As you mentioned there are lot many lessons to be learnt from these vendors, which even IIM professors can't teach.
Nice one.
ஆமாம் அம்மா... சி.சி.கதை என்று நான் விவரிக்கவில்லை (எழுதியதை நீக்கிவிட்டேன்!)
எங்கள் பாணிபூரிக்காரர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா, மலையாளம் என்று பல மொழிகளைச் சரளமாகப் பேசுவார், வரும் வாடிக்கையாளர்களின் தாய்மொழியில் அவர்களை உபசரிப்பார்...
அனைவரிடமும் நட்பு கொண்டுவிடுவார்... கொஞ்ச நாள் தொடந்து சென்றால் நம் வீட்டு நலத்தை எல்லாம் விசாரிப்பார்...
திருமணம் முடிந்து நான் என் மனைவியை முதன்முதலில் அழைத்துச் சென்றபோது பக்கத்துக் கடைக்குச் சென்று குளிர்பானம் வாங்கிவந்து கொடுத்தார் (அவள் அதை எல்லோரிடமும் சொல்லி ஆச்சரியப்பட்டாள்
பாணிபூரி கடையில் குளிர்பானம் குடித்தது நானாகத்தான் இருப்பேன் என்று!)
இன்று நான் வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்துவிட்டேன், ஆனாலும், அந்தப் பக்கம் எப்போதாவது சென்றால் அன்புடன் கையாட்டுவார், ‘வாங்க ஏதாச்சு சாப்பிடுங்க’ என்பார், அவருக்குக் காசுகொடுத்துவிட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்...
அவர் பெயர் திரு. எத்திராஜ்
[உண்மையில் வர்தா புயலில் அவரது தள்ளுவண்டி உருட்டப்பட்டு பலத்த சேதம் அடைந்துவிட்டது... அப்போது நானும் என் நண்பர்களும் காசு புரட்டிக் கொடுத்து உதவினோம்! அப்போது அவரோடு நீண்ட நேரம் பாணிபூரி சாப்பிடாமல் அமர்ந்து பேசினோம்... அதன் பின் எழுதியதே இக்கதை!]