வணக்கம் தோழமைகளே,
உங்களில் பலர் கவிதைக்கான தமிழின் மரபிலக்கணமான யாப்பிலக்கணத்தைக் கற்பதிலும் ஆர்வம் காட்டுகின்றீர்கள், அவர்களுக்கானது இப்பதிவு:
இன்றைய நிலையில் தமிழ் மரபுக்கவிதைகளின் (வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம் போன்றவை) இலக்கணத்திற்கு அடிப்படை ‘யாப்பருங்கலக் காரிகை’, ‘யாப்பருங்கலம்’ என்ற நூல்கள்தான்.
இவை இரண்டும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகப் பிரிவில் உரையுடன் கிடைக்கின்றன:
யாப்பருங்கலம்: http://www.tamilvu.org/ta/library-l0200-html-l0200ind-117825
யாப்பருங்கலக் காரிகை: http://www.tamilvu.org/ta/library-l0300-html-l0300ind-117993
ஆனால், இவற்றுக்கும் ‘எளிமை’க்கும் கொஞ்சம் தொலைவு அதிகம்!
தமிழறிஞர் கி.வா.ஜ. அவர்கள் ‘கவி பாடலாம்’ என்று எளிமையாக யாப்பிலக்கணம் கற்றுத்தரும் நூலை இயற்றியுள்ளார்:
http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kJMy&tag=கவி பாடலாம்#book1/
மேலும் பலரும் எளிமையாக யாப்பிலக்கணம் கற்றுத் தரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
வெண்பா எழுதலாம் வாங்க http://venbaaeluthalaamvaanga.blogspot.com/ என்ற வலைப்பூவும்,
பேரா. பசுபதியாரின் ‘கவிதை இயற்றிக் கலக்கு’ பதிவுகளும் (பின் இது நூலாக வெளியிடப்பட்டுள்ளது) அவற்றில் குறிப்பிடத்தக்கவை. (கூகுள்க!)
அடியேனும் ஒரு வலைப்பூ தொடங்கினேன்: http://learn-yaappu.blogspot.com/
இவற்றில் உங்களுக்கு தோதானதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்குக!
வெண்பாவிற்குத் தேவையான இலக்கணத்தை மட்டும் ஒரு ‘கிராஷ் கோர்ஸ்’ போலக் கற்றுத் தரும் ஒரு முயற்சியாக நான் இந்தக் காணொளிகளை உருவாக்கினேன்:
வெண்பா கவிப்போம் - 1:
வெண்பா கவிப்போம் - 2:
(இரண்டும் சேர்த்து மொத்தமே முக்கால் மணிநேரந்தான்!)
யாப்பிலக்கணத்தை ஒரே நாளில் கற்றுக்கொள்ள இயலாது, அப்படியே இயன்று நீங்கள் அனைத்து இலக்கணங்களையும் விதிகளையும் மனப்பாடம் செய்துவிட்டீர்கள் என்றாலும், அவற்றை அமைத்து பாடல்கள் யாப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல, அதிலும் நல்ல பாடல்கள் யாக்க வாழ்நாள் தவம் கூடத் தேவைப்படலாம் (ஆண்டுக் கணக்காய் கவிதை என்று கிறுக்கியும் ஒன்றும் தேராத பலரை நான் அறிவேன்!)
இதை உங்களைச் சோர்வடையச் செய்வதற்காகச் சொல்லவில்லை, கற்கத் தொடங்கிச் சில நாள்களில் ’நமக்கு இது சரிப்படாதோ’ என்று நீங்கள் நின்றுவிடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்...
இலக்கணத்தோடு சேர்த்து இலக்கியத்தையும் படித்தல் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த கவிதை - இலக்கிய மரபை உடையவர்கள் நாம், அந்த மரபில் ஆயிரமாயிரம் தலைச்சிறந்த புலவர்கள் தோன்றிப் பல்லாயிரக் கணக்கான அழகான ஆழமான பாக்களை நமக்காகக் கொடுத்துச் சென்றுள்ளனர்...
அந்தப் இலக்கியப் புதையலை அறியாமல் இருப்பது எத்தனை பெரும் பிழை? அதிலும், கவிதை எழுதுகிறேன் என்று சொல்லும் ஒருவர் கட்டாயம் அந்தத் தமிழ்க்கடலில் காலையேனும் நனைத்திருக்க வேண்டுமல்லவா?
’ஒரு வெண்பா எழுதும் முன் குறைந்தளவு நூறு வெண்பாக்களையேனும் படித்துவிடுங்கள்’ என்பது நான் அடிக்கடி சொல்லும் ஒன்று... அதையேதான் இங்கும் சொல்ல விழைகிறேன்...
தொடங்குங்கள்...
உங்கள் யாப்பிலக்கணப் பயணம் இனிதாய் அமையட்டும்...
இடையில் உங்களுக்கு ஏற்படும் தடைகளைக் கடக்க நான் இயன்றவரை உதவ ஆர்வமாய்க் காத்திருக்கிறேன்... தயங்காது என்னைத் தொடர்புகொள்ளுங்கள்...
கணக்கின்றி வினாக்கள் எழுப்புங்கள்...
கற்போம், கவிப்போம்...
நன்றி
உங்களில் பலர் கவிதைக்கான தமிழின் மரபிலக்கணமான யாப்பிலக்கணத்தைக் கற்பதிலும் ஆர்வம் காட்டுகின்றீர்கள், அவர்களுக்கானது இப்பதிவு:
இன்றைய நிலையில் தமிழ் மரபுக்கவிதைகளின் (வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம் போன்றவை) இலக்கணத்திற்கு அடிப்படை ‘யாப்பருங்கலக் காரிகை’, ‘யாப்பருங்கலம்’ என்ற நூல்கள்தான்.
இவை இரண்டும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகப் பிரிவில் உரையுடன் கிடைக்கின்றன:
யாப்பருங்கலம்: http://www.tamilvu.org/ta/library-l0200-html-l0200ind-117825
யாப்பருங்கலக் காரிகை: http://www.tamilvu.org/ta/library-l0300-html-l0300ind-117993
ஆனால், இவற்றுக்கும் ‘எளிமை’க்கும் கொஞ்சம் தொலைவு அதிகம்!
தமிழறிஞர் கி.வா.ஜ. அவர்கள் ‘கவி பாடலாம்’ என்று எளிமையாக யாப்பிலக்கணம் கற்றுத்தரும் நூலை இயற்றியுள்ளார்:
http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kJMy&tag=கவி பாடலாம்#book1/
மேலும் பலரும் எளிமையாக யாப்பிலக்கணம் கற்றுத் தரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
வெண்பா எழுதலாம் வாங்க http://venbaaeluthalaamvaanga.blogspot.com/ என்ற வலைப்பூவும்,
பேரா. பசுபதியாரின் ‘கவிதை இயற்றிக் கலக்கு’ பதிவுகளும் (பின் இது நூலாக வெளியிடப்பட்டுள்ளது) அவற்றில் குறிப்பிடத்தக்கவை. (கூகுள்க!)
அடியேனும் ஒரு வலைப்பூ தொடங்கினேன்: http://learn-yaappu.blogspot.com/
இவற்றில் உங்களுக்கு தோதானதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்குக!
வெண்பாவிற்குத் தேவையான இலக்கணத்தை மட்டும் ஒரு ‘கிராஷ் கோர்ஸ்’ போலக் கற்றுத் தரும் ஒரு முயற்சியாக நான் இந்தக் காணொளிகளை உருவாக்கினேன்:
வெண்பா கவிப்போம் - 1:
(இரண்டும் சேர்த்து மொத்தமே முக்கால் மணிநேரந்தான்!)
யாப்பிலக்கணத்தை ஒரே நாளில் கற்றுக்கொள்ள இயலாது, அப்படியே இயன்று நீங்கள் அனைத்து இலக்கணங்களையும் விதிகளையும் மனப்பாடம் செய்துவிட்டீர்கள் என்றாலும், அவற்றை அமைத்து பாடல்கள் யாப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல, அதிலும் நல்ல பாடல்கள் யாக்க வாழ்நாள் தவம் கூடத் தேவைப்படலாம் (ஆண்டுக் கணக்காய் கவிதை என்று கிறுக்கியும் ஒன்றும் தேராத பலரை நான் அறிவேன்!)
இதை உங்களைச் சோர்வடையச் செய்வதற்காகச் சொல்லவில்லை, கற்கத் தொடங்கிச் சில நாள்களில் ’நமக்கு இது சரிப்படாதோ’ என்று நீங்கள் நின்றுவிடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்...
இலக்கணத்தோடு சேர்த்து இலக்கியத்தையும் படித்தல் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த கவிதை - இலக்கிய மரபை உடையவர்கள் நாம், அந்த மரபில் ஆயிரமாயிரம் தலைச்சிறந்த புலவர்கள் தோன்றிப் பல்லாயிரக் கணக்கான அழகான ஆழமான பாக்களை நமக்காகக் கொடுத்துச் சென்றுள்ளனர்...
அந்தப் இலக்கியப் புதையலை அறியாமல் இருப்பது எத்தனை பெரும் பிழை? அதிலும், கவிதை எழுதுகிறேன் என்று சொல்லும் ஒருவர் கட்டாயம் அந்தத் தமிழ்க்கடலில் காலையேனும் நனைத்திருக்க வேண்டுமல்லவா?
’ஒரு வெண்பா எழுதும் முன் குறைந்தளவு நூறு வெண்பாக்களையேனும் படித்துவிடுங்கள்’ என்பது நான் அடிக்கடி சொல்லும் ஒன்று... அதையேதான் இங்கும் சொல்ல விழைகிறேன்...
தொடங்குங்கள்...
உங்கள் யாப்பிலக்கணப் பயணம் இனிதாய் அமையட்டும்...
இடையில் உங்களுக்கு ஏற்படும் தடைகளைக் கடக்க நான் இயன்றவரை உதவ ஆர்வமாய்க் காத்திருக்கிறேன்... தயங்காது என்னைத் தொடர்புகொள்ளுங்கள்...
கணக்கின்றி வினாக்கள் எழுப்புங்கள்...
கற்போம், கவிப்போம்...
நன்றி