Eswari kasirajan
முதலமைச்சர்
தேவையானவை:
கடலைமாவு- 5Cup
அரிசி மாவு -1Cup
வத்தல் பொடி-1table spoon
காயம்-1tea spoon
வேர்க்கடலை-3/4Cup
பொறிகடலை (பொட்டுக்கடலை)- 1/2Cup
முந்திரிபருப்பு(not necessary)-1/2cup
கறிவேப்பிலை- தேவைகேற்ப
உப்பு- தேவையான அளவு
வெண்ணெய்- சிறிதளவு
எண்ணெய்-கடலெண்ணெய் Or refined oil பொறிக்கத் தேவையான அளவு
செய்முறை:
கடலைமாவு அரிசி மாவு ஒன்றாகக் கலந்தப்பின் 1Cup (காராப்பூந்திச் செய்வதற்காக) மாவைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள மாவை வெண்ணெய் சேர்த்துத் தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து,
எண்ணெய் சூடானவுடன் இடியாப்ப உலக்கில் இட்டு சூடான எண்ணெயில் ஓமபொடியை பிளியவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துச் செய்யவும்.
தனியாக எடுத்த வைத்த 1Cup மாவை சிறிது வெண்ணெய் தண்ணீர்ச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தை விடச் சிறிது தண்ணியாகக் கரைத்து, ஈரமில்லாத ஒரு கண் கரண்டியை சூடான எண்ணெயின் மேல் சிறிது உயர்த்திப் பிடித்து, அதில் கரைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினால் காராப்பூந்தி ரெடி.
பின் வேர்க்கடலை, முந்திரிபருப்பு, கறிவேப்பிலை ஒவ்வன்றாக எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.
ஓமப்பொடி, காராப்பூந்தி, பொறித்த வேர்க்கடலை , முந்திரிபருப்பு, கறிவேப்பிலை, பொறிகடலை,உப்பு, வத்தல்ப்பொடி, மற்றும் காயம் எல்லாவற்றையும் ஒன்றாக விரவினால் சுவையான மிக்ச்சர் ரெடி.
குறிப்பு:
மாவுப்பிசையும் போது உப்புச்சேர்க்கக்கூடாது, அப்படிச் சேர்த்தால், உப்பாகிடும்.
இடியாப்ப உலக்கிற்குள் மாவை இடுவதற்க்கு முன், கையில் தண்ணீர்த் தொட்டப்பிறகு மாவை எடுத்தால் மாவுக் கையில் ஒட்டாமல் உலக்கிற்குள் இட முடியும், பின் கை & உளக்கின் வெளிப்புறம் ஈரமில்லாமல் துடைக்கவும்.
மிக்ச்சர் செய்தப்பிறகு இந்த எண்ணெயைத் திரும்பப் பயன்ப் படுத்த முடியாது, தேவைக்கேற்ப எண்ணெய் பயன்படுத்தவும்.
Last edited: