அடுத்த பதிவோடு வந்துவிட்டேன்... தாமதத்திற்கு திட்டாதீங்க சகோதர சகோதரிகளே... திங்கள்கிழமையில் இருந்து பரிட்சை வைத்து யோசிக்க விடாம பண்ணிட்டாங்க என் காலேஜ்ல... இன்று காலையில் தான் ஆரம்பித்தேன்... அதனால் படித்ததும்.. லைக் மற்றும் கமெண்ட் கிட்ட கோபத்தை காமிக்காம எனக்காக போட்ருங்க பிளீஸ்... ????
வராக நதி - 9
முதலில் டைனிங் டேபிளை அடைந்த கார்த்தி... அங்கே இருந்த பஞ்சு போன்ற இட்லியையும், நெய் வாசனையோடு மணந்த பொங்கலையும், மெல்லிய நூல்களையே தோற்கடிக்கும் இடியாப்பத்தையும், மொரு மொரு வென்று ஆவி பறக்க இருக்கும் உளுந்த வடையையும் கண்டு... இனிய அதிர்ச்சி அடைந்தான் என்றால் மிகையல்ல... அதை சீதாவிடமும் வெளிபடுத்தினான்...
“வாவ்... ஆன்டி.. கொஞ்ச நேரத்துல இவ்ளோ சமைச்சிடீங்க... யு ஆர் ரியல்லி கிரேட்...”
என்றவாறு அமர்ந்தான்.
அவனிற்கு சிறிது கூச்சமாக சிரித்துக்கொண்டே வாழை இலை வைத்தவர்... அனைவரும் வரவும் அவர்களுக்கும் வாழை இலை வைத்து பரிமாற ஆரம்பித்தார்.
முதலில் கேசரி வைத்தவர், பின்பு இட்லிக்கு கெட்டி தேங்காய் சட்னியும் சாம்பாரையும் பரிமாறினார்... கார்த்தி அருகே வரவும்...
“ஆன்ட்டி எனக்கு கம்மியா வையுங்க... எல்லாத்தையும் சாப்ட்டுட்டு அப்புறம் வேணும்னா நான் சாப்டுறேன்...”
என்றான்.
அவனிற்கு அவன் கவலை.. இட்லியை நிறைய சாப்பிட்டால், பொங்கல், இடியாப்பம் அழுகாதா...?
கேசரி, இடியாப்பத்திற்க்கு கடலைக்கறி, பொங்கல் சாம்பார், என்று அனைத்தையும் ஒரு கை பார்த்தவன்...
கடைசியாக உளுந்த வடையை பார்த்ததும்... அவனிற்கு சாம்பார் வடை சாப்பிடும் ஆசை வந்தது... பின்னே.. சாம்பார் அவ்வளவு ருசியாக இருந்ததே... வயலில் விளைந்த பருப்பு மற்றும் காய்கறிகள் அல்லவா..?
இவ்வளவு நேரம் ரசித்து ருசித்து சாப்பிட்டவன்.. இப்போது யோசனையுடன் இருக்கவும்.. சீதா அவனருகே வந்து
“என்ன தம்பி எதாவது வேண்டுமா...? சாப்பிடுங்க...”
என்றார்.
“இல்ல ஆன்ட்டி... எனக்காக ஒரு கப் அண்ட் ஸ்பூன் எடுத்துட்டு வரிங்களா...? ப்ளீஸ்..”
என்று அவரிற்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுத்தான்.
அப்பா, அம்மாவிற்கு தெரிந்தால் ஒன்னும் சொல்லமாட்டாங்க... ஆனால் அண்ணாவிற்கு தெரிந்தால்.. வழக்கம் போல்..
“ஒரு கம்பெனிக்கு முதலாளியா நடந்துக்கோடா... இன்னும் நீ சின்னபையன் இல்லை...”
என்று ப்ரீ அட்வைஸ் கிடைக்கும்...
ஏன் கம்பெனி முதலாளினா விறைப்பா கஞ்சிசட்டை மாதிரி இருக்கணுமா என்ன...? என்பது இவன் வாதம்...
அவன் சொன்னதை கேட்ட சீதா...
“சரி தம்பி...”
என்று அவன் கிசுகிசுத்ததால் இவரும் மெதுவாகவே கூறி சென்றார்.
அவர் சென்று ஒரு குட்டி கிண்ணத்தையும் ஸ்பூனையும் கொண்டு வர... முகிலனை தவிர அனைவரும் அவரை கேள்வியாக பார்த்தனர்... சாதரணமாக இருந்தால், முகிலன் பார்த்திருப்பான்.. அவன் தான் எப்படி ருத்ராவின் அப்பாவிடம் பேசுவது... என்று யோசித்து கொண்டிருந்தானே.. அதனால் சுற்றுப்புறம் அவன் கவனித்தில் பதியவில்லை... அந்தமட்டில் தப்பித்தான் கார்த்தி...
சீதாவிடம் இருந்து கிண்ணத்தை வாங்கிய கார்த்தி... அதனுள்ளே இரண்டு உளுந்த வடையை வைத்து, அதில் சுட சுட இருந்த சாம்பாரையும் ஊற்றி இலையின் ஓரமாக நகர்த்தி... ஒன்னும் தெரியாதவன் போல மேலும் ரெண்டு இடியாப்பம் சாப்பிட ஆரம்பித்தான்.
அதை கண்ட அவன் வீட்டினருக்கு தலையில் அடிக்காத குறை... சொல்லி திருந்துகிற ஜென்மம் இல்லை இந்த விசியத்தில் என்று சிறுவயதில் இருந்து அவனிடம் போராடிய அனுபவம் கூறியதால்.. அவர்களும் அதனை கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்தனர்.
கருணாகரன் – சீதாவிற்கோ இவ்வாறு ரசித்து உண்பவனை கண்டு மகிழ்ச்சியே... கிராமத்து ஆட்கள் அல்லவா...? வெளிப்படையாக இருப்பதை மிகவும் விரும்பினார்கள்.
அவன் செய்வதை பார்த்த சீதா... மீண்டும் உள்ளே சென்று அனைவருக்கும் கிண்ணம் மற்றும் ஸ்பூன் எடுத்து வந்தார்...
எல்லோரிடமும் சாம்பார் வடை வேண்டுமா..? என்று கேட்டு அவர்களும் சரி என்று சம்மதிக்கவே... அங்கே இருந்த வடை எல்லாம் சாம்பார் வடையாக உருமாறியது கார்த்தியின் புண்ணியத்தில்...
ஒருவழியாக விருந்து முடிந்து அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்.
மாணிக்கவேல் தான் விடைபெற ஆரம்பித்தார்...
“விருந்து அருமையா இருந்தது கருணா... தங்கச்சி சமையல் பிரமாதம்... இதுக்காகவே கூட இன்னொரு நாள் வந்தாலும் வருவோம்... இப்போ நாங்க போயிட்டுவரோம்”
என்றார்.
கார்த்தியும்...
“ஆமா அங்கிள்.. ஆன்ட்டி சமைச்ச சாப்பாடு செம... இந்த மாதிரி 5 ஸ்டார் ஹோட்டல்ல கூட சாப்பிட்டதில்லை..”
என்று ஒத்து பாடினான்.
அப்படியே பேசிகொண்டிருக்கும் வேளையில்...
“அங்கிள்...”
என்று முகிலன் முதல்முதலாக அழைத்தான். ஆனால் அவரோ.. கார்த்தியை தான் பார்த்தார்... அவரை அப்படி அழைப்பது அவன் தானே...
ஆனால் அதற்குள் முகிலனே...
“அங்கிள் நான் உங்க கிட்ட முக்கியமான விசியம் பேசணும்... நீங்க சரி சொன்ன எனக்கு உதவியா இருக்கும்...”
என்றான்.
அவன் அங்கிள் சொன்னதிலேயே மகிழ்ந்தவர்... பேசவேண்டும் என்றதும்...
“சொல்லுங்க தம்பி.. நான் என்ன சரின்னு சொல்லணும்”
என்றார்.
“உங்க பொண்ணு ருத்ரா சிவில் படிச்சிருக்காங்கனு அவங்க ரூம்ம பார்த்தே தெரிஞ்சிக்கிட்டேன்... அவங்க கிட்ட இருக்குற திறமை எனக்கு யூஸ் ஆகும்னு தோணுது அங்கிள். அவங்க வேலைக்கு கூட வர வேண்டாம்... வீட்டுல இருந்தே டிசைன் பண்ணி தரலாம்... நான் அதுக்கு ஏற்ற சாலரி தந்துடறேன்... நீங்க சரி சொன்னா...”
என்று நிறுத்தினான்.
அவரும் என்ன சொல்வார்.. தன் மகளை மீட்டுக்கொடுத்தவன்... போதாக்குறைக்கு வீட்டிலேயே இருந்து தான வேலை பார்க்கணும்... என்று யோசித்தவர்...
“சரி தம்பி...எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல... என் பொண்ணுகிட்ட கேட்டு சொல்றேன்.”
என்றார் அந்த அப்பாவி தந்தை..
அவரது பெண்ணிடம் ஏற்கனவே இவன் கேட்ட லட்சணத்தை அறியாமல்.
எங்க வந்தாலும்.. அதுல ஒரு டீலிங்கா...? என்று சலித்தது... யாராக இருக்கும்... எல்லாம் நம்ம முகிலன் பாமிலி தான்.
“தேங்க்ஸ் அங்கிள்... இந்தாங்க இது எங்க கம்பெனி அண்ட் இது என்னோட கார்டு... ருத்ராகிட்ட கேட்டுட்டு எனக்கு சொல்லுங்க...”
என்றவன்... அவர் “சரி தம்பி” என்றதும்,
“அப்போ நாங்க போயிட்டுவரோம் அங்கிள்...”
என்று விடைபெற்று டஸ்டர் காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்தான் கார்முகிலன்.
பின்பு அனைவரும் அமர்ந்ததும்... கார் பெரியகுளம் விட்டு கோயம்புத்தூரை நோக்கி சென்றது...
வராக நதி - 9
முதலில் டைனிங் டேபிளை அடைந்த கார்த்தி... அங்கே இருந்த பஞ்சு போன்ற இட்லியையும், நெய் வாசனையோடு மணந்த பொங்கலையும், மெல்லிய நூல்களையே தோற்கடிக்கும் இடியாப்பத்தையும், மொரு மொரு வென்று ஆவி பறக்க இருக்கும் உளுந்த வடையையும் கண்டு... இனிய அதிர்ச்சி அடைந்தான் என்றால் மிகையல்ல... அதை சீதாவிடமும் வெளிபடுத்தினான்...
“வாவ்... ஆன்டி.. கொஞ்ச நேரத்துல இவ்ளோ சமைச்சிடீங்க... யு ஆர் ரியல்லி கிரேட்...”
என்றவாறு அமர்ந்தான்.
அவனிற்கு சிறிது கூச்சமாக சிரித்துக்கொண்டே வாழை இலை வைத்தவர்... அனைவரும் வரவும் அவர்களுக்கும் வாழை இலை வைத்து பரிமாற ஆரம்பித்தார்.
முதலில் கேசரி வைத்தவர், பின்பு இட்லிக்கு கெட்டி தேங்காய் சட்னியும் சாம்பாரையும் பரிமாறினார்... கார்த்தி அருகே வரவும்...
“ஆன்ட்டி எனக்கு கம்மியா வையுங்க... எல்லாத்தையும் சாப்ட்டுட்டு அப்புறம் வேணும்னா நான் சாப்டுறேன்...”
என்றான்.
அவனிற்கு அவன் கவலை.. இட்லியை நிறைய சாப்பிட்டால், பொங்கல், இடியாப்பம் அழுகாதா...?
கேசரி, இடியாப்பத்திற்க்கு கடலைக்கறி, பொங்கல் சாம்பார், என்று அனைத்தையும் ஒரு கை பார்த்தவன்...
கடைசியாக உளுந்த வடையை பார்த்ததும்... அவனிற்கு சாம்பார் வடை சாப்பிடும் ஆசை வந்தது... பின்னே.. சாம்பார் அவ்வளவு ருசியாக இருந்ததே... வயலில் விளைந்த பருப்பு மற்றும் காய்கறிகள் அல்லவா..?
இவ்வளவு நேரம் ரசித்து ருசித்து சாப்பிட்டவன்.. இப்போது யோசனையுடன் இருக்கவும்.. சீதா அவனருகே வந்து
“என்ன தம்பி எதாவது வேண்டுமா...? சாப்பிடுங்க...”
என்றார்.
“இல்ல ஆன்ட்டி... எனக்காக ஒரு கப் அண்ட் ஸ்பூன் எடுத்துட்டு வரிங்களா...? ப்ளீஸ்..”
என்று அவரிற்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுத்தான்.
அப்பா, அம்மாவிற்கு தெரிந்தால் ஒன்னும் சொல்லமாட்டாங்க... ஆனால் அண்ணாவிற்கு தெரிந்தால்.. வழக்கம் போல்..
“ஒரு கம்பெனிக்கு முதலாளியா நடந்துக்கோடா... இன்னும் நீ சின்னபையன் இல்லை...”
என்று ப்ரீ அட்வைஸ் கிடைக்கும்...
ஏன் கம்பெனி முதலாளினா விறைப்பா கஞ்சிசட்டை மாதிரி இருக்கணுமா என்ன...? என்பது இவன் வாதம்...
அவன் சொன்னதை கேட்ட சீதா...
“சரி தம்பி...”
என்று அவன் கிசுகிசுத்ததால் இவரும் மெதுவாகவே கூறி சென்றார்.
அவர் சென்று ஒரு குட்டி கிண்ணத்தையும் ஸ்பூனையும் கொண்டு வர... முகிலனை தவிர அனைவரும் அவரை கேள்வியாக பார்த்தனர்... சாதரணமாக இருந்தால், முகிலன் பார்த்திருப்பான்.. அவன் தான் எப்படி ருத்ராவின் அப்பாவிடம் பேசுவது... என்று யோசித்து கொண்டிருந்தானே.. அதனால் சுற்றுப்புறம் அவன் கவனித்தில் பதியவில்லை... அந்தமட்டில் தப்பித்தான் கார்த்தி...
சீதாவிடம் இருந்து கிண்ணத்தை வாங்கிய கார்த்தி... அதனுள்ளே இரண்டு உளுந்த வடையை வைத்து, அதில் சுட சுட இருந்த சாம்பாரையும் ஊற்றி இலையின் ஓரமாக நகர்த்தி... ஒன்னும் தெரியாதவன் போல மேலும் ரெண்டு இடியாப்பம் சாப்பிட ஆரம்பித்தான்.
அதை கண்ட அவன் வீட்டினருக்கு தலையில் அடிக்காத குறை... சொல்லி திருந்துகிற ஜென்மம் இல்லை இந்த விசியத்தில் என்று சிறுவயதில் இருந்து அவனிடம் போராடிய அனுபவம் கூறியதால்.. அவர்களும் அதனை கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்தனர்.
கருணாகரன் – சீதாவிற்கோ இவ்வாறு ரசித்து உண்பவனை கண்டு மகிழ்ச்சியே... கிராமத்து ஆட்கள் அல்லவா...? வெளிப்படையாக இருப்பதை மிகவும் விரும்பினார்கள்.
அவன் செய்வதை பார்த்த சீதா... மீண்டும் உள்ளே சென்று அனைவருக்கும் கிண்ணம் மற்றும் ஸ்பூன் எடுத்து வந்தார்...
