உயிரே, என் உணர்வே!
என்னை மாற்ற பார்க்கிறாய்...
தனி உலகில் சிறகில்லாமல்
பறக்க செய்கிறாய்...
நிழலே, என் நிஜமே!
உன்னை விட்டு நீங்கினால்
என் நினைவுகள் முழுவதுமாய்
அழிந்தே போகுமடா...
உன் சொந்தம்
என் சுவாசம் அல்லவா?
உன் மூச்சில்
நான் வாழ்கிறேனடா!
நான் என்றால்
அதில் நீயும் அடக்கம் அல்லவா?
மண்ணில் அடங்கும் வரை
இந்நிலை மாறிடுமோ?
என் இதயத்தை திறந்த
சாவியும் நீ அல்லவா?
உன் இதயத்தை இன்று
பூட்டி சென்றால் நியாயமாகுமோ?
கொஞ்சம் பார்வை வீசிடு...
கொஞ்சம் மௌனம் கலைந்திடு...
கொஞ்சம் உண்மை பேசிடு...
என்னை சிரிக்க வைத்திடு...
ஆழ்கடல் காதலில்
ஆழம் சென்று பார்க்கலாம் வா...
ஆனந்த சிறையில்
ஆயுள் தண்டனையும் பெறலாம் வா...
நிரந்தரமென்று ஏதுமில்லை...
நிலைத்திருக்கும் வரை
காதல் செய்வோம்!
பிரிவின் துயர்
நம்மை அண்டாமலே...
காதலின் துணையோடு
வாழலாம் ஓர் நிழலாக...
காடு மலை தாண்டலாம்...
காலங்கள் ரணம் தரலாம்...
கைகள் கோர்த்து கொள்...
இணைந்து கொண்டு போராடலாம்!
என்னை மாற்ற பார்க்கிறாய்...
தனி உலகில் சிறகில்லாமல்
பறக்க செய்கிறாய்...
நிழலே, என் நிஜமே!
உன்னை விட்டு நீங்கினால்
என் நினைவுகள் முழுவதுமாய்
அழிந்தே போகுமடா...
உன் சொந்தம்
என் சுவாசம் அல்லவா?
உன் மூச்சில்
நான் வாழ்கிறேனடா!
நான் என்றால்
அதில் நீயும் அடக்கம் அல்லவா?
மண்ணில் அடங்கும் வரை
இந்நிலை மாறிடுமோ?
என் இதயத்தை திறந்த
சாவியும் நீ அல்லவா?
உன் இதயத்தை இன்று
பூட்டி சென்றால் நியாயமாகுமோ?
கொஞ்சம் பார்வை வீசிடு...
கொஞ்சம் மௌனம் கலைந்திடு...
கொஞ்சம் உண்மை பேசிடு...
என்னை சிரிக்க வைத்திடு...
ஆழ்கடல் காதலில்
ஆழம் சென்று பார்க்கலாம் வா...
ஆனந்த சிறையில்
ஆயுள் தண்டனையும் பெறலாம் வா...
நிரந்தரமென்று ஏதுமில்லை...
நிலைத்திருக்கும் வரை
காதல் செய்வோம்!
பிரிவின் துயர்
நம்மை அண்டாமலே...
காதலின் துணையோடு
வாழலாம் ஓர் நிழலாக...
காடு மலை தாண்டலாம்...
காலங்கள் ரணம் தரலாம்...
கைகள் கோர்த்து கொள்...
இணைந்து கொண்டு போராடலாம்!