"அம்மா!!!!!!" என்ற அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அனைவரும் ராதாகிருஷ்ணன் தன் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே சரிந்து வீழ்ந்ததைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றனர்.
அவனுடைய மார்பில் இருந்து குருதி வடிந்தோட கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து உயிர் பிரிந்து கொண்டிருந்தது.
ராதாகிருஷ்ணனின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா சுவரில் பட்டு வீழ்ந்தது.
அதிர்ச்சியில் இருந்து மீண்டு கொண்ட ஆதித்யா மெய்யப்பனை திரும்பி பார்க்க
"கடைசியாக திருந்துறதுக்கு இவனுக்கு ஒரு வாய்ப்பாக தான் இந்த சந்தர்ப்பத்தை கொடுத்தேன். ஆனா இவனெல்லாம் திருந்ததாத ஜென்மம்னு நிரூபிச்சுட்டான்.
கொஞ்சம் விட்டு இருந்தா உங்கள்ள ஒருத்தர கொன்னு இருப்பான். அவன் ட்ரிக்கரை அழுத்த முதலே அவனை சுட்டுருப்பேன் டைமிங் மிஸ் ஆகிடுச்சு. பட் அவன்கிட்ட இருந்து உங்க எல்லாரையும் காப்பாத்திட்டேனே அது போதும்" என்று மெய்யப்பன் கூறவும்
"ஆனால் இது மீடியாவுக்கோ இல்லனா வேற யாருக்காவது தெரிஞ்சா உங்க வேலையே போய்டுமே அங்கிள்??" என்று கவலையுடன் ஆதித்யா கேட்டான்.
அவனைப் பார்த்து சிரித்த மெய்யப்பன்
"கவர்மெண்ட ஏமாத்துற இவனுங்களே இவ்வளவு ட்ரிக்ஸ் யூஸ் பண்ணும் போது நாங்க யூஸ் பண்ண மாட்டோமா??" என்று கூறியவாறே ராதாகிருஷ்ணனின் உடலின் அருகில் நின்ற போலீஸைப் பார்க்க
"யெஸ் ஸார்" என்று கூறிய அந்த போலீஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் கையில் இருந்த துப்பாக்கியை அவனுடைய கையில் இருந்தவாறே வைத்து சுற்றி இருந்த பகுதிகளில் சுட்டு விட்டு இறுதியாக தன் கையிலும் சுட்டு கொண்டார்.
மெய்யப்பன் அருகில் நின்ற இன்ஸ்பெக்டர்
"இல்லீகல் பிஸ்னஸ் நடக்குதுனு எங்களுக்கு நியூஸ் வரவும் ரைட் வந்தோம். அப்போ எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் எங்க போலீஸை தாக்கிட்டு தப்பி ஓடப் பார்த்தாரு. வேற வழி இல்லாம கமிஷ்னர் அவரை சுட்டுட்டாரு" என்று கூற
"இது தான் வெளி உலகத்துக்கு போக போற நியூஸ். சோ யூ டோன்ட் வொர்ரி. நீங்க எல்லாரும் மீடியாக்கள் வர்றதுக்குள்ள முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க. நாங்க இதை பார்த்துக்குறோம்" என்று மெய்யப்பன் கூறவும் மயக்க நிலையில் இருந்த மித்ராவை சூர்யா தூக்கி கொள்ள ஏனையவர்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு வெளியேறி சென்றனர்.
ஆதித்யாவின் காரில் வெண்பா ஏறிக் கொள்ள மித்ராவை அவள் மடி மீது படுக்க வைத்து விட்டு நிமிர்ந்த சூர்யா
"நீங்க முதல்ல மித்ராவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க. நானும் மாதவும் மித்ராவோட வீட்டுக்கு போய் அவங்க அம்மாவை கூட்டிட்டு வரோம்" என்று விட்டு செல்ல போக
"சூர்யா அந்த சைட்ல வெண்பாவோட ஸ்கூட்டி நிற்குது. நீங்க அதையே எடுத்துட்டு போங்க" என்று ஆதித்யா கூறவும் சரியென்று விட்டு மாதவும், சூர்யாவும் கிளம்பினர்.
மித்ராவைப் பார்த்து கவலை கொண்ட வெண்பா ஆதித்யாவிடம்
"கொஞ்சம் பாஸ்ட்டா போங்க விக்ரம். எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று கூற கலக்கமாக இருந்த அவள் முகத்தைப் பார்க்க ஆதித்யாவிற்கும் வேதனையாகவே இருந்தது.
எதுவும் பேசாமல் காரை வேகமாக ஓட்டியவன் ஐந்து நிமிடங்களில் ஹாஸ்பிடலை வந்து அடைந்தான்.
ஹாஸ்பிடல் ஊழியர்கள்
அவசரமாக ஸ்ட்ரெச்சரை எடுத்து வந்து மித்ராவை உள்ளே அழைத்து சென்றனர்.
மித்ராவிற்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட வெண்பா அத்தனை நேரம் சேர்த்து வைத்திருந்த மொத்த சக்தியும் வடிந்து போக அப்படியே கால்கள் தொய்ந்து போக அமர்ந்தாள்.
அவளருகில் வந்த ஆதித்யா ஆறுதலாக அவளை தோளோடு அணைத்துக் கொள்ள அவளின் கவலை, பயம் எல்லாம் ஒன்று சேர கண்ணீராக அத்தனை உணர்வுகளையும் அவன் தோளில் வெளிக்காட்டிக் கொண்டிருந்தாள்.
அவள் அழுது முடியும் வரை பொறுமையாக காத்திருந்தவன் அவள் முகம் நிமிர்த்தி
"இப்போ எதுக்கு அழுவுற?? அந்த ராதாகிருஷ்ணன் செத்துட்டான்னா?? ஏன் அவனைப் பிரிஞ்சு உன்னால இருக்க முடியலையா???" என்று சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு கேட்க அவன் மார்பில் குத்தியவள்
"உங்களுக்கு எப்போவும் விளையாட்டு தான். நானே மித்ராவுக்கு என்ன ஆச்சோ?? ஏதாச்சோனு கவலையாக இருக்கேன். இந்த டைம்ல உங்களுக்கு காமெடியா??" என்று கேட்டு விட்டு முறைத்தவள்
பின் ஏதோ ஞாபகம் வந்தவளாக
"நீங்க..." என்று கேட்க தொடங்கும் போதே மித்ராவை சிகிச்சை பார்த்த வைத்தியர் வெளியே வர அவரருகில் விரைந்து சென்றாள்.
"டாக்டர் மித்ராவுக்கு என்ன ஆச்சு??? அவள் கண்ணு முழிச்சுட்டுளா?? அவளுக்கு ஒண்ணும் இல்லை தானே??" என்று பதட்டத்துடன் கேட்க
"நத்திங் டூ வொர்ரி. சீ இஸ் பேர்பக்ட்லி ஆல் ரைட். உடம்புல எனர்ஜி இல்லாமல் மயக்கமாகிட்டாங்க அவ்வளவு தான். ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு. இன்னும் ஒரு வன் ஆர் டூ ஹவர்ல கான்சியஸ் ஆகிடுவாங்க. அதுக்கு அப்புறம் இன்னைக்கே நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்" என்று கூறி விட்டு செல்ல சந்தோஷம் கொண்ட வெண்பா ஆதித்யாவை கட்டி கொண்டாள்.
"இப்போ தான் எனக்கு நிம்மதியாக இருக்கு" என்று கூறியவள் எதிரில் பதட்டத்துடன் வந்த வித்யாவைப்
பார்த்ததும் ஆதித்யாவிடம் இருந்து விலகி அவரருகில் சென்றாள்.
வெண்பாவைப் பார்த்ததும் வித்யா
"மித்ரா எங்கமா?? அவளுக்கு ஒண்ணும் இல்லலே??" என்று உயிரை கண்ணில் தேக்கி கொண்டு கேட்க
"மித்ரா ரொம்ப நல்லா இருக்கா ஆன்டி. அவளுக்கு எதுவும் இல்லை. இப்போ மயக்கமா இருக்கா. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம்னு டாக்டரே சொல்லிட்டாரு. நீங்க கவலைபடாம இருந்தா போதும்" என்று கூறவும்
கையெடுத்து கும்பிட்டு கொண்டவர்
"நான் கும்பிடுற சாமி என்னை கை விடல. நான் இப்போவே என் பொண்ண பார்க்கணும்" என்று விட்டு மித்ரா வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றார்.
சூர்யாவும், மாதவும் சிறு சிறு காயங்களுடன் நின்று கொண்டு இருக்க அவர்களுக்கும் சிகிச்சை செய்து விடும் படி ஆதித்யா கூற அவர்களுக்கும் பெர்ஸ்ட் எய்ட் செய்து விடப்பட்டது.
எல்லாம் முடிந்து விட்டது என்ற திருப்தியில் ஆதித்யா அமர்ந்து கொண்டு கைகளை தலைக்கு வாகாக வைத்து கொண்டு சாய்ந்து கண்களை மூடிக் கொள்ள அவன் கைகளை யாரோ இழுத்து விடவும் கோபமாக எழுந்த ஆதித்யா
"எந்த எருமை இந்த வேலை பார்த்தது???" என்று நிமிர்ந்து பார்க்க கைகளை கட்டி கொண்டு அவனையே பார்த்து கொண்டு நின்ற வெண்பாவைப் பார்த்ததும் நெளிந்து கொண்டே சிரித்தான்.
"பல்லைக் காட்டுனது போதும். நான் கேட்குற கேள்விகளுக்கு எல்லாம் பதிலை சொல்லுங்க.நீங்க எப்படி பேக்டரிக்கு வந்தீங்க?? போலீஸ்க்கு எப்படி இந்த விஷயமெல்லாம் தெரியும்??" என்று கேட்டவள்
ஆதித்யா ஏதோ கூற வரவும் அவனை கை காட்டி நிறுத்துமாறு கூறி விட்டு
"எல்லாத்துக்கும் முதல்ல மித்ரா மிஸ் ஆனது உங்களுக்கு எப்படி தெரியும்??" என்று கேட்க
"ஆமா அதானே!! உங்களுக்கு எப்படி தெரியும்??" என்று கேட்டுக் கொண்டே சூர்யாவும், மாதவும் வந்து நின்றனர்.
"ரவுண்டு கட்டிட்டாங்க. இனி விட மாட்டாங்க" என்று முணுமுணுத்துக் கொண்ட ஆதித்யா
"சரி எல்லாத்தையும் சொல்றேன். முதல்ல எல்லாரும் இப்படி உட்காருங்க" என்று அமர்ந்து கொள்ளும் படி கூறி விட்டு நடந்தவற்றை கூற தொடங்கினான்.
"இன்னைக்கு ஆபீஸ்ல டபுள் வேர்க். என் பாசமலர் அண்ணா கவி வெளியில் போனதால அவன் வேலையையும் சேர்த்து பார்த்துட்டு இருந்தேன். அப்போ ஒரு கால் வந்துச்சு. யாருனு பார்த்தா குமார்" என்று கூறி கொண்டிருக்க
"குமாரா???? யாரு அது??" என்று வெண்பா நடுவில் கேள்வி கேட்க அவளை முறைத்து பார்த்த ஆதித்யா
" அது தான் சொல்லிட்டு இருக்கேன்லே என்ன அவசரம்???" என்று விட்டு அவள் தலையில் கொட்டு ஒன்று வைத்தான்.
"ஆஹ்....." என்று வெண்பா கத்திக் கொண்டு ஏதோ கூற வர
"நம்ம டீலிங்கை அப்புறம் வைச்சுக்கலாம். இப்போ ஸ்டோரிக்கு வா" என்று மீண்டும் பழைய கதையை தொடர்ந்தான்.
"குமார் ஒரு சி.பி.ஐ ஆபீஸர். எனக்கு ஒரு மிரட்டல் லெட்டர் வந்துச்சே. அன்னைக்கு தானே ஆக்சிடெண்டும் ஆனுச்சு. அதுல வெண்பாக்கு எதுவும் ஆகலனாலும் என்னால அப்படியே அதை விட முடியல. அதனால தான் குமாரை வெண்பாவை வாட்ச் பண்ண சொன்னேன்..." என்று ஆதித்யா கூறவும்
நடுவில் வெண்பா கோபமாக ஏதோ கூற வர
அவள் கைகளை ஆதித்யா பிடித்து கொள்ள அவள் வாயை மூடிய மாதவ்
"ஸாரி ஆதி. உங்க வைப்போட வாய் கொஞ்ச நேரம் இப்படியே இருக்கட்டும். நீங்க மேலே சொல்லுங்க ஆதி" என்று கூறினான்.
அதைப் பார்த்து சிரித்துக் கொண்ட ஆதித்யா
"அவன் தான் மித்ரா மிஸ்ஸிங்னு சொல்லி வெண்பா மித்ரா வீட்டுக்கு போறானும், சூர்யாவும்,மாதவும் பேக்டரிக்கு போறாங்கனும் சொன்னான். உடனே நான் கமிஷ்னர் அங்கிள்க்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன். அவரு தான் என்ன நிலைமை இப்போ இருக்குனு பார்த்து சொல்ல சொன்னாரு. உடனே நான் மித்ரா வீட்டுக்கு வந்தேன். அங்கே நிலைமையைப் பார்த்துட்டு பேக்டரிக்கு போகலாம்னு கிளம்பும் போது இதோ இந்த மதர் தெரசா என்ன இடிச்சு தள்ளிட்டு வண்டியை எடுத்துட்டு போய்ட்டாங்க"என்று கூறி விட்டு வெண்பாவின் கைகளை விடுவிக்க மாதவும் அவள் வாயில் இருந்து கையை எடுத்து கொண்டான்.
" அப்புறம் நான் வெண்பாவை பாலோ பண்ணிட்டு வரும் போதே கமிஷ்னர் அங்கிள்ட எல்லாம் சொல்லிட்டேன். அவரு உடனே கிளம்பி வரேனாரு. அவரு வார வரைக்கும் பேக்டரிக்கு வெளியே வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஐந்து நிமிஷத்துல அவங்க வந்ததும் பேக்டரியை சுற்றி போலீஸ் நின்னாங்க. நானும் கமிஷ்னரும், இன்னும் கொஞ்ச பேரும் தான் உள்ளே வாரதுக்கு வந்தோம். அப்போ தான் வெண்பாவோட ஸ்கூட்டி நிற்குறத பார்த்துட்டு பாஸ்ட்டா உள்ள வந்தா பெரிய ஆக்ஷன் படமே போயிட்டு இருக்கு. என் பொண்டாட்டியா இதுனு கொஞ்சம் இல்ல இல்ல நிறைய ஷாக் ஆகிட்டேன். அவ அடி எப்படி இடி மாதிரி இருக்கும்னு தெரியும். பட் கட்டையால அடி எப்படினு இன்னும் வாங்கல" என்று கூறி சிரிக்க
அவனோடு இணைந்து மாதவும், சூர்யாவும் சிரித்தனர்.
வெண்பா அவர்களை முறைத்து பார்க்க உடனே சிரிப்பதை மூவரும் நிறுத்தி கொண்டனர்.