தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும், தக்காளியை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
கெட்டி அவல் ஒரு கப் எடுத்துக்கிட்டு இரண்டு, மூணு தடவை நல்லா கழுவிக்கோங்க..
கழுவிட்டு அவல் மூழ்குற அளவு தண்ணீர் ஊற்றி ஒரு 20 நிமிஷம் ஊற வெச்சுடுங்க..
20 நிமிஷம் கழிச்சு ஊற வச்ச அவலில் இருந்து பாதி மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காம அரைச்சு எடுத்துக்கனும், அரைச்ச அவலை அரைக்காத அவல் கூட சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா கலந்து விட்டு ஒரு ஓரமா வச்சுடுங்க...
ஒரு pan வச்சு எண்ணெய் ஊற்றி காயந்த்ததும் கடுகு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் நான்கு வரமிளகாய் சிறியதாக கிள்ளி போடவும், கறிவேப்பிலை சிறிதாக நறுக்கி போடவும், அடுத்து வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும், ரொம்ப வதக்க தேவையில்லை...
வதக்கிய வெங்காய கலவையை அவலுடன் சேர்த்து நன்கு கலந்துவிட்டு , கைல எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வேக வைத்து எடுத்து வச்சுக்கோங்க.. (இட்லி தட்டுல லேசா எண்ணெய் தடவிக்கோங்க)
அடுத்து ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து , வெங்காயத்தை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த
தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.... பிறகு மிளகாய்தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வேகவிடவும்.
பின்பு வேகவைத்த அவல் உருண்டைகளை இதனுடன் சேர்த்து உடையாமல் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்...
சுவையான அவல் கொழுக்கட்டை தயார்....
கெட்டி அவல் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும், தக்காளியை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
கெட்டி அவல் ஒரு கப் எடுத்துக்கிட்டு இரண்டு, மூணு தடவை நல்லா கழுவிக்கோங்க..
கழுவிட்டு அவல் மூழ்குற அளவு தண்ணீர் ஊற்றி ஒரு 20 நிமிஷம் ஊற வெச்சுடுங்க..
20 நிமிஷம் கழிச்சு ஊற வச்ச அவலில் இருந்து பாதி மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காம அரைச்சு எடுத்துக்கனும், அரைச்ச அவலை அரைக்காத அவல் கூட சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா கலந்து விட்டு ஒரு ஓரமா வச்சுடுங்க...
ஒரு pan வச்சு எண்ணெய் ஊற்றி காயந்த்ததும் கடுகு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் நான்கு வரமிளகாய் சிறியதாக கிள்ளி போடவும், கறிவேப்பிலை சிறிதாக நறுக்கி போடவும், அடுத்து வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும், ரொம்ப வதக்க தேவையில்லை...
வதக்கிய வெங்காய கலவையை அவலுடன் சேர்த்து நன்கு கலந்துவிட்டு , கைல எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வேக வைத்து எடுத்து வச்சுக்கோங்க.. (இட்லி தட்டுல லேசா எண்ணெய் தடவிக்கோங்க)
அடுத்து ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து , வெங்காயத்தை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த
தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.... பிறகு மிளகாய்தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வேகவிடவும்.
பின்பு வேகவைத்த அவல் உருண்டைகளை இதனுடன் சேர்த்து உடையாமல் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்...
சுவையான அவல் கொழுக்கட்டை தயார்....