எல்லோரிடமும் சாம்பார் வடை வேண்டுமா..? என்று கேட்டு அவர்களும் சரி என்று சம்மதிக்கவே... அங்கே இருந்த வடை எல்லாம் சாம்பார் வடையாக உருமாறியது கார்த்தியின் புண்ணியத்தில்...
ஒருவழியாக விருந்து முடிந்து அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்.
மாணிக்கவேல் தான் விடைபெற ஆரம்பித்தார்...
“விருந்து அருமையா இருந்தது கருணா... தங்கச்சி சமையல் பிரமாதம்... இதுக்காகவே கூட இன்னொரு நாள் வந்தாலும் வருவோம்... இப்போ நாங்க போயிட்டுவரோம்”
என்றார்.
கார்த்தியும்...
“ஆமா அங்கிள்.. ஆன்ட்டி சமைச்ச சாப்பாடு செம... இந்த மாதிரி 5 ஸ்டார் ஹோட்டல்ல கூட சாப்பிட்டதில்லை..”
என்று ஒத்து பாடினான்.
அப்படியே பேசிகொண்டிருக்கும் வேளையில்...
“அங்கிள்...”
என்று முகிலன் முதல்முதலாக அழைத்தான். ஆனால் அவரோ.. கார்த்தியை தான் பார்த்தார்... அவரை அப்படி அழைப்பது அவன் தானே...
ஆனால் அதற்குள் முகிலனே...
“அங்கிள் நான் உங்க கிட்ட முக்கியமான விசியம் பேசணும்... நீங்க சரி சொன்ன எனக்கு உதவியா இருக்கும்...”
என்றான்.
அவன் அங்கிள் சொன்னதிலேயே மகிழ்ந்தவர்... பேசவேண்டும் என்றதும்...
“சொல்லுங்க தம்பி.. நான் என்ன சரின்னு சொல்லணும்”
என்றார்.
“உங்க பொண்ணு ருத்ரா சிவில் படிச்சிருக்காங்கனு அவங்க ரூம்ம பார்த்தே தெரிஞ்சிக்கிட்டேன்... அவங்க கிட்ட இருக்குற திறமை எனக்கு யூஸ் ஆகும்னு தோணுது அங்கிள். அவங்க வேலைக்கு கூட வர வேண்டாம்... வீட்டுல இருந்தே டிசைன் பண்ணி தரலாம்... நான் அதுக்கு ஏற்ற சாலரி தந்துடறேன்... நீங்க சரி சொன்னா...”
என்று நிறுத்தினான்.
அவரும் என்ன சொல்வார்.. தன் மகளை மீட்டுக்கொடுத்தவன்... போதாக்குறைக்கு வீட்டிலேயே இருந்து தான வேலை பார்க்கணும்... என்று யோசித்தவர்...
“சரி தம்பி...எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல... என் பொண்ணுகிட்ட கேட்டு சொல்றேன்.”
என்றார் அந்த அப்பாவி தந்தை..
அவரது பெண்ணிடம் ஏற்கனவே இவன் கேட்ட லட்சணத்தை அறியாமல்.
எங்க வந்தாலும்.. அதுல ஒரு டீலிங்கா...? என்று சலித்தது... யாராக இருக்கும்... எல்லாம் நம்ம முகிலன் பாமிலி தான்.
“தேங்க்ஸ் அங்கிள்... இந்தாங்க இது எங்க கம்பெனி அண்ட் இது என்னோட கார்டு... ருத்ராகிட்ட கேட்டுட்டு எனக்கு சொல்லுங்க...”
என்றவன்... அவர் “சரி தம்பி” என்றதும்,
“அப்போ நாங்க போயிட்டுவரோம் அங்கிள்...”
என்று விடைபெற்று டஸ்டர் காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்தான் கார்முகிலன்.
பின்பு அனைவரும் அமர்ந்ததும்... கார் பெரியகுளம் விட்டு கோயம்புத்தூரை நோக்கி சென்றது...
Last edited: