• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நமக்கு நாமே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
அதே 5வரி போட்டிக்கு எழுதிய கதை?? சகோஸ்....

65fc40f9bd26fc2f0bb3288820509ceb23249dee.jpeg

"இல்லையே செல்விம்மா! குட்டிக்குக் கண்ணு அப்படியே அவங்க அம்மா மாதிரி முட்டை கண்ணு!" என்று தன் புகுந்த வீட்டின் பரம்பரை கண் குழந்தைக்கென்று பெருமை பட்ட மனைவியிடம் நக்கலடித்தான் குமரன்.

கேலி செய்த தன் கணவனை அர்சித்த படியே அழைத்துக்கொண்டு தங்கள் திருமண நாளை கொண்டாடும் விதமாகக் கோவிலில் அர்ச்சனை செய்தாள்.
அர்ச்சனை முடிந்த பின்னர் மீண்டும் சிறிது நேரம் பிரகாரத்தில் அமர்ந்து மகளைக் கொஞ்சிய தன் மனைவியை வீட்டை நோக்கி அழைத்துச் சென்றான்.

வீட்டை அடைந்ததும் செல்வியின் ‌‌கண்களில் ஏக்கம் கரையை உடைத்து கண்களில் நீர் சூழ்ந்ததென்றால் குமரனோ தனக்குள் பொங்கிய ஏக்கத்தை தனக்குள்ளேயே அடக்கி மனைவி உணராமல் மறைத்தான்.

தங்கள் பிள்ளை ஏக்கத்தைப் பெருமூச்சாய் வெளியேற்றி புன்னகையுடன் குழந்தைக்காய் காத்திருந்த தன் ஓரகத்தியிடம் அவள் பிள்ளையைக் கொடுத்துவிட்டு, தங்கள் வீட்டிற்குள் சென்றனர்.

தங்கள் இணையின் நிலையுணர்ந்து தேற்றும் பொருட்டு இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தேற்றி தங்கள் இணைக்கு தாங்களே தாயாகவும் தந்தையாகவும் மாறி ஆறுதல் அடைந்தனர்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top