Vv final
//இறுதி அத்தியாயம் 3/3. //
அந்த கணம்..வந்தது..
அந்த நொடி வந்தது..
சொந்த பந்தம் சூழ நின்று
இணையும் இருமனம்..
இது இனிய திருமணம்..
தான்இழந்த ஒன்றை
பெற்றாற் போல ..
தான் தொலைத்த ஒன்று
கிடைத்தது போல..
புதையல்..கிடைத்த
இதயம் போல..
வீரா மறுக..
வீணா..உருக..
வந்தது அந்நாள்!!
அவர்கள் வாழ்வின் பொன்னாள்!!
இனி்வீணை மீட்டப்படும்..
வில்லனால் அல்ல
வீரமித்ர நல்லனாள்."
நாளை மறுதினம் திருமணமிருக்க வீணா மித்ரன் இருவரும் கைகோர்த்துக்கொண்டு நீண்ட தூரம் அந்தக் கடற்கரை ஓரமாய் நடந்து கடல் அலை வந்து முத்தமிட்டுச் தொட்டுச் செல்லும் அழகை ரசித்தப்படி அமர்ந்திருந்தனர்.
அப்போது அலை வீணாவை வருட…
கால்களை குறுக்கிய்படி மித்ரனின்..
தோள் சாய..
அந்த சமுத்திரக் கரையில்..காதல் மழை
முகிழ்ந்த்து.
சற்று தூரமாய் கிருஷ்ணாவின் தோளில் மகிழும் நிறைமாத வயிரோடு சாய்ந்த படி பேசிக்கொண்டிருந்தனர்.
அதைப் பார்க்கையில்..ஒரு நிறை பௌர்ணமி மேகத்தைத் தளுவுவது போல..இருந்த்து..
"வீரா என்கூட இப்படியே என்னை பேச வச்சுட்டே, என் மனசுல ஓரெழுத்து மிச்சம் வைக்காம முழுசா உன்கிட்ட பகிர்ந்துக்க வைப்பியா?"
அவளை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டவன், "அதுக்குள்ள நான் தானே இருக்கேன்.' அவள் இதயத்தை சுட்டிக்காட்டியவன்,
'என்னை அறியாம ஒன்னும் இங்க வேணாம். எதுன்னாலும் என்கூட பாக்கிர்ந்துக்க உரிமை இருக்கு. உனக்கு இதனை எத்தனையாவது முறை சொல்றேன்.கேட்டுட்டே இருப்பியா? யேன் வீணா நான் மாறிடுவேன்னு தோணுதா? "
கோர்த்திருந்த கையோடு அவனை அப்படியே அணைத்தக்கொண்டவள் , "அப்டில்லாம் எப்போவும் நினைக்க மாட்டேன். நீ இனி கேட்க்கலைன்னாலும் நான் சொல்லிட்டே தான் இருப்பேன்."
"அப்போ என்னை பேசியே ஒரு வழி பண்ணலாம்னு இருக்க…" இருவரும் பேசிக்கொண்டிருக்க,
கிருஷ்ணா…..,
"டேய் போதும்டா கிளம்பு,வீட்லயிருந்து நான்காவது வாட்டி அம்மா அழைச்சுட்டாங்க. இதுக்கும் மேல லேட் பண்ண முடியாது."
தானும் எழும்பி வீணாவை கைகொடுத்து எழுப்பியவன்,
"கிளம்பலாம்டா இதுக்கும் மேல தாங்க மாட்டான் வா' என்றவன் முன் ஓரடி எடுத்து வைத்தவளை தன் பக்கம் தன்னோடு இழுத்து அவள் நெற்றியில் இதழொற்றி,
'குட் நைட் மிஸ்.வீணா நாளைக்கப்புறம் நீ மை வீர வீணா ஓகே." என்றிட,
நிலவு தொட்ட அடிவானம் போல அந்தி என முகம் சிவந்து ஒரு கணம் தட்டுத்தடுமாறி...
"அப்போ நான் இன்னிக்கு உன் வீணா இல்லையா?"
"அது எப்போவும் நீ என் வீணாதான், நாளைக்கு அப்புறம் வேற உரிமையெல்லாம் இருக்குல்ல அதைவச்சு…'
அவள் கை கொண்டு அவன் வாய் மூடியவள் தன் சிவந்த முகத்தை மறைக்க முடியாது அவனை விட்டு விலகிட நினைக்க,
தூர இருந்து இவர்களை பார்த்த படி கிருஷ்ணா தம்பதியினர் இருப்பதை உணர்ந்து, அவளை தன்னோடு கோர்த்துக்கொண்டவன், கோர்த்த கைகளில் அழுத்தி அக்கையினை உயர்த்தி தன் இதழ் ஒற்றி எடுத்தவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்…
நால்வரும் வீடு வந்து சேர மணி பத்தை தொட்டுக் கொண்டிருக்க, வாசுகி மித்ரனை இரவுணவு உண்ண அழைத்தும் மறுத்து கிளம்பி விட்டான்.
இருவரது வீட்டிலும் கல்யாணக் கலை மிளிர்ந்து அது வீட்டினர் முகங்களில் ஒளிர்ந்து கொண்டிருக்க பார்ப்பவர் அனைவரும் மகிழ்வில் இருப்பதை உணர்த்தியது.
அடுத்த நாள் மீதமிருந்த கல்யாண வேலைகள், பூஜைகள் என இரு வீட்டினரும் சிறப்பாய் செய்து முடிக்க, மாலை இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைப்பெற்றது.
காலை விடிந்ததும் முகூர்த்தம்.. வாழை மரம் தொங்க..சீர்வரிசைகள் நிறைய..
அவை எங்கும் உறவினர் சூழ..
உடலும் - உயிரும் ஓர் ஒப்பந்தத்தில்..
இணைய இருப்பது போல அந்த இடத்திற்கே..
அழகாய்..இருவரும் அருகருகே தம்பதிகளாய்..அமர்ந்தபடி..
அப்படியாக இருவருக்குமான நாளாக அமைந்து சிறப்பாக வீணாவை தன் உயிரென உடைமை ஆக்கிக் கொண்டான் அவளின் வீர (வில்ல)மித்ரன்.
மாலை அவளை அழைத்துக்கொண்டு அவன் சென்ற இடம் கண்டு அவனை ஆச்சர்யமாக பார்க்க…
வா வென்று அழைத்து சென்றவன் அவ்வறையின் கட்டிலில் அவளை அமர் வைத்து அவள் அருகே கீழே மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் கைகளை தன் கைக்குள் அடக்கிகொண்டவன், பேசத் தொடங்கினான்...,
அந்த காதல் , கம்பீரம் இல்லை ..கண்கள் குளமாக..கைகள்நடுங்க..கொடி பற்றிய மரம் போல..வீணாவின் கையைப் பற்றிய படி..
"வீரா…"
என்ற வீணாவின் தவிப்போடு வெளிவந்த. வார்த்தை கேட்டு, அவள் இதழ் மேல் விரல் வைத்து பேசாதே என்றவன்,
உன் மன்னிப்பு மட்டுந்தான்..என் மாறா இதய வடுவிற்கான மாமருந்து..
என்னை மன்னிப்பியா வீணா…?!!
"வீணா,அன்னிக்கு நான் அப்டி நடந்துக்குட்டேன்னு என்னால இப்போ இமாஜின் பண்ணிக்கவே முடில.
கண்டிப்பா இன்ன யாரோ மேல இருக்க கோபத்தை உன் மேல திணுச்சு, உன்ன கஷ்டப்பப்படுத்தி, எனக்கே ரொம்ப அசிங்கமா பீல் ஆகுது…'
அவனின் குற்ற உணர்ச்சி..அவள் மனதில் அவனை சிகரத்தில் ஏற்ற..
