ஹாய் டியர்ஸ்.. உன் உயிர் தா..! நாம் வாழ ..!! எபி 18 போட்டுட்டேன்..
படிச்சு உங்க கருத்தை சொல்லுங்க..
உயிர் – 18
கோட்டைநல்லூரில் இருந்து வந்த செய்தியில் போனை தவறவிட்டாள் மைத்ரேயி.... அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை... இப்பொழுது கோட்டைநல்லூர் செல்லவேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் கண்களில் நீர் வழிய முழித்துக் கொண்டுஇருந்தாள்...
அங்கு வந்திருக்கும் செய்தி அப்படி பட்டது “ அவளின் தாத்தா உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார் “ என்று கணேஷன் கூறியது தான் அவளின் இந்த அதிர்ச்சிக்கு காரணம்...இப்போ உடனே அங்கே கிளம்பணும் எப்படி கிளம்புறது என்று கண்களில் நீர் வழிய நிற்கும் பொழுது அவள் அருகில் வந்த ஜிக்கி.. அந்த சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டாள்..
அவளிடம்“ உன் தாத்தாவுக்கு ஒண்ணும் செய்யாது மைக்.. கவலை படாம நீ அங்க போ” என்று கூறி ஜிக்கி அவளின் மொபைல் போனை எடுத்து அவள் கையில் கொடுத்து அவளிடம் “ இதை வைத்துக் கொள்.. நீ வருகிற வரை நான் உன் போனை சரி பார்த்து வைத்துக் கொள்கிறேன் இப்பொழுது நீ கிளம்பு “ என்று கூறி அவளை ஏர்போர்ட் அழைத்து சென்றாள்... அவளை கோட்டைநல்லூர்க்கு நல்ல படியாக அனுப்பிவிட்டாள்...
மைத்ரேயி அங்கு செல்லும் நேரம் கௌதம்க்கு அவசர அழைப்பு வர அவன் மீண்டும் வர்ஷிக்கை அழைத்துக் கொண்டு எகிப்த் கிளம்பிவிட்டான்....
கௌசிக், சியோரா இருவரும் தொழில் என்று அதையே பார்த்துக் கொண்டு இருந்தனர்...
மையூரி, சத்ரியா மட்டும் மைத்ரேயிக்கு அழைத்து பேசினார்கள்.. அதாவது ஜிக்கி மைத்ரேயி மாதிரியே அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாள்..
மைக் தான் கூறி சென்றாள்... தான் கோட்டைநல்லூர் செல்லும் விஷயம் அவர்களுக்கு தெரிய கூடாது.. ஏதாவது செய் என்று கூறி அங்கு சென்றாள்..
எப்படியோ விதிவசமாக ஜிக்கி எண்ணியது மைக் மூலமாக நிறைவேறியது...
ஜிக்கி இங்கு வந்ததே அவளின் அப்பாவை கொன்ற கௌதமை கொல்ல தான்.. அவளின் ரோல் மாடல் தான் அவளின் அப்பா.. அவளின் உயிர் என்று தான் சொல்லவேண்டும்..
அவள் பிறந்த 3 வருடத்தில் அவள் அம்மா அவளை விட்டு சென்று விட்டார்.. பிறகு இவளுக்காகவே வாழ்ந்தவர் அவர் இவளை பொறுத்தவரை....
முதலில் பேங்க்கில் வேலை செய்து பிறகு சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்தவர்... வளர்ந்து வரும் தொழிலதிபர் அவர்..
.
இங்கு கொலாபாவில் தான் அவர்களின் ஆபிஸ் இருந்தது.. அவள் அப்பா இறந்து போகவும்,அதை ஒருவருக்கு விற்று விட்டு இப்பொழுது அவளின் வீட்டில் வேலை செய்த மாமா வீட்டில் தான் வளர்கிறாள் ஜிக்கி...
ஆனால் அவள் அப்பாவை கொன்ற கௌதமை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று எண்ணி தான் கெளதம் வீட்டை தொடர்ந்து பாலோ செய்ததில் அவர்கள் வீட்டில் எப்பொழுதும் அவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதை அறிந்துக் கொண்டு ஒண்ணும் செய்ய முடியாமல் படிப்பை பார்போம் என்று எண்ணி தான் அவள் ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள்..
ஆனால் எதிர் பாராத விதமாக அவள் மைக்கை சந்திக்க நேர்ந்தது... அன்று மைக் கெளதம் போட்டோவை காட்டவும் தான் மைக்கை வைத்து அவனை அழிக்க எண்ணினாள்...
என் அப்பா தப்பு செய்து இருந்தால், போலீஸ் தண்டிக்கும் அவரை கொல்ல இவன் யார், என் அப்பா அப்படி ஒரு தவறை செய்திருக்கவே மாட்டார் அப்படி இருக்கும் பட்சத்தில் இவன் யார் என் அப்பாவை கொல்ல...
இவனை கொல்லாமல் விடமாட்டேன் என்று எண்ணி தான்,இவள் இங்கு வந்தாள் எதிர் பாராத விதமாக மைக் அவர்களின் கதையை கூறவும், இவர்களை சேர்த்து வைத்து அவன் வீட்டில் நுழைய வேண்டும் என்று எண்ணினாள்...
அதே போல் அவளின் ஆட்களை வைத்து அவர்களை தீவிரமாக பாலோ செய்ய கூறினாள், அப்படி கூறியதில் அவர்கள் கோவிலுக்கு கிளம்புவது அறிந்து இவளையும் அங்கு அழைத்து சென்று அவர்கள் குடும்பத்தை சேர்த்து வைத்துவிட்டாள்...
ஆனால் சத்ரியன் எதிர் பாரத நேரம் வந்து அவர்கள் ஊர் கதையை கூறவும் ஒன்றும் ஒன்றும் மூன்று என்று கணக்கிட்டாள் ஜிக்கி... அதன்படி
மைக் அவளின் அத்தை வீட்டுக்கு சொத்தை எப்படி கொடுப்பது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் வேளை, இவளின் யோசனை படி அங்கு கணேஷ்க்கு அழைத்து சத்ரியனுக்கு ஏதாவது ஆபத்து என்று கூறி இவளை அங்கு அழைக்க ஏற்பாடு செய்தாள்...
அதே போல் அவரும் அழைத்தார்... அந்த நேரத்தில் இங்கு கௌதமை அழிக்க எண்ணினாள்..
ஆனால்அவன் எகிப்த் சென்று விட்டான் என்ற செய்தி இவள் எதிர் பார்க்காதது..
உடனே அங்கு இருந்த கணேஷை இங்கு வரவழைத்து விட்டாள்...அங்கு சென்ற மைத்ரேயியும் அவனை இங்கு அனுப்பிவிட்டாள்.. தாத்தாவை தான் பார்த்துக் கொள்வதாக கூறி....
இப்பொழுது என்ன செய்வது என்று ஜிக்கிக்கு ஒன்றுமே தெரியவில்லை, அவளின்கவனத்தில் அங்கு கோட்டைநல்லூரில் என்ன நடந்தது என்று கேட்க எண்ணவே இல்லை..
இங்கு வந்த கணேசனும் தன் மகனை பார்க்க செல்கிறேன் என்று கிளம்பி விட்டான்... மீண்டும் 1௦ நாளில் திரும்பி வந்த கணேசனை மீண்டும் அங்கு அவள் துணைக்கு அனுப்பி வைத்தாள் ஜிக்கி...
மைக் அங்கு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது.. முதலில் ஒரு 2 வாரம் மட்டுமே அவளிடம் அடிகடி பேசினாள்... “ தாத்தா எழும்பி நடக்க முடியாத அளவு இருக்கிறார் நான் அவருக்கு சரி ஆகவும் வருகிறேன் என்று கூறினாள். மேலும் சொத்தை நான் கெளதம் பெயருக்கு எழுதி வைத்துவிட்டேன்..
அங்கு வந்து நானே என் வாயால் அவர்களிடம் கூறுகிறேன் நீ எதுவும் உளறி வைத்து விடாதே ” என்று கவலையாக ஆரம்பித்து கேலியுடன் முடித்தாள் மைத்ரேயி. அதன் பிறகு அவள் அழைக்கவே இல்லை...ஜிக்கிக்கு அவளின் பிரச்சனை மனதில் ஓடியதில் அவள் மைக் பற்றி எண்ணவில்லை.....
மைக் பேசாததை ஜிக்கி அதை பெரிது படுத்தவில்லை... ஆனால் எப்பொழுதும் போல் சத்ரியாவுக்கும், மையூரிக்கும் அழைத்து பேசிவிடுவாள்..
மைத்ரேயி அங்கு சென்றது ஜிக்கி மட்டுமே அறிந்த உண்மையாகி விட்டது... ஜிக்கியின், மைத்ரேயி போல் உள்ள பேச்சில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை..
இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் ஜிக்கி ( மைக்) சத்ரியாவுக்கு அழைத்து “ அத்தை நானும், ஜிக்கியும் வேற ஊருக்கு போறோம், இங்க காலேஜ்லஇருந்து அழைச்சுட்டு போறாங்க.. பழைய அரண்மனையை சுற்றி பார்த்து அதுல என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று டிரைனிங் நடக்குது.. இன்னைக்கு கிளம்புறோம்.. போயிட்டு ஒரு 3 மாசம் கழித்து தான் வருவோம், அங்க வச்சு போன் பேசமுடியுமா என்று தெரியவில்லை.. நீங்க நான் போன் செய்யவில்லை என்று கவலை படாதீர்கள் “ என்று அவர்களிடம் கவலையாக கூறி, நடித்துஜிக்கி எங்கோ சென்றுவிட்டாள்....
கௌதம்க்கு மைத்ரேயியை பார்க்காமல் இருக்க முடியவில்லை... ஆனால் அவள் போன இடத்தின் அட்ரஸ் ஏதும் தெரியவில்லை... அப்படி அவளின் காலேஜில் போய் விசாரித்தால் என்ன என்று கூட எண்ணினான்...
உடனே அவளின் வயதும் அவளின் படிப்பும் மனதில் கொண்டு வந்து அந்த எண்ணத்தை விட்டு விட்டான்.. அதன் பிறகு முழு மூச்சாக அவனின் தொழிலை பார்க்க ஆரம்பித்து விட்டான்..
ஷதாஷியும், மையூரியும் குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக அலைந்தனர்.. அப்பொழுது மீண்டும் ஷதாஷி கருவுற்றாள்.. இந்த முறை அவளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தனர்...
இப்பொழுது எல்லாம் அவர்களுக்கு மைத்ரேயி பற்றிய கவலை போய் ஷதாஷி நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று எண்ணிக் கவலை கொண்டார்கள்...
படிச்சு உங்க கருத்தை சொல்லுங்க..
உயிர் – 18
கோட்டைநல்லூரில் இருந்து வந்த செய்தியில் போனை தவறவிட்டாள் மைத்ரேயி.... அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை... இப்பொழுது கோட்டைநல்லூர் செல்லவேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் கண்களில் நீர் வழிய முழித்துக் கொண்டுஇருந்தாள்...
அங்கு வந்திருக்கும் செய்தி அப்படி பட்டது “ அவளின் தாத்தா உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார் “ என்று கணேஷன் கூறியது தான் அவளின் இந்த அதிர்ச்சிக்கு காரணம்...இப்போ உடனே அங்கே கிளம்பணும் எப்படி கிளம்புறது என்று கண்களில் நீர் வழிய நிற்கும் பொழுது அவள் அருகில் வந்த ஜிக்கி.. அந்த சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டாள்..
அவளிடம்“ உன் தாத்தாவுக்கு ஒண்ணும் செய்யாது மைக்.. கவலை படாம நீ அங்க போ” என்று கூறி ஜிக்கி அவளின் மொபைல் போனை எடுத்து அவள் கையில் கொடுத்து அவளிடம் “ இதை வைத்துக் கொள்.. நீ வருகிற வரை நான் உன் போனை சரி பார்த்து வைத்துக் கொள்கிறேன் இப்பொழுது நீ கிளம்பு “ என்று கூறி அவளை ஏர்போர்ட் அழைத்து சென்றாள்... அவளை கோட்டைநல்லூர்க்கு நல்ல படியாக அனுப்பிவிட்டாள்...
மைத்ரேயி அங்கு செல்லும் நேரம் கௌதம்க்கு அவசர அழைப்பு வர அவன் மீண்டும் வர்ஷிக்கை அழைத்துக் கொண்டு எகிப்த் கிளம்பிவிட்டான்....
கௌசிக், சியோரா இருவரும் தொழில் என்று அதையே பார்த்துக் கொண்டு இருந்தனர்...
