(முதலிரண்டும் கொஞ்சம் எளிமையானவை... பின்னிரண்டும் சற்றே கடினமானவை!)
#விடுகவி_இயற்பியல் 1
ஓடி வருங்குதிரை ஒய்யார மாளிகைக்குள்
ஊடி வருகையிலே ஓரேழாய் ஆகிடுமாம்
நாடும் திசைநீளம் நாட்டிடு மாமதனைத்
தேடி விடைநீயுஞ் செப்பு!
(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
[’நாடும் திசைநீளம் நாட்டிடும்’ - குதிரை நாடும் திசையை அதன் நீளம் நாட்டிடும்!
’நாட்டிடு மாமதனை’ = ’நாட்டிடுமாம் அதனை’]
#விடுகவி_இயற்பியல் 2
வேறினங் கண்டால் விழைவூறிச் சேர்ந்திடும்
மாறும் தனதினமே வந்தக்கால் - கூறு
விதந்த வியல்பின் விடை!
(நேரிசைச் சிந்தியல் வெண்பா)
[விழைவூறி = விழைவு+ஊறி; தனதினமே = தனது+இனமே; விதந்த வியல்பின் = விதந்த இயல்பின்]
#விடுகவி_இயற்பியல் 3
நில்லாப் புரவி நிகரில்லா வேகத்தீர்
ஒல்லும் இயல்பின் ஒருபுரவி - சொல்லிய
அப்புரவி ஈதென்றே ஆராய்ந்து கூறுநீ
தப்புகள் எல்லாம் தவிர்த்து!
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
[வேகத்தீர் = வேகத்து+ஈர்; ஈர் = இரண்டு; ஒல்லும் = பொருந்தும்]
#விடுகவி_இயற்பியல் 4
உமைக்கேள்வன் ஒண்ணுதலோ சூரியனின் சொட்டோ
குமையாத தீக்கீற்றோ கூர்வெயில்செய் வாளோ
சமையா விதிகள் சமைத்திட்ட தாய்ந்தே
அமைவாய் விடைநீ அறைந்து!
(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
[உமைக்கேள்வன் = சிவன்; கேள்வன் = கணவன்; ஒண்ணுதல் = ஒள்+நுதல் (ஒளிமிக்க நெற்றி); குமையாத = அழியாத / சிதையாத; கூர்வெயில்செய் = கூரிய வெயிலால் செய்யப்பட்ட; சமையா = செய்யப்படாத; ’சமைத்திட்ட தாய்ந்தே’ = ’சமைத்திட்டது ஆய்ந்தே’; ’அமைவாய் விடைநீ அறைந்து’ = ‘நீ விடை(யை) அறைந்து அமைவாய்’ என்று கூட்டுக!]
--வி
#விடுகவி_இயற்பியல் 1
ஓடி வருங்குதிரை ஒய்யார மாளிகைக்குள்
ஊடி வருகையிலே ஓரேழாய் ஆகிடுமாம்
நாடும் திசைநீளம் நாட்டிடு மாமதனைத்
தேடி விடைநீயுஞ் செப்பு!
(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
[’நாடும் திசைநீளம் நாட்டிடும்’ - குதிரை நாடும் திசையை அதன் நீளம் நாட்டிடும்!
’நாட்டிடு மாமதனை’ = ’நாட்டிடுமாம் அதனை’]
#விடுகவி_இயற்பியல் 2
வேறினங் கண்டால் விழைவூறிச் சேர்ந்திடும்
மாறும் தனதினமே வந்தக்கால் - கூறு
விதந்த வியல்பின் விடை!
(நேரிசைச் சிந்தியல் வெண்பா)
[விழைவூறி = விழைவு+ஊறி; தனதினமே = தனது+இனமே; விதந்த வியல்பின் = விதந்த இயல்பின்]
#விடுகவி_இயற்பியல் 3
நில்லாப் புரவி நிகரில்லா வேகத்தீர்
ஒல்லும் இயல்பின் ஒருபுரவி - சொல்லிய
அப்புரவி ஈதென்றே ஆராய்ந்து கூறுநீ
தப்புகள் எல்லாம் தவிர்த்து!
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
[வேகத்தீர் = வேகத்து+ஈர்; ஈர் = இரண்டு; ஒல்லும் = பொருந்தும்]
#விடுகவி_இயற்பியல் 4
உமைக்கேள்வன் ஒண்ணுதலோ சூரியனின் சொட்டோ
குமையாத தீக்கீற்றோ கூர்வெயில்செய் வாளோ
சமையா விதிகள் சமைத்திட்ட தாய்ந்தே
அமைவாய் விடைநீ அறைந்து!
(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
[உமைக்கேள்வன் = சிவன்; கேள்வன் = கணவன்; ஒண்ணுதல் = ஒள்+நுதல் (ஒளிமிக்க நெற்றி); குமையாத = அழியாத / சிதையாத; கூர்வெயில்செய் = கூரிய வெயிலால் செய்யப்பட்ட; சமையா = செய்யப்படாத; ’சமைத்திட்ட தாய்ந்தே’ = ’சமைத்திட்டது ஆய்ந்தே’; ’அமைவாய் விடைநீ அறைந்து’ = ‘நீ விடை(யை) அறைந்து அமைவாய்’ என்று கூட்டுக!]
--வி