• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 6 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Continuation :

“சித்தி …..” அந்த சித்தி என்று மனிஷ் சொல்லிய விதமே ரஜினி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று சொன்னது.
“நானும் உன்னை மத்த பசங்க மாதிரி கல கலப்பா இருக்க வைக்க பார்த்தேன் ஆனா என்னால முடியல.
சரி கல்யாணம் செஞ்சா மத்த பசங்க மாதிரி சந்தோஷமா இருப்பியான்னு உனக்கு பிடிச்ச பொண்ணா பாக்கனுமேன்னு தான் பொண்ணு பார்த்துட்டு இருந்தேன். என் எதிர் பார்ப்பு வீண் போகல தம்பி.தோ போட்டோ பார்த்ததுமே உன்ன இந்த அளவுக்கு மகிச்சியா பேச வெச்சிட்டான்னா….உனக்கு அவ தான் பொண்ணாட்டி மனிஷ்.நான் மத்தத அந்த பெண்ணோட பெரியப்பா கிட்ட பேசிக்கிறேன்.” என்று சொன்ன சித்தியின் பேச்சு மனிஷை பலமாக தாக்கியது.
என்னோட சந்தோஷத்தை மட்டுமே பார்த்த சித்தியிடம் நாம் ஒன்றி இருக்க வேண்டுமோ….? என்று நினைத்தவன்.சரி இனியாவது அவர்களுக்கு ஒரு நல்ல மகனாய் நடந்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு.
“சரி சித்தி நான் வெச்சிடறேன்.” என்ற மனிஷிடம்.
“அப்போ பெண்ணின் பேரு உனக்கு தெரிய வேண்டாமா…..?”
“நீங்கலே சொல்லுவீங்கன்னு பார்த்தேன்.” என்று சொன்னவனிடம் பெண்ணின் முழுவிவரமும் சொல்ல ஆராம்பித்தார்.
“பெண்ணின் பெயர் ஜெயந்தி.” என்றதும்.
“என்னது ஜெயந்தியா…..?” என்று கேட்டதும்.
“என்ன தம்பி பேரு பிடிக்கலையா…..?” சித்தியின் குரலில் கவலை எட்டி பார்க்க.
“சித்தி அந்த பேரே கூப்பிடனும் என்று எந்த அவசியமும் இல்லலே...நமக்கு பிடிச்ச மாதிரி கூப்பிட்டுக்கலாம்.” என்று சித்தியிடம் பேசிக் கொண்டே …. மனது வேகமாக எந்த பெயர் கொண்டு அழைக்கலாம் என்று வரிசைப்படுத்திக் கொண்டு இருந்து.
டாலி, பேபி, சிட்டு, சீச்சி...என்று நினைத்தவன். கண்ணம்மா, செல்லம்மா என்ற பெயர் நினைக்கும் போதே முன்பு கர்நாடகமாக தெரிந்த பெயர் இப்போது கொஞ்சலாக அழைப்பது போல் இருக்க.
சரி அப்பா ஆசைப்பட்ட மதிரி அந்த செல்லம்மா தான் மருமகளாய் அவருக்கு கொண்டு வரமுடியவில்லை.அந்த பெயராவது அவரின் மருமகளுக்கு இருக்கட்டும் என்று செல்லம்மா...என்று தன் வருங்கால மனைவிக்கு செல்ல பெயர் இட்டு மகிழ்ந்தான்.
பின் சித்தி சொன்ன மர்ற விவரமாய் அவளுக்கு பெற்றோர் இல்லை. ஒரு வருடமாக பெரியப்பாவிடம் தான் இருக்கிறாள் என்று இதர தகவலையும் கேட்டு வைத்ததும். மீண்டும் போன் அழைப்பு வர.
செல்லம்மாவின் முகவடிவை பார்த்துக் கொண்டு இருக்கலாம் என்று பார்த்தால் விட மாட்டார்கள் போலவே என்று ஒரு வித சடலிப்புடன் போனை எடுத்தவனுக்கு இனிய செய்தியாய்.
பெண்ணின் பெரியப்பா…. “ மாப்பிள்ளை நாளைக்கு காளி கோயிலுக்கு எட்டு மணிக்கு வந்துடுங்க. நாங்க எங்க பொண்ண அங்கே அழச்சிட்டு வந்துடுறோம்.” என்றதும்.
“சரி சார்.” என்று போபை வைத்தவன் என்ன நினைத்தானோ தன் சித்திக்கு அழைத்து.
“சித்தி பெண்ணை உங்களுக்கு பிடிச்சி இருக்கா….?” மனிஷிடம் இருந்து இந்த மாதிரி கேள்வியைய் சத்தியமாக ரஜினி பாய் எதிர் பார்க்கவில்லை.
நெகிழ்ச்சியுடன் “எனக்கு பிடிச்சி இருக்கு தம்பி.” என்று சொன்னவர்.
“என்னை விடு தம்பி. உனகு பிடிச்சி இருக்கா…..?”
“பிடிச்ச தொட்ட்டு தானே...உங்கலிடம் கேட்கிறேன்.” என்று சொன்னவன்.
பின் “அப்பாவுக்கு…..?” அப்பாவின் விருப்பத்தையும் கேட்கும் மனிஷின் இந்த தன்மை புதியதாக இருக்க.
“அவருக்கும் ரொம்ப பிடிச்சி இருக்கு தம்பி. அந்த காளியம்மான் இந்த பெண்ணையே முடிச்சா நல்லா இருக்கும்.” பெண்ணை போட்டோவில் பார்த்ததுக்கே மகனிடம் இந்த அளவுக்கு மாற்ரம் தெரிகிறதே….அந்த பெண்ணே மகனுக்கு மனைவியைய் அமைந்து விட்டாள் நல்லது என்ற அர்த்தத்தில் சொல்ல. அந்த பேச்சு மனிஷூக்கு பதட்டத்தை கொடுத்து விட்டது.
“என்னத்துக்கு காளிக்கிட்ட வேண்டிக்க சொல்றிங்க. என்னை மறுப்பாங்களா…..?” மறுத்து விடுவார்களோ...என்றதிலேயே இந்த பதட்டப்படும் மனிஷ். செல்லம்மா, ஜெயந்தி நடத்திய நாடகம் தெரிய வந்தால்……?
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
photo ல பொண்ணோட தோழி இருக்கிறதா சொல்றாங்க.செல்லம்மாவத்தான் ஜெயந்தியா நினைக்கிறானா மனீஷ்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
chellama thevai illamal vambai vilaiku vangukiralo:rolleyes::rolleyes::rolleyes:anyway manish chellamavai manathil fix pannitan......... evening kovilil enna natakapogutho:unsure::unsure::unsure::unsure:interesting ud sis(y)(y)(y):love::love::love:
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
விளையாட்டு வினையாகாமல் இருந்தால் சரி.anyway superbbbb
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top