தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - 3 ஸ்பூன்
சௌ சௌ - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4 (உங்கள் காரத்திற்க்கேற்ப)
சீரகம் - அரை ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
உப்பு - உங்கள் சுவைக்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
செய்முறை :
சௌ சௌ - ஐ நீள வாக்கில் சன்னமாக நறுக்கி கொள்ளுங்கள், பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளுங்கள்.
இது போல
பின் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் கடுகு இரண்டையும் ஒன்றாக போட்டு பொரிய விடவும். அடுத்து பாசி பருப்பை சேர்த்து நன்றாக வதக்கவும் , (எண்ணையில் வதக்குவதால் தனியாக வேக வைக்க தேவையில்லை)
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும், ஒரு நிமிடம் கழித்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,. அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும், வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்பு சௌ சௌ மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விடவும். கால் கிளாஸ் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறிது சிம்மில் வைத்து 7 முதல் 10 நிமிடம் மூடி வைக்கவும். (இது தண்ணீர் சத்துள்ள காயென்பதால் தண்ணீர் அதிகம் சேர்க்க தேவையில்லை) இடையில் ஒரு முறை கிளறி விடவும். 10 நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது நாம் சேர்த்த பாசி பருப்பும், சௌ சௌ ம் நன்றாக வெந்து வந்திருக்கும்... அடுப்பை அணைப்பதற்கு முன்பு தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான சத்தான சௌ சௌ பாசி பருப்பு பொரியல் தயார்....
ithaiyum try panni parunga shyama ma @shiyamala sothybalan
பாசிப்பருப்பு - 3 ஸ்பூன்
சௌ சௌ - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4 (உங்கள் காரத்திற்க்கேற்ப)
சீரகம் - அரை ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
உப்பு - உங்கள் சுவைக்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
செய்முறை :
சௌ சௌ - ஐ நீள வாக்கில் சன்னமாக நறுக்கி கொள்ளுங்கள், பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளுங்கள்.
இது போல
பின் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் கடுகு இரண்டையும் ஒன்றாக போட்டு பொரிய விடவும். அடுத்து பாசி பருப்பை சேர்த்து நன்றாக வதக்கவும் , (எண்ணையில் வதக்குவதால் தனியாக வேக வைக்க தேவையில்லை)
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும், ஒரு நிமிடம் கழித்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,. அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும், வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்பு சௌ சௌ மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விடவும். கால் கிளாஸ் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறிது சிம்மில் வைத்து 7 முதல் 10 நிமிடம் மூடி வைக்கவும். (இது தண்ணீர் சத்துள்ள காயென்பதால் தண்ணீர் அதிகம் சேர்க்க தேவையில்லை) இடையில் ஒரு முறை கிளறி விடவும். 10 நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது நாம் சேர்த்த பாசி பருப்பும், சௌ சௌ ம் நன்றாக வெந்து வந்திருக்கும்... அடுப்பை அணைப்பதற்கு முன்பு தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான சத்தான சௌ சௌ பாசி பருப்பு பொரியல் தயார்....
ithaiyum try panni parunga shyama ma @shiyamala sothybalan