ஐந்து வருடங்களுக்கு பிறகு.....
ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணேஷின் மேல் திடீரென்று யாரோ வந்து விழவும் பதறியடித்து கொண்டு எழுந்து அமர்ந்து கொண்டவன் சுற்றிலும் தன் பார்வையை சுழல விட அங்கே அவனது வயிற்றில் காலை போட்டு கொண்டு தூங்கி கொண்டு இருந்தான் நான்கு வயது நிரம்பிய அஸ்வந்த் சரோஜா மற்றும் அஜயின் செல்ல மகன்.
"இவனோட அம்மா தான் நம்ம தூங்க விடாமல் இத்தனை வருஷம் சதி பண்ணுணானு பார்த்தால் இவன் அதற்கும் மேல போயிடுவான் போலவே...என்ன கொடுமை ஸார் இது?" என்று புலம்பிக் கொண்டு இருந்த கணேஷின் முன்னால் வந்து நின்ற சரோஜா
"என்னடா கணேஷ் இவ்வளவு சீக்கிரமாக எந்திரிச்சுட்ட? ஒரு வேளை காலையில் ஜாக்கிங் போக போறியா?" என்று கேட்கவும்
அவளை முறைத்து பார்த்த கணேஷ்
"ஏன் கேட்கமாட்ட...என் பொண்டாட்டியை என்னை விட்டு பிரித்து அனுப்பி வைத்ததும் இல்லாமல் உனக்கு நக்கல் வேற கேட்குதா?" என்று கேட்க அவனைப் பார்த்து சிரித்துக்கொண்ட சரோஜா அஸ்வந்தின் புறமாக சென்று நின்றாள்.
"அஸ்வந்த் கண்ணா...இன்னைக்கு பாட்டி வீட்டுக்கு போகணுமா? வேண்டாமா? எழுந்திருங்கடா குட்டி..." என சரோஜா அஸ்வந்தை தட்டி எழுப்ப மெல்ல கண் திறந்து பார்த்தவன்
கணேஷை திரும்பி பார்த்து
"மாமா உன்னை இன்னும் டைனோசர் சாப்பிடலயா?" என்று கேட்க
சரோஜா
"டைனோசரா?" என்று
குழப்பமாக கேட்டாள்.
"ஆமா ம்மா...மாமாவை காட்டுக்கு உள்ளே ஒரு டைனோசர் விரட்டி போயிட்டு இருந்துச்சா...அப்போ மாமா ஒரு பள்ளத்தில் விழுந்தாறா...நீங்க வந்து என்னை எழுப்பிட்டீங்க..." கண்களை உருட்டி பாவனையோடு கூறிய தன் மகனின் அழகில் சொக்கிப் போனவள் அவன் கன்னத்தில் முத்தமிட கணேஷ் காதில் புகை வராத குறையாக சரோஜாவை பார்த்து கொண்டு இருந்தான்.
அஸ்வந்த் சரோஜாவின் கையை சுரண்ட
"என்ன கண்ணா?" என்றவாறே அவனைப் பார்த்தவள் அஸ்வந்த் கணேஷின் புறம் கை காட்ட
கணேஷைப் பார்த்து சமாளிப்பது போல புன்னகைத்து கொண்டே
"கணேஷ் உனக்கு டீ போடவா? இல்லை காஃபி போடவா?" என்று கேட்கவும்
"முதல்ல உன்னை போட்டு தள்ளுறேன்...அம்மாவுக்கும், மகனுக்கும் என் உயிரோடு விளையாடுறதே வேலையா போயிடுச்சுலே..." என்று கூறி கொண்டே கணேஷ் கட்டிலில் இருந்து இறங்க சரோஜா அஸ்வந்தை தூக்கி கொண்டு ஓடி சென்றாள்.
அஜயை கண்டதும் அவன் பின்னால் சரோஜா மற்றும் அஸ்வந்த் மறைந்து கொள்ள வித்யா இவர்களைப் பார்த்து புன்னகத்து கொண்டார்.
"ஏன்டா கல்யாணம் பண்ணி குழந்தையும் பிறந்தாச்சு...இன்னுமா இரண்டு பேரும் அடிச்சுட்டு இருக்கீங்க?" என வித்யா கேட்கவும்
அவரைப் பார்த்து புன்னகத்து கொண்ட சரோஜா மற்றும் கணேஷ்
"நாங்க பேரன், பேத்தியோடு இருந்தாலும் சரி...எப்போதும் இப்படி தான் இருப்போம்...இல்லையா?" என்று ஒருமித்த குரலில் கூறவும் தன் பிள்ளைகளின் ஒற்றுமையை எண்ணி மனம் குளிர்ந்து போன வித்யா யாரும் அறியாமல் தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டார்.
"சரி சரி நேரமாகுது சீக்கிரம் ரெடி ஆகுங்க...அங்க எல்லோரும் காத்துட்டு இருப்பாங்க..." என்று வித்யா எல்லோரையும் துரிதப்படுத்த பத்து, பதினைந்து நிமிடங்களில் அனைவரும் தயாராகி வந்தனர்.
அஜய் காரின் முன்னால் அமர்ந்து கொள்ள சரோஜா மற்றும் அஸ்வந்த் அஜயின் அருகில் அமர்ந்து கொண்டனர்.
பின் இருக்கையில் வித்யா மற்றும் கணேஷ் அமர்ந்து கொண்டதும் அஜய் காரை ஸ்டார்ட் செய்தான்.
ஐந்து வருடங்களுக்குள் எத்தனை நிகழ்வுகள் நடந்து விட்டது என்று எண்ணிக் கொண்ட சரோஜா புன்னகையோடு அஜயை பார்த்து கொண்டு வந்தாள்.
ஹாஸ்பிடலில் முழுமையாக ஒரு வாரம் சிகிச்சை முடித்து விட்டு வந்த சரோஜா பழைய படி தன் வேலைக்கு செல்ல தொடங்க வாஞ்சிநாதன் வழக்கை முடித்து வைத்ததற்காக அஜய்க்கு பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டே இருந்தது.
அதன் பிறகு அஜய் வழக்கம் போல தன் வேலையில் கவனத்தை செலுத்தினாலும் ருத்ரா மற்றும் சித்ராவினை பற்றிய எண்ணங்கள் அவன் மனதின் ஓரமாக இருந்து கொண்டே இருந்தது.
சரோஜா அஜயின் நடவடிக்கைகளை கவனிக்க ஒரு நாளும் தவறியது இல்லை.
வெளியே வழக்கம் போல தன்னை காட்டி கொண்டாலும் அஜயின் மனதிற்குள் ஏதோ ஒரு சிந்தனை இருக்கிறது என்பதை கண்டு கொண்டவள் அஜயே அதை தன்னிடம் கூறட்டும் என்று பொறுமையாக காத்திருந்தாள்.
இரண்டு, மூன்று மாதங்கள் இப்படியே கடந்து இருக்க அஜயிடம் இருந்து எந்த விடயத்தையும் அவளால் கண்டு கொள்ள முடியவில்லை.
அன்று வழக்கம் போல ஸ்டேஷனில் இருந்து வந்த அஜய் பார்வையாலேயே ஹாலில் சரோஜாவைத் தேடினான்.
அங்கே அவள் இல்லாமல் போகவே அவர்களது அறையில் சரோஜா இருக்கக் கூடும் என்று நினைத்து கொண்டு அவர்களது அறையை நோக்கி அஜய் சென்றான்.
அங்கே சரோஜா வந்ததற்கான தடயமே இல்லாது இருக்கவும் குழப்பமடைந்த அஜய் யோசனையோடு நின்று கொண்டிருந்தான்.
அப்போது சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக அஜய் மேலே மொட்டை மாடியை நோக்கி செல்ல அவனது எண்ணத்தை பொய்ப்பிக்காமல் சரோஜா அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து வானத்தில் உலவிக் கொண்டிருந்த நிலவை ரசித்து கொண்டிருந்தாள்.
வானத்தில் இருந்த நிலவை விட தன் மனைவியின் வதனம் ஜொலித்து கொண்டிருப்பதை பார்த்து ரசித்த வண்ணம் அவளை நெருங்கி சென்ற அஜய் அவளது அருகில் அமர்ந்து கொண்டான்.
அஜய் வந்து அமர்ந்ததை பார்த்த சரோஜா எதுவும் பேசாமல் மீண்டும் தன் பார்வையை வானத்து நிலவின் மேல் வைக்க அஜய் யோசனையோடு சரோஜாவை நெருங்கி அமர்ந்து அவளது கழுத்து வளைவில் தன் முகம் பதித்தான்.
சரோஜாவின் உடல் அவனது ஸ்பரிசத்தில் கூசி சிலிர்க்க கண்களை மூடி அந்த தருணத்தை ரசித்து கொண்டவள் உடனே கண்களை திறந்து அஜயை முறைத்து பார்த்து விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.
புருவங்கள் யோசனையில் முடிச்சிட மீண்டும் சரோஜாவை நெருங்கி அமர்ந்த அஜய் அவள் கைகளை பற்றி கொண்டான்.
சரோஜா அவன் கைகளை தட்டி விட்டு எழுந்து கொள்ள போக அவளை எழுந்து கொள்ள விடாமல் அவள் இடையை வளைத்து பிடித்து கொண்டவன்
"ரோஜாவுக்கு என்ன கோபம்?" என அவள் காதில் மெல்லிய குரலில் கேட்டான்.
"ஒண்ணும் இல்லை...எனக்கு தூக்கம் வருது விடுங்க நான் போகணும்..." என்று விட்டு சரோஜா எழுந்து கொள்ள போக
மேலும் இறுக்கமாக அவள் இடையை அழுத்தி பிடித்து கொண்டவன்
"என்ன ஆச்சு டா? ஆபீஸ்ல எதுவும் பிரச்சினையா?" என்று கேட்டான்.
"பிரச்சினை என் பக்கத்தில் தானே இருக்கு..." சரோஜா முணுமுணுத்துக் கொள்ள
"என்ன சொன்ன? என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு..." என்றவாறு அவள் உதட்டருகில் அஜய் தன் காதை வைக்க
கோபமாக அவனை பார்த்தவள்
"பிரச்சினையே நீங்க தான்..." என சத்தமிட்டு கூற சரோஜாவின் சத்தத்தில் அஜய் தன் காதுகளை தேய்த்துக் கொண்டான்.
"யப்பா....என்ன சவுண்ட்...ச...ரோஜா..." வேண்டுமென்றே அஜய் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே கண்ணடிக்க கோபமாக அவன் தோளில் தட்டியவள் மறுபுறம் திரும்பி அமர்ந்து கொண்டாள்.
"இப்போ என்ன ஆச்சு சொல்லு சரோஜா..." சமாதானமாக போகும் எண்ணத்தோடு அஜய் கேட்கவும்
தன் கண்களை ஒரு முறை மூடி திறந்து கொண்டவள் அஜயின் புறம் திரும்பி
"நீங்க ஏன் என் கிட்ட அந்த விஷயத்தை மறைத்து வைச்சீங்க?" என்று கேட்டாள்.
"எந்த விஷயம்?" அஜய் புரியாமல் குழப்பமாக கேட்கவும்
ஆழமாக அவனைப் பார்வையிட்ட சரோஜா
"சித்ராவைப் பற்றி..." என்று கூறினாள்.
"சித்ராவா?" என்று யோசனையோடு அஜய் சரோஜாவை பார்க்க
"சும்மா நீங்க ஒண்ணும் தெரியாத மாதிரி யோசிக்க வேண்டாம்...நீங்க கொஞ்ச நாளாகவே ஏதோ யோசனையோடு இருந்தீங்க எனக்கு தெரியும்...நீங்களாகவே சொல்லுவீங்கனு நினைச்சேன்...நீங்க சொல்லல...அப்புறம் நான் தனியா உட்கார்ந்து யோசித்து பார்த்தேன்...அப்போ தான் நீங்க சித்ரா பேசிட்டு போனதுக்கு அப்புறமாக இருந்து யோசனையோடு இருக்குறது எனக்கு புரிந்தது...சித்ரா உங்க கூட பிறக்காத தங்கை மாதிரி...அவளுக்கு ஒரு நல்ல லைஃப் அமைத்து கொடுக்கணும்...அது தானே உங்க யோசனை?" என்று சரோஜா கேள்வியாக அஜயை நோக்க அஜய் ஆச்சரியமாக சரோஜாவை பார்த்து கொண்டு இருந்தான்.
"நீங்க சொல்லாமலே உங்க மனசில் என்ன இருக்குன்னு எனக்கு தெரியும்..." என சரோஜா கூறவும்
அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்ட அஜய்
"நீ சொன்னது நூறு வீதம் உண்மை தான் சரோஜா...சித்தார்த் இறந்ததை இப்போ கூட என்னால நம்ப முடியல...அதற்காக அவனை நான் சரியானவன்னு சொல்லல...அவன் செய்த தப்புக்கு ருத்ராம்மாவும், சித்ராவும் என்ன பண்ணுவாங்க? யாரும் இல்லாமல் தனியாக அவங்க இருக்குறதை பார்த்து கஷ்டமாக இருந்தது...சித்ரா இனிமேலாவது சந்தோஷமாக இருக்கணும்...அதற்காக என்ன பண்ணலாம்னு தான் எனக்கு யோசனையே தவிர வேற எதுவும் இல்லை..." என்று கூற
அவனைப் பார்த்து புன்னகத்த சரோஜா
"கையில் நெய்யை வைத்து கொண்டு வெண்ணெயை தேடி அலையுறீங்களே..." என்று கூறவும் அஜய்க்கு சரோஜா கூறியதன் அர்த்தம் பிடிபடவில்லை.
சிறிது நேரம் யோசித்து பார்த்தவன்
"ஹேய்...கணேஷா?" என்று ஆச்சரியமாக கேட்கவும்
சரோஜா ஆமென்று தலை அசைத்தாள்.
"நானும் கணேஷைத் தான் மனதில் வைத்து இதை பற்றி பேசுனேன்...ஆனா நான் சுயநலத்திற்காக என்னோட ஒரு ஆசைக்காக உன்னை கட்டாயப்படுத்திடக் கூடாதுனு தான் இதை சொல்லல...ஆனா இப்போ நீயும் அதே எண்ணத்தோடு தான் இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்குடா..." என்று அஜய் கூறவும்
அவன் தோளில் சாய்ந்து கொண்ட சரோஜா
"உங்களோட ஆசை தான் என்னோட ஆசையும்...நீங்க ஒரு விஷயம் சொன்னீங்க