தாகம் ... நான் பல காலமா இந்த சைட் ல வாசம் செய்தாலும், நேற்றுதான் " தாகத்தை " படிக்க ஆரம்பிச்சேன்... ஏன் நேற்று.... ? அகிலா கண்ணன் சிஸ்டரோட, 50:50 படிச்சுட்டு.., அவங்களோட எழுத்து நடையில் ஈர்க்கப்பட்டு, அவங்க ஹிஸ்டரில போய் பார்த்து இந்த அருமையான நாவலை கண்டெடுத்தேன்...
கூவம் நதிக்கரையில் வசிக்கும் 14 வயது பெண் குழந்தையின்.., நிறமில்லாத, வாசனையில்லாத சுத்தமான குடிநீருக்காக ஏங்கும் தண்ணீர் தாகமே கதையின் கரு.
பிளாஸ்டிக், இண்டஸ்ட்ரியல் வேஸ்ட், இன்னும் பிற குப்பைகளின் விளைவை சத்தமாக எடுத்துரைக்கிறது...இந்த தாகம்.. 1/2 , 1/4 என்று எத்தனை முறை தண்ணீரோடு பாட்டிலை வீசி ஏறிந்திருப்போம்..., என அந்த சின்ன பெண் பாட்டில் குடிநீருக்காக ஏங்கும் போது மனம் கனக்கிறது...
எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் இயல்பு, வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளை ஒருபுறம், மீடியா, இண்டஸ்ட்ரீஸ் மறுபுறம் என அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. விறுவிறுப்பான கதையோட்டம்.... இடையில்.., ஓர் அழகான நட்பு.., மெல்லிய காதல் .., திரில் .., சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கிறது.
சாதாரணமாக, கூவத்தில் விளையாடும் பொடி பையன்களில் ஆரம்பிக்கும் கதை., அடுத்து குடிநீர், தொழிற்சாலை கழிவு , நதி மாசு, பத்திரிகை ரிப்போர்ட்டர் கொலை, அதன் பின்னணி என பரபரப்பாக நகர்கிறது.விக்ரம்,திவ்யா காதல்.., விக்ரம், ரமேஷ் , திவ்யா இடையேயான விட்டுக்கொடுக்காத நட்பு எல்லாமே அழகாக காட்டப்பட்டிருக்கிறது.
நான் தான் late comer என நினைக்கிறேன்... படிக்காதவர் யாரேனும் இருந்தால், கண்டிப்பாக படித்து பாருங்கள்..
அகிலா கண்ணன் அவர்கள் கதை சொல்லும் விதமே, மிகவும் அழகாய் இருக்கிறது... இங்கே வாருங்கள்..., நாம அங்க போய் பார்க்கலாம் என ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் அவர்கள் சொல்லும் பொது.., நாமும் அவர்களுடனே, அதே அறையில் இருப்பது போல ஒர் உணர்வு ஏற்படுகிறது.
@akila kannan sister.,
இதே போல எங்களுக்கு, நிறைய அருமையான கதைகளை சொல்ல வேண்டும்..
என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
G பிரதீபா