• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! 24 ( PRE - FINAL)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்...
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 24 ( PRE - FINAL ) எபி போடுறேன்..
படிச்சு கருத்தை சொல்லுங்க...
கெளதம் - மைத்ரேயி லவ் இன்னைக்கு எபியில்..
அதே போல் மைத்ரேயி அவனை அறிந்துக் கொள்வது..
பல யோசனைக்கு பின் இந்த எபி போடுறேன் தவறுகள் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்...
அடுத்த எபியில் கதை முடிந்து விடும்.. கோட்டை எண்ணம் கனவு எல்லாம் நிறைவேறும் எபி அடுத்த எபி.....

உயிர்– 24

அவன் சென்ற காட்சியை கண்ட மைத்ரேயிக்கு மனதில் “ டேய் கெளதம், உன்னை பின்னால் இருந்து பார்த்தால் என் கனவில் வரும் மாமா போல் இருக்க.. ஆனால் முன்னால் பார்த்தால் கௌசிக் மாமா பையன் மாதிரி இருக்க, கௌதமா உன்னையும் என் மனசு விரும்புது, அதே போல என் கனவில் வரும் அவனையும் மனசு விரும்புது, இதில் எந்த உருவம் நிஜம், இதில் எந்த உருவம் எனக்கு சொந்தமானது எதுவுமே எனக்கு புரியலை.. ஒரே குழப்பமா இருக்கு. ஆனால் இங்கு நீங்க பேசுனதை பார்த்தா கெளதம், கனவில் வரும் மாமா இருவரும் ஒருவர் போலவே தெரிகிறதே.. ஆஆ...” என்று தலையை பிடித்து அமர்ந்துவிட்டாள் மைத்ரேயி... அவளுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது..

அவள் இங்கு இருந்து யோசித்துக் கொண்டு இருக்க... பைக்கில் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு வந்த கெளதம்.. போன் வரவே புல்லட்டை கோவில்முன் நிறுத்தி விட்டு.போனை எடுத்து பேசிக் கொண்டே அந்த பூவரசம் மரத்தின் அருகில் வந்து நின்று ஒரு கையை பூவரசம் மரத்தின் மேலும், இன்னொரு கையில் போன் வைத்து பேசிக் கொண்டு இருந்தான்...

புல்லட் சத்தம் கேட்கவும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய மைத்ரேயிக்கு இதுவரை குழம்பிய குழப்பதுக்கு பதில் கிடைத்தது... மைத்ரேயி கண்டுக் கொண்டாள் அவளின் கனவும் மாமாவும்,கௌதமும் ஒன்று என்று.. அவளுக்கு சந்தேகமே இல்லை இது தான் அவளின் “ கெளதம் மாமா ” என்று. அவளின் குழப்பத்துக்கு எல்லாம் விடையாக அவளின் “ மாமா “இருக்கவும்... இங்கிருந்தே “ மாமா “ என்று அழைத்துக் கொண்டே அவனை நோக்கி ஓடினாள் மைத்ரேயி..

இவளின் மாமா என்ற குரலை கேட்ட வீட்டில் இருந்த எல்லாரும் ஓடி வந்தனர். வந்து கண்ட காட்சியில் அனைவர் மனமும் நிறைந்தது.. கோட்டைத்தாயின்மனதுமிக மிக சந்தோசம் அடைந்தது...
ஓடி வந்த வேகத்தில் “ மாமா “ என்று அவனை தாவி அணைத்துக் கொண்டாள் மைத்ரேயி.. கண்களில் வழிந்த நீர் அவன் சட்டையை நனைத்தது...

அவனின் சின்னுவின் கண்ணீர் அவனுக்கு வேதனை அளித்தது, அவளின் முகத்தை நிமிர்த்தி “ என்ன சின்னு, என்னாச்சும்மா எதுக்கு அழுற” என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டுக் கொண்டே கேட்டான் கெளதம். அவனுக்கு அவளின் மாமா என்ற அழைப்பு கேட்கவே இல்ல... அவளின் கண்ணீர் தான் முதலில் தெரிந்தது....
“ மாமா, நீ எதுக்கு மாமா என்கிட்டே உண்மையை சொல்லல.. நீ தான் என்கனவுல வந்த மாமா. ஆனா எனக்கு அது நீதான்னு தெரியவே இல்ல.. ஆனாலும் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுது மாமா, நீ தான் என் கனவுல வாரேன்னு தெரிஞ்சதும் எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா? ஆனா நீ என்கிட்டே ஏதுமே சொல்லல போ மாமா” என்று அவனின் நெஞ்சில் செல்லமாக குத்தினாள் மைத்ரேயி.. இல்லை அவனின் சின்னு..

அப்பொழுது தான் அவனுக்கு அவள் அழைத்த “ மாமா “ என்ற வார்த்தை அவன் காதில் தேனாக பாய்ந்தது.. “ ஏஏய் சின்னு இப்போ என்ன சொன்ன சொல்லு ” என்று அவள் அருகில் நெருங்கி நின்று கேட்டான் அவளின் மாமா.

அவன் அருகில் வரவும் படபடத்தை மனதை அடக்கி அவனை நோக்கி “ எ....என்ன! சொன்னேன் கெளதம்” என்று கவனமாக“மாமா” என்ற வார்த்தையை கூறாமல் தவிர்த்தாள் சின்னு...

“சின்னு நீ சொன்ன நான் ரொம்ப வருசமா கேட்ட ஆசைப்பட்ட அந்த வார்த்தையை நீ சொன்ன” என்று அவளிடம் கேட்டுக் கொண்டே அவளின் கையை பிடித்து சுழற்றி அப்படியே அந்த பூவரசம் மரத்தின் மேல் அவளை சாய்த்து வைத்து அவளின் மேல் சரியவும்... வாய் தானாக“ மாமா “ என்று உச்சரித்தது... “இந்த வார்த்தையை தான் கேட்டேன் சின்னு”என்றுக் கூறிக் கொண்டே அவளின் இருபக்கமும் கையை வைத்து அவளை அந்த மரத்தோடு சேர்த்துவைத்து அவளின் பக்கமாய் சாயும் நேரம் மைத்ரேயி கண்களில் நீர் வழிய திரும்பி அந்த மரத்தின் மீது கையை வைத்து, அவனை நோக்கி “ மாமா நான் இந்த மரத்தால் தான் இறந்துப் போனேனா” என்றுக் கேட்டாள் அவள்...

அந்த மரத்தின் அருகில் வந்து நிற்கவும் அவளுக்கு எல்லாம் நினைவு வந்து விட்டது என்பதை உணர்ந்த கெளதம் “ அவளை தன் பக்கமாய் இழுத்துக் கொண்டு அப்படியே அந்த மரத்தின் மீது சாய்த்து நின்று அவளை தன் நெஞ்சில் சாய்த்து அவளின் தலையில் தன் கன்னத்தை பதித்து அவளுக்கு “ஆம்” என்ற பதிலை தந்தான்... அவனுக்கும் வருத்தமே.. அந்த நேரம் கோட்டைத்தாய் மிக மிக வேதனையடைந்தள்..

இனி வரம் காலம் இந்த ஜோடிகளுக்கானது என்பதை உணர்ந்துக் கொண்ட கோட்டைத்தாய் அந்த மரத்துக்கு கட்டளை இட்டு, அவள் கூறியது போல் இப்பொழுது தான் அந்த மரத்தை ஏறெடுத்துப் பார்த்தாள்.. அந்த மரத்தை நோக்கி பார்த்து“ இவர்களை வாழ்த்து” என்றுக் கூறவும் தன் மரத்தில் உள்ள, இனி மேல் பூக்கின்ற அத்தனை பூக்களையும் தூவி அவர்களை வாழ்த்தி நிகழ் காலத்துக்கு கொண்டு வந்தது மரம்...

தங்கள் மேல் பூக்கள் விழுவதை கண்ட இருவரும் நிகழ்காலத்துக்கு திரும்பி அண்ணாந்துப் பார்த்து பூக்கள் விழும் அழகை கண்டு ரசித்தனர்.. கெளதம் அவனின் சின்னுவை அணுவணுவாக ரசித்தான்...

அவனின்கள்ள பார்வையை உணர்ந்த அவள்“ டேய் திருடா “ என்றுக் கூறி அவனை அடிக்க கை ஓங்கவும் அவளின் கைக்கு அகப்படாமல் அவளுக்கு ஓட்டம் காட்டி பிறகு அவளின் கைக்குள் சுகமாய் அடங்கி“ ஏய் என்னடி என்னையே அடிக்க கையோங்குற “ என்று கூறி அவனின் முதுகு பின் நின்றவளை தன் நோக்கி இழுத்து செல்லமாக மிரட்டிய கெளதம் அவளை தன் கைவளைவில் கொண்டு வந்து அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்... அவன் மனது என்றும் இல்லாமல் இன்று நிறைந்து இருந்தது.. அவனுக்கு, அவனின் சின்னு கிடைத்து விட்டாள்....

அவனின் நெடுநாளைய ஆசையை நிறைவேற்றும் படியாக அவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டான் கெளதம்.. அவனின் செயலில் அதிர்ந்த சின்னு “ மாமா என்ன இது எல்லாரும் பாக்குறாங்க பாரு “ என்று கூறி கூச்சத்துடன் சிணுங்கலாக கூறி அவன் நெஞ்சில் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டாள்.. அவள் செயலில் அவனின் காதல் மனது வெகுவாக தடுமாறியது...

அவன், அவளை தூக்கியதில் அவளின் குட்டி ஷர்ட் மேல் எழும்பி அவனுக்கு ஒரு நல்ல காரியம் செய்தது. அவளின் வெற்று இடுப்பில் கையை அழுந்த பிடித்துக் கொண்டான். அவன் செயலில் அவள் தான் பெரும் சிரமத்துக்கு உள்ளானாள்.. அதிலும் இவர்களை பார்த்த அந்த ஊர் ஜனங்கள் அவனிடம் வந்து “ சின்னைய்யா, சின்னம்மாவாவை இப்போவே இப்படி தூக்கிட்டு போறீங்க “ என்று கிண்டலாக கூறி செல்லவும்,

இவனும் அவர்களை பார்த்து “ ஆமா சின்னமாவுக்கு கால் வலிக்குதாம், அது தான் என் அழகு ராணியை கையில் ஏந்தி விட்டேன் “ என்று காதலுடன் அவளை பார்த்து கூறிக் கொண்டே அவனின் புல்லட் நோக்கி சென்றான்.. அவளைதன் புல்லட்டில் அமரவைத்து அவனின் தோட்டத்தை சுற்றிக் காட்டினான்.. அவனின் முதுகின் பின் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு அவனின் வயிற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு ரசித்தாள்.. தோட்டத்தின் உள்ளே ஒரு சொர்க்கமே இருந்தது என்று தான் மைத்ரேயி எண்ணினாள். எங்கும் பசுமை....! பசுமை....! மட்டுமே..

அவளை, அவனுக்கு பிடித்த மாமரத்தின் அருகில் அழைத்து சென்றான் கெளதம்.. அங்கு சென்று மேல் தொங்கிக் கொண்டு கிடந்த ஒரு பழத்தை எட்டி பறித்து அதை துடைத்து அவளிடம் கொடுத்தான்... ஆசையாக அவனிடம் வாங்கி சுவைத்து சாப்பிட்டாள் மைத்ரேயி.. அவள்சாப்பிடுவதையே ரசனையாக பார்த்துக் கொண்டு இருந்தான் கெளதம்..

அவள் முழு பழத்தையும் சாப்பிட்டு முடிக்கும் தருணம், அவள் மாம்பழத்தை கடிக்கும் பொழுதே ஒரே நொடியில் அவள் அருகில் சென்று அவள் சுதாரிக்கும் முன்னே அவள் கன்னம் தாங்கி, மாம்பழத்தோடு... அவள் இதழையும் சிறைசெய்தான் அந்த கள்வன்...

ஒரு நொடியில் விலகிவிடுவான் என அவள் எதிர் பார்த்திருக்க... இன்னும் அழுத்தியவன்... அந்த மாம்பழத்தோடு, அவள் இதழ்களையும் மென்மையாக உள்வாங்கிக் கொண்டான்... ஒருமாதிரி கதகதப்பாய்... அடிநாக்கில் தித்திப்பாய்... உடல் முழுவதும் சிலிர்ப்பாய்.. அவன் இதழ் முத்தத்தில் மூழ்கிப் போனாள்....கையில் இருந்த மாம்பழம் நழுவி கீழே விழுந்தது....

அவன் வலக்கரம் அவள் காதுமடலை வருட, இடக்கரமோ... விரிந்திருந்தஅவள் கூந்தலுக்குள் நுழைந்து.... அழுத்தமாக வருடியது, பிரிய மனமின்றி... அவள் இதழ்களுக்குள் இன்னும் தன் தேடலை அதிகரிக்க, தன் கரத்தால்... அவன்கழுத்தை கட்டிக் கொண்டாள்....

அந்த மாம்பழத்தின் சுவையோடும், அவளின் இதழையும் சேர்த்து சுவைத்தான் அந்த காதல் திருடன்... நீண்ட முத்தம்... போதும் என்ற மனமில்லாமல் வேண்டும் வேண்டும் என்றே இருவருக்கும் கேட்டது.. பத்து நிமிட அந்த முத்தத்தில் மாம்பழம் கரைந்து காணாமல் போனது, அதன் சுவையோடு,முத்த மாயமும்,பல மாயாஜாலம் செய்து அவர்களை மீண்டும் மீண்டும் கட்டிப் போட்டது...

சுற்றுப்புறம் உறைந்துப் போக.... தேகம் மொத்தமும் நெகிழ.. உருகிகரைந்தாள்... மென்மையாக இருந்த அவன் இதழ் தீண்டல்.... அவள் உயிர்வரை தீண்டும் வகையில்முற்றுகையாக மாற, இதழ் தீண்டல்இப்படி தான் இருக்குமா? உயிர்வரை தீண்டுமா?

விலகவே வேண்டாம் என வதைக்குமா? விலகிட கெஞ்சுமா? ஒரு முத்தத்தில் அவளை துவள செய்தான்அந்த கள்வன்... மூச்சுக்காகதவிக்கவும் தான் அவளை விட்டான் அந்த மாயாஜலகாரன்... தேகம் நடுங்க அவனின் இதயத்தில் தஞ்சமடைந்தாள்..

நெஞ்சில் சாய்ந்தவளை வலுகட்டாயமாக அவனிடம் இருந்து பிரித்தெடுத்து, அவளை அணைத்துக் கொண்டே அருகில் இருந்த நீர் நிறைந்த தொட்டியில் குதித்தான் அந்த காதல் கள்வன்... அவளை சரியாக்கும் பொருட்டு....
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அவன் முத்தத்தில் சிலிர்திருந்த தேகம் குளிர் நீரில் அடங்கியது.. கௌதமும் தன்னை ஒருவாறு சமாளித்து அவன் மெதுவாக மேல் ஏறி அவளுக்கும் கை கொடுத்து அவளை மேலே தூக்கிவிட்டான்...

தொட்டி தண்ணீரில் மூழ்கியதில் அவளின் உடை நனைந்து உடலுடன் ஓட்டியதில் கூச்சத்துடன் உடையை இழுத்துவிட்ட அவளை கண்ட அவனில் பல பல கற்பனைகள் வளர... குளிரில் அவளின் உடல் நடுக்கத்தை கண்ட அவன்...அவனின் ஷர்ட்டை கழட்டி அதை பிழிந்து உதறி அவள் கையில் கொடுத்து “போட்டுக்க ”என்று கூறி அவளை அணைத்துக் கொண்டே கோட்டை நோக்கி சென்றான்...

இவர்களின் வரவை உணர்ந்த வீட்டில் உள்ளவர்கள், அவர்கள் வரும் நிலையையும், சோர்வையும் மீறி.. கௌதமை காணும் மைத்ரேயி கண்ணில் தெரிந்த காதலையும், அவனுக்கு அவள் மேல் உள்ள காதலையும் கண்டு அனைவர்க்கும்சந்தோசம். ஆனால் வர்ஷிக் மனம் மட்டும் மிகுந்த வருத்தமாய்... கூடவே கோட்டைத்தாய் மனதின் ஓரத்தில் சிறு கவலையாய்...

பாசமாய், நேசமாய் வளர்த்த மகள், “ அவளின் வாழ்க்கை துணையை தேர்தெடுத்ததை தன்னிடம் மறைத்து விட்டாளே ” என்று... எப்படி இருந்தாலும் இவளை அவன் கெளதம்க்கு தான் திருமணம் செய்து கொடுப்பான்.. ஆனாலும் அவளுக்கு இவன் மேல் இருக்கும் ஆசையை முதலில் தன்னிடம் கூற வில்லையே என்ற ஒரு சிறு வருத்தமே... அந்த வருத்தம் வர்ஷிக் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.. அதேவருத்தத்தை கண்களில் தேக்கி அவன் செல்ல மகளை பார்த்தான் வர்ஷிக்...

எல்லாரும் சந்தோசத்துடன் அவரவர் அறைக்கு செல்லவும், மைத்ரேயி தயக்கத்துடன் கௌதமை பார்த்தாள்.. கண்களை மூடி, திறந்து “ போ அப்பாகிட்ட “ என்று அவளுக்கு கண்களால் செய்கை செய்து அவளை போக கூறினான்...

வர்ஷிக் அருகில் வந்த அவள் தவறு செய்த குழந்தையாய் தலையை குனிந்து நிற்கும் நிலை காண முடியாத வர்ஷிக் தாவி அவளை அணைத்துக் கொண்டான்... மகள் நிலை தெரிந்த தந்தையாய்....

அப்பொழுது தான் கௌதம்க்கு, கோட்டையின் கவலையை உணர்த்தினாள் அவள்... ஆனால் அவளுக்கு என்ன கவலை என்று அவனுக்கு தெரியவில்லை.. இதே யோசனையோடு அவன் அறைக்கு சென்றான் கெளதம்...

குளிரில் நடுங்கிய மைத்ரேயியை கண்டவர்ஷிக்“ போம்மா போய் தலையை துவட்டு, எப்படி தண்ணி கொட்டுதுன்னு பாரு “ என்று கூறி அவளை அறைக்கு அனுப்பிவிட்டு, தன் அறை நோக்கி சென்றான் வர்ஷிக்...

தன் அறைக்கு சென்ற வர்ஷிக்கு பெரும் யோசனை “ ஒரு வேளை தன் மகள் மனதில் அவன் இருந்திருப்பானோ? நான் தான் அவளை அறியவில்லையா என்று எண்ணும் அதே நேரம் கௌசிக் கூறியதும், கோட்டை செயலும் நினைவு வந்து அவனின் வருத்தம் எல்லாம் மாயமாக மறைந்தது....

அதே நேரம் அவன் அறைக்கு வந்த கெளதம் “ மாமா நீங்க சின்னு வை தப்பா நினைக்காதிங்க? அன்னைக்கு சொன்னது தான் இப்போவும் சொல்லுறேன், சின்னுவுக்கு எல்லாம் கோட்டை உணர்த்திவிட்டாள்... அவளுக்குஇப்போ தான் எல்லாம் தெரியும், அதனால் தான் உங்க கிட்ட சொல்லலை, இதை நினைத்து வருந்ததீங்க “ என்று நடந்ததை எடுத்துக் கூறி கோட்டை கவலை என்ன என்று எண்ணிக் கொண்டே கிளம்பினான் கெளதம்...

அறைக்கு சென்ற மைத்ரேயிக்கு ஒரே பீலிங் ஆப் தி மைண்ட் தான்.. அவள் அப்பா முகத்தில் கவலையை பார்த்ததினால் வந்த பீலிங் அது...

அப்பொழுது கதவை தட்டி அவள் ரூம் வந்தனர் அவளின் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா, அத்தைகூடவே அவளின் மாமா.. அவளின் முடிவை அறிய... அவர்கள் அறைக்குள் நுழையவும் மைத்ரேயி பார்த்தது அவளின் அப்பா முகத்தை தான்... எல்லாரும் வந்திருகிறார்கள் என்றால் ஏதோ முடிவெடுத்து விட்டனர் என்று அறிந்துக் கொண்டாள்... அந்த முடிவு அப்பாவுக்கு பிடிகிறதா என்று அறியவே அவர் முகம் பார்த்தாள்.. அவர் முகத்தில் உண்மையான சந்தோசத்தை பார்க்கவும் தான் அவளுக்கு சந்தோசமாக இருந்தது...

அவர் அருகில் வந்து அவரை அணைத்துக் கொண்டாள்... அதை கெளதம் சிறு பொறாமையாக பார்த்துக் கொண்டு இருந்தான், கூடவே சிறு பயமாய்... அவனின் பார்வையை கண்ட அனைவருக்கும் சந்தோசமே. அவனின் காதலை அறிந்தவர்கள் அவர்கள்... அதிக காதலில் தான் இந்த பொறாமை இருக்கும்..

அவளிடம் வர்ஷிக் “ அம்மு உனக்கும் கௌதம்க்கும் கல்யாணம் பண்ண வீட்டுல நினைத்திருக்கிறோம்.. உனக்கு உன் மாமனை பிடிக்கும் தானே ” என்று சிறு கேலியாக கேட்டான் வர்ஷிக்..

அவனின் கேலியை உணர்ந்த அவள் “ போங்கப்பா ” என்று கூறி செல்லமாக அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்... அவளின் சம்மதத்தை தெரிந்துக் கொண்ட சியோரா எழுந்து வந்துகாலண்டர் எடுத்து பார்த்து,வரும் முகூர்தத்தில் திருமணத்தை நடத்த வீட்டில் உள்ளவர்களால் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது....

அவர்கள் எல்லாரும் வெளியில் செல்லவும், கதவை அடைத்த கெளதம் அவளை தலை முதல் கால் வரை ரசனையாக அளந்தான்... பின் மெதுவாக அவன் பார்வை அவள் இதழில் நிலைத்தது... ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவள் முன் வந்து நின்றான் அவன்.. மீண்டும் அவள் இதழை தீண்ட தன் இதழை நாவால் ஈரம் செய்துக் கொண்டான் அந்த திருடன்....

அவன் செயலில் அவள் தான் அதிர்ந்தாள். அந்த முத்த தித்திப்பே இன்னும் அவள் நெஞ்சை விட்டு அகலாமல் இருக்கையில் இப்போ அவன் பார்வையேசரி இல்லையே.... என்று அவன் கண்களை பார்க்கவும் அவளுக்குண்டான அத்தனை காதலையும்கண்களில் தேக்கி அவளை பார்த்தான்.. இவள் என்னவள் என்ற உரிமையையும் கண்களில் காட்டினான் அந்த காதலன்....
அவள் அருகில், மிக மிக அருகில், அவனின் மூச்சு காற்று அவள் மேல் சூடாக படவும்.. மூச்சை ஆழ்ந்து இழுத்து விடவும் அவள் முகத்தை பற்றிக் கொண்டான்... அவளின் படப்படத்த கண்ணையும், நடுங்கும் சிவந்த இதழையும் பார்த்த கெளதம் “ தன்னால் பார்க்க மட்டும் முடியாது “ என்று எண்ணி அவளின் கண்களில் இதழை பதித்து விலகி, நடுங்கும் அவளின் இதழை வன்மையாக சிறைசெய்தான்...

அவனின் இந்த வன்மையை எதிர் பார்க்காத அவள் தடுமாறி அந்த பஞ்சு மெத்தையில் விழவும் பேலன்ஸ் இல்லாத அவனும் அவள் மேலையே விழுந்தான்...

அவன் பாரம் முழுவதும் இப்பொழுது அவள் மேல் இருக்க...மூச்சு முட்ட முட்ட, அவன் இதழ்களில் மூழ்கிப் போனாள்... அவள் முதுகில் கை கோர்த்து, தன்னோடு இறுக்கி, அவளின் இதழை வன்மையாக மென்று தின்ன முயன்றான்... இதழ் வலித்தாலும் ஒரு நிமிடம் கூட அவனை விலக்கவில்லை.. “ எடுத்துக்கொள் ” என்பது போல் மூச்சடக்கி காத்திருந்தாள்.. அவளுக்கு தான் அவனின் காதல் தெரியுமே? அவனின் மறுஜென்ம காத்திருப்பும் தெரியுமே...?
அவன் கைகள் ரெண்டும் அவள் இடை வளைவை அளக்க.. அவன் முதுகில் கைகளால் அழுத்தியவள்.. அவன்மூச்சுக் காற்றில்சுவாசிக்கதுவங்கிய பொழுதும்.., அவன் அவளை விட்டு விலகவில்லை...

எங்கே அவளை விட்டு பிரிந்தால், எழுந்து சென்றுவிடுவாளோ.. என்றுபயந்தவன் போல் அவளைதன்னோடுமேலும் நெருக்கினான்.. கோட்டைத்தாயின் கவலையை உணர்ந்த நேரத்தில் இருந்து அவனுக்கு இந்த பயம்...

எலும்புகள் அனைத்தும், நொறுங்கிப் போகும் படியான, அணைப்பில், அவள் தான் திணறிப் போனாள், எதிர்புகளற்ற செய்கையில், அவன் கைகளுக்குள் ஒடுங்கிக் கொண்டாள்... அவளுக்குமே அவனின் இந்த செயல் சிறு அதிர்ச்சியை தந்தது.. அவனின் செய்கையில் அவனின் பயத்தை அறிந்தாள், ஆனால் எதனால் அந்த பயம் என்று அறியாமல் அவன் கைகளுக்குள் சிறைப்பட்டாள்...

மைத்ரேயிக்கு இதழ்கள் இரண்டும் மரத்துப் போன உணர்வு.., அவனைவிலக்க நினைத்தாலும் அவனை ஒரு அணுவும் நகர்த்தமுடியவில்லை... அவன் இதழ்கள் மட்டுமே முற்றுகையிட, இடையைவளைத்தஅவன் கரங்கள் அங்கே இருந்து அகலவில்லை, அவன் முழுதாக அவளை உணர முயன்றிருந்தால்.. என்ன செய்திருப்பாளோ? ஆனால் அவன் பயத்திலும், தடுமாறமாட்டான் என்ற நம்பிக்கை, அவன் காதல் கொடுத்த தைரியம்.. அவன் பாரம் சுகமாய் தாங்கினாள்...

ஒரு கட்டத்தில் அவனே அவளை விட்டு விலக, அவன் பார்வை அவள் மேனியில் சற்று தடுமாறி மீள தன் ஷர்ட்டை மேல் நோக்கி இழுத்து விட்டுக் கொண்டாள்... மெதுவாக தன் இதழை வருடிக் கொண்டாள்.. அதை பார்த்த அவன், அவள் கன்னம் தாங்கி தடித்திருந்த அவள் இதழை பெருவிரலால் வருட, அவன் கையை அப்படியே பிடித்துக் கொண்டு “ மாமா உனக்கு என்ன பயம்” என்று அவனின் தவிப்பான கண்களை பார்த்து கேட்டாள் அவனின் சின்னு.. அவனின் உணர்வுகளை அறிந்த சின்னு...

ஒன்றாய் இணைவோம்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top