இன்னும் பல மடங்காய் அவள் மனதில்…
வில்லனாக இல்லாமல்..வீராவாக
...
வீணா..பேச்சினிடையே இடைப்புக..அவளை தடுத்தவன்,
'கண்டிப்பா அன்னிக்கி தப்பா ஏதும் நடந்திருந்தா நா எப்போவும் உன்னை கல்யாணம் பண்ணிருக்கவே மாட்டேன்.
அன்னிக்கி என்னை கொன்னுட்டே போயிருக்கலாம்.
நான் என்ன மனநிலைல இருந்தாலும் ஒரு பொண்ணை தனியா அடச்சு வச்சு இப்டி பண்ணுனது தப்புதான்.
உன்னை எவ்ளோ தப்பா பேச வாய்ப்பிருக்கு.உன் வீட்ல உனக்கான பெயரையே கெடுத்துட்டேன்.எனக்கே ரொம்ப கவலை ஏண்டா இப்டி இருந்தேன்னு.
ஆனா கண்டிப்பா எனக்கு இதெல்லாம் அன்னிக்கு ஞாபகம் வந்தப்ப
உன்னை பேஸ் பண்ண ரொம்ப தயங்குனேன்.
ஆனா உன் கண்ல. இருந்த காதலை பார்த்து அது எனக்கு வேணும்னு என் மனசு தவிச்சது. அப்புறம் தான் நான் கிருஷ்ணாகிட்ட பேசிட்டு அன்னிக்கி நம்ம மாமா பையன் விழால்ல அப்டி உன்கிட்ட நடந்துகிட்டேன்.
அப்றம் நா வீட்ல பேசினதுக்கப்புறம் நீ என்னை அவொய்ட் பண்ணவும் ரொம்ப கஷ்டமாகிடுச்சு. இன்னிக்கி உன்கிட்ட இதை சொல்லணும் தோணுச்சு அதுக்கப்றம் தான் நம்ம லைப் ஸ்டார்ட் ஆகணும்னு நினைச்சேன்.என்னை மன்னிச்சிரு வீணா. "
என்று மன்றாடிக் கேட்க்க..ஒரு கூடை மலரை..அவன் மேல் சாய்ந்த்து போல்.
மங்கை சாய்ந்தாள்..
அவனை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டவள் அவன் முகமெங்கும் முத்தம் இட்டு தன் காதல் உணர்த்தினாள்.
பேச முடியாத அன்பை சிறுமுத்தம்
சொல்லிவிடும்..அல்லவா..
அவள் காதல் உணர்ந்திருந்தவன் அவளோடு தன் நேசத்தை பகிர்ந்து பின் கிருஷ்ணாவின் திட்டல் சேர்ந்த அழைப்பில் வீடு வந்தனர்
. பின் அனைவரும் ஒன்றாக..மகிழ்ந்திருந்து அவர்களுக்கான இரவின் நேரமும் அவர்களை நெருங்க அவர்களை தனித்து கிளம்பினர்.
அன்றோடு அவர்களின் வாழ்வு தொடங்கிட இன்பமாய் தம் காதல் உணர்ந்து உணர்த்தி வாழ்ந்தனர்…
அவர்களை சூழ அவர்களின் நட்பும், அன்பின் மிகைக் குடும்பமும் அவர்களுக்கு துணையாய், மகிழ்வாய் அமைந்திட. வில்லணும் அவனின் வீணை இனிதே மீட்ட அவர்கள் வாழ்வு இசையானது யாவரும் ரசித்திட…
இனி அந்த வீணை முகாரி பாடாது..
என்றும்..ஆனந்த சுரமே..அவர்கள்..இல்லத்தில்..
அதற்கு போட்டியாக..குழல் இனிதில்லை
அந்த யாழும் இனிதில்லை எனச் சொல்லும் படி இரண்டு தொட்டில்கள்..
ஆடப் போகிறது..
அவர்கள்..இல்லத்தில்..
முற்றும்.
//இறுதி அத்தியாயம் 3/3. //
அந்த கணம்..வந்தது..
அந்த நொடி வந்தது..
சொந்த பந்தம் சூழ நின்று
இணையும் இருமனம்..
இது இனிய திருமணம்..
தான்இழந்த ஒன்றை
பெற்றாற் போல ..
தான் தொலைத்த ஒன்று
கிடைத்தது போல..
புதையல்..கிடைத்த
இதயம் போல..
வீரா மறுக..
வீணா..உருக..
வந்தது அந்நாள்!!
அவர்கள் வாழ்வின் பொன்னாள்!!
இனி்வீணை மீட்டப்படும்..
வில்லனால் அல்ல
வீரமித்ர நல்லனாள்."
நாளை மறுதினம் திருமணமிருக்க வீணா மித்ரன் இருவரும் கைகோர்த்துக்கொண்டு நீண்ட தூரம் அந்தக் கடற்கரை ஓரமாய் நடந்து கடல் அலை வந்து முத்தமிட்டுச் தொட்டுச் செல்லும் அழகை ரசித்தப்படி அமர்ந்திருந்தனர்.
அப்போது அலை வீணாவை வருட…
கால்களை குறுக்கிய்படி மித்ரனின்..
தோள் சாய..
அந்த சமுத்திரக் கரையில்..காதல் மழை
முகிழ்ந்த்து.
சற்று தூரமாய் கிருஷ்ணாவின் தோளில் மகிழும் நிறைமாத வயிரோடு சாய்ந்த படி பேசிக்கொண்டிருந்தனர்.
அதைப் பார்க்கையில்..ஒரு நிறை பௌர்ணமி மேகத்தைத் தளுவுவது போல..இருந்த்து..
"வீரா என்கூட இப்படியே என்னை பேச வச்சுட்டே, என் மனசுல ஓரெழுத்து மிச்சம் வைக்காம முழுசா உன்கிட்ட பகிர்ந்துக்க வைப்பியா?"
அவளை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டவன், "அதுக்குள்ள நான் தானே இருக்கேன்.' அவள் இதயத்தை சுட்டிக்காட்டியவன்,
'என்னை அறியாம ஒன்னும் இங்க வேணாம். எதுன்னாலும் என்கூட பாக்கிர்ந்துக்க உரிமை இருக்கு. உனக்கு இதனை எத்தனையாவது முறை சொல்றேன்.கேட்டுட்டே இருப்பியா? யேன் வீணா நான் மாறிடுவேன்னு தோணுதா? "
கோர்த்திருந்த கையோடு அவனை அப்படியே அணைத்தக்கொண்டவள் , "அப்டில்லாம் எப்போவும் நினைக்க மாட்டேன். நீ இனி கேட்க்கலைன்னாலும் நான் சொல்லிட்டே தான் இருப்பேன்."
"அப்போ என்னை பேசியே ஒரு வழி பண்ணலாம்னு இருக்க…" இருவரும் பேசிக்கொண்டிருக்க,
கிருஷ்ணா…..,
"டேய் போதும்டா கிளம்பு,வீட்லயிருந்து நான்காவது வாட்டி அம்மா அழைச்சுட்டாங்க. இதுக்கும் மேல லேட் பண்ண முடியாது."
தானும் எழும்பி வீணாவை கைகொடுத்து எழுப்பியவன்,
"கிளம்பலாம்டா இதுக்கும் மேல தாங்க மாட்டான் வா' என்றவன் முன் ஓரடி எடுத்து வைத்தவளை தன் பக்கம் தன்னோடு இழுத்து அவள் நெற்றியில் இதழொற்றி,
'குட் நைட் மிஸ்.வீணா நாளைக்கப்புறம் நீ மை வீர வீணா ஓகே." என்றிட,
நிலவு தொட்ட அடிவானம் போல அந்தி என முகம் சிவந்து ஒரு கணம் தட்டுத்தடுமாறி...
"அப்போ நான் இன்னிக்கு உன் வீணா இல்லையா?"
"அது எப்போவும் நீ என் வீணாதான், நாளைக்கு அப்புறம் வேற உரிமையெல்லாம் இருக்குல்ல அதைவச்சு…'
அவள் கை கொண்டு அவன் வாய் மூடியவள் தன் சிவந்த முகத்தை மறைக்க முடியாது அவனை விட்டு விலகிட நினைக்க,
தூர இருந்து இவர்களை பார்த்த படி கிருஷ்ணா தம்பதியினர் இருப்பதை உணர்ந்து, அவளை தன்னோடு கோர்த்துக்கொண்டவன், கோர்த்த கைகளில் அழுத்தி அக்கையினை உயர்த்தி தன் இதழ் ஒற்றி எடுத்தவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்…
நால்வரும் வீடு வந்து சேர மணி பத்தை தொட்டுக் கொண்டிருக்க, வாசுகி மித்ரனை இரவுணவு உண்ண அழைத்தும் மறுத்து கிளம்பி விட்டான்.
இருவரது வீட்டிலும் கல்யாணக் கலை மிளிர்ந்து அது வீட்டினர் முகங்களில் ஒளிர்ந்து கொண்டிருக்க பார்ப்பவர் அனைவரும் மகிழ்வில் இருப்பதை உணர்த்தியது.
அடுத்த நாள் மீதமிருந்த கல்யாண வேலைகள், பூஜைகள் என இரு வீட்டினரும் சிறப்பாய் செய்து முடிக்க, மாலை இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைப்பெற்றது.
காலை விடிந்ததும் முகூர்த்தம்.. வாழை மரம் தொங்க..சீர்வரிசைகள் நிறைய..
அவை எங்கும் உறவினர் சூழ..
உடலும் - உயிரும் ஓர் ஒப்பந்தத்தில்..
இணைய இருப்பது போல அந்த இடத்திற்கே..
அழகாய்..இருவரும் அருகருகே தம்பதிகளாய்..அமர்ந்தபடி..
அப்படியாக இருவருக்குமான நாளாக அமைந்து சிறப்பாக வீணாவை தன் உயிரென உடைமை ஆக்கிக் கொண்டான் அவளின் வீர (வில்ல)மித்ரன்.
மாலை அவளை அழைத்துக்கொண்டு அவன் சென்ற இடம் கண்டு அவனை ஆச்சர்யமாக பார்க்க…
வா வென்று அழைத்து சென்றவன் அவ்வறையின் கட்டிலில் அவளை அமர் வைத்து அவள் அருகே கீழே மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் கைகளை தன் கைக்குள் அடக்கிகொண்டவன், பேசத் தொடங்கினான்...,
அந்த காதல் , கம்பீரம் இல்லை ..கண்கள் குளமாக..கைகள்நடுங்க..கொடி பற்றிய மரம் போல..வீணாவின் கையைப் பற்றிய படி..
"வீரா…"
என்ற வீணாவின் தவிப்போடு வெளிவந்த. வார்த்தை கேட்டு, அவள் இதழ் மேல் விரல் வைத்து பேசாதே என்றவன்,
உன் மன்னிப்பு மட்டுந்தான்..என் மாறா இதய வடுவிற்கான மாமருந்து..
என்னை மன்னிப்பியா வீணா…?!!
"வீணா,அன்னிக்கு நான் அப்டி நடந்துக்குட்டேன்னு என்னால இப்போ இமாஜின் பண்ணிக்கவே முடில.
கண்டிப்பா இன்ன யாரோ மேல இருக்க கோபத்தை உன் மேல திணுச்சு, உன்ன கஷ்டப்பப்படுத்தி, எனக்கே ரொம்ப அசிங்கமா பீல் ஆகுது…'
அவனின் குற்ற உணர்ச்சி..அவள் மனதில் அவனை சிகரத்தில் ஏற்ற..
இன்னும் பல மடங்காய் அவள் மனதில்…
வில்லனாக இல்லாமல்..வீராவாக
...
வீணா..பேச்சினிடையே இடைப்புக..அவளை தடுத்தவன்,
'கண்டிப்பா அன்னிக்கி தப்பா ஏதும் நடந்திருந்தா நா எப்போவும் உன்னை கல்யாணம் பண்ணிருக்கவே மாட்டேன்.
அன்னிக்கி என்னை கொன்னுட்டே போயிருக்கலாம்.
நான் என்ன மனநிலைல இருந்தாலும் ஒரு பொண்ணை தனியா அடச்சு வச்சு இப்டி பண்ணுனது தப்புதான்.
உன்னை எவ்ளோ தப்பா பேச வாய்ப்பிருக்கு.உன் வீட்ல உனக்கான பெயரையே கெடுத்துட்டேன்.எனக்கே ரொம்ப கவலை ஏண்டா இப்டி இருந்தேன்னு.
ஆனா கண்டிப்பா எனக்கு இதெல்லாம் அன்னிக்கு ஞாபகம் வந்தப்ப
உன்னை பேஸ் பண்ண ரொம்ப தயங்குனேன்.
ஆனா உன் கண்ல. இருந்த காதலை பார்த்து அது எனக்கு வேணும்னு என் மனசு தவிச்சது. அப்புறம் தான் நான் கிருஷ்ணாகிட்ட பேசிட்டு அன்னிக்கி நம்ம மாமா பையன் விழால்ல அப்டி உன்கிட்ட நடந்துகிட்டேன்.
அப்றம் நா வீட்ல பேசினதுக்கப்புறம் நீ என்னை அவொய்ட் பண்ணவும் ரொம்ப கஷ்டமாகிடுச்சு. இன்னிக்கி உன்கிட்ட இதை சொல்லணும் தோணுச்சு அதுக்கப்றம் தான் நம்ம லைப் ஸ்டார்ட் ஆகணும்னு நினைச்சேன்.என்னை மன்னிச்சிரு வீணா. "
என்று மன்றாடிக் கேட்க்க..ஒரு கூடை மலரை..அவன் மேல் சாய்ந்த்து போல்.
மங்கை சாய்ந்தாள்..
அவனை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டவள் அவன் முகமெங்கும் முத்தம் இட்டு தன் காதல் உணர்த்தினாள்.
பேச முடியாத அன்பை சிறுமுத்தம்
சொல்லிவிடும்..அல்லவா..
அவள் காதல் உணர்ந்திருந்தவன் அவளோடு தன் நேசத்தை பகிர்ந்து பின் கிருஷ்ணாவின் திட்டல் சேர்ந்த அழைப்பில் வீடு வந்தனர்
. பின் அனைவரும் ஒன்றாக..மகிழ்ந்திருந்து அவர்களுக்கான இரவின் நேரமும் அவர்களை நெருங்க அவர்களை தனித்து கிளம்பினர்.
அன்றோடு அவர்களின் வாழ்வு தொடங்கிட இன்பமாய் தம் காதல் உணர்ந்து உணர்த்தி வாழ்ந்தனர்…
அவர்களை சூழ அவர்களின் நட்பும், அன்பின் மிகைக் குடும்பமும் அவர்களுக்கு துணையாய், மகிழ்வாய் அமைந்திட. வில்லணும் அவனின் வீணை இனிதே மீட்ட அவர்கள் வாழ்வு இசையானது யாவரும் ரசித்திட…
இனி அந்த வீணை முகாரி பாடாது..
என்றும்..ஆனந்த சுரமே..அவர்கள்..இல்லத்தில்..
அதற்கு போட்டியாக..குழல் இனிதில்லை
அந்த யாழும் இனிதில்லை எனச் சொல்லும் படி இரண்டு தொட்டில்கள்..
ஆடப் போகிறது..
அவர்கள்..இல்லத்தில்..
முற்றும்.