இந்த பதிவிற்க்கு like வேண்டாம் உங்கள் கருத்தை பதியுங்கள்...
அது பல பேருக்கு மாற்றத்தை கொடுக்கும்
நான் சுமங்கலியாக சாக வேண்டும் இறைவா....
இது தான் இந்து மதத்தை பின் பற்றும் ஏறத்தாழ முக்கால்வாசி பெண்களின் பிரார்த்தனையாக இருக்கிறது .....
ஏன் அவர்களின் வாழ்நாளின் குறிக்கோள் என்று கூட சொல்லலாம்...
அதற்காக எத்தனை விரதங்கள், பூஜைகள்...
எனக்கே என் திருமணதிற்க்கு பின் தான் தெரிந்தது பெண்கள் தங்களின் கணவன்மார்கள் நீண்ட ஆரோக்கியமுடன், ஆயுளோடும் வாழ வேண்டும் என்று எதற்காக விரதம் இருக்கிறார்கள் என்று.
What for this system? Who invent this system? Why invent this system? இப்படி பலதரப்பட்ட கேள்விகள் என் சிறு CPU வில்....ஆனால் பதில்தான் இல்லை....( google search ஆலையே கண்டுபிடிக்க முடியவில்லை.... நம்மாளுங்க எம்மாபெரிய தில்லாலங்கடிங்க ??)
சதி செய்து கணவனை இழந்த பெண்களை சதி (sati) என்ற மூடபழகத்தின் மூலம் உயிருடன் தீயில் தள்ளிய மூடர்களை முற்றிலுமாக சிதறாடித்தவர் ராஜாராம் மேகன்ராய்... அதற்கான தடைசட்டத்தை விதித்து 1861 ஆண்டில் இந்தியா முழுக்க அமுலுக்கு கொண்டுவந்தவர்கள் ஆங்கிலேயர்கள் ..... ( அப்ப எல்லாம் சட்டதிற்க்கு மரியாதை கொடுத்தாங்க அதனால சுலபமாக நிறைவேற்றினார்கள் . அவரே இப்ப வந்தா oh my கடவுளே,என்னை இந்த மூடர்கூட்டத்திடம் இருந்து காப்பாற்று என்று அவரை தெரிச்சு ஓட விடுவோம் இல்ல , இல்லாத காலரை தூக்கி விட்டு விமர்சனம் மட்டும் நல்லா செய்வோம்... உருபடியாக ஒன்றும் செய்ய மாட்டோம்... இது தான் இன்றைய நம் நிலை...)
நாம் அறியாமலே முழ்கி, முடங்கி, இருக்கும் இந்த மூடபழக்கத்தில் இருந்து யார் நம்மை காப்பார்கள்?
ராஜாராம் மோகன் ராய், பாரதியார், பெரியார் போன்றவர்கள் வந்தால் தான் பெண்களுக்கு இந்த அடிமை வாழ்வில் இருந்து விடிவு கிடைக்குமா?....
கனவு காணாதீர்கள் பெண்களே!!
ஓட்டமாக ஓடும் இந்த இயந்திர உலகில்...
சுயநலமான இந்த வாழ்க்கை முறையில்...
உங்களுக்காக யாரும் வர மாட்டார்கள்...
உங்களுக்கான மாற்றத்தை நீங்கள் தான் தொடங்க வேண்டும்...
உங்களுக்கான மாற்றத்தை நீங்கள் தான் உருவாக்க வேண்டும் ...
உங்களுக்கான மாற்றத்தை நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் ...
என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புறேன்..
என் வயதை ஒட்டிய எல்லாரும் ஆங்கிலம் புத்தகத்தில் இந்த poem யை ஆறாம் வகுப்பில் படித்து இருப்பீர்கள் ....
I know a face, a lovely face,
As full of beauty as of grace,
A face of pleasure, ever bright,
In utter darkness it gives us light,
இந்த பாட்டு படிக்கும் போது என் பெரியம்மா தான் என் நினைவிற்க்கு வருவாங்க.. ஏன்யென்றால் அவங்க பேரு மாதிரியே அவ்வளவு லட்சுமிகடாச்சத்துடன் இருப்பாங்க... மஞ்சல் பூசி, பெரிய பொட்டு வைத்து, தலையில் பூ வைத்து என்று அத்தனை அம்சமாக இருப்பாங்க....
எங்க பெரியம்மாவுக்கு இத்தனை பெரிய வேண்டுதல் இருந்தது என்று எங்க பெரியப்பா இறந்த அன்று தான் எனக்கு தெரிந்தது... என்ன வேண்டுதல் என்றால் அவங்க சுமங்கலியாக சாக வேண்டும் என்று.. எங்க பெரியம்மா அன்று அழுதது இன்று கூட என் நினைவில் இருக்கிறது... அவங்க கும்பிட்ட அத்தனை தெய்வத்தையும் அன்று நிந்தித்தார்கள்....எங்க பெரியம்மா மட்டும் இல்ல இந்துக்களாக பிறந்த ஏறத்தாழ அனைத்து பெண்களுக்கும் அந்த வேண்டுதல் இருக்கும் போல...
அந்த நாளும் வந்தது அவங்களின் அடையாளத்தை, சிறு வயது முதல் தன்னை அலங்கரித்த ஒன்று, தான் இரசித்த ஒன்று, தன்னை மங்களகரமாக இந்த சமுகத்தில் வலம் வர வைத்த ஒன்று, இனி தன் வாழ்விலே இல்லை என்ற தருணம்...
அனைத்தையும் களைத்து
உணர்வுகளை துடைத்து
பெண்ணாக ஏன் பிறந்தோம் என்று நிந்தித்து
கதற வைக்கும் அந்த சடங்கும் நடந்தது
கடைசியில அவங்களுக்கு heart attack ம் வந்தது...
கணவனை இழந்து தவிக்கும் தவிப்பை விட , இந்த சமுதாயம் கொடுக்கிற இந்த கொடுமை தான்வார்த்தைகளால் சொல்ல முடியாத மிக பெரிய வலியும் வேதனையும்...
யாருக்கு இந்த சடங்கு...
எதற்க்காக இந்த சடங்கு...
இன்று வரை புரியாத புதிர் எனக்கு....
அதோடு முடிந்ததா என்றால் இல்லை ... எந்த ஒரு சுப நிகழ்வுக்கும் பங்கு பெற அனுமதியில்லை....தான் பெற்ற பிள்ளைகளே ஆயினும் அவர்களின் திருமண சடங்குகளில் முன் நிற்கக்கூடாது எத்தகைய கொடுமை.... ஒரு குழந்தையை பாலுட்டி, சிராட்டி, சீரும் சிறப்புடன் வளர்க்கும் தாயைவிட, பாட்டியைவிட, அத்தையைவிட, பெரியாம்மாவைவிட, சித்தியைவிட இந்த உலகத்தில் வேறு யாரு மனப்பூர்வமாக, ஆத்மார்தமாக பல்லாண்டு காலம் வாழ்ந்து,எந்த ஒரு குறையும் இல்லாமல், பதினாறு செல்வங்களையும் பெற்று நீடோடி வாழ வேண்டும் என்று ஆசிகளை வழங்கிட முடியும்....
இந்த மூடபழக்கத்தை கடவுளிடமும் விட்டு வைக்கவில்லை...
நான் இப்ப இங்கிலாந்தில் இருக்கேன் இங்க இருக்கிற முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம் ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடுவோம். என் தோழியுடைய அம்மா, கணவரை இழந்தவர் இந்தியாவில் இருந்து வந்து இருந்தார்கள் .... அவங்களை அந்த பூஜையில் எந்த ஒரு நிகழ்வுக்கும் அழைக்கவில்லை காரணம் அவங்க சுமங்கலி இல்லை அதனால் அவர்கள் வரக் கூடாது என்று சொல்லிவிட்டாங்க....
என்ன தான் படித்து மேலை நாட்டில் இருந்தாலும், மனதளவில் நாம் மூடர்களே என்று உணர்த்திய தருணம். கல்வி அறிவினால் மட்டும் மூடபழக்கத்தை மாத்த முடியாது என்று நடு மண்டையில் ஆனி அடித்தது போல உணர்ந்த தருணம்... மேலை நாட்டில் வாழ்ந்தால் மட்டும் போதுமா? மேன்மையான சிந்தனை வேண்டாமா என்று என்னை நானே சுய அலசலில் அலசிய தருணமும் கூட....
மூடபழகத்தில் முடங்கி கிடப்பது பெண்கள் தான் என்று உணர்ந்த தருணம் .... வேதனையான தருணமும் கூட...நம் அறியாமையை எண்ணி நொந்த நாளும் அதுவே...
எங்க அப்பா 6 வருடம் முன்ன இறந்தபோது கண்டிப்பாக அந்த சடங்கு எங்க அம்மாவுக்கு செய்யக்கூடாது என்று நான் மறுத்தேன்... ஏன்யென்றால் எங்க பெரியம்மாவிற்க்கு நடந்ததை பார்த்த பிறகு எங்க அம்மாவிற்க்கு அதை நடத்த என்னால முடியவில்லை.. ஆனாலும் அதை யாரும் கேட்கும் மன நிலையிலும் இல்லை .... காலம் காலமாக நம் பெரியோர்கள் கடைபிடித்து வரும் சடங்கு அதற்கு கண்டிப்பாக. ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும் என்று. அதில் ஒரு அர்த்தமும் இல்லை எல்லாமே அபத்தம் என்று சொன்னாலும் செவி கொடுக்க யாரும் இல்லை..
அதிகாலை மூன்று மணிக்கு நான் தூங்கிய நேரம் பார்த்து அந்த சடங்கை ஆரம்பித்து விட்டார்கள் நான் கண் விழித்த போது நீ உங்க அம்மாவ பார்க்க கூடாது என்றார்கள். கொடுமையின் உச்சம் . நேற்று வரை எனக்கு அதிர்ஷ்ட தேவதையாக இருந்த என் அம்மா இன்று அபசகுனமான மனிதர் என் வாழ்வில் .... தலையில் முக்காடு போட்டு ஒரு மூலையில் அமர்த்திய காட்சியை என் உயிர் உள்ள வரை மறக்க முடியாது...நான் கதறிய கதறலையும் மறக்க முடியாது....
எல்லாத்தையும் நிருத்தினேன் இனி மேல் ஏதாவது செய்திங்க நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் என்றேன் ... நிறுத்தினாங்க..... என்னால எங்க அம்மாவை அந்த கோர சடங்கில் இருந்து காப்பாற்ற முடிந்ததா என்றா முழுவதாக இல்லை ஆனால் என் எதிர்ப்பை பதிவு செய்தேன்... ஒன்று புரிந்தது எதிர்ப்பை பதிவு செய்யனும், குரலை உயர்த்தனும்... அமைதியாக மட்டும் இருக்க கூடாது என்று..
எங்க அம்மாவை பொட்டு வைங்கம்மா,என்னால உன்னைய இப்படி பார்க்க முடியவில்லை என்றால் வைக்க மாட்டாங்க கேட்டால் இந்த ஊரு என்னை தப்பாக பேசும் நான் மாட்டேன் என்னால அந்த ஏளனபேச்சை கேட்க முடியாது என்று முடித்துவிடுவார்கள்.
ஆணவம் பிடித்த, பெண்களை இழிவாக நினைத்த, அடக்க நினைத்த மூடர்கள் என்றோ ஓரு நாள் வலுக்கட்டாயமாக நம் மீது தினித்த ஒன்றை இன்றும் அதை நம் பெரியோர்கள் கடைபிடித்தார்கள் நாமும் அதை பின்பற்ற வேண்டும் என்று பிடித்து தொங்குவது முட்டாள் பெண்களே .....பெண்களே...பெண்கள் மட்டுமே..
எத்தனை ஆழமாக இந்த சமுதாயத்தில் வேரூன்றி இருக்கு...இதை ஒரு இராப்பொழுதில் மாற்ற முடியுமா என்றால் முடியாது....இந்த மாதிரி மூடபழக்கத்தை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் பெண்களுக்கு வர வேண்டும்....பெண்கள் மாற வேண்டியது மிக மிக அவசியம்.. நான் இன்னொரு பெண்ணுக்கு இந்த மாதிரி சடங்கை செய்ய மாட்டேன் என்கிற உறுதி வேண்டும்....பெண்கள் நினைத்தால் மட்டுமே தான் இது சாத்தியம் ....இது சத்தியமும் கூட..
எல்லா மாற்றமும் நம் வீட்டில் இருந்து தான் தொடங்க வேண்டும் ....
முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை..
மாற்றம் ஒன்றே மாறாதது ...
நம் அடுத்த தலைமுறைக்காவது இந்த கொடுமையான
மூடபழகத்தில் இருந்து விடுதலை கொடுப்போம் ...
எனக்கு உங்களின் கருத்து வேண்டும் ...
எல்லாவற்றிர்க்கும் மேல் தீர்வு வேண்டும் ...
அமுல் படுத்த வழி வேண்டும் ...
முடிந்தால் இங்கு பதிவிடுங்கள்
நன்றி தோழிகளே???