருதுவாக்கி...
"முகி...."
என்றழைத்தவள்... மனதின் படபடப்பில் பட்டென்று போனை கட் செய்தாள்.
இந்த பக்கம் அவள் போனை கட் செய்ததே தெரியாமல் அவளின் குழைவான முகி என்ற அழைப்பிலேயே
லயித்திருந்தான் கார்முகிலன் வெகுநேரமாய்.
அனைவரும் கோவை செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருக்க.. அந்த நேரத்தில் ரிஷி தங்கள்
தொழிலை பற்றி பெற்றோரிடம் கேள்வி எழுப்பினான்... இருவரும் சற்று அமைதியாக இருந்தனர்.
விகாஷினி எதிலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
முகிலன் தான்..
“உன் கம்பெனி இப்போ என்கிட்ட தான் பத்திரமா இருக்கு.. கூடிய சீக்கிரம் உன்கிட்ட திரும்ப வரும்”
என்றான்.
“உன்கிட்டயா.. என்னடா சொல்ற.. அபி கன்ஸ்ட்ரக்ஷன்னா”
என்றான் திகைப்பாக.. விகாஷினி நடந்ததை எல்லாம் கூறியிருந்தாலும் இதனை கூறவில்லையே.
"ஆமா.. உங்க அப்பா அதை விற்க போயிட்டாரு... சோ அதை நான் வாங்கிட்டேன்.. புதுசா தொடங்குன மாதிரி
இருக்கணும்னு பேர் மாற்றி வச்சேன்.. விகாஷினி மேல இருக்குற கோபத்துல அவளை மறைமுகமா எதிர்க்க
ஆரம்பித்து போன வாரம் தான் நேரிடையா பார்த்தோம்..”
என்றான்.
விகாஷினிக்கே இது புதிய செய்தி.. இவன் ரிஷியின் கம்பெனியை வாங்கியிருக்கான் என்பது.
இனி எனக்கு இது தேவை இல்லை.. என்னோட கனவான கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்க போறேன்..
என்றான் புன்னகையோடு.
ரிஷி ஒன்றும் சொல்லாமல் நண்பனை இறுகி அணைக்க...
அதை பார்த்த விகாஷினி..
“சரி.. கம்பெனிய திருப்பி குடுத்துட்டா... நீ ருத்ராவை என்ன பண்றதாக உத்தேசம்... வீட்டுக்குள்ள போட்டு பூட்ட
போறியா.. அதுக்காகவா அவளை விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை விட்டு தூக்கி.. உன் கம்பெனில சேர்த்த..”
என்று சற்று கோபமாக வினவ..
ரிஷி இது எப்போ..!!! என்றவாறு பரிதாபமாக முழித்தான்.
“நீ ரொம்ப நியாயம் பண்ணுற மாதிரி பேசாத.. அவளோட டிசைன் உன் பேர்ல மாற்றி.. அவளுக்கு கிடைக்க
வேண்டிய பணத்தையும் அபேஸ் பண்ணுனவ தான நீ...”
என்று குற்றம் சாற்ற...
“வாட்... பணத்தை நான் அபேஸ் பண்ணுனேன்னா..”
என்றவள்...
“அவளுக்கு குடுக்க வேண்டிய பணத்தை கரெக்ட்டா செட்டில் பண்ணிட்டேன்... பேர் மாத்துறது கேட்டால்... அவ
இங்க ஒர்க் பண்ணியிருந்தா அவ பேர் சேர்த்திருப்பேன்... எங்கயோ இருந்து டிசைன் பண்ணி தந்தா.. கஸ்டமர்
கிட்ட எப்படி சொல்றது.. அதான் என் பேரை போட்டேன்.. இது என்ன அவ்ளோ பெரிய தப்பா..”
என்று கேட்டாள் விகாஷினி.
என்ன தான் தாயின் இன்னொரு முகம் தெரிந்தாலும்... அவர் சிறுவயதில் இருந்து கற்று கொடுத்த தொழில்
அப்போ அப்போ எட்டித்தான் பார்த்தது.
கிருஷ்ணகுமாரும் அங்கு இருந்ததால்... மகளிடம்..
“விகாஷினி... உனக்கு தொழில்ல எது சரி எது தப்புன்னு இனிமே தான்மா புரியும்..”
என்றவர்..
“நான் அவளிற்கு சொல்லித்தறேன்.. இப்போ சண்டை போடாதீங்க...”
என்றார் முகிலனிடம்.
அமைதியாக சிறிது நேரம் இருந்தவன்.. ரிஷியிடம் திரும்பி..
“நான் கம்பெனிய உன் பேருக்கு எழுதி தருவேன்.. ஆனா என் மனைவி அங்கதான் வேலை பார்ப்பாள். அவள்
மற்றும் இல்லை.. அங்க வேலை பார்ப்பவங்க யாரையும் வெளிய போக சொல்ல கூடாது”
என்றான்.
இப்போது விகாஷினியை பார்த்து..
“நீ பணத்தை ஒழுங்கா குடுத்திருந்தா சந்தோசம்..ஆனா ருத்ராக்கு சரியா வந்து சேரலை... உன் தொழில்ல
நிறைய கருப்பு ஆடுகள் இருக்கு.. அதுவும் பணத்துக்காக நீ நான்னு போட்டிப்போட்டு போட்டுக்குடுக்க வராங்க..
அவங்களை எல்லாம் தூக்கிட்டு நம்பிக்கையான மனுசங்களை பார்த்து வேலைக்கு வை..”
என்று இலவச டிப்ஸ்சும் கொடுத்தான்.
அதற்குள் இவர்கள் ஏற வேண்டிய விமானம் வர... ரிஷி தான் முதல் ஆளாக விடைப்பெற ஆரம்பித்தான்.
முகில் பேசியதால் சுணங்கியிருந்தவளை ஏதேதோ பேசி சிரிக்க வைத்து விட்டே கிளம்பினான்.
முகிலிடமும்..
“கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் கம்பெனி வாங்கிக்குறேன்.. அது வரை நீயே பாரு..”
என்று தொழில் பற்றிய பேச்சை முடித்தான். ( ஷப்பா.. இப்போவே கண்ணை கட்டுதே... )
கோவையில் ரிஷி மீண்டும் வந்ததை முகிலன் தன் வீட்டினரிடம் கூற.. அவர்களும் ஆச்சரியப்பட்டு பின்
மனம் மகிழ்ந்தனர்.