மையூரி, சத்ரியா மட்டும் மைத்ரேயிக்கு அழைத்து பேசினார்கள்.. அதாவது ஜிக்கி மைத்ரேயி மாதிரியே அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாள்..
மைக் தான் கூறி சென்றாள்... தான் கோட்டைநல்லூர் செல்லும் விஷயம் அவர்களுக்கு தெரிய கூடாது.. ஏதாவது செய் என்று கூறி அங்கு சென்றாள்..
எப்படியோ விதிவசமாக ஜிக்கி எண்ணியது மைக் மூலமாக நிறைவேறியது...
ஜிக்கி இங்கு வந்ததே அவளின் அப்பாவை கொன்ற கௌதமை கொல்ல தான்.. அவளின் ரோல் மாடல் தான் அவளின் அப்பா.. அவளின் உயிர் என்று தான் சொல்லவேண்டும்..
அவள் பிறந்த 3 வருடத்தில் அவள் அம்மா அவளை விட்டு சென்று விட்டார்.. பிறகு இவளுக்காகவே வாழ்ந்தவர் அவர் இவளை பொறுத்தவரை....
முதலில் பேங்க்கில் வேலை செய்து பிறகு சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்தவர்... வளர்ந்து வரும் தொழிலதிபர் அவர்..
.
இங்கு கொலாபாவில் தான் அவர்களின் ஆபிஸ் இருந்தது.. அவள் அப்பா இறந்து போகவும்,அதை ஒருவருக்கு விற்று விட்டு இப்பொழுது அவளின் வீட்டில் வேலை செய்த மாமா வீட்டில் தான் வளர்கிறாள் ஜிக்கி...
ஆனால் அவள் அப்பாவை கொன்ற கௌதமை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று எண்ணி தான் கெளதம் வீட்டை தொடர்ந்து பாலோ செய்ததில் அவர்கள் வீட்டில் எப்பொழுதும் அவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதை அறிந்துக் கொண்டு ஒண்ணும் செய்ய முடியாமல் படிப்பை பார்போம் என்று எண்ணி தான் அவள் ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள்..
ஆனால் எதிர் பாராத விதமாக அவள் மைக்கை சந்திக்க நேர்ந்தது... அன்று மைக் கெளதம் போட்டோவை காட்டவும் தான் மைக்கை வைத்து அவனை அழிக்க எண்ணினாள்...
என் அப்பா தப்பு செய்து இருந்தால், போலீஸ் தண்டிக்கும் அவரை கொல்ல இவன் யார், என் அப்பா அப்படி ஒரு தவறை செய்திருக்கவே மாட்டார் அப்படி இருக்கும் பட்சத்தில் இவன் யார் என் அப்பாவை கொல்ல...
இவனை கொல்லாமல் விடமாட்டேன் என்று எண்ணி தான்,இவள் இங்கு வந்தாள் எதிர் பாராத விதமாக மைக் அவர்களின் கதையை கூறவும், இவர்களை சேர்த்து வைத்து அவன் வீட்டில் நுழைய வேண்டும் என்று எண்ணினாள்...
அதே போல் அவளின் ஆட்களை வைத்து அவர்களை தீவிரமாக பாலோ செய்ய கூறினாள், அப்படி கூறியதில் அவர்கள் கோவிலுக்கு கிளம்புவது அறிந்து இவளையும் அங்கு அழைத்து சென்று அவர்கள் குடும்பத்தை சேர்த்து வைத்துவிட்டாள்...
ஆனால் சத்ரியன் எதிர் பாரத நேரம் வந்து அவர்கள் ஊர் கதையை கூறவும் ஒன்றும் ஒன்றும் மூன்று என்று கணக்கிட்டாள் ஜிக்கி... அதன்படி
மைக் அவளின் அத்தை வீட்டுக்கு சொத்தை எப்படி கொடுப்பது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் வேளை, இவளின் யோசனை படி அங்கு கணேஷ்க்கு அழைத்து சத்ரியனுக்கு ஏதாவது ஆபத்து என்று கூறி இவளை அங்கு அழைக்க ஏற்பாடு செய்தாள்...
அதே போல் அவரும் அழைத்தார்... அந்த நேரத்தில் இங்கு கௌதமை அழிக்க எண்ணினாள்..
ஆனால்அவன் எகிப்த் சென்று விட்டான் என்ற செய்தி இவள் எதிர் பார்க்காதது..
உடனே அங்கு இருந்த கணேஷை இங்கு வரவழைத்து விட்டாள்...அங்கு சென்ற மைத்ரேயியும் அவனை இங்கு அனுப்பிவிட்டாள்.. தாத்தாவை தான் பார்த்துக் கொள்வதாக கூறி....
இப்பொழுது என்ன செய்வது என்று ஜிக்கிக்கு ஒன்றுமே தெரியவில்லை, அவளின்கவனத்தில் அங்கு கோட்டைநல்லூரில் என்ன நடந்தது என்று கேட்க எண்ணவே இல்லை..
இங்கு வந்த கணேசனும் தன் மகனை பார்க்க செல்கிறேன் என்று கிளம்பி விட்டான்... மீண்டும் 1௦ நாளில் திரும்பி வந்த கணேசனை மீண்டும் அங்கு அவள் துணைக்கு அனுப்பி வைத்தாள் ஜிக்கி...
மைக் அங்கு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது.. முதலில் ஒரு 2 வாரம் மட்டுமே அவளிடம் அடிகடி பேசினாள்... “ தாத்தா எழும்பி நடக்க முடியாத அளவு இருக்கிறார் நான் அவருக்கு சரி ஆகவும் வருகிறேன் என்று கூறினாள். மேலும் சொத்தை நான் கெளதம் பெயருக்கு எழுதி வைத்துவிட்டேன்..
அங்கு வந்து நானே என் வாயால் அவர்களிடம் கூறுகிறேன் நீ எதுவும் உளறி வைத்து விடாதே ” என்று கவலையாக ஆரம்பித்து கேலியுடன் முடித்தாள் மைத்ரேயி. அதன் பிறகு அவள் அழைக்கவே இல்லை...ஜிக்கிக்கு அவளின் பிரச்சனை மனதில் ஓடியதில் அவள் மைக் பற்றி எண்ணவில்லை.....
மைக் பேசாததை ஜிக்கி அதை பெரிது படுத்தவில்லை... ஆனால் எப்பொழுதும் போல் சத்ரியாவுக்கும், மையூரிக்கும் அழைத்து பேசிவிடுவாள்..
மைத்ரேயி அங்கு சென்றது ஜிக்கி மட்டுமே அறிந்த உண்மையாகி விட்டது... ஜிக்கியின், மைத்ரேயி போல் உள்ள பேச்சில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை..
இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் ஜிக்கி ( மைக்) சத்ரியாவுக்கு அழைத்து “ அத்தை நானும், ஜிக்கியும் வேற ஊருக்கு போறோம், இங்க காலேஜ்லஇருந்து அழைச்சுட்டு போறாங்க.. பழைய அரண்மனையை சுற்றி பார்த்து அதுல என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று டிரைனிங் நடக்குது.. இன்னைக்கு கிளம்புறோம்.. போயிட்டு ஒரு 3 மாசம் கழித்து தான் வருவோம், அங்க வச்சு போன் பேசமுடியுமா என்று தெரியவில்லை.. நீங்க நான் போன் செய்யவில்லை என்று கவலை படாதீர்கள் “ என்று அவர்களிடம் கவலையாக கூறி, நடித்துஜிக்கி எங்கோ சென்றுவிட்டாள்....
கௌதம்க்கு மைத்ரேயியை பார்க்காமல் இருக்க முடியவில்லை... ஆனால் அவள் போன இடத்தின் அட்ரஸ் ஏதும் தெரியவில்லை... அப்படி அவளின் காலேஜில் போய் விசாரித்தால் என்ன என்று கூட எண்ணினான்...
உடனே அவளின் வயதும் அவளின் படிப்பும் மனதில் கொண்டு வந்து அந்த எண்ணத்தை விட்டு விட்டான்.. அதன் பிறகு முழு மூச்சாக அவனின் தொழிலை பார்க்க ஆரம்பித்து விட்டான்..
ஷதாஷியும், மையூரியும் குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக அலைந்தனர்.. அப்பொழுது மீண்டும் ஷதாஷி கருவுற்றாள்.. இந்த முறை அவளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தனர்...
இப்பொழுது எல்லாம் அவர்களுக்கு மைத்ரேயி பற்றிய கவலை போய் ஷதாஷி நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று எண்ணிக் கவலை கொண்டார்கள்...
Last edited: