Anu Chandran
மண்டலாதிபதி
ஆறுமாதங்ளுக்கு பிறகு....
பேக்கிங்கில் மும்முரமாக இருந்தனர் ரேஷ்மியும் வினயும். இன்னும் இரண்டு நாட்களில் இருவரும் யூ.எஸ் கிளம்புகின்றனர். வினயிற்கு அவனது பணியில் இரண்டு வருடங்கள் யூ.எஸ் இல் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைக்க அதை ரேஷ்மியின் உயர்கல்வியை தொடரும் சந்தர்ப்பமாக மாற்றியிருந்தான் வினய்.
அன்றொருநாள் ரேஷ்மியை வெளியே அழைத்து சென்றான் வினய். வழமைக்கு மாறாக அவளை சேலையில் வரச்சொன்னவன் அவளை அழகுபடுத்தல் பணியிலும் பங்கெடுத்திருந்தான்.
“வினய் எதுக்கு இப்படி பண்ணுறீங்க.... இந்த ராத்திரியில யாரு என்னை பார்க்க போறா??? அதுவும் சேலையில....” என்று சலித்தவளிடம்
“நான் இருக்கும் போது வேறு யாரும் உன்னை பார்த்திருவாங்களா??? பார்க்க தான் விட்டுருவேனா??” என்றவனை பார்த்து சிரித்தவள்
“இப்படி போனா யாரும் பார்க்க தான் செய்வாங்க...” என்று அவனை மேலும் கேலி பண்ண அவளது கண்ணில் மை வரைவதில் மும்முரமாக இருந்தவன் அந்த வேலையை முடித்துவிட்டு உதட்டு சாயத்தை கையில் எடுத்தான்.
“ லிப்ஸ்டிக் வேணாம் வினய்... நான் லிப் பாம் பூசுறேன்... என்னை க்ரூம் பண்ணுறதை விட்டுட்டு நீங்க கிளம்புற வழியை பாருங்க...” என்று கிளப்ப முயல அவனோ
“ஹேய் நான் இன்னும் என் வேலையை முடிக்கலை..” என்று நெருங்க
“யப்பா சாமி... இதுவரைக்கும் பண்ணதே போதும்... நீங்க போய் கிளம்புங்க... வெளியில யாராவது பார்த்தா அவ்வளவு தான்... நீங்க நடையை கட்டுங்க....”
“என் பொண்டாட்டிக்கு நான் செய்றேன்... யாரு என்ன சொல்லமுடியும்... சேலை கட்டிவிடுறேன்னு சொன்னேன்.... நீ தான் வேணாம்னு சொன்னேன். சரி மேக்கப்பாச்சு போட்டுவிடலாம்னு பார்த்தா அதுக்கும் விட மாட்டேன்குற....”
“ஆஹான்... நீங்க சேலை கட்டிவிடுறேன் பேர்வழினு என்னென்ன செய்வீங்கனு எனக்கா தெரியாது???...” என்று அன்றொருநாள் சேலை கட்ட உதவி பண்ணுறேன் பேர்வழினு அவன் பண்ண சில்மிஷங்கள் நியாபகம் வர பெண்ணவள் வதனம் செம்மையை கொள்வனவு செய்திருந்தது....
அதற்கு காரணமானவனோ தன் மாயப்புன்னகையில் தன்னவளை கவர முயல அவனது முயற்சியினை அறிந்த மனையாளோ அவனை முறைக்க முயன்று தோற்றாள்.
நேரமாவதை உணர்ந்து வினயோ
“சரி டைம் ஆச்சு... நானும் ரெடியாகனும்.. அதுனால இப்போ நீ தப்பிச்ச...இப்போ நீ பண்ண சேட்டைக்கு நைட்டுக்கு வந்து உனக்கு பனிஷ்மண்ட் தரேன்..” என்று கூறியவன் குரலோ சீரியசாக இருக்க கண்களோ கண்களை வாரியிறைத்தது.. வினயோ குளியலறைக்குள் புகுந்துகொள்ள அவனது துணைவியோ அவனது செய்கையை எண்ணி ரசித்தவாறே தயாராகினாள்.
தயாராகி முடித்தவள் வெளியே ஹாலில் காத்திருக்க வினயும் தயாராகி வந்தான்.
வெளியே வந்த வினயை பார்த்து ரேஷ்மி குழம்பிவிட்டாள். பட்டு வேட்டியில் படு அட்டகாசமாக இருந்தான் வினய். முழுக்கை சட்டையும் பட்டுவேட்டியுமாய் மணமகன் போல் வந்தவனை இமைக்கு மறந்து பார்ப்பதற்கு பதிலாக குழப்பத்துடன் பார்த்திருந்தாள் ரேஷ்மி...
அவளது பார்வையிலேயே அவளது மனவோட்டத்தை புரிந்து கொண்டவன் அவளை பார்த்து சிரிக்க அதில் கடுப்பானவள்
“எதுக்கு இந்த சிரிப்பு??? எதுக்கு இப்படி ஒரு கெட்டப்.. ஏதோ கல்யாண மாப்பிள்ளை மாதிரி ரெடியாகி வந்திருக்கீங்க.... இப்போ நாம எங்க தான் போறோம்???” என்ற ரேஷ்மி கேட்க
“எதுக்கு ஷிமி அவசரப்படுற?? நாம அந்த இடத்துக்கு போனதும் உனக்கே தெரிஞ்சிடும். கொஞ்ச நேரம் பொறுமை அவசியம் தேவி...” என்றுவிட்டு ப்ரிஜ்ஜில் இருந்த நெருக்கி தொடுக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூ மாலையை எடுத்தவன் அதனை ரேஷ்மியின் தலையில் வைத்துவிட்டான். அவனது செயலில் என்றும் போல் மனமுருகியவள் வினயை இருக்கியணைத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
“என்ன பேபி அடிப்பனு பார்த்தா கிஸ் குடுக்குற?? சரியில்லையே..”
“என் புருஷனுக்கு காதல் கிறுக்கு முத்தி போய்ருச்சு... அதனால் ஏதேதோ செய்றாரு...ஆனா என்னை சப்ரைஸ் பண்ண தான் இதெல்லாம் செய்றாருனு தெரியும்... அதான் இப்படி கிப்ட்...”
“பார்டா.. என் பொண்டாட்டி நல்லாவே தேறிட்டா...” என்று சிரிக்க அவன் மார்பில் முகம் புதைத்துகொண்டாள் ரேஷ்மி...
இருவரும் கிளம்பி நேரே வெங்கடாச்சலபதியை தரிசிக்க சென்றனர்.
வெகு நாட்களுக்கு பிறகு தம்பதிகளாக கோயிலுக்கு சென்றவர்கள் இறைவனை தரிசித்தனர். தங்களது இந்த நல்வாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறிய இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
ரேஷ்மியோ சற்று நேரம் இருந்துவிட்டு செல்லலாம் என்று கூற வினயோ வேறொரு இடத்திற்கு செல்லவேண்டியிருப்பதாக கூறி அவளை கிளப்பி சென்றான்.
காரில் செல்லும் வழி நெடுக ரேஷ்மி எங்கே செல்கிறோம் என்று வினவ வினயோ அவளது பேச்சை மாற்றுவதிலேயே குறியாய் இருந்தான்.
கடைசியில் கார் ஒரு பீச் ரிசாட்டின் முன் நின்றது...
ரேஷ்மி வினயை கேள்வியை நோக்க அவனோ காரிலிருந்து இறங்கி வந்து அவளை அழைத்துக்கொண்டு ரிசாட்டினுள் சென்றான்.
ரிசாட்டின் பின்புறம் அதாவது கடலுக்கு அண்மையான பகுதிக்கு அழைத்து சென்றான் வினய். அங்கு வந்த ரேஷ்மி அங்கு செய்யப்பட்டிருந்த அலங்காரத்தில் பிரம்மித்துவிட்டாள்.
அந்த பரந்த கடற்கரை மண்வெளியின் தொடக்கத்தில் வரவேற்புக்காக ஒரு ஆர்ச் அமைக்கப்பட்டிருந்தது..அது முழுதும் நெட் ரக துணியால் சுற்றப்பட்டு சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜா பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது... அங்கிருந்து ஒரு சிவப்பு நிற கார்பெட் தொடங்கி தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த குடியில் அமைப்பில் அமைக்கப்பட்டிருந்த மணமேடை வரை சென்றது...பாதைநெடுகிலும் ரோஜாப்பூ தூவப்பட்டு இருக்க இருமருங்கிலும் ரோஜாப்பூங்கொத்துக்கள் ஸ்டான்டின் உதவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது...
இவற்றை பார்த்து திகைத்த ரேஷ்மி நின்ற இடத்திலிருந்து நகராமல் இருக்க வினயே அவளை அந்த மணமேடைக்கு அழைத்து சென்றான்.
கைபிடித்து அழைத்து சென்றவன் நான்கு தூண்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முற்றும் முழுதாக ரோஜாப்பூக்களினாலும் வண்ண வண்ண ஒளி விளக்குதளாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த கூரையில்லாத குடில் போன்ற மணமேடையில் ரேஷ்மியை நிறுத்தினான். இதுவரை நேரம் வினயின் செயலின் காரணம் புரியாமல் இருந்தவள் வினய் எடுத்து வந்த அந்த மென்சிவப்பு ரோஜாப்பூ மாலைகளை கண்டவளுக்கு அவனது சப்ரைஸும் அதற்கான காரணமும் புரிந்தது....
என்றோ ஒரு நாள் தான் கூறியதை நினைவில் வைத்து அதை செயலில் செய்தவனை நினைத்தவளுக்கு காதல் பெருகியது... அந்த கணத்தில் காதலை முழுவதாய் உணர்ந்தாள் ரேஷ்மி....காமம் கடந்ததே காதல் என்று அனுபவத்தில் அறிந்து கொண்டாள் ரேஷ்மி... அவளுக்காக காத்திருந்து அவளுக்காக வாழும் ஒரு ஜீவன். எத்தனை துன்பம் வந்த போதிலும் அவளுக்காய் அதை தாங்கியவன்.... அவள் துன்பத்தை தன் துன்பமாய் எண்ணி கலங்கியவன். காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சிருஷ்டித்தவன்... அவளின் மனம் கவர்ந்த இறுதிநொடிவரை கவரப்போகும் அவளது கணாளன்......
காதலில் மூழ்கித்திழைத்தவளுக்கு நா எழவில்லை... ஆனால் அதற்கு மாறாக விழிகளோ மனதின் வார்த்தைகளை வெளியிட்டிருந்தது...அதை கண்டவனுக்கும் காதல் பெருக கையில் இருந்த ஒரு மாலையை அவளிடம் கொடுத்தவன் அவளை அணைத்து முன்னுச்சியில் முத்தமிட்டான். அவனது இதழொற்றல் அவனது காதல் மொழியை அவளுக்குணர்த்தியது...
ரேஷ்மியின் கழுத்தில் தான் வைத்திருந்த மாலையை அணிவித்தவன் அவள் தன் கையில் இருந்த மாலையை அணிவிப்பதற்கு ஏதுவாக தலைகுனிந்திருந்தான் வினய்.ரேஷ்மியோ வெட்கத்தோடு குனிந்த தலை நிமிராது வினயிற்கு மாலையிட்டாள். அவள் மாலை அணிவித்ததும் நிமிர்ந்தவன் அவள் புறம் தன் இடக்கையை நீட்ட அதில் தன் வலக்கையை இணைத்தவள் வெட்கம் தந்த வனப்பில் வினயை நிமிர்ந்து பார்க்கவில்லை... தலை குனிந்தபடி இருந்த ரேஷ்மியிடம்
“ஷிமி நீ விருப்பப்பட்ட படி நம்ம கல்யாணம் நடக்கப்போகுது... பஞ்சபூதங்களும் சாட்சியாக வைத்து உன்னை நான் என்னில் பாதியாக மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்போறேன். ஆனா சூரியனுக்கு பதிலாக நான் நிலவை சாட்சியாக்கியதுக்கு காரணம் எனக்கு சுட்டெரிக்கும் சூரியனை விட தானும் குளிர்ந்து காதலர்களின் செய்தி தூதுவனாக இருந்து அவர்களது பிரிவினை ஆற்றும் அந்த வெண்ணிலவு தான் நம்ம இந்த பந்தத்துக்கு முக்கியமான சாட்சியாக தோன்றியது... கடல் தரையின் மேல் கடல்காற்று மோத அந்த ஆகாசத்திற்கு அப்பால் நின்றிருக்கும் முக்கோடி முப்பத்து தேவர்கள் சாட்சியாக உன்னை என் சரிபாதியாக ஏற்றுக்கொள்கின்றேன்....” என்று கூறிவிட்டு தன் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த மோதிர பெட்டியை எடுத்தவன் ரேஷ்மியின் முன் முழந்தாளிட்டு நின்றான்.ரேஷ்மியோ அவனது செயலில் உள்ளம் குளிர்ந்து போனாள். அவளது உவகையின் வெளிப்பாடாக அவளது கண்களில் இருந்து நீர் வந்தது.. கண்களில் நீருடன் நடுங்கும் தன் கரத்தினை வினய் புறம் நீட்டினாள். அவளது கையை மென்மையாக பற்றியவன் அவளது புறக்கையில் இதழ் பதித்துவிட்டு அவன் வைத்திருந்து அந்த தங்க மோதிரத்தை ரேஷ்மியின் கையில் அணிவித்தான் வினய். அணிவித்ததும் எழுந்தவன் அவளது கையை மறுபடியும் பற்றிக்கொண்டு அவர்களுக்கு முன் எழுந்து நின்ற அக்கினி குண்டச்சுவாலையை மூன்றுமுறை வலம் வரத்தொடங்கினான்.
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் மாறி எந்நாளும் சூடேறவா
என் ஜென்மம் ஈடேறவா...
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் திம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா
உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மவுனத்தை குடி வைக்கவா
அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே...
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே...
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே...
அழகே... அழகே... வியக்கும் அழகே....
அழகே... அழகே... வியக்கும் அழகே....
பேக்கிங்கில் மும்முரமாக இருந்தனர் ரேஷ்மியும் வினயும். இன்னும் இரண்டு நாட்களில் இருவரும் யூ.எஸ் கிளம்புகின்றனர். வினயிற்கு அவனது பணியில் இரண்டு வருடங்கள் யூ.எஸ் இல் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைக்க அதை ரேஷ்மியின் உயர்கல்வியை தொடரும் சந்தர்ப்பமாக மாற்றியிருந்தான் வினய்.
அன்றொருநாள் ரேஷ்மியை வெளியே அழைத்து சென்றான் வினய். வழமைக்கு மாறாக அவளை சேலையில் வரச்சொன்னவன் அவளை அழகுபடுத்தல் பணியிலும் பங்கெடுத்திருந்தான்.
“வினய் எதுக்கு இப்படி பண்ணுறீங்க.... இந்த ராத்திரியில யாரு என்னை பார்க்க போறா??? அதுவும் சேலையில....” என்று சலித்தவளிடம்
“நான் இருக்கும் போது வேறு யாரும் உன்னை பார்த்திருவாங்களா??? பார்க்க தான் விட்டுருவேனா??” என்றவனை பார்த்து சிரித்தவள்
“இப்படி போனா யாரும் பார்க்க தான் செய்வாங்க...” என்று அவனை மேலும் கேலி பண்ண அவளது கண்ணில் மை வரைவதில் மும்முரமாக இருந்தவன் அந்த வேலையை முடித்துவிட்டு உதட்டு சாயத்தை கையில் எடுத்தான்.
“ லிப்ஸ்டிக் வேணாம் வினய்... நான் லிப் பாம் பூசுறேன்... என்னை க்ரூம் பண்ணுறதை விட்டுட்டு நீங்க கிளம்புற வழியை பாருங்க...” என்று கிளப்ப முயல அவனோ
“ஹேய் நான் இன்னும் என் வேலையை முடிக்கலை..” என்று நெருங்க
“யப்பா சாமி... இதுவரைக்கும் பண்ணதே போதும்... நீங்க போய் கிளம்புங்க... வெளியில யாராவது பார்த்தா அவ்வளவு தான்... நீங்க நடையை கட்டுங்க....”
“என் பொண்டாட்டிக்கு நான் செய்றேன்... யாரு என்ன சொல்லமுடியும்... சேலை கட்டிவிடுறேன்னு சொன்னேன்.... நீ தான் வேணாம்னு சொன்னேன். சரி மேக்கப்பாச்சு போட்டுவிடலாம்னு பார்த்தா அதுக்கும் விட மாட்டேன்குற....”
“ஆஹான்... நீங்க சேலை கட்டிவிடுறேன் பேர்வழினு என்னென்ன செய்வீங்கனு எனக்கா தெரியாது???...” என்று அன்றொருநாள் சேலை கட்ட உதவி பண்ணுறேன் பேர்வழினு அவன் பண்ண சில்மிஷங்கள் நியாபகம் வர பெண்ணவள் வதனம் செம்மையை கொள்வனவு செய்திருந்தது....
அதற்கு காரணமானவனோ தன் மாயப்புன்னகையில் தன்னவளை கவர முயல அவனது முயற்சியினை அறிந்த மனையாளோ அவனை முறைக்க முயன்று தோற்றாள்.
நேரமாவதை உணர்ந்து வினயோ
“சரி டைம் ஆச்சு... நானும் ரெடியாகனும்.. அதுனால இப்போ நீ தப்பிச்ச...இப்போ நீ பண்ண சேட்டைக்கு நைட்டுக்கு வந்து உனக்கு பனிஷ்மண்ட் தரேன்..” என்று கூறியவன் குரலோ சீரியசாக இருக்க கண்களோ கண்களை வாரியிறைத்தது.. வினயோ குளியலறைக்குள் புகுந்துகொள்ள அவனது துணைவியோ அவனது செய்கையை எண்ணி ரசித்தவாறே தயாராகினாள்.
தயாராகி முடித்தவள் வெளியே ஹாலில் காத்திருக்க வினயும் தயாராகி வந்தான்.
வெளியே வந்த வினயை பார்த்து ரேஷ்மி குழம்பிவிட்டாள். பட்டு வேட்டியில் படு அட்டகாசமாக இருந்தான் வினய். முழுக்கை சட்டையும் பட்டுவேட்டியுமாய் மணமகன் போல் வந்தவனை இமைக்கு மறந்து பார்ப்பதற்கு பதிலாக குழப்பத்துடன் பார்த்திருந்தாள் ரேஷ்மி...
அவளது பார்வையிலேயே அவளது மனவோட்டத்தை புரிந்து கொண்டவன் அவளை பார்த்து சிரிக்க அதில் கடுப்பானவள்
“எதுக்கு இந்த சிரிப்பு??? எதுக்கு இப்படி ஒரு கெட்டப்.. ஏதோ கல்யாண மாப்பிள்ளை மாதிரி ரெடியாகி வந்திருக்கீங்க.... இப்போ நாம எங்க தான் போறோம்???” என்ற ரேஷ்மி கேட்க
“எதுக்கு ஷிமி அவசரப்படுற?? நாம அந்த இடத்துக்கு போனதும் உனக்கே தெரிஞ்சிடும். கொஞ்ச நேரம் பொறுமை அவசியம் தேவி...” என்றுவிட்டு ப்ரிஜ்ஜில் இருந்த நெருக்கி தொடுக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூ மாலையை எடுத்தவன் அதனை ரேஷ்மியின் தலையில் வைத்துவிட்டான். அவனது செயலில் என்றும் போல் மனமுருகியவள் வினயை இருக்கியணைத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
“என்ன பேபி அடிப்பனு பார்த்தா கிஸ் குடுக்குற?? சரியில்லையே..”
“என் புருஷனுக்கு காதல் கிறுக்கு முத்தி போய்ருச்சு... அதனால் ஏதேதோ செய்றாரு...ஆனா என்னை சப்ரைஸ் பண்ண தான் இதெல்லாம் செய்றாருனு தெரியும்... அதான் இப்படி கிப்ட்...”
“பார்டா.. என் பொண்டாட்டி நல்லாவே தேறிட்டா...” என்று சிரிக்க அவன் மார்பில் முகம் புதைத்துகொண்டாள் ரேஷ்மி...
இருவரும் கிளம்பி நேரே வெங்கடாச்சலபதியை தரிசிக்க சென்றனர்.
வெகு நாட்களுக்கு பிறகு தம்பதிகளாக கோயிலுக்கு சென்றவர்கள் இறைவனை தரிசித்தனர். தங்களது இந்த நல்வாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறிய இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
ரேஷ்மியோ சற்று நேரம் இருந்துவிட்டு செல்லலாம் என்று கூற வினயோ வேறொரு இடத்திற்கு செல்லவேண்டியிருப்பதாக கூறி அவளை கிளப்பி சென்றான்.
காரில் செல்லும் வழி நெடுக ரேஷ்மி எங்கே செல்கிறோம் என்று வினவ வினயோ அவளது பேச்சை மாற்றுவதிலேயே குறியாய் இருந்தான்.
கடைசியில் கார் ஒரு பீச் ரிசாட்டின் முன் நின்றது...
ரேஷ்மி வினயை கேள்வியை நோக்க அவனோ காரிலிருந்து இறங்கி வந்து அவளை அழைத்துக்கொண்டு ரிசாட்டினுள் சென்றான்.
ரிசாட்டின் பின்புறம் அதாவது கடலுக்கு அண்மையான பகுதிக்கு அழைத்து சென்றான் வினய். அங்கு வந்த ரேஷ்மி அங்கு செய்யப்பட்டிருந்த அலங்காரத்தில் பிரம்மித்துவிட்டாள்.
அந்த பரந்த கடற்கரை மண்வெளியின் தொடக்கத்தில் வரவேற்புக்காக ஒரு ஆர்ச் அமைக்கப்பட்டிருந்தது..அது முழுதும் நெட் ரக துணியால் சுற்றப்பட்டு சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜா பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது... அங்கிருந்து ஒரு சிவப்பு நிற கார்பெட் தொடங்கி தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த குடியில் அமைப்பில் அமைக்கப்பட்டிருந்த மணமேடை வரை சென்றது...பாதைநெடுகிலும் ரோஜாப்பூ தூவப்பட்டு இருக்க இருமருங்கிலும் ரோஜாப்பூங்கொத்துக்கள் ஸ்டான்டின் உதவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது...
இவற்றை பார்த்து திகைத்த ரேஷ்மி நின்ற இடத்திலிருந்து நகராமல் இருக்க வினயே அவளை அந்த மணமேடைக்கு அழைத்து சென்றான்.
கைபிடித்து அழைத்து சென்றவன் நான்கு தூண்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முற்றும் முழுதாக ரோஜாப்பூக்களினாலும் வண்ண வண்ண ஒளி விளக்குதளாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த கூரையில்லாத குடில் போன்ற மணமேடையில் ரேஷ்மியை நிறுத்தினான். இதுவரை நேரம் வினயின் செயலின் காரணம் புரியாமல் இருந்தவள் வினய் எடுத்து வந்த அந்த மென்சிவப்பு ரோஜாப்பூ மாலைகளை கண்டவளுக்கு அவனது சப்ரைஸும் அதற்கான காரணமும் புரிந்தது....
என்றோ ஒரு நாள் தான் கூறியதை நினைவில் வைத்து அதை செயலில் செய்தவனை நினைத்தவளுக்கு காதல் பெருகியது... அந்த கணத்தில் காதலை முழுவதாய் உணர்ந்தாள் ரேஷ்மி....காமம் கடந்ததே காதல் என்று அனுபவத்தில் அறிந்து கொண்டாள் ரேஷ்மி... அவளுக்காக காத்திருந்து அவளுக்காக வாழும் ஒரு ஜீவன். எத்தனை துன்பம் வந்த போதிலும் அவளுக்காய் அதை தாங்கியவன்.... அவள் துன்பத்தை தன் துன்பமாய் எண்ணி கலங்கியவன். காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சிருஷ்டித்தவன்... அவளின் மனம் கவர்ந்த இறுதிநொடிவரை கவரப்போகும் அவளது கணாளன்......
காதலில் மூழ்கித்திழைத்தவளுக்கு நா எழவில்லை... ஆனால் அதற்கு மாறாக விழிகளோ மனதின் வார்த்தைகளை வெளியிட்டிருந்தது...அதை கண்டவனுக்கும் காதல் பெருக கையில் இருந்த ஒரு மாலையை அவளிடம் கொடுத்தவன் அவளை அணைத்து முன்னுச்சியில் முத்தமிட்டான். அவனது இதழொற்றல் அவனது காதல் மொழியை அவளுக்குணர்த்தியது...
ரேஷ்மியின் கழுத்தில் தான் வைத்திருந்த மாலையை அணிவித்தவன் அவள் தன் கையில் இருந்த மாலையை அணிவிப்பதற்கு ஏதுவாக தலைகுனிந்திருந்தான் வினய்.ரேஷ்மியோ வெட்கத்தோடு குனிந்த தலை நிமிராது வினயிற்கு மாலையிட்டாள். அவள் மாலை அணிவித்ததும் நிமிர்ந்தவன் அவள் புறம் தன் இடக்கையை நீட்ட அதில் தன் வலக்கையை இணைத்தவள் வெட்கம் தந்த வனப்பில் வினயை நிமிர்ந்து பார்க்கவில்லை... தலை குனிந்தபடி இருந்த ரேஷ்மியிடம்
“ஷிமி நீ விருப்பப்பட்ட படி நம்ம கல்யாணம் நடக்கப்போகுது... பஞ்சபூதங்களும் சாட்சியாக வைத்து உன்னை நான் என்னில் பாதியாக மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்போறேன். ஆனா சூரியனுக்கு பதிலாக நான் நிலவை சாட்சியாக்கியதுக்கு காரணம் எனக்கு சுட்டெரிக்கும் சூரியனை விட தானும் குளிர்ந்து காதலர்களின் செய்தி தூதுவனாக இருந்து அவர்களது பிரிவினை ஆற்றும் அந்த வெண்ணிலவு தான் நம்ம இந்த பந்தத்துக்கு முக்கியமான சாட்சியாக தோன்றியது... கடல் தரையின் மேல் கடல்காற்று மோத அந்த ஆகாசத்திற்கு அப்பால் நின்றிருக்கும் முக்கோடி முப்பத்து தேவர்கள் சாட்சியாக உன்னை என் சரிபாதியாக ஏற்றுக்கொள்கின்றேன்....” என்று கூறிவிட்டு தன் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த மோதிர பெட்டியை எடுத்தவன் ரேஷ்மியின் முன் முழந்தாளிட்டு நின்றான்.ரேஷ்மியோ அவனது செயலில் உள்ளம் குளிர்ந்து போனாள். அவளது உவகையின் வெளிப்பாடாக அவளது கண்களில் இருந்து நீர் வந்தது.. கண்களில் நீருடன் நடுங்கும் தன் கரத்தினை வினய் புறம் நீட்டினாள். அவளது கையை மென்மையாக பற்றியவன் அவளது புறக்கையில் இதழ் பதித்துவிட்டு அவன் வைத்திருந்து அந்த தங்க மோதிரத்தை ரேஷ்மியின் கையில் அணிவித்தான் வினய். அணிவித்ததும் எழுந்தவன் அவளது கையை மறுபடியும் பற்றிக்கொண்டு அவர்களுக்கு முன் எழுந்து நின்ற அக்கினி குண்டச்சுவாலையை மூன்றுமுறை வலம் வரத்தொடங்கினான்.
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் மாறி எந்நாளும் சூடேறவா
என் ஜென்மம் ஈடேறவா...
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் திம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா
உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மவுனத்தை குடி வைக்கவா
அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே...
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே...
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே...
அழகே... அழகே... வியக்கும் அழகே....
அழகே... அழகே... வியக்கும் அழகே....
Last edited: