[வணக்கம் மக்காஸ்... நீண்ட நாள்கள் கழித்து உங்களையெல்லாம் மீண்டும் ஒரு பிரெஷ்ஷான சிசிகதையோடு இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன்... ‘இவ்ளோ நாள் எங்க போன’னு லீவ் லெட்டர்லாம் கேட்கக் கூடாது, சரியா? நான் எங்கயும் போல... இங்கனுக்குள்ளயேதான் சுத்திக்கிட்டு இருந்தேன்... ஹி ஹி... கொஞ்சம் வேலை பிசுபிசு... நீங்களே தொரத்தினாலும் நான் போகமாட்டேன்... கவல்க! கதையைப் படிச்சு உங்க வைரமான கருத்துகளைச் சொல்லுங்க... நன்றி!]
"என்ன சார்... ரொம்ப நாளாச்சு!"
என் கழுத்தைச் சுற்றித் துணியைப் போர்த்தியபடியே கேட்டார்.
"ஆமாண்ணா... வரவே முடியல வேல அதிகம்!"
நான் சொல்லும்போதே என் தலையை அவருக்கு வாகாய் அமைத்துக்கொண்டார்.
"முடி நெறய வளர்ந்துடுச்சு... சார்!"
அவரது குரலில் இலேசாய் ஒரு அங்கலாய்ப்பு?
"ம்ம்... ஆமா! எனக்குக் கொஞ்சம் முடி வேகமாத்தான் வளரும்!"
இருந்தாலும் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி எட்டிப்பார்த்தது.
இரண்டு முறை முடிவெட்டிக்கொள்ள வேண்டிய இடைவெளியில் ஒருமுறைதான் வெட்டிக்கொள்கிறேன் என்றால் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய வேலையையும் ஊதியத்தையும் மறுத்ததாகத்தானே பொருள்?
என் சிந்தனைத் தொடர் தொட்டுத் தொட்டு எங்கெங்கோ பயணித்தது...
"ஆச்சு சார்!" முடித்துணுக்குகள் சிதறாமல் துணியை அகற்றினார்.
"தாங்ஸ்ண்ணா..." என்றபடி இருநூறு ரூபாயை நீட்டினேன்.
வாங்கிக்கொண்டு மீதியாக நூறு ரூபாயை நீட்டினார்.
"இருக்கட்டும்ண்ணா... வெச்சுக்கோங்க!"
"அட... எதுக்கு சார்!"
மறுத்தார். நானும் மறுத்தேன்.
பத்து நிமிட "பேரத்"திற்குப் பிறகு நூற்றியைம்பதிற்கு இருவரும் ஒத்துக்கொண்டோம்!
©2019, Vijayanarasimhan.
"என்ன சார்... ரொம்ப நாளாச்சு!"
என் கழுத்தைச் சுற்றித் துணியைப் போர்த்தியபடியே கேட்டார்.
"ஆமாண்ணா... வரவே முடியல வேல அதிகம்!"
நான் சொல்லும்போதே என் தலையை அவருக்கு வாகாய் அமைத்துக்கொண்டார்.
"முடி நெறய வளர்ந்துடுச்சு... சார்!"
அவரது குரலில் இலேசாய் ஒரு அங்கலாய்ப்பு?
"ம்ம்... ஆமா! எனக்குக் கொஞ்சம் முடி வேகமாத்தான் வளரும்!"
இருந்தாலும் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி எட்டிப்பார்த்தது.
இரண்டு முறை முடிவெட்டிக்கொள்ள வேண்டிய இடைவெளியில் ஒருமுறைதான் வெட்டிக்கொள்கிறேன் என்றால் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய வேலையையும் ஊதியத்தையும் மறுத்ததாகத்தானே பொருள்?
என் சிந்தனைத் தொடர் தொட்டுத் தொட்டு எங்கெங்கோ பயணித்தது...
"ஆச்சு சார்!" முடித்துணுக்குகள் சிதறாமல் துணியை அகற்றினார்.
"தாங்ஸ்ண்ணா..." என்றபடி இருநூறு ரூபாயை நீட்டினேன்.
வாங்கிக்கொண்டு மீதியாக நூறு ரூபாயை நீட்டினார்.
"இருக்கட்டும்ண்ணா... வெச்சுக்கோங்க!"
"அட... எதுக்கு சார்!"
மறுத்தார். நானும் மறுத்தேன்.
பத்து நிமிட "பேரத்"திற்குப் பிறகு நூற்றியைம்பதிற்கு இருவரும் ஒத்துக்கொண்டோம்!
©2019, Vijayanarasimhan.