Little bro நான் லேட் ... இருந்தாலும் சொல்லுவேன் கொஞ்சம் பெருசா தான் இருக்கும். Adjust karo ??
நான் கதை வாசித்து பழக்கமே இல்லாதவள் கடந்த ஓராண்டு காலமாக தான் SM தளத்தில் உறுப்பினர் ஆகி ஏதோ கொஞ்சம் படிக்க ஆரம்பித்துள்ளேன். நிறைய கதைகளை படிக்க முடியவில்லை, நேரமின்மையும் ஒரு காரணம்.
நான் தமிழ் கற்றுக்கொள்ள தான் முதலில் நாவல் படிக்க ஆரம்பித்தேன் பிறகு என்னை divert செய்யவும் படிக்கிறேன். இப்ப எனக்கு என்று சில favourite எழுத்தாளர்கள் இந்த தளத்தில் இருக்கிறார்கள் அவற்றில் நான் படித்த கதைகள் உங்க சோதனையில் தேறுகிறதா என்று பார்ப் போம்.
முதலில் என் மனதிற்கு மிக மிக நெருக்கமான கதை
VNE, ஆசிரியர்
@smteam சசி முரளி.
பெண்கதாபாத்திரங்கள்: மகா, பிருந்தா, பைரவி, ஜோதி, பாட்டி
இரண்டுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள். அதிலும் மகா திடமான ஹீரோயின் , ஹிரோவையே கதறவிடுவாள்.
ஜோதி மகா மற்றும் பிருந்த வரும் இடங்கள் ஆண்களை பற்றி இல்லாமல் ஒரு நிமிடம் வசனம் எல்லாம் இருக்கு. மகா மற்றும் பைரவி வருமிடம் எல்லாம் ???? தான். கண்டிப்பான அம்மா என்றால் பைரவி தான்.
உங்க சோதனையின் அடிப்படையில் VNE தேறி விட்டது ??
எனக்கு பிடித்த கதாசிரியர்
@vanisha இவங்க கதைகளில் வரக்கூடிய கதாநாயகிகள் யாரையும் வருணிக்க மாட்டார்கள். பெண்களை காட்சி பொருளாக காட்சி படுத்த மாட்டார்கள் மாறாக இயல்பான அதே சமையம் திடமான கதாபாத்திரங்களாக கட்டமைத்து இருப்பாங்க.
இவங்க கதைகளில் நான் படித்த அனைத்து கதைகளும் எனக்கு மிகவும் நெருக்கம். அதில் சில..
கதை - உயிர்விடும் வரை உன்னோடு தான்
பெண் கதாபாத்திரங்கள் - சித்ரா பௌர்ணமி, நிலா, தீபா, பத்மா, ஆராதனா, சித்ராவின் அம்மா, சித்தி
இரண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்.
சித்ரா என்னை ரொம்பவும் கவர்ந்த நாயகி. கவலைகளை மறைத்து சந்தோஷ காற்றை சுற்றி இருப்பவர்களுக்கு விசுபவள். சித்ரா, தீபா மற்றும் நிலா வரும் இடங்கள் எல்லாம் ஒரு நிமிடத்திற்கு மேலாக வசனங்கள் உண்டு.
இதுவும் சோதனையில் தேறிய கதை தான்
கதை - உரசாதே உசுர தான்
பெண் கதாபாத்திரங்கள் : அபி, நாகேசு, சதாவின் அம்மா கண்ணுரங்கம், அபியின் மாமி, அபியின் மாமா மகள்.
இரண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்.
அபி வலி தாங்கி என்று சொல்லும் அளவிற்கு அவளின் கதாபாத்திரம். ஆனாலும் அவ சொல்லும் அப்பி ஸ்டையில் கவிதைக்கு எல்லோருமே அவளுக்கு விசிறி தான்.
அவளும் கேசியும் வருகிற இடமெல்லாம் ஒரு நிமிட வசனங்கள் இருக்கும்.
இதுவும் சோதனையில் தேறிய கதை தான் ??
ப்ரோ நிறைய இருக்கு ஆனால் நேரம் இல்லை டைப் செய்ய. பெண்களை மையமாக கொண்ட கதைகள் நம்ம தளத்திலே இருக்கு.
நான்அவளில்லை, அவள் திரௌபதி அல்ல ( இந்த கதையை பற்றி ஏற்கனவே நிறைய அலசல்கள் இருந்ததால் நான் எதுவும் குறிப்பிடவில்லை).
அனிமா, லவ்லி லவி, நிலவொன்று கண்டேனே, மயங்காதே மணமே இப்படி...
இந்த சோதனையை தாண்டி ஒன்னு இருக்கு ப்ரோ.. கதை வாசிப்பது என்பது பொழுதுபோக்குகாக தான். அதில் கருத்து இருந்தால் போனஸ் ஆனால் கருத்து சொல்லுறேன் என்று கட்டுரை எழுதின படிக்க கொஞ்சம் சிரமம் தான் ??.
ரொமன்ஸ் இல்லாத காதல் கதை @Kathambariயின் கற்புநிலை யாதெனில்.. நாயகன், நாயகிக்கு பெயர் கூட சொல்லவில்லை... இந்த மாதிரி கதைக்ள் வந்தா ஆராதிக்கிறோம்.
கதை சொல்வது ஒரு வகையான கலை... எந்த கலையாக இருந்தாலும் மதிக்க வேண்டும் பிடிச்சா like ரொம்பி பிடிச்சா கமெண்ட் பிடிக்கவில்லை என்றா quiet .. விமர்சனம் செய்வது தவறா சரியா என்பதை தாண்டி அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கு என்பது தான் முதலில் எனக்குள் எழும் கேள்வி.
எனக்கு தெரிந்த வரை பதிந்து இருக்கிறேன். ??