அன்றில் 3: தெகிட்டாத தேடல்கள்.
உலகத்தில் ஆக சிறந்த சொல் எதுவென்று இப்போது கேட்டால், பரோட்டா என யோசிக்காமல் பதில் சொல்வான் மணி. அவனை சொல்லி குற்றம் ஒன்றுமில்லை. கூரக்கடை பரோட்டவின் ருசி அப்படி. எண்ணையிலே பொரித்து எடுத்து நெய்யில் பட்டும் படாமலும் உரசி, தக தக வென பொன்னிறத்தில் இலையில் வைக்கையில் நாக்கு நாலு இன்ச் வளர்ந்திருக்கும். தொட்டால் கையே பொசுங்குமளவு கொதிக்கும், இருந்தும் அவ்வை கிழவிக்கு வேலன் தந்த சுட்ட பழம் போல ஊதி ஊதி, அதை சிறு சிறு துண்டுகளாக பியத்து முடித்து, சால்னாவை ( குருமா ) ஊற்றி.. பிசைகையில் கிளம்புமே ஒரு நறுமணம்.. ஆஹா.. அதை நுகர்ந்து கொண்டே கருங்கல்லை கூட மென்று விடலாம். இந்த சால்னா போல ருசியான சால்னா மாவட்டத்திலேயே கிடையாது என அனைவரும் சொல்வர். மணியிடம் கேட்டால் உலகத்திலே கிடையாது என்பான்.
சாப்பிடுகையில் அவன் சொல்வது தான் சரியென அர்ஜுனும் உணர்ந்தான். இருவரும் வயிற்றை கடந்து தொண்டை வரை பரோட்டாவை தள்ளி கொண்டிருந்தனர்.
" அகுத்து என்ன பண்ண போக.. " வாயை அடைத்த பரோட்டவில் நசுங்கி வினோதமாக வெளிவந்தது மணியின் குரல்.
" என்ன.. " என்றான் அர்ஜுன்.
தண்ணீரை ஊற்றி விழுங்கிய மணி , ஏப்பத்தை விடுவித்து தெளிவாக மீண்டும் சொன்னான்
" அடுத்தது என்ன பண்ண போறனு கேட்டேன். "
" அடுத்து என்ன ஆப்பாயில் தான்."
" டேய் ஆப்பாயில் .. அந்த புள்ள விஷயத்துல என்ன பண்ண போறேன்னு கேட்டேன். "
" அதுல என்ன பண்றது.. பெட் வச்ச.. நான் ஜெய்ச்சிட்டேன் அவ்வளவு தான். "
" அப்போ நீ அந்த புள்ள பின்னாடி சுத்துறது லவ் பண்றதுனுலாம் பண்ண மாட்ட.. ? "
" சீ.. சீ.. நான் போய் ஒரு பொண்ணு பின்னடியா.. அவ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா.. நமக்கு இதெல்லாம் சரி பட்டு வராதுப்பா.. "
" என்னவோ சொல்ற.. அது ஒரு மாதிரி டைப்பு.. நேரா வீட்டுக்கே வந்து போட்டு கொடுத்திடும் அப்புறம்.. "
" என்னல.. மறுபடியும் அதையே சொல்லிக்கிட்டு.. சத்தியமா அவ பக்கமே இனி போகவே மாட்டேன்.. " என கூறிவிட்டு அடுத்த ஆப்பாயிலுக்கு ஆர்டர் கொடுக்கையில் அர்ஜுன் அறிந்திருக்கவில்லை அவன் சத்தியத்தின் ஆயுள் அடுத்த நாள் மதியம் வரை தான் என்று.
அவளை பார்த்த நேரம் நெருங்கியதும் தானாகவே மாற்றங்கள் நிகழ தொடங்கின. மீண்டும் அவளை காண வேண்டுமென உடலின் ஒவ்வொரு அங்கமும் வேலை நிறுத்தம் செய்ய தொடங்கிற்று. காதல் கீதல் என்று பெயர் வைக்கவெல்லாம் அவன் விரும்பவில்லை . ஏதோ அந்த பெண்ணை மறுமுறை பார்க்க தோன்றுகிறது. முடிந்தால் பார்ப்போம், இல்லையென்றால் இரண்டு நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என எண்ணிக்கொண்டான். ஆனாலும் இந்த விஷயம் தன் நண்பர்களுக்கு எக்காரணம் கொண்டும் தெரிந்து விட கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தான்.
ஒரு வழியாக அவளை கண்ட அதேநேரத்தில் அதே இடத்தில் அடுத்த நாளும் சென்றான் , அவள் வரவில்லை, அதற்கடுத்த நாளும் வரவில்லை. அவன் மனமும் மாறவில்லை. பார்க்கவேண்டும் என்ற ஆசை வேட்கையாக வளர்ந்தது. அவள் வீடு எங்கிருக்கிறதென்பதை லாவகமாக மணியிடம் கேட்டறிந்து கொண்டான். அடுத்த நாள் நிச்சயம் அவள் தெருவிற்கே சென்று பார்த்து விட வேண்டுமென முடிவெடுத்தான். பார்த்து விட்டால் அதோடு தொந்தரவு செய்வதை விட்டு விடுவேனென்று மனதும் உறுதியளித்தது.
மறுநாள் மாலை அவளை பார்க்க போகிறோம் என்று முடிவெடுத்ததிலிருந்து காலை நத்தையாய் ஊர்ந்து கொண்டிருந்தது, ஒருவழியாக மதிய உணவுக்கு பின், சிம்ரன் குளித்து குளித்து வாங்க சொன்ன சோப்பையும், சாருக்கானும் சல்மான்கானும் போட்டி போட்டு விற்ற சாம்புவுமாக குளிக்க சென்றவன் திரும்பி வரும் பொழுது இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது, ஆறுமுறை சோப்பு போட்டு குளித்ததில் அரவிந்த்சாமி நிறத்திற்கு வந்து விட்டாதாக தோன்றிய எண்ணம் கண்ணாடியை பார்த்ததுமே கலைந்து போனது, சரியாக சொனால் ஆடி கழிவிற்கு வாங்கிய துணி, துவைப்பில் சாயம் இழந்தது போல முகமெங்கும் வெளுத்திருந்தான், இருபத்தாறு முறை குளிப்பதெல்லாம் சிம்ரனால் மட்டுமே முடியும் என இவன் உணர்வதற்குள் சோப்பு கரைந்தது தான் மிச்சம். இதற்கெல்லாம் சோர்ந்து விட முடியுமா,
கடிகாரத்தை ஏறிட்டான், நிமிட முள் நகர்ந்திவனை வினாடி முள்ளாக துரத்த தொடங்கிற்று, விடாமல் ஓடினான். ஒரு மணிநேரம் தலை சீவி, அரை மணி நேரம் வெளிறிய முகத்தை கழுவி, கால் மணி நேரம் வேவு பார்த்து கடைசியில் பத்து நிமிட பெருமூச்சுக்கு பின் வீட்டை விட்டு வெளியேறினான், இவன் நினைத்தது போலவே நண்பர்கள் யாருமில்லை, விறுவிறுவென தன் வீடு தொலைவில் சிறுத்து மறையும் தூரம் வரை நடந்து விட்டான். அவள் தெரு இவன் தெருவிலிருந்து நடந்து செல்லும் தொலைவு தான் என்பதால் நினைத்ததை விட வேகமாகவே நெருங்கி விட்டான்.
இதோ இந்த சந்தினை கடந்து திரும்பினால் அவள் தெரு தான், மனதிற்குள் மௌதார்கன் தானாய் இசை எழுப்பியது, அவன் திரும்பியதும் அவள் வருவாள், காற்று இதமாக வீசி அவள் தலையை கலைக்கும், யாரோ கோவில் மணி அடிப்பார், பூக்காரி கால் இடறி இருவர் மேலும் பூமாரி பொழிவாள். சே.. அதற்குள் இத்தனை கனவு காண செய்கிறாளே இவள்.. என லேசான கோவமும் கூட வந்தது,
சந்தும் முடிந்தது, அவள் தெருவும் வந்தது, விழியின் அகலம் வரை விரித்து பார்த்தான், அங்கே அவன் நினைத்தது போல் எதுவுமே இல்லை, ஜெராக்ஸ் கடைகாரன் கட்டியது போல ஒரே சைசில் அடுத்தடுத்து வீடுகள், ஒவ்வொன்றின்ற்கும் நேர் எதிரில் வளைந்து நிமிர்ந்த தென்னை மரங்கள், கரண்டு கம்பிகளில் காக்கைகள், தூரத்தில் மோர் விக்கும் கிழவியை தவிர அங்கு ஆள் அரவமே இல்லை. இருந்தும் அர்ஜுனுக்கு யாரோ உற்று பார்ப்பது போலவே ஓர் உணர்வு, ஐந்தாவது போஸ்ட் கம்பத்தை தாண்டி முதல் வீடு அவளது என்ற மணியின் வார்த்தைகள் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன, நடையின் வேகம் கூட்டினான், வேறெங்கும் பார்ப்பதை தவிரத்தான்,
இந்த தெருவின் முனையில் ஒரே ஒரு பொட்டி கடை உண்டு, யாராவது பார்த்து யார் நீ .. ? இங்க எதுக்கு வந்த ? என்று கேட்டு விட்டால் அந்த பொட்டி கடை தான் இவன் காவல் தெய்வம், சாமான் வாங்க வந்தது போல காட்டிக் கொள்ள வேண்டும். பாக்கெட்டில் தடவி பார்த்தான், தான் எழுதி வைத்திருந்த சீட்டு அதே இடத்தில் தான் இருந்தது.அதற்குள் ஐந்தாவது கம்பமும் கடந்து போக, அவள் வீடும் வந்து விட்டது, நடையின் வேகத்தை குறைத்து விட்டான் ஆனால் இதயம் ஓட்டம் பிடித்தது.
" ஏய்.... " என்ற ஒரு அதிகார குரல் கேட்டதும் பக்கென இருந்தது, முகத்தை மாற்றிக் கொண்டு சாதாரணமாக திரும்பினான்.
உலகத்தில் ஆக சிறந்த சொல் எதுவென்று இப்போது கேட்டால், பரோட்டா என யோசிக்காமல் பதில் சொல்வான் மணி. அவனை சொல்லி குற்றம் ஒன்றுமில்லை. கூரக்கடை பரோட்டவின் ருசி அப்படி. எண்ணையிலே பொரித்து எடுத்து நெய்யில் பட்டும் படாமலும் உரசி, தக தக வென பொன்னிறத்தில் இலையில் வைக்கையில் நாக்கு நாலு இன்ச் வளர்ந்திருக்கும். தொட்டால் கையே பொசுங்குமளவு கொதிக்கும், இருந்தும் அவ்வை கிