• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Zinab's மயங்காதே மனமே -மித்ரனுக்கு(நண்பனுக்கு) ஒரு கடிதம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாய் மித்ரா,

உண்மையைச் சொல்லப் போனால், முதல் epi லயே பப்ல இருந்த அபியை நீ பார்க்கும் போது உன் கண்ணில் தெரிந்த வெறுப்பில் எனக்கு உன்னை பிடிக்கலை..
காணாத குறைக்கு காட்டாற்று வெள்ளம் போன்ற உன் நடவடிக்கைகள் என்னை அப்பட்டமாக உன்னை வெறுக்க வைத்தது..

அபியும் உன்னைப் போல செல்வம் கொழிக்கும் மேல்தட்டு குடும்ப பையன்தானே,அவன் ஒழுக்கமாக இருக்கும் போது இவனாலெல்லாம் ஒழுக்கமாக இருக்க முடியாதா என உன்னை வசைபாடினேன் நான்...

ஸோனாவையும் அபியையும் இணைத்து, வஞ்சகமாக photoஎடுத்து மகேந்திரனின் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் போட்டு அபியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய போது, உன் மேல் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது..

முதன்முதலில் கீதாவை உன் factory ல் நீ பார்க்கும் போது..
ஐயையோ!!இவன் பார்வையில் போய் இவள் விழுந்து விட்டாளே என்று உன் பார்வை என்னை பதறவைத்தது ...

அதன்பின் பள்ளி யின் விழாவிற்கு ஸ்பான்சர் என்கின்ற பெயரில் mrs.ஜான்சன் மூலம் கதிர் கூட அறியாமல் கீத்து வை factory வரைக்கும் வரவழைத்து என் BP யை நீ எகிற வைத்தாய் என்பது தான் நிஜம்...

ஆனால் விழாவிற்கான ஹாலை பார்வையிட வந்த கீத்துவை உன் அருகில் கண்டு, அவளை ஏளனப்பார்வை பார்த்த மகேந்திரனின் பார்வையை தாங்க இயலாது அவளை அனுப்பி வைத்து விட்டு, அவளைக் குறித்த தகவல்களை மகேந்திரனுக்கு சொல்லி என்னுடன் பழகும் மற்ற பெண்கள் போல் இல்லை கீதா என்று சொல்லாமல் சொன்னாயே அந்த இடத்தில் எனக்கு உன்னை கொஞ்சம் பிடித்தது...

தன்னுடன் நிற்கும் பெண்ணிற்கு மரியாதை இவ்வளவு தானா?அப்படியானால் இவ்வளவு நாளும் நான் வாழ்ந்த வாழ்க்கை க்கு அர்த்தம் என்ன என்று உன்னை நீயே சுய பரிசோதனை செய்து கொண்ட போது உன் மீது எனக்கு பரிதாபமே ஏற்பட்டது நண்பா...

எப்போது உன் பாட்டியின் மடிசாய்ந்து அவரின் கண்ணோடு கண் பார்த்து,
கீத்தா இல்லைன்னா எனக்கு ஒன்றுமே இல்லைன்னு தோனுது பாட்டி,அவளுக்கு ஒன்று என்றால் மனது தவிக்குது,அவளை தப்பாக பார்ப்பவரை அடித்து நொறுக்க தோனுது என்று உன் கண்ணில் துளி கூட பொய்யில்லாது சொன்னாயோ..அந்த நிமிடமே நீ என் நெஞ்சமதில் அமர்ந்து விட்டாய் ஒரு நண்பனாய்...

அதனாலேயே நண்பா!!நிதர்சனத்தை சொல்ல விழைகிறேன் நான் உனக்கு...
இரு கை தட்டினால் தான் ஓசை வரும்...
அது போலவே நண்பா, இரு மனங்கள் இணைந்தால் தான் காதல் மலரும்...
என் நண்பனே!!நீ உனக்கானவள் என எண்ணும் கீத்துவின் மனம் அபியிடம் சாய்ந்து விட்டதடா..
நீ அறியாத இன்றைய நிலவரம்.. கீத்து அபியின் உரிமையுள்ள மனைவி தற்போது..
ஆம்.. நீ ஆடிய கண்ணாமூச்சி விளையாட்டில் மகேந்திரனின் உதவியால் எதிர் பாராது தம்பதியர் ஆகிவிட்டனர் இருவரும்...
அதை நீ அறிய வரும் போது பதறாதே என் நண்பா...
எப்பொழுதும் நாம் விரும்புபவர்களை விட நம்மை விரும்புபவர்கள் நம் வாழ்க்கை துணையானால் இன்புற அமையும் இல்வாழ்க்கையது..

ஆகையால் உனக்கே உனக்கானவள் உன்னைத் தேடி வரும் வரை புணரமைத்த உன் புதிய வாழ்க்கை முறையோடு கலங்காமல் காத்திரு என் நண்பா!!!

என்றும் நட்புடன்,
சுவிதா....
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Akka...kaditham nalla iruku..(y) nan innum padikala.. Ana padikanum nu thonuthue unga letter a paathu.. Zainab akka story lam enaku 1kg milk sweet ku equal.. Porumaiya padippen. :love::love::love:
நன்றி மா..
நானே "மயங்காதே மனமே" கமெண்ட் thread ல உன்னை காணாமல் தேடினேன் பிரதி..
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
உங்களையும் இந்த மித்ரன் மயக்கிட்டானா சுவி!!! ஆச்சர்யப்படுறதுக்கு ஒண்ணுமில்ல நம்ம Zainab கைவண்ணம் அப்படி...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top