தேவையான பொருட்கள்:
பூரிக்கு:
மைதா - 1 கப்
ரவை - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு
பானி தயாரிப்பதற்கு :
புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி தழை - 1/2 கட்டு பச்சை மிளகாய் - 4
வெல்லம்- 50 கிராம்
புளி - 50 கிராம்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு
பூரிக்குள் வைப்பதற்கு:
உருளைக்கிழங்கு - 2 அல்லது 3
பெரிய வெங்காயம் - 1 அல்லது 2
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உருளைக் கிழங்கை வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, மசாலா செய்து வைக்கவும்.
அடுத்து பூரி செய்வதற்கு மைதா, ரவை, தண்ணீர், உப்பு போன்றவற்றைப் போட்டு மாவை பிசைந்து கொண்டு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், அதற்குள் அந்த உருண்டைகளை தேய்த்து எண்ணெய் காய்ந்ததும் தேய்த்த உருண்டைகளை பூரிகளாக பொரிச்சு எடுத்துக்கோங்க. பூரி குட்டியா தான் இருக்கனும்.
புளியை தண்ணில ஊற வைத்து, நன்கு கரைத்து நீரை வடிகட்டி எடுத்துக் வச்சுக்கோங்க. வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக்கோங்க.
அடுத்து புதினா, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை கழுவி அதை மிக்ஸியில் போட்டு, அதனுடன் பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு போட்டு அரைச்சுக்கோங்க.
ஒரு பாத்திரத்தில அரைச்சு வச்ச கலவை ஊத்திட்டு அதுகூடவே புளி தண்ணி, வெல்ல தண்ணி விட்டு கலந்துக்கோங்க..
இப்போது பூரியின் நடுவில் ஒரு ஓட்டை போட்டு, அதில நாம தயார் பண்ணி வச்சிருக்கிற மசாலாவை வைத்து, அதனுடன் அந்த பானி கலவையையும் உள்ளே ஊற்றி சாப்பிட வேண்டியது தான். கூடவே வெங்காயத்தை சிறிது சிறிதாக கட் பண்ணி வச்சு இது கூட வச்சு சாப்பிடலாம், அல்லது பானி ஊற்றிய பிறகு அதனுள்ளேயே வெங்காயம் போடலாம் (விருப்பமுள்ளவர்கள் கார பூந்தி சேர்த்துக் கொள்ளலாம்)
சுவையான பானி பூரி ரெடி
பூரிக்கு:
மைதா - 1 கப்
ரவை - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு
பானி தயாரிப்பதற்கு :
புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி தழை - 1/2 கட்டு பச்சை மிளகாய் - 4
வெல்லம்- 50 கிராம்
புளி - 50 கிராம்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு
பூரிக்குள் வைப்பதற்கு:
உருளைக்கிழங்கு - 2 அல்லது 3
பெரிய வெங்காயம் - 1 அல்லது 2
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உருளைக் கிழங்கை வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, மசாலா செய்து வைக்கவும்.
அடுத்து பூரி செய்வதற்கு மைதா, ரவை, தண்ணீர், உப்பு போன்றவற்றைப் போட்டு மாவை பிசைந்து கொண்டு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், அதற்குள் அந்த உருண்டைகளை தேய்த்து எண்ணெய் காய்ந்ததும் தேய்த்த உருண்டைகளை பூரிகளாக பொரிச்சு எடுத்துக்கோங்க. பூரி குட்டியா தான் இருக்கனும்.
புளியை தண்ணில ஊற வைத்து, நன்கு கரைத்து நீரை வடிகட்டி எடுத்துக் வச்சுக்கோங்க. வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக்கோங்க.
அடுத்து புதினா, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை கழுவி அதை மிக்ஸியில் போட்டு, அதனுடன் பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு போட்டு அரைச்சுக்கோங்க.
ஒரு பாத்திரத்தில அரைச்சு வச்ச கலவை ஊத்திட்டு அதுகூடவே புளி தண்ணி, வெல்ல தண்ணி விட்டு கலந்துக்கோங்க..
இப்போது பூரியின் நடுவில் ஒரு ஓட்டை போட்டு, அதில நாம தயார் பண்ணி வச்சிருக்கிற மசாலாவை வைத்து, அதனுடன் அந்த பானி கலவையையும் உள்ளே ஊற்றி சாப்பிட வேண்டியது தான். கூடவே வெங்காயத்தை சிறிது சிறிதாக கட் பண்ணி வச்சு இது கூட வச்சு சாப்பிடலாம், அல்லது பானி ஊற்றிய பிறகு அதனுள்ளேயே வெங்காயம் போடலாம் (விருப்பமுள்ளவர்கள் கார பூந்தி சேர்த்துக் கொள்ளலாம்)
சுவையான பானி பூரி ரெடி
Last edited: