neenga epadi kelviya mathi pottu ketalum sollave matten......he he he.....kadaisi epiose varai padikama viduvomaa????ஹாய் அனிதா மேம் அருமையான எபி சூப்பர் சூர்யாவுக்கு ஜோடி இல்லையா
atharkul escape aaga parthaa????
neenga epadi kelviya mathi pottu ketalum sollave matten......he he he.....kadaisi epiose varai padikama viduvomaa????ஹாய் அனிதா மேம் அருமையான எபி சூப்பர் சூர்யாவுக்கு ஜோடி இல்லையா
Ssssssapppa idulayavadu othumaiya irukanungale"என்ன நொன்னைமா வேண்டி கிடக்குது ....ரெண்டு பேரும் கையில் கிடைச்சீங்க ...கைமா தான் ."என்றாள் கடுப்போடு .
"என்ன மது ஆன்ட்டி நீ கேட்ட ஸ்னாக்ஸ் செய்து தரலியா என்ன ...இந்த அளவூ அனல் அடிக்குது ....நான் வேண்டும் என்றால் ஹோட்டலில் ஆர்டர் செய்யவா ?"என்றான் விஜய் நேரம் காலம் தெரியாமல் ...அவனுக்கு தெரிந்து இவள் கோபப்படுவது கேட்ட ஸ்னாக்ஸ் ,சாக்லேட் ,ஐஸ்கிரீம் கிடைக்காத போது தான் .அந்த எண்ணத்தில் கேட்டு வைத்து பயபுள்ள தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டோம் என்பதை வெகு லேட்டா புரிந்து கொண்டான் .
(இவ சும்மாவே வச்சு செய்யறவ ...விஜய் கண்ணா இந்த நேரத்தில் இது உனக்கு தேவையா ?)
இவன் தான் மாட்டி கொண்டான் என்று பார்த்தால் ,இவன் சொன்னதை கேட்டு சூர்யா சிரித்து வைத்து ,"ஆப்பு வாங்குவோர் "லிஸ்ட்டில் VOLUNTEER சேர்ந்து கொண்டான் .
"டேய் !...உங்க ரெண்டு பேருக்கும் என்னை பார்த்தா கடோகஜன் போலவா இருக்கு ....தீனிப்பண்டாரம் என்று சொல்லாமல் சொல்லி காட்டரீங்களாடா ......"என்றாள் மதுரா எரிமலையாக .
View attachment 5308
"இதை நாங்க சொல்லவே இல்லை மதுரா .....உண்மை எது என்று உலகத்திற்கு தெரியும் ...."என்றான் சூர்யா .
"டேய் பிரபு .....வேண்டாம் .....கடுப்பு ஏத்தாதே ."என்றாள் மதுரா .
"சரி சரி ...கடையில் நின்று கத்தாதே ....எதற்கு போன் செய்தே சொல்லு ."என்றான் விஜய் .
"இதோ ஏதோ மனசுக்குள்ள நேவி சீல் ,அமெரிக்கன் ப்ரெசிடெண்ட் பாதுகாவலன் ரேஞ்சுக்கு எதுக்குடா இவங்க ரெண்டு பேருக்கும் FANCY ட்ரெஸ் காம்பெடிஷன் வைச்சு இருக்கீங்க .....பார்க்கறவங்க கண்ணு அவிஞ்சு போறதுக்கா ?????அண்ணாச்சி என்னை கிண்டல் செய்யறார் ....கட்சி ஆரம்பித்து இருக்கியா ...இல்லை வாய் கொடுத்து வாங்கி கட்டிகிட்டியா என்று ....எதற்கு டா இப்படி ஓவர் BUILT UP கொடுக்கறீங்க ரெண்டு பேரும் ......"என்று பொரிந்து தள்ளினார் .
'எங்களுக்கு இது தேவை தான் 'என்ற ரேஞ்சில் ஆல்வினும் ,உத்தமும் அவளை முறைத்தனர் .
"நீ எங்கே வெளியே போனாலும் அவங்க கூட வருவாங்க .....சுமன் தப்பிச்சுட்டான் என்பதை சுபா சொல்லி இருப்பாளே .....அதன் பிறகும் ஹாயா உலாத்திட்டு இருக்கே ...வீட்டில் தான் ரெண்டு தடி மாடுங்க கார்த்திக் ,ரகு இருக்கானுங்கலே ?????அவனுகளை எழுப்பி கடைக்கு அனுப்ப வேண்டியது தானே ....என்னை கடத்துங்க என்று நீயா வழி ஏற்படுத்தி தரே ?????....இப்போ நீ ஸ்னாக்ஸ் சாப்பிடலை என்றால் உலகம் அழிய போகுதா என்ன ....அண்ணாச்சி இன்னொரு சொந்த வீடு வாங்க வைக்காம விட போவதில்லை என்று கங்கணம் கட்டிட்டு அலையறியா என்ன ?"என்றான் விஜய் கோபத்துடன் .
"பைத்தியம் மாதிரி உளறாதே விஜய் .......சுமன் இன்னும் பத்து வருடம் கழிச்சி கடத்துவான் ...அது வரை இவங்க ரெண்டு பேரும் பின்னாலேயே வருவார்களா என்ன ....பி PRACTICAL ."என்றாள் மதுரா .
"PRACTICAL ...யு வாண்ட் மீ டு பி PRACTICAL ......எது நிதர்சனம் என்று சொல்லவா ....என் கையில் தான் ஒரு பெண்ணின் உயிர் போனது....அவளை பறி கொடுத்துட்டு தினம் தினம் புழுங்கி செத்துட்டு இருக்கிறவன் இதோ லைன்னில் தான் இருக்கான் . ....என் கண் முன்னால் தான் இது வரை மூன்று தடவை பல பெண்களை விடுவித்து இருக்காங்க ....இது வரை அர்ரெஸ்ட் ஆனவங்க எத்தனை பேர் தெரியுமா முப்பதிற்கும் குறையாது ....மாசம் மாசம் புதுசு புதுசா பீகார் ,ஜார்கண்ட் ,ஒதிஷா என்று ஆட்கள் கடத்தலுக்கு வராங்க ....இது எல்லாத்துக்கும் ஹெட் சுமன் என்று தெரியும் ...ஆனா ப்ரூப் இல்லை .....ஒரு கிளு கூட இல்லாமல் எங்கே எந்த பெண் வாழ்வு நாசம் ஆகும் என்று பதறி ஓடிட்டு இருக்கேன் .....இந்த லிஸ்டில் நீயும் சேர வேண்டும் என்கிறாயா .....இடியட் .....போய் தொலை என்று ஒரு வருசமா கத்திட்டு இருந்தேன் ...எங்க அப்பா சொன்னார் ஆட்டு குட்டி சொல்லிச்சுன்னு கல்லு கணக்கா இங்கேயே இருந்துட்டு ,அவ கொள்ளி கண்ணில் பட்டு வைச்சே .....அவ சும்மாவே கிரிமினல்லா யோசிப்பா .....அதான் உன்னை அழித்தே ஆகணும் என்று சுமனிடம் மாட்டி விட்டு இருக்கா .....நீ இருக்கும் நிலைமையின் தீவிரம் கொஞ்சமாவது ரியலைஸ் பண்ணு மது .....ப்ளீஸ் ஐ பெக் யு .....நீ எவ்வளவூ தான் கோவிச்சுக்கிட்டாலும் ஆல்வின் உன் கூட தான் இருப்பான் ....நோ arguements .பை ."என்ற விஜய் அழைப்பை துண்டித்து விட மதுரவால் எதையும் பேச முடியவில்லை .
View attachment 5310
ஏன் நீ அமைதியா இருக்கே ....நீயும் எதையாவது சொல்ல வேண்டியது தானே பிரபு ."என்றாள் மதுரா உள்ளே போன குரலில் .
"சுவீட்டி !.....உனக்கே தெரியும் நாங்க எதை செய்வதாக இருந்தாலும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டோம் என்று .....நீ என்று வரும் போது ஒரு பிரைவேட் armyயே கூட உன் பாதுகாப்பிற்காக வைக்க ரெண்டு பேருமே தயங்க மாட்டோம் டா .....விஜய் கூட எனக்கு சண்டை இருக்கலாம் ....ஆனால் அவன் சொன்னது தான் நானும் சொல்வேன் ......போதும் ஒருத்தி அவனால் துடி துடித்து செத்தது போதும் .....உன்னையும் இழக்க என்னால் முடியாது ......இந்த விஷயத்தில் உன் பேச்சை நாங்க ரெண்டு பேருமே கேட்க மாட்டோம் ...தயவு செய்து இந்த விஷயத்தை பற்றி இதற்கு மேல் பேசாதே ....ஆல்வின் உடன் உத்தமும் உன் கூட தான் இருப்பான் ....பை "என்றான் சூர்யா