• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin Kathirazhaki - 23 (a)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் ஹாய் நட்பூஸ்,
இந்த பதிவின் தொடர்ச்சி இனி நாளைதான் மக்களே.. இந்த பதிவை படித்து கருத்து சொல்லுங்க.. பாய் பிரிண்ட்ஸ்...


அத்தியாயம் – 23

“அப்போ என்னோட வேண்டுதல் சீக்கிரம் பலிக்க போகுதா..?” என்று ருக்மணி குஷியாக சொல்ல, “என்ன வேண்டிகிட்ட..?” என்று விளக்கம் வேறுகேட்டு வைத்தாள் ஜெயா.. அவள் அதற்கும் பதில் சொல்லும் முன்னரே பிரபா அவர்களின் அருகில் வந்துவிட ருக்மணி வாயை மூடிக்கொண்டாள்..

அவனோ எந்தவிதமான பதட்டமும் இன்றி அவளின் அருகில் வந்து அமர்ந்து, “ஹாய் செல்லம்.. ஐ லவ் யூ சொல்லி ஒரு வாரம் ஆச்சே.. அவன் என்ன பண்றானோ எது பண்றானோ என்ற எந்தவிதமான கரையும் இல்லாமல் இருக்கிற.. இதெல்லாம் சரியில்ல..” என்றவன் குறுஞ்சிரிப்புடன் அவளை மிரட்டினான்..

அவனின் மிரட்டலில் தன்னை மீட்டுக்கொண்ட ஜெயா, “நான் அன்னைக்கே சொல்லிட்டேன்.. நான் உங்களுக்கு ஐ லவ் யூ சொல்லல..” என்றவள் அழுத்தமாக சொல்லிவிட்டு அடுத்த சேரில் அமர்ந்தாள் ஜெயக்கொடி..

அவனும் அவளை ரசித்தபடியே, “ஆனால் நான் உனக்குத்தான் லவ் யூ சொன்னேன்..” என்றவன் பிடிவாதத்துடன் சொல்ல ஜெயாவிற்கு கோபம் தலைக்கேறியது..

“ஒரு பெரிய கம்பெனிக்கு எம்.டி. நீங்க.. அவ்வளவு உயரத்தில் இருப்பவர் இப்படியெல்லாம் பேசறீங்க.. இதெல்லாம் சரின்னு உங்களுக்கு தோணுதா..?” என்றவள் கோபத்துடன் முகத்தைத் திருப்பினாள்..

“எம்.டி. எல்லாம் காதலிக்கவே கூடாதுன்னு உங்க ஊரில் ஏதாவது புது சட்டம் போட்டு இருக்கீங்களா..?” என்றவனின் பேச்சில் அவள் திருதிருவென விழிக்க பிரபாவோ சிரிப்பை அடக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்..

அவனின் கேள்விக்கு எல்லாம் பட்டாசாக வெடிக்கும் ஜெயா திருதிருவென விழிப்பதைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வராமல் இருந்தாள் அதுதான் அதிசயம்.. அவன் இவளோடு வம்பி வளர்ப்பதைப் பார்த்து புரியாமல் அமர்ந்திருந்தாள் ருக்மணி..

‘இது நம்ம எம்.டி.தானா..? இல்ல என்னோட கண்ணு கோளாறா..?’ என்று தீவிரமாக சிந்திக்கவும் அவர்கள் ஆடார் கொடுத்த உணவுகள் வரவும் சரியாக இருந்தது..

அவள் தீவிர சிந்தனையில் இருக்க, “ஆமா ருக்மணி இவங்க உன்னோட பிரெண்டா..?” என்று அவளிடம் கேட்டதும், “ம்ம் ஆமா ஸார்..” என்றவள் காளான் பிரியாணியை அவள் புறம் நகர்த்தி வைத்தாள்..

“வாங்க ஸார் சாப்பிடலாம்..” என்று ருக்மணி அவனை உபசரிக்க, “இவருக்கு இப்போ உபசரிப்பு ரொம்ப முக்கியம்..” என்றவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.. அவளின் செய்கை எல்லாம் அவனுக்கு சிரிப்பையை வரவழைத்தது..

ஜெயா சாப்பிட நினைக்கும் நேரத்தில், “ருக்மணி உங்களை எங்க ஊரில் பார்த்தாக மதன் சொன்னான்.. ஆமா நீங்க திருச்சியில் எங்க இருக்கீங்க..” என்று அவன் அவளிடம் தூண்டில் போட்டான்..

அவனின் கேள்வியில் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவள், “நாங்க எந்த ஊராக இருந்தால் உங்களுக்கு என்ன..?” அவள் பொரிந்து தள்ள, “ஸார் என்னிடம்தான் கேட்டார்.. நான்தான் சொல்வேன்..” என்றவளை எதில் அடிப்பது என்று தெரியாமல் கோபத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஜெயக்கொடி..

அவளின் கோபம் கொண்ட முகம் அவனின் பார்வையில் சுவாரசியத்தைக் கூட்டிவிட அவனும் அவளை இமைக்காமல் பார்த்தான்.. ருக்மநியைத் தூண்டிவிட்டுட்டு அவளின் கண்முன்னாடியே ஜெயாவை சைட்டடித்தான் பிரபாகரன்..

அவளின் கவனம் எல்லாம் பிரியாணி மீது பிரபாவிற்கு கடமை தவறாமல் பதில் சொல்வதிலும் கவனமாக இருந்தவள் ஜெயாவின் கோபத்தைக் கவனிக்க மறந்தவள், “நாங்க துறையூர் ஸார்..” என்றதும் பிரபாவின் கண்ணில் சின்ன மின்னலொன்று நொடிபொழுதில் வந்து சென்றது..

“எங்க ஊர் திருவிழாக்கு எல்லாம் நீங்க வந்திருக்கீங்களா..?” என்றவள் சிக்கன் பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிடவண்ணம் கேட்க, “வந்திருக்கிறேன்..” என்றவன் ஜெயாவின் முகம் பார்த்துவிட்டுத் தொடர்ந்தான்..

“ஆமா உன்னோட பிரிண்ட் நேம் என்ன ருக்கு..” என்றவன் அடுத்த கேள்விக்கு தாவிவிட, “ஜே..” என்றவள் சொல்லும் முன்னே அவளின் வாயில் சோற்றை வைத்து அமுக்கினாள்..

அவளோ பிரபாவை பரிதாமாகப் பார்க்க, “என்ன அவளை பதில் சொல்லவே விடமாட்டாயா..?” என்று ஜெயாவை அதட்டியவன், “நீ பொறுமையாக சாப்பிடு ருக்மணி..” என்றான்..

அவனின் பேச்சில் ஜெயாவின் கோபம் அதிகரிக்க, “நீ சாப்பிட்டுவிட்டு வா ருக்மணி.. நான் கிளம்பறேன்..” என்றவள் வாங்கிய சாப்பாட்டை சாப்பிடாமல் எழுந்து சென்றாள்..

“உன்னோட பிரேண்ட்க்கு அதிகமாக கோபம் வருமா..?” என்றவன் ருக்மணியிடம் கேட்க, “அவளுக்கு கோபமே வராது ஸார்.. ஒரு விஷயத்தில் முடிவெடுக்க ஆயிரம் முறை யோசிப்பா.. அதுதான் அவளோட பிளஸ்..” என்று ஜெயாவைப் பற்றி கூறினாள் ருக்மணி..

“அவளோட பெயர் என்ன..?” என்றவன் கேட்க, “ஜெயா.. ஜெயக்கொடி..” என்றாள் ருக்மணி.. ஜெயா அதற்குள் ஹோட்டலைவிட்டு வெளியே செல்வதைக் கவனித்தவன், “நீ சாப்பிடு ருக்மணி.. நான் அவளை இழுத்துட்டு வருகிறேன்..” என்றவன் எழுந்து சென்றான்..

இருவரின் இடையே நடக்கும் சண்டையை வேடிக்கைப் பார்த்த மதனுக்கு பிரபாவின் மனம் புரிந்தது.. ஆனால் அவள்தான் அந்த பனிமலரா என்ற கேள்விக்கு அவனுக்கு விடை தெரியவில்லை.. அந்த கேள்விக்கு அவனுக்கு மட்டும் அல்ல பிரபாவிற்குமே விடை தெரியவில்லை..

அவளுக்கோ பசி வயிற்றைக் கிள்ளிட, ‘அவளுக்கு கோபம் போயிட்ட அவளே வருவா..’ என்றவள் சாப்பிட தொடங்கினாள்.. அவள் வெளியே செல்லும் நேரத்தில் அவளின் கையைப்பிடித்து தடுத்து நிறுத்தினான்.. அவனின் செயல் அவளுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது..

‘இவன் ஏன் இப்படியெல்லாம் பண்றான்..’ என்று மனதிற்குள் நொந்துகொண்டு கோபத்தில் திரும்பியவள், “இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை..?” என்று கேட்க, “என்மேல் கோபம் வந்தால் அதை ஏன் சாப்பாட்டில் காட்டுகிற.. வா வந்து உட்கார்ந்து சாப்பிடு..” என்றான்..

‘என்னோவோ இவன் பொண்டாட்டிக்கு சொல்ற மாதிரி சொல்றான் பாரு..’ என்றவள் மனதிற்குள் நினைக்க, “நீதான் என்னோட மனைவியாக வரணும் என்று என்னோட தலையில் எழுதிருந்த அதை யாராலும் மாற்ற முடியாது.. வா வந்து சாப்பிடு..” என்றவன் அழுத்தத்துடன் அவளின் மனதை படித்தார் போலவே..

ஜெயா திகைப்புடன் அவனையே பார்க்க, ‘என்னோட மனதை படிக்கும் வித்தை இவனுக்கு எப்படி தெரியும்..’ என்றவள் தீவிரமாக யோசித்தாள்.. அப்பொழுது அவனின் முகத்தைக் கவனித்தவளுக்கு, அவனின் முகம் பரிச்சயமான முகம் போல தோன்றியது..

ஆனால் அவனை எங்கே எப்படி பார்த்தாள் என்று அவளுக்கே நினைவு வரவில்லை.. அது மட்டும் இல்லாமல் அப்பொழுது எல்லாம் வரும் கனவுகளை கொஞ்சநாளாக மறந்துவிட்டாள்.. அதனால் அவள் என்ன யோசித்தும் அவனின் முகம் அவளின் நினைவிற்கு வரவில்லை..

அதற்குள் அவளை இழுத்து வந்து ருக்மணியின் எதிரே அமர வைத்தவன், “ஜெயா எனக்கு இரண்டு விஷயம் பிடிக்காது.. ஒன்று பெண்கள் விடும் கண்ணீர்.. அது அவங்களையும், கோழையாக்கி அவங்களை சுற்றியிருக்கும் நபர்களையும் பைத்தியம் ஆகிவிட்டும்..” அவன் சொல்ல விழியுயர்த்தி அவனின் முகம் பார்த்தாள் ஜெயக்கொடி..

அவன் சொல்லும் விஷயம் நிஜமாகவே அவளை யோசிக்க வைத்தது.. அவளையும் மீறி அவளின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.. அவளின் புன்னகையை அவனின் உதட்டிலும் புன்னகையை வரவழைத்தது..

“இவளை எல்லாம் அடித்தாலும் அழுக மாட்ட ஸார்.. சரியான கல்நெஞ்சகாரி.. அவள் அழுவது அவளைத் தவிர வேற யாருக்கும் தெரியாது.. என்னைத் தவிர..” என்றவள் உண்மையாக சொல்லி கொண்டிருக்க அவளை ஒன்றும் செய்ய முடியாமல் பல்லைக் கடித்தாள் ஜெயக்கொடி.

“இன்னொன்று சாப்பிடாமல் வயிற்றை பட்டினி போடும் பழக்கம் அது எனக்கு அறவே பிடிக்காது.. நம்ம கஷ்டப்பட்டு உழைப்பதே சாப்பிடத்தான்.. கோபத்தைக் கொண்டுபோய் அதில் ஏன் காட்டணும்.. இந்த வகையில் எனக்கு பிரியாமணியை ரொம்ப பிடிக்கும்..” என்றவன் அவளின் கவனத்தை திசை திருப்பினான்..

“அவ்வளவு அடியை வாங்கிட்டு கூட, ‘ஏய் கிழவி சாப்பாடு போடு.. அடிவாங்க தேம்பி வேண்டாம்..’ என்று கேட்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. பொண்ணுங்க எல்லாம் அந்த மாதிரி இருக்கணும்..” என்றவன் அவளின் அருகில் அமர்ந்தான்..

ஜெயாவைப் போலவே அவனும் அவளின் முகத்தையும், அந்த கனவையும் சுத்தமாக மறந்து போயிருந்தான்.. அதனால் அவளை அவனால் அடையாளம் காணமுடியாமல் போய்விட விளையாட்டுகள் எல்லாம் விபரீதமாக மாறும் நேரமும் நெருங்கியது..

“எனக்கு சாப்பாடு வேண்டாம்..” என்றவள் பிடிவாதத்துடன் சொல்ல, “நான் ஊட்டிவிடணுமா..?” என்று கேட்டு அவளை அதிர வைத்தான் பிரபா..

அவள் அவனை முறைக்க, “நீ சாப்பிடு.. அதுவரை நான் வாய்திறக்க மாட்டேன்..” என்றவன் அமைதியாக அமர்ந்துவிட்டான்.. அதையெல்லாம் பார்த்த ருக்மணிக்கு வியப்பில் விழிகள் விரிந்தது.. பிரபாகரன் இவ்வளவு பேசுவான் என்ற விஷயமே ருக்மணிக்கு அதிசயமாக இருந்தது..

‘என்னடா நமக்கு எல்லாம் ஜோடியே கிடைக்காதா..? பெருமாளே.. என்னை மட்டும் எதுக்கு இப்படி புலம்ப வைக்கிற..’ என்றவள் புலம்பியவண்ணம் சாப்பிட தொடங்கினாள்..

ஜெயா நேரம் செல்வதை உணர்ந்து அவளும் சாப்பிட, “ஐ லவ் யூ பேபி..” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி அவன் சொல்ல அவள் நிமிர்ந்து அவனை முறைத்தாள்..

அவளைப் பார்த்து குறும்புடன் கண்ணடித்த பிரபா, “ஐ லவ் யூ தப்பான வேர்ட் இல்ல.. சோ கூல் பேபி..” என்றவன் ருக்மணியின் பக்கம் திரும்பினான்.

“ருக்மணி இன்னும் கால் மணிநேரம்தான் இருக்கு நீ சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு வா..” என்றவன் மதனின் அருகில் சென்று, “போலாமா மதன்..” என்று கேட்க, “என்னடா நடக்குது இங்கே..?” என்று புரியாமல் கேட்டான்..

“அது எல்லாம் கேட்காதே.. நான் என்ன பண்றேன்னு எனக்கே புரியல.. என்னோட செயலுக்கு எல்லாம் அர்த்தம் புரிந்தால் கண்டிப்பாக நான் உனக்கு சொல்றேன்..” என்றவன் மதனை அழைத்துச் செல்லும் பொழுது ஜெயாவைத் திரும்பிப் பார்த்தான்..

அவளோ அவனை கவனிக்காமல் சாப்பிட, ‘சோ ஸ்வீட் செல்லம்..’ என்றவன் ஹோட்டலைவிட்டு வெளியே செல்ல, மதன் அவனைப் பின்தொடர்ந்தான்..
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top