• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga nathikaraiyoram - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அடுத்த பதிவோடு வந்துவிட்டேன்... தாமதத்திற்கு திட்டாதீங்க சகோதர சகோதரிகளே... திங்கள்கிழமையில் இருந்து பரிட்சை வைத்து யோசிக்க விடாம பண்ணிட்டாங்க என் காலேஜ்ல... இன்று காலையில் தான் ஆரம்பித்தேன்... அதனால் படித்ததும்.. லைக் மற்றும் கமெண்ட் கிட்ட கோபத்தை காமிக்காம எனக்காக போட்ருங்க பிளீஸ்... ????

வராக நதி - 9

முதலில் டைனிங் டேபிளை அடைந்த கார்த்தி... அங்கே இருந்த பஞ்சு போன்ற இட்லியையும், நெய் வாசனையோடு மணந்த பொங்கலையும், மெல்லிய நூல்களையே தோற்கடிக்கும் இடியாப்பத்தையும், மொரு மொரு வென்று ஆவி பறக்க இருக்கும் உளுந்த வடையையும் கண்டு... இனிய அதிர்ச்சி அடைந்தான் என்றால் மிகையல்ல... அதை சீதாவிடமும் வெளிபடுத்தினான்...

“வாவ்... ஆன்டி.. கொஞ்ச நேரத்துல இவ்ளோ சமைச்சிடீங்க... யு ஆர் ரியல்லி கிரேட்...”

என்றவாறு அமர்ந்தான்.

அவனிற்கு சிறிது கூச்சமாக சிரித்துக்கொண்டே வாழை இலை வைத்தவர்... அனைவரும் வரவும் அவர்களுக்கும் வாழை இலை வைத்து பரிமாற ஆரம்பித்தார்.

முதலில் கேசரி வைத்தவர், பின்பு இட்லிக்கு கெட்டி தேங்காய் சட்னியும் சாம்பாரையும் பரிமாறினார்... கார்த்தி அருகே வரவும்...

“ஆன்ட்டி எனக்கு கம்மியா வையுங்க... எல்லாத்தையும் சாப்ட்டுட்டு அப்புறம் வேணும்னா நான் சாப்டுறேன்...”

என்றான்.

அவனிற்கு அவன் கவலை.. இட்லியை நிறைய சாப்பிட்டால், பொங்கல், இடியாப்பம் அழுகாதா...?

கேசரி, இடியாப்பத்திற்க்கு கடலைக்கறி, பொங்கல் சாம்பார், என்று அனைத்தையும் ஒரு கை பார்த்தவன்...

கடைசியாக உளுந்த வடையை பார்த்ததும்... அவனிற்கு சாம்பார் வடை சாப்பிடும் ஆசை வந்தது... பின்னே.. சாம்பார் அவ்வளவு ருசியாக இருந்ததே... வயலில் விளைந்த பருப்பு மற்றும் காய்கறிகள் அல்லவா..?

இவ்வளவு நேரம் ரசித்து ருசித்து சாப்பிட்டவன்.. இப்போது யோசனையுடன் இருக்கவும்.. சீதா அவனருகே வந்து

“என்ன தம்பி எதாவது வேண்டுமா...? சாப்பிடுங்க...”

என்றார்.

“இல்ல ஆன்ட்டி... எனக்காக ஒரு கப் அண்ட் ஸ்பூன் எடுத்துட்டு வரிங்களா...? ப்ளீஸ்..”

என்று அவரிற்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுத்தான்.

அப்பா, அம்மாவிற்கு தெரிந்தால் ஒன்னும் சொல்லமாட்டாங்க... ஆனால் அண்ணாவிற்கு தெரிந்தால்.. வழக்கம் போல்..

“ஒரு கம்பெனிக்கு முதலாளியா நடந்துக்கோடா... இன்னும் நீ சின்னபையன் இல்லை...”

என்று ப்ரீ அட்வைஸ் கிடைக்கும்...

ஏன் கம்பெனி முதலாளினா விறைப்பா கஞ்சிசட்டை மாதிரி இருக்கணுமா என்ன...? என்பது இவன் வாதம்...

அவன் சொன்னதை கேட்ட சீதா...

“சரி தம்பி...”

என்று அவன் கிசுகிசுத்ததால் இவரும் மெதுவாகவே கூறி சென்றார்.

அவர் சென்று ஒரு குட்டி கிண்ணத்தையும் ஸ்பூனையும் கொண்டு வர... முகிலனை தவிர அனைவரும் அவரை கேள்வியாக பார்த்தனர்... சாதரணமாக இருந்தால், முகிலன் பார்த்திருப்பான்.. அவன் தான் எப்படி ருத்ராவின் அப்பாவிடம் பேசுவது... என்று யோசித்து கொண்டிருந்தானே.. அதனால் சுற்றுப்புறம் அவன் கவனித்தில் பதியவில்லை... அந்தமட்டில் தப்பித்தான் கார்த்தி...

சீதாவிடம் இருந்து கிண்ணத்தை வாங்கிய கார்த்தி... அதனுள்ளே இரண்டு உளுந்த வடையை வைத்து, அதில் சுட சுட இருந்த சாம்பாரையும் ஊற்றி இலையின் ஓரமாக நகர்த்தி... ஒன்னும் தெரியாதவன் போல மேலும் ரெண்டு இடியாப்பம் சாப்பிட ஆரம்பித்தான்.

அதை கண்ட அவன் வீட்டினருக்கு தலையில் அடிக்காத குறை... சொல்லி திருந்துகிற ஜென்மம் இல்லை இந்த விசியத்தில் என்று சிறுவயதில் இருந்து அவனிடம் போராடிய அனுபவம் கூறியதால்.. அவர்களும் அதனை கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்தனர்.

கருணாகரன் – சீதாவிற்கோ இவ்வாறு ரசித்து உண்பவனை கண்டு மகிழ்ச்சியே... கிராமத்து ஆட்கள் அல்லவா...? வெளிப்படையாக இருப்பதை மிகவும் விரும்பினார்கள்.

அவன் செய்வதை பார்த்த சீதா... மீண்டும் உள்ளே சென்று அனைவருக்கும் கிண்ணம் மற்றும் ஸ்பூன் எடுத்து வந்தார்...
எல்லோரிடமும் சாம்பார் வடை வேண்டுமா..? என்று கேட்டு அவர்களும் சரி என்று சம்மதிக்கவே... அங்கே இருந்த வடை எல்லாம் சாம்பார் வடையாக உருமாறியது கார்த்தியின் புண்ணியத்தில்...


ஒருவழியாக விருந்து முடிந்து அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்.
மாணிக்கவேல் தான் விடைபெற ஆரம்பித்தார்...


“விருந்து அருமையா இருந்தது கருணா... தங்கச்சி சமையல் பிரமாதம்... இதுக்காகவே கூட இன்னொரு நாள் வந்தாலும் வருவோம்... இப்போ நாங்க போயிட்டுவரோம்”

என்றார்.

கார்த்தியும்...

“ஆமா அங்கிள்.. ஆன்ட்டி சமைச்ச சாப்பாடு செம... இந்த மாதிரி 5 ஸ்டார் ஹோட்டல்ல கூட சாப்பிட்டதில்லை..”

என்று ஒத்து பாடினான்.

அப்படியே பேசிகொண்டிருக்கும் வேளையில்...

“அங்கிள்...”

என்று முகிலன் முதல்முதலாக அழைத்தான். ஆனால் அவரோ.. கார்த்தியை தான் பார்த்தார்... அவரை அப்படி அழைப்பது அவன் தானே...

ஆனால் அதற்குள் முகிலனே...

“அங்கிள் நான் உங்க கிட்ட முக்கியமான விசியம் பேசணும்... நீங்க சரி சொன்ன எனக்கு உதவியா இருக்கும்...”

என்றான்.

அவன் அங்கிள் சொன்னதிலேயே மகிழ்ந்தவர்... பேசவேண்டும் என்றதும்...

“சொல்லுங்க தம்பி.. நான் என்ன சரின்னு சொல்லணும்”

என்றார்.

“உங்க பொண்ணு ருத்ரா சிவில் படிச்சிருக்காங்கனு அவங்க ரூம்ம பார்த்தே தெரிஞ்சிக்கிட்டேன்... அவங்க கிட்ட இருக்குற திறமை எனக்கு யூஸ் ஆகும்னு தோணுது அங்கிள். அவங்க வேலைக்கு கூட வர வேண்டாம்... வீட்டுல இருந்தே டிசைன் பண்ணி தரலாம்... நான் அதுக்கு ஏற்ற சாலரி தந்துடறேன்... நீங்க சரி சொன்னா...”

என்று நிறுத்தினான்.

அவரும் என்ன சொல்வார்.. தன் மகளை மீட்டுக்கொடுத்தவன்... போதாக்குறைக்கு வீட்டிலேயே இருந்து தான வேலை பார்க்கணும்... என்று யோசித்தவர்...

“சரி தம்பி...எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல... என் பொண்ணுகிட்ட கேட்டு சொல்றேன்.”

என்றார் அந்த அப்பாவி தந்தை..

அவரது பெண்ணிடம் ஏற்கனவே இவன் கேட்ட லட்சணத்தை அறியாமல்.

எங்க வந்தாலும்.. அதுல ஒரு டீலிங்கா...? என்று சலித்தது... யாராக இருக்கும்... எல்லாம் நம்ம முகிலன் பாமிலி தான்.

“தேங்க்ஸ் அங்கிள்... இந்தாங்க இது எங்க கம்பெனி அண்ட் இது என்னோட கார்டு... ருத்ராகிட்ட கேட்டுட்டு எனக்கு சொல்லுங்க...”
என்றவன்... அவர் “சரி தம்பி” என்றதும்,


“அப்போ நாங்க போயிட்டுவரோம் அங்கிள்...”

என்று விடைபெற்று டஸ்டர் காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்தான் கார்முகிலன்.

பின்பு அனைவரும் அமர்ந்ததும்... கார் பெரியகுளம் விட்டு கோயம்புத்தூரை நோக்கி சென்றது...
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அவர்களை வழியனுப்பி விட்டு வீட்டிற்குள் வீட்டிற்குள் வந்த கருணாகரன்... சீதாவிடம் வயல்வேலைகள் இன்று பார்க்காததால், தான் சென்று மதியம் வருவதாக கூறி புறப்பட்டு விட்டார்.

“இந்த முத்ரா எங்க போனா... இன்னும் கீழ வரல...”

என்று சீதா மேலே சென்று பார்க்க... அங்கு முத்ரா அக்காவின் மேல் கையை போட்டவாறு அவளுடன் உறங்கி கொண்டிருந்தாள்.

“நல்ல புள்ளைங்க...”

என்று தலையில் அடித்தவர்... காலி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கீழே சென்றுவிட்டார்.

பின்மதிய வேலையில் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த ருத்ரா... தன் தங்கையும் தன்னுடன் உறங்குவதை கண்டு புன்னகையுடன் அவள் தலையை வருடினாள்...

மனம் காலையில் நடந்ததை எண்ணி பார்த்தது...

உணவை எடுத்து வந்த முத்ரா படுத்திருந்த தன் தமக்கையை எழுப்பியவாறு...

“என்ன ருத்ரா... இந்த ரூம்க்கு வந்துட்ட... அங்க தான இருந்த..? இந்த மாசம்... அந்த ரூம்...”

என்று நினைவு படுத்தினாள்.

அதற்கு பதில் கூறாமல் ருத்ரா இருக்கவே.. என்ன நடந்தது என்று விசாரிக்க ஆரம்பித்தாள்.

ருத்ராவிற்கும் மனதிற்குள் இருப்பதை யாரிடமாவது இறக்கி வைக்க வேண்டும் என்று தோன்றியதோ...? வழக்கம் போல் தங்கையிடம் பகிர்ந்தாள்.

விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனின் துரோகத்தை கூறி அதனால் தான் வேலையை விட்டதையும் கூறினாள்.

அதை கேட்ட முத்ரா,

“எவ்வளோ தைரியம் ருத்ரா அவளுக்கு... இதை ஒன்னும் பண்ண முடியாதா...? அதை தன்னோட டிசைன்னு நிருபிக்காம இப்படி கோழை மாதிரி வேலைய விட்டுட்ட”

என்று பொங்கினாள்.

“எனக்கு அது தெரியாதுனு நினைச்சியா...? அதுக்கு முதல்ல அப்பாகிட்ட சொல்லணும். அப்புறம் அவங்க ரொம்ப பெரிய இடம் ஈசியா நம்மளை தோற்க்கடிச்சிருவாங்க... மீறி வெற்றி பெற்றாலும் அதுக்கு ரொம்ப செலவுமாகும்... பிரச்சனையும் சமாளிக்கணும்... எதுக்கு வம்புனு தான் ஒதுங்கிட்டேன்... ஆனா இப்போ நான் வேற கம்பெனிக்கு போறேன்... அந்த விகாஷினிய தோற்கடிக்காம விடமாட்டேன்...”

என்று குரலில் உறுதியுடன் கூறினாள் ருத்ரா.

அதற்கு முத்ரா,

“இப்போ நீ போகிற கம்பெனியும் ஏமாற்றமாட்டங்கனு என்ன நிச்சியம் ருத்ரா...”

என்று கேட்கவும்...

“அவங்க அப்படியெல்லாம் பண்ண மாட்டங்கனு தான் தோணுது... பார்ப்போம்...”

என்று முகிலனின் மீது இருந்த எதோ ஒரு நம்பிக்கையில் கூறினாள் ருத்ரா.

“எவங்க...? நீ யார சொல்லுற...?”

என்று முத்ரா குழம்பி கேட்டாள்.

“இப்போ பேசிட்டு போனாரே... அவரை தான் சொல்றேன்”

என்று கூறி.. அவன் மிரட்டினதை தவிர மற்ற எல்லாவற்றையும் கூறினாள். ஏன் அதை கூறவில்லை என்பது அவளிற்கே வெளிச்சம்.

முத்ராவும்...

“ஒஹ்...அப்படியா... அப்போ சரி.. அப்பாவோட பெர்மிஷனோட வேலை பார்க்க போற நீ... கலக்கு ருத்ரா..”

என்றுவாறு கைகுலுக்கினாள்.

அதன் பின் சகோதரிகள் இருவரும் உண்டுவிட்டு உறங்கினர்.

அதை நினைத்துக்கொண்டே ருத்ரா அமர்ந்திருக்க.. முத்ராவும் எழுந்துவிட்டாள். இருவரும் இறங்கி கீழே சென்றனர்.

மாலை ஆறு மணியளவில் மாணிக்கவேல் குடும்பம் அவர்களின் வீட்டை அடைந்தனர்.

அனைவரும் சோர்வாக தங்களை சுத்தப்படுத்திக்கொண்டு ரூம்மை விட்டு வெளியே வர...

அதே நேரம்... கார்முகிலனும் கார்த்திகேயனும் அவசரமாக வெளியே செல்ல தயாராக கிளம்பி வந்தனர்.

“என்னடா... இப்பவே ஆபீஸ் போகனுமா ரெண்டு பேரும்...? ரெஸ்ட் எடுத்து காலையில் போனா என்ன...?”

என்று அபிராமி கேட்டார்.

முகிலனோ...

“இல்லமா... கொஞ்ச நேரத்துல வந்துடறேன்.. முக்கியமான வேலை”

என்று சொல்லி புறப்பட்டு விட்டான்.

கார்த்தியும்

“ஆமா.. அம்மா எனக்கும் முக்கியமான வேலை இருக்கு... ஆனா அதுக்கு முன்னாடி என் போனை ரிப்பேர் பண்ணனும்... கீழ விழுந்துருச்சி... ஆன் ஆகமாட்டிங்குது...”

என்று கூறும் போதே... அன்னிசையாய் முத்ரா நியாபகமும் சேர்ந்தே வர... பல்லைக் கடித்தான்.

“சரி... பா பாத்து போயிட்டு வா”

என்று அபிராமி தான் அனுப்பிவைக்க வேண்டியதானது.

இங்கே இப்படி இருக்க...

மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் விக்ரோலி பகுதியில் வானை தொட முயன்று கொண்டிருந்த பிரமாண்ட கட்டடத்தின் முன்புறம்.. விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் என்று பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது.

அதனுள்ளே இருந்த எம்டி அறையில்... சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பின்னால் சாய்ந்தவாறு கணினியை புருவம் சுளிக்க பார்த்துக்கொண்டே...

“ஹொவ் டார் ஷி இஸ்...? ( how dare she is…?)”

என்று ஆத்திரமாக முணுமுணுத்தாள் ஒரு அழகிய இளம்பெண்... அவள் தான் விகாஷினி... விகாஷினி க்ரூப்ஸின் ஏக போக வாரிசு...

காலையில் ருத்ரா அனுப்பிய மெயிலை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்...

அவள் வேலையை விட்டு நீங்குவது அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை... ஆனால் அவ்வாறு நீங்குவதற்கு காரணமாக அவள் கூறிய வேறு ஒரு கம்பெனியில் வேலை என்பதை தான் தாங்க முடியவில்லை.

“இந்த விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை விட வேற ஒரு கம்பெனி அந்த கன்ட்ரி புரூட்க்கு பெருசா போச்சா...? பார்க்கலாம்... இவ எப்படி வேலை செய்யப்போறானு... ச்சே... இப்போ பார்த்து வேலை தலைக்கு மேல இருக்கு... இவளை ஒரு கை பார்க்கலாம்னா... டாட் வேற... இந்த வேலையெல்லாம் 3 மாசம் கழிச்சு வச்சிக்கோனு அடக்கி வைக்குறாரு... வரேன்டி ருத்ரா வரேன்... வெயிட் அண்ட் ஸீ...”

என்றாள் விகாஷினி ஒரு மர்ம புன்னகையோடு.

கோவையில்...

இரவு பதினோரு மணிக்கு வந்த கார்முகிலன்... தன்னிடம் உள்ள மாற்று சாவியை வைத்து உள்ளே வந்து தனது அறைக்கு சென்றான்... முதலில் எல்லாம் அபிராமி காத்திருப்பார்... இவன் தூங்க சொல்லவும், அவர் கேட்காததால்

“இனி நான் உங்களை தூங்காம முழித்திருப்பதை பார்த்தால் அடுத்த நாளில் இருந்து வீட்டுக்கு நைட் வர மாட்டேன்... லேட் ஆகிவிட்டது அப்படினா ஆபிஸ்ல தூங்கிருவேன் பரவால்லையா மா...?”

என்று மிரட்டவும் தான் அபிராமி அரைமனதாக இப்பொழுதெல்லாம் உறங்க செல்கின்றார். (அம்மாவையும் மிரட்டாம விட்டு வைக்கலையா நீ...?)

குளித்து இரவு உடை அணிந்து வந்தவன்... மடிகணினியில் எதையோ செய்துகொண்டிருக்க... சிறிது நேரத்தில் தூக்கம் வரவே, அதை அணைத்து டேபிளில் வைத்தான். பின்பு விளக்கை ஆப் செய்து தூங்கியும் விட்டான்.

நடுஇரவில்... அவன் ஆழ்ந்து உறங்குகையில் கனவொன்று அவன் மூளைக்குள் உருவானது... அதில் பளிங்குமுகமாகிய ருத்ராவின் முகம் ஆற்றின் நடுவே தத்தளிக்கும் காட்சி தத்ரூபமாய் இருந்தது.
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top