Dear Friends,
Thank you so much for you likes and comments...
இரண்டல்ல ஒன்று – 29
பவித்ரா மறுப்பாகத் தலை அசைக்க… வாசுதேவன் அவளை காருக்கு அழைத்துச் செல்ல, பவித்ரா அவனைப் பிடிவாதமாகப் பார்த்தாள்.
"நான் உன்னை அம்மா வீட்டில் விடறேன்..." என்று வாசுதேவன் ஆழமான குரலில் கூற, பவித்ரா எதுவும் பேசாமல் மௌனமாக காரில் ஏறி அமர்ந்துகொண்டு கார் சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்.
மகாதேவன், சுபா அவர்கள் கிளம்பிவிட... செல்வி, ஆவுடையப்பன் வீட்டை நோக்கி முன்னே சென்றனர்.
பவித்ரா காரில் அமர்ந்துவிட, "நந்தினி..." என்று அவளை அழைத்து , ராம் பிரசாத், நந்தினி அருகே சென்று அவர்களுக்கு மட்டும் கேட்கும் படி மெதுவாக பேச ஆரம்பித்தான் வாசுதேவன்.
"நான் அடிக்கடி, வந்து பவியை பாத்துக்கிறேன்... நீ அவளை அப்பப்ப பார்த்துக்கோ... அவளைத் தனியா விட வேண்டாம்..." என்று தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு, புன்னகையோடு கூறினான் வாசுதேவன்.
நந்தினி சிரித்த முகமாகத் தலை அசைத்து, "அத்தான்... என்ன பிரச்சனை நடந்திருந்தாலும்... எல்லாம் சரி ஆகிரும் அத்தான்... அக்காவை மட்டுமே இருபத்தி நான்கு நேரமும் நினைத்துக்கொண்டு இருக்கிற உங்களை மாதிரி அத்தான் கிடைக்க அவ கொடுத்துத் தான் வச்சிருக்கணும்..." என்று நந்தினி கூற வாசுதேவன் சிரித்துக் கொண்டான்.
"வாசு அண்ணா... இவளை நம்பாதீங்க... இப்ப இப்படி பேசுவா? எப்ப சட்டையை பிடிப்பா? எப்ப கழுத்தை பிடிப்பான்னு சொல்லவே முடியாது..." என்று ராம் பிரசாத் வாசுதேவனை எச்சரிக்க, "என்ன ராம்... பயங்கர அனுபவம் இருக்கும் போல..." என்ற நக்கலாக கேட்டான் வாசுதேவன்.
ராம் பிரசாத் பரிதாபமாகத் தலை அசைக்க, நந்தினி இருவரையும் முறைத்துப் பார்த்தாள்.
"நீங்க கிளம்புங்க அத்தான்... நான் வந்து அக்காவை அப்பப்ப பார்த்திக்குறேன்..." என்று கூறி நந்தினி ராம் பிரசாத் காரில் ஏறினான்.
"அது என்ன சந்தடி சாக்குல... அக்காவை மட்டும் இருபத்து நாலு மணி நேரமும் நினைக்கிற அத்தான்னு சொல்ற... யாரை மேடம் மறைமுகமா குத்தி காட்டுறீங்க?" என்று வண்டியைக் கிளப்பாமல், நந்தினி முகம் பார்த்துக் கேள்வியாக நிறுத்தினான் ராம் பிரசாத்.
"குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்... இதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது...." என்று நந்தினி மிடுக்காகக் கூற, அவர்கள் வழியை மறித்தபடி வைஷ்ணவியின் கார் நின்றது.
வைஷ்ணவி, காரிலிருந்து இறங்கி வந்து, "ராம் நீ சொன்னது சரி தான்... நீ அழகியபுரத்துக்கு வர போற. என் கண் முன்னாள் அங்கு தான் வாழ போற. நான் அதைப் பார்க்கத்தான் போறேன்னு சொன்னியே... உண்மை தான் நீ சொன்னது நடந்திருச்சு... நீ அப்பவும், உன் கூட வாழ போறன்னு சொல்லலை... சரியா தான் சொல்லிருக்க... ஆனால் என்னை மீறி உன் கனவு நிறைவேறாது..." என்று வைஷ்ணவி ராம் ப்ரசாத்திடம் மிரட்டலாகக் கூற, ராம் பிரசாத் முகம் சுழித்தான்.
"லூசா நீ... உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அதோ போறாங்களே அவுங்க குடும்பத்துக்கும், இவங்க குடும்பத்துக்கும் பகைன்னு நினைச்சிட்டு இருக்கியா? நேர்ல போய்... எங்களுக்கு எதிரா தான் பன்றேன்னு அவங்க கிட்ட சொல்லி பாரு... எங்களுக்கு வேலையே இல்லாம பூனை மாதிரி உக்காந்திருக்க எங்க அக்காவே உன்னை வகுந்துறவா... அத்தான் உன்னை இங்கயே குழி தோண்டி பொதச்சிருவாங்க... சின்ன புள்ள மாதிரி மனு தாக்கல் பண்ணிக்கிட்டு... கிளம்பு காத்து வரட்டும்..." என்று கடுப்பாகக் கூறினாள் நந்தினி.
"ஏய்... எல்லாம் உன்னால் தான்... நீ ராம் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், எனக்குப் பிரச்சனையே இருந்திருக்காது... உன்னை இங்க இருந்து காலி பண்ணா எல்லாம் சரியாகிரும்... என்ன பன்றேன்னு பாரு..." என்று வைஷ்ணவி நந்தினியை மிரட்டினாள்.
"இதுல மிரட்டுறதுக்கு என்ன இருக்கு... என்னை கிளப்பறது ரொம்ப சுலபம்... பிரசாத் கிளம்புன்னு சொல்லிட்டா, மறுவார்த்தை பேசாமல் கிளம்பி போய்கிட்டே இருப்பேன்... பாவம் நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்..." என்று வைஷ்ணவி மேல் நந்தினி அனுதாபம் காட்டினாள்.
நந்தியின் பேச்சு வைஷ்ணவிக்குக் கோபத்தை வரவழைத்தாலும், 'நான் தப்பு பண்ணிட்டேன்... ராம் கேட்ட பொழுதே, நான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கணும்... எல்லாத்தயும் கோட்டை விட்டுவிட்டேன்... இவனுக்கு ஊரில் செல்வாக்கு அதிகம் போலும்... என் திட்டமும் தோற்று தான் போகுமோ..' என்று வைஷ்ணவி யோசனையாக அவள் காரை நோக்கி நடந்தாள்.
ராம் பிரசாத் காரை கிளப்ப, "வைஷ்ணவி, உங்களை சின்சியரா லவ் பண்ணிருக்காங்க..." என்று சாலையை பார்த்தபடி கூறினாள் நந்தினி.
ராம் பிரசாத் மெளனமாக சாலையைப் பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
'பிரசாத் கிளம்புன்னு சொன்னா... மறுவார்த்தை பேசாம கிளம்பி போய்கிட்டே இருப்பேன்..' நந்தினி சொன்ன வார்த்தையை எண்ணிக் கொண்டிருந்தான் ராம் பிரசாத்.
சில நொடிகளில், திடீரென்று... "நான் கிளம்பி போகச் சொன்ன என்னை விட்டுட்டு போயிருவியா நந்தினி?" என்று ஆழமான குரலில் கேட்டான் ராம் பிரசாத்.
அந்த கேள்வி நந்தினியை வேரோடு சாய்த்தது. நந்தினி ஒரு நொடி மௌனம் காத்தாள். "என்ன கேட்டீங்க?" என்று அவன் கேள்வியை நம்பாமல் அவனிடம் மீண்டும் கேட்டாள் ராம் பிரசாத்.
"நான் கிளம்பிப் போகச் சொன்னா என்னை விட்டுட்டு போயிருவியான்னு கேட்டேன்..." என்று சற்று அழுத்தமாகக் கேட்டான் ராம் பிரசாத்.
அவன் கேள்வியை உள் வாங்கி, நிதானமாக மூச்செடுத்து, தன்னை சமன் செய்து கொண்டாள் நந்தினி.
"நிச்சயம் போய்டுவேன்... நான் எங்க அக்காவுக்காகத் தான் இங்க வந்தேன்... இப்ப அம்மா, அப்பாவே இங்க வந்துட்டாங்க... நான் ஏன் உங்க கூட இருக்கனும்?" என்று , 'இது தான் மாப்பிளை...' என்று அவளிடம் காட்டிய உடன் பூத்த அன்பை மறைத்துக் கொண்டு, உறுதியாகக் கூறினாள் நந்தினி.
நந்தியின் பதில், ராம் பிரசாத்தை அசைத்துப் பார்த்தது.
Thank you so much for you likes and comments...
இரண்டல்ல ஒன்று – 29
பவித்ரா மறுப்பாகத் தலை அசைக்க… வாசுதேவன் அவளை காருக்கு அழைத்துச் செல்ல, பவித்ரா அவனைப் பிடிவாதமாகப் பார்த்தாள்.
"நான் உன்னை அம்மா வீட்டில் விடறேன்..." என்று வாசுதேவன் ஆழமான குரலில் கூற, பவித்ரா எதுவும் பேசாமல் மௌனமாக காரில் ஏறி அமர்ந்துகொண்டு கார் சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்.
மகாதேவன், சுபா அவர்கள் கிளம்பிவிட... செல்வி, ஆவுடையப்பன் வீட்டை நோக்கி முன்னே சென்றனர்.
பவித்ரா காரில் அமர்ந்துவிட, "நந்தினி..." என்று அவளை அழைத்து , ராம் பிரசாத், நந்தினி அருகே சென்று அவர்களுக்கு மட்டும் கேட்கும் படி மெதுவாக பேச ஆரம்பித்தான் வாசுதேவன்.
"நான் அடிக்கடி, வந்து பவியை பாத்துக்கிறேன்... நீ அவளை அப்பப்ப பார்த்துக்கோ... அவளைத் தனியா விட வேண்டாம்..." என்று தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு, புன்னகையோடு கூறினான் வாசுதேவன்.
நந்தினி சிரித்த முகமாகத் தலை அசைத்து, "அத்தான்... என்ன பிரச்சனை நடந்திருந்தாலும்... எல்லாம் சரி ஆகிரும் அத்தான்... அக்காவை மட்டுமே இருபத்தி நான்கு நேரமும் நினைத்துக்கொண்டு இருக்கிற உங்களை மாதிரி அத்தான் கிடைக்க அவ கொடுத்துத் தான் வச்சிருக்கணும்..." என்று நந்தினி கூற வாசுதேவன் சிரித்துக் கொண்டான்.
"வாசு அண்ணா... இவளை நம்பாதீங்க... இப்ப இப்படி பேசுவா? எப்ப சட்டையை பிடிப்பா? எப்ப கழுத்தை பிடிப்பான்னு சொல்லவே முடியாது..." என்று ராம் பிரசாத் வாசுதேவனை எச்சரிக்க, "என்ன ராம்... பயங்கர அனுபவம் இருக்கும் போல..." என்ற நக்கலாக கேட்டான் வாசுதேவன்.
ராம் பிரசாத் பரிதாபமாகத் தலை அசைக்க, நந்தினி இருவரையும் முறைத்துப் பார்த்தாள்.
"நீங்க கிளம்புங்க அத்தான்... நான் வந்து அக்காவை அப்பப்ப பார்த்திக்குறேன்..." என்று கூறி நந்தினி ராம் பிரசாத் காரில் ஏறினான்.
"அது என்ன சந்தடி சாக்குல... அக்காவை மட்டும் இருபத்து நாலு மணி நேரமும் நினைக்கிற அத்தான்னு சொல்ற... யாரை மேடம் மறைமுகமா குத்தி காட்டுறீங்க?" என்று வண்டியைக் கிளப்பாமல், நந்தினி முகம் பார்த்துக் கேள்வியாக நிறுத்தினான் ராம் பிரசாத்.
"குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்... இதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது...." என்று நந்தினி மிடுக்காகக் கூற, அவர்கள் வழியை மறித்தபடி வைஷ்ணவியின் கார் நின்றது.
வைஷ்ணவி, காரிலிருந்து இறங்கி வந்து, "ராம் நீ சொன்னது சரி தான்... நீ அழகியபுரத்துக்கு வர போற. என் கண் முன்னாள் அங்கு தான் வாழ போற. நான் அதைப் பார்க்கத்தான் போறேன்னு சொன்னியே... உண்மை தான் நீ சொன்னது நடந்திருச்சு... நீ அப்பவும், உன் கூட வாழ போறன்னு சொல்லலை... சரியா தான் சொல்லிருக்க... ஆனால் என்னை மீறி உன் கனவு நிறைவேறாது..." என்று வைஷ்ணவி ராம் ப்ரசாத்திடம் மிரட்டலாகக் கூற, ராம் பிரசாத் முகம் சுழித்தான்.
"லூசா நீ... உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அதோ போறாங்களே அவுங்க குடும்பத்துக்கும், இவங்க குடும்பத்துக்கும் பகைன்னு நினைச்சிட்டு இருக்கியா? நேர்ல போய்... எங்களுக்கு எதிரா தான் பன்றேன்னு அவங்க கிட்ட சொல்லி பாரு... எங்களுக்கு வேலையே இல்லாம பூனை மாதிரி உக்காந்திருக்க எங்க அக்காவே உன்னை வகுந்துறவா... அத்தான் உன்னை இங்கயே குழி தோண்டி பொதச்சிருவாங்க... சின்ன புள்ள மாதிரி மனு தாக்கல் பண்ணிக்கிட்டு... கிளம்பு காத்து வரட்டும்..." என்று கடுப்பாகக் கூறினாள் நந்தினி.
"ஏய்... எல்லாம் உன்னால் தான்... நீ ராம் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், எனக்குப் பிரச்சனையே இருந்திருக்காது... உன்னை இங்க இருந்து காலி பண்ணா எல்லாம் சரியாகிரும்... என்ன பன்றேன்னு பாரு..." என்று வைஷ்ணவி நந்தினியை மிரட்டினாள்.
"இதுல மிரட்டுறதுக்கு என்ன இருக்கு... என்னை கிளப்பறது ரொம்ப சுலபம்... பிரசாத் கிளம்புன்னு சொல்லிட்டா, மறுவார்த்தை பேசாமல் கிளம்பி போய்கிட்டே இருப்பேன்... பாவம் நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்..." என்று வைஷ்ணவி மேல் நந்தினி அனுதாபம் காட்டினாள்.
நந்தியின் பேச்சு வைஷ்ணவிக்குக் கோபத்தை வரவழைத்தாலும், 'நான் தப்பு பண்ணிட்டேன்... ராம் கேட்ட பொழுதே, நான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கணும்... எல்லாத்தயும் கோட்டை விட்டுவிட்டேன்... இவனுக்கு ஊரில் செல்வாக்கு அதிகம் போலும்... என் திட்டமும் தோற்று தான் போகுமோ..' என்று வைஷ்ணவி யோசனையாக அவள் காரை நோக்கி நடந்தாள்.
ராம் பிரசாத் காரை கிளப்ப, "வைஷ்ணவி, உங்களை சின்சியரா லவ் பண்ணிருக்காங்க..." என்று சாலையை பார்த்தபடி கூறினாள் நந்தினி.
ராம் பிரசாத் மெளனமாக சாலையைப் பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
'பிரசாத் கிளம்புன்னு சொன்னா... மறுவார்த்தை பேசாம கிளம்பி போய்கிட்டே இருப்பேன்..' நந்தினி சொன்ன வார்த்தையை எண்ணிக் கொண்டிருந்தான் ராம் பிரசாத்.
சில நொடிகளில், திடீரென்று... "நான் கிளம்பி போகச் சொன்ன என்னை விட்டுட்டு போயிருவியா நந்தினி?" என்று ஆழமான குரலில் கேட்டான் ராம் பிரசாத்.
அந்த கேள்வி நந்தினியை வேரோடு சாய்த்தது. நந்தினி ஒரு நொடி மௌனம் காத்தாள். "என்ன கேட்டீங்க?" என்று அவன் கேள்வியை நம்பாமல் அவனிடம் மீண்டும் கேட்டாள் ராம் பிரசாத்.
"நான் கிளம்பிப் போகச் சொன்னா என்னை விட்டுட்டு போயிருவியான்னு கேட்டேன்..." என்று சற்று அழுத்தமாகக் கேட்டான் ராம் பிரசாத்.
அவன் கேள்வியை உள் வாங்கி, நிதானமாக மூச்செடுத்து, தன்னை சமன் செய்து கொண்டாள் நந்தினி.
"நிச்சயம் போய்டுவேன்... நான் எங்க அக்காவுக்காகத் தான் இங்க வந்தேன்... இப்ப அம்மா, அப்பாவே இங்க வந்துட்டாங்க... நான் ஏன் உங்க கூட இருக்கனும்?" என்று , 'இது தான் மாப்பிளை...' என்று அவளிடம் காட்டிய உடன் பூத்த அன்பை மறைத்துக் கொண்டு, உறுதியாகக் கூறினாள் நந்தினி.
நந்தியின் பதில், ராம் பிரசாத்தை அசைத்துப் பார்த்தது.
Last edited: