Hi mam
ஷ்யாமின் கெத்து எங்கே போய்விட்டது,இந்த காதல் வந்தாலே யார்யார் எப்படி மாறுவார்கள் என்றே தெரியாது,தன்னுடைய படை பரிவாரங்களுடன் மஹாவை மஹா வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இப்போது ஷேப் என்று தகவல் அனுப்பமாட்டாயா என்று கேட்பது ஷ்யாமுக்கே அதிகமாய் தெரியவில்லை ,அதனால் கேட்டேன்,ஷ்யாம் மஹா உரையாடல் விஜய்க்கு அவர்களின் தற்போதய நிலையை விளங்கியிருக்கும்,மஹாவை பொக்கிஷமாய் பாதுகாக்க விரும்பும் விஜய் மஹாவின் மனது ஷ்யாமிடம் போய்விட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை வருத்தமாக வேறு இருக்கின்றார்,ஆனால் மஹாவை உண்மையாக விரும்புகின்றார் தன் மனதுக்கு பிடித்தபெண் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துவாரா அல்லது இடைஞ்சல் கொடுப்பாரா,திரையரங்கை வாங்கியது ஷ்யாம்தான்,துங் பத்திரப்பதிவின் போது எல்லோருக்கும் தெரியவரும்,ஆனால் அது ஷ்யாமினால் மீண்டும் மஹாவிற்குத்தான் அது கொடுக்கப்படும் என்று தோன்றுகின்றது,பைரவி ஷ்யாமை திட்டுவதை மஹாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதே நேரம் தன் தாயின் மனநிலையையும் புரிந்து கொள்ள முடிகின்றது,எல்லா பணயகைதி சம்பவங்களிலும் பணயக்கைதியாக்கப்பட்டவர் பணயம் எடுத்தவரை வெறுப்பார்கள் முறைப்பார்கள் ,இங்கு என்னவென்றால் சுற்றி இருப்பவர்கள் பணயக்கைதியாக பிடித்தவனை வெறுக்கின்றனர் பணயக்கைதியாக இருந்தவர் நட்புடன் பேசுகின்றனர்,இப்போ மஹா ஷ்யாம் உரையாடல் மஹாவின் உறவுகளுக்கு எதை புரிய வைக்கும் அதேநேரம் மஹாவும் எதை புரிய வைக்க முயலுகின்றார் ,தன் பெண் ஷ்யாமுடன் ஒரே இடத்தில் இருந்தாரென்றா அல்லது தன்பெண் அந்த நாலுநாளை கடந்து வந்து பழைய மாதிரியே இருக்கின்றார் என்றா,அல்லது தன்பெண் பணயக்கைதியாக்கியவனுடன் இலகுவாக பேச முடிகிறது என்றால் மஹா ஷ்யாமை விரும்புகின்றார் என்று எதனை இந்த தொலைபேசி உரையாடல் அவர்களுக்கு புரிய வைக்கும்,மஹாவிற்கு ஷ்யாம் மீதான ஈர்ப்பு புரிகின்றது இருந்தாலும் அதனை உணரத்தடையாய் இருப்பது ஷ்யாமின் கடந்த கால பழக்கவழக்கம்,ஒருவேளை மஹா ஷ்யாமை திருமணம் செய்ய முடிவெடுத்தால் மஹாவீட்டில் கடும் எதிர்ப்பு வரும் என்று தோன்றுகின்றது,இதற்குள் விஜய் என்ன செய்யக்காத்திருக்கின்றாரோ தெரியவில்லை ,கார்த்திக்கிக்கு மஹாவை பணயக்கைதியாக்கியவனுக்கு கொடுப்பதா அல்லது அந்த நேரத்தில் உறுதுணையாக இருந்தவனுக்கு கொடுப்பதாக என்ற சூழல் மிக்க விரைவில் வரும்,அப்படி ஒரு சூழலை உருவாக்கி மஹாவை தன்னவளாக்க முயல்வார் விஜய் என்று தோன்றுகின்றது,எதனால் தன் பெற்றோருடன் உரையாடுவதை தள்ளிப்போடுகின்றார் ஷ்யாம்,கண்டிப்பாக பெற்றோருக்கு பயந்து அல்ல.
நன்றி