சிற்பியின் கனவுகள் எனது பார்வையில் ???
பூர்வ ஜென்ம காதல் மறுபிறவியில் கைசேருவது பற்றிய கதைக்களம்...
தாய், தந்தையை இழந்த பிறகு சித்தார்த், திவ்யா பாசமிகு அண்ணன், தங்கையாக தங்கள் துணையுடன் தமிழகம் விட்டு இலங்கையில் குடியேறுகின்றனர்.
தங்களின் குழந்தைகளுக்கு தங்கள் தாய் தந்தையின் பெயரான கார்முகிலன் மேகவர்ஷினி என்று பெயரிட்டு மகிழ்கின்றனர்.
எப்போதும் சண்டையிட்டு கொள்ளும் முகில் மேகா அழகு அரட்டை... அவர்களுடன் கல்லூரி படிக்கும் எழிலும் நிலாவும் தோற்றத்தில் இறந்து போன கார்முகிலன் மேகவர்ஷினியின் தோற்றத்தை ஒத்திருக்கின்றனர்.
அவர்களை பார்த்த பெரியவர்கள் அனைவரும் அவர்களை கார்முகிலன் மேகவர்ஷினி மறுஜென்மம் என்று எண்ணி கொள்ள, எழில், நிலா இருவரின் சந்திப்பு, முன்ஜென்ம தொடர் கனவுகள், சண்டை, கோபம், பரிவு, காதல், கலவரம், கல்யாணம் என பயணிக்கிறது கதை... நிறைவான முடிவை நோக்கி...
முதல் அத்தியாயத்தில் எடுத்தவுடனே மேகவர்ஷினி விபத்தில் இறந்து விட, அவளின் இழப்பை எண்ணி சில மாதங்களில் கார்முகிலனும் இறந்து போகும் இடங்கள் எல்லாம் அன்பின் கனம்... உயிர் காதலின் கண்ணீர் பதிவுகள் அவை...
அடுத்தடுத்த அத்தியாயங்களின் கதையின் போக்கை தீர்மானிக்க முடியாமல் திண்டாட விட்டு இலங்கை தமிழில் சுவையாக கதைக்களத்தை நகர்த்துகிறார் ஆசிரியர்...
மேகா- முகில், எழில்-நிலா காதல் ஜோடிகள் நெஞ்சை அள்ளுகின்றனர்...
கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை கார்முகிலன், மேகவர்ஷினியின் காதலின் ஆழத்தையும் பிரிவின் வெறுமையையும் ஓயாமல் ஒவ்வொரு பதிவிலும் அலசியபடி அவர்களை உயிரோட்டமான கதாபாத்திரத்திரங்களாய் உலவச் செய்கிறது...
அழுத்தமான காதல் கதையை நேசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமான விருந்து 'சிற்பியின் கனவுகள்'
வாழ்த்துக்கள் சந்தியா ஸ்ரீ
பூர்வ ஜென்ம காதல் மறுபிறவியில் கைசேருவது பற்றிய கதைக்களம்...
தாய், தந்தையை இழந்த பிறகு சித்தார்த், திவ்யா பாசமிகு அண்ணன், தங்கையாக தங்கள் துணையுடன் தமிழகம் விட்டு இலங்கையில் குடியேறுகின்றனர்.
தங்களின் குழந்தைகளுக்கு தங்கள் தாய் தந்தையின் பெயரான கார்முகிலன் மேகவர்ஷினி என்று பெயரிட்டு மகிழ்கின்றனர்.
எப்போதும் சண்டையிட்டு கொள்ளும் முகில் மேகா அழகு அரட்டை... அவர்களுடன் கல்லூரி படிக்கும் எழிலும் நிலாவும் தோற்றத்தில் இறந்து போன கார்முகிலன் மேகவர்ஷினியின் தோற்றத்தை ஒத்திருக்கின்றனர்.
அவர்களை பார்த்த பெரியவர்கள் அனைவரும் அவர்களை கார்முகிலன் மேகவர்ஷினி மறுஜென்மம் என்று எண்ணி கொள்ள, எழில், நிலா இருவரின் சந்திப்பு, முன்ஜென்ம தொடர் கனவுகள், சண்டை, கோபம், பரிவு, காதல், கலவரம், கல்யாணம் என பயணிக்கிறது கதை... நிறைவான முடிவை நோக்கி...
முதல் அத்தியாயத்தில் எடுத்தவுடனே மேகவர்ஷினி விபத்தில் இறந்து விட, அவளின் இழப்பை எண்ணி சில மாதங்களில் கார்முகிலனும் இறந்து போகும் இடங்கள் எல்லாம் அன்பின் கனம்... உயிர் காதலின் கண்ணீர் பதிவுகள் அவை...
அடுத்தடுத்த அத்தியாயங்களின் கதையின் போக்கை தீர்மானிக்க முடியாமல் திண்டாட விட்டு இலங்கை தமிழில் சுவையாக கதைக்களத்தை நகர்த்துகிறார் ஆசிரியர்...
மேகா- முகில், எழில்-நிலா காதல் ஜோடிகள் நெஞ்சை அள்ளுகின்றனர்...
கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை கார்முகிலன், மேகவர்ஷினியின் காதலின் ஆழத்தையும் பிரிவின் வெறுமையையும் ஓயாமல் ஒவ்வொரு பதிவிலும் அலசியபடி அவர்களை உயிரோட்டமான கதாபாத்திரத்திரங்களாய் உலவச் செய்கிறது...
அழுத்தமான காதல் கதையை நேசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமான விருந்து 'சிற்பியின் கனவுகள்'
வாழ்த்துக்கள் சந்தியா ஸ்ரீ