Chitrasaraswathi
முதலமைச்சர்
அழகியின் உயிரைக் கேட்காத ஓவியமே. டாக்டர் செழியனின் மனம் கவர்ந்த ஓவியமாக மாதவி அன்பான, மென்மையான பெண். செவிலியராக பணிபுரியும் மாதவியை விரும்பும் டாக்டர் செழியன், மாதவியை மணம் புரிய பல தடைகள். மாதவியின் குடும்பத்தினால் ஏற்படும் அந்தஸ்து தடை, தம்பியினால் ஏற்படும் பலதடைகளை அதிரடி திரைப்படம் போல காதல் செய்யும் பெண்ணை கடத்தல் எல்லாம் செய்து மன்னிப்பும் கேட்கிறார் டாக்டர் செழியன். நடுத்தர வர்க்க மாதவியின் பெற்றோர் மகனின் எதிர்ப்பை மீறி மணம் செய்ய ஒப்புக் கொள்கிறார்கள். செழியனின் காதல் மனம் எல்லா பெண்களுக்கும் மிகவும் பிடிக்கும். அருண், அர்ச்சனாவின் இளவயது துடிப்பான காதல் . முதிர்ச்சியடைந்த செழியனின் காதல் , காதல்களால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் நிறைவான இனிய நிறைவுடன் கதையை கொண்டு செல்லும் அழகியின் அழகான எழுத்து நடையை ரசித்து படிக்கலாம்.