காற்றில் அலை பாயும் கேசம், கூர்மையாக எதிரில் உள்ளவரை அளவிடும் கண்கள், அழுத்தமான உதடுகள், அதில் உறைந்து இருந்த புன்னகை என பார்ப்போரை ஒரே பார்வையில் கவர்ந்திழுக்க கூடியவனே சூர்யதேவன்.
"சூர்யா....இது எனக்கு தெரியாது....நிலா வேணும்னே இப்படி பண்ணுறா!!!!" என்று வேதனையாக வெற்றி கூறவும்
அவனை பார்த்து புன்னகத்த சூர்யா
"நிலாவை பற்றி உனக்கு சரியா தெரியல வெற்றி.....நிலா வேணும்னு இப்படி பண்ணல...நான் வேண்டாம்னு இப்படி பண்ணுறா....." என்று உள் வாங்கிய குரலில் கூற தவிப்போடு அவனைப் பார்த்தான் வெற்றி.
" வாழ்க்கையில் தோல்வியே சந்திக்காதவன்....முதன் முறையாக தோற்று போய் நிற்குறேன்....நிலா இதற்கெல்லாம் நீ கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகணும்....." என்று சூர்யா வெண்ணிலாவின் நிழலுருவத்தைப் பார்த்து கூறிக் கொண்டு இருக்க
வெண்ணிலா தன் காரின் உள்ளே பாடல் ஒன்றை கேட்டு ரசித்தவளாக புன்னகையோடு காரை ஓட்டி கொண்டிருந்தாள்.....
இரண்டாவது டீசர் போட்டு விட்டேன் பிரண்ட்ஸ்......
விரைவில் முதல் பதிவுடன் வருகிறேன்......