• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 8 - part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

Part 2 continuation for chapter 8.

அதை பார்த்த சுக்ரலால். அடப்பாவீ அப்பன், மகன் இருவருக்கும் அவள் தான் பெண்ணாய் தெரிகிறார்களா….? அதுவும் தன் தந்தையைய் அவ்வளவு அவமானப்படுத்தியும்.
ஒரு வழியாக மீட்டிங் முடிந்து பப்பே முறையில் தங்களுக்கு வேண்டிய உணவை எடுத்துக் கொண்டு இருந்த செல்லம்மா அருகில் சென்ற மனிஷ்.
“என்ன உன் அண்ணா கிட்ட உனக்கு நல்லா திட்டு போல.” என்று கேட்டவனை ஒரு முறை முறைத்தவள்.
“எங்க அண்ணா என்னை எதுக்கு திட்ட போறான்.” என்று கேட்டதுக்கு.
“தன் காதலியைய் அடுத்தவன் கிட்ட கொடுத்தா உன்னை திட்டாம கொஞ்சுவானா…..?” என்ற அவன் பேச்சிக்கு.
புழுவை போல் ஒரு பார்வை பார்த்த செல்லம்மா.”அடுத்தவனை காதலிக்கிறவளை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லிட்டு வந்திருக்கியே நீயெல்லாம் எதில் சேர்த்தி….?” என்ற செல்லம்மாவின் இழிவான பேச்சு கோபத்தை கிளறினாலும், இருக்கும் இடமும் மனதில் இடம் பெற்ற காதலும் அதை தடுக்க பார்த்தாலும்.
இப்படி பேசுபளை பதில் அடி கொடுக்காது எப்படி விடுவது என்று. “தோழிக்கு பேசும் மாப்பிள்ளைக்கு தன் போட்டோவை அனுப்பிய லிஸ்டிலேயே என்னையும் சேர்த்துக்கலாம்.” என்று பதில் அடி கொடுக்க.
மனிஷ் எதிர் பார்த்த மாதிரியே அந்த பேச்சு செல்லம்மாவை பலமாக தாக்கியது. மனிஷ் சொன்ன மாதிரி இவ்வளவு நேரமும் சுகன் செல்லம்மாவை வறு, வறு என்று தான் வறுத்துக் கொண்டு இருந்தான்.
ஆனால் இவன் சொன்னது போல் தன் காதலியைய் அடுத்தவனுக்கு கொடுத்தது பற்றி இல்லை.
“நீ செய்தது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா பாப்பா….? மனிஷ் நீ நினைப்பது போல் லேசு பட்டவன் கிடையாது. இதுக்கு பதில் அடி கொடுக்காது விட மாட்டான்.” என்று சொன்னதுக்கு.
“அது தான் கொடுத்துட்டானே….ஜெயந்தியைய் கல்யாணம் செய்துக்குறேன்னு…..” தன் திட்டம் இப்படி சொத்தப்பும் என்று எதிர் பார்க்காத ஆதாங்கத்தில் கோபமாக பேச.
“இல்ல பாப்பா அவன் இதோடு விட மாட்டான்.”
“இதோடு விட மாட்டானா…..?” என்று கேட்டுக் கொண்டு இருந்தவள். ஏதோ நினைத்தவளாய்.
“ஜெயந்தியைய் கல்யாணம் செய்து பழிவாங்குவான்னு நினைக்கிறிங்களா…..?” என்று கேட்டவளை நினைத்து சுகனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் என்று தான் தோன்றியது.
“பாப்பா ஒரு சமயம் வயசுக்கு மீறி யோசிக்கிற….ஆனா பல சமயம் நாங்க பாப்பான்னு சொல்றதுக்கு ஏற்ப யோசிக்கிறொயே…
யாரையும் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துக்க முடியாது.அதுவும் அவன் இலக்கு ஜெயந்தி இல்ல நீ. அது தான் எனக்கு பயமா இருக்கு பாப்பா.
உன் குடும்பதுக்கு பதில் சொல்வது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், உனக்கு ஏதாவதுன்னா ….?” என்று முதலில் பயத்தில் பேசியவன்.
பின் “ஆனாலும் நீ இது மாதிரி செஞ்சிருக்க கூடாது பாப்பா. காரில் வெச்சி நீ சொல்லும் போதே நான் வலுவா தடுத்து இருக்கனும்.
ஜெயந்தியைய் பார்த்த மயக்கத்தில் ஏதோ விட்டுட்டேன். ஆனா இப்போ அப்படி விட்டது தப்போன்னு படுது பாப்பா. இப்போ நீ செஞ்ச செயலை உன் வீட்டில் சொல்ல முடியுமா…..?” என்று சுகன் கேட்டதும் தான் தன் தவறு புரிந்தது செல்லம்மாவுக்கு.
செல்லம்மாவின் முகம் வாடாவும் “சரி செல்லம்மா நடந்தது நடந்துடுச்சி இனி நாம பார்த்து நடந்துக்கனும்.” என்ற பேச்சோடு சுகன் விட்டாலும் செல்லம்மாவுக்கு இந்த காரியம் செய்தது தவறோ…..?
ஒருவனின் மனதோடு விளையாடுவது தவறு தானே….?அவன் என் அண்ணனுக்கு செய்த செயலை தானே அவனுக்கு நான் திருப்பி செய்து இருக்கிறேன்.
அப்போது எனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று தன் மனதே அவளை கேள்வி கேட்கும் போது மனிஷின் இந்த பேச்சு எரியும் தீயில் எண்ணைய் ஊற்றியது போல் இருக்க.
அவளின் அந்த தலை குனிந்த நிலையைய் பார்க்க முடியாது அந்த இடத்தை விட்டு அகல ஒரு அடி எடுக்கும் வேளயில் அவன் செல் போன் இசையில் அதை எடுத்து காதில் வைத்தவனுக்கு.
செல்லம்மா கொல்கத்தா வருவதற்க்கு முன் சென்னையில் வைத்த ஆப்பு வெளிப்பட.
அடுத்த அடி வைக்காது செல்லில் சொன்ன செய்தியைய் காதில் வாங்கிக் கொண்டே செல்லாம்மாவை பார்த்து கொண்டு இருக்க.
செல்லம்மாவும் அப்போது மனிஷை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.முன்பு இருந்தது போல் தலை குனிந்து இல்லாது நேர் கொண்டு பார்வை பார்க்க.
இப்போதும் மனிஷிடம் தான் எதிர் பார்த்த கோபம், பதட்டம், ஆதாங்கம் என்ற உணர்ச்சி இல்லாது சிரித்த முகத்துடன் போனை அணைத்தவன்.
மைய்யலாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே இரண்டடி செல்லம்மாவின் அருகில் வரவும். செல்லம்மா தான் பதட்டத்துடன் நான்கு அடியாக பின்நோக்கி கால் எடுத்து வைக்க வேண்டி இருந்தது.
அவளின் பதட்டத்தை உள்வாங்கிக் கொண்டே…. “சென்னைக்கு வரும் போதே எனக்கு செக் மேட் வெச்சிட்டு தான் வந்து இருக்க போல. ஐ.லைக்கிட். என் வாழ்க்கை ரொம்ப சுவாரசியமா போக போறத நினச்சா எனக்கு சந்தோஷமா இருக்கு.” என்று சொல்லி செல்பவனை பார்த்து செல்லம்மா தான் முழி பிதிங்கி நின்றாள்.
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
என்னத்த செஞ்சு வச்சிருக்க செல்லம்மா.மனீஷ் ஆனாலும்உனக்கு குசும்பு ஜாஸ்திதான்.very nice.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Chellammaa Paappa Chennaiyil enna seithuvittu vanthirukkaathu, Viji dear?
Chellammaa thanakku kodutha aappai Maneesh eppadi sari seithu clear seivaan, Viji dear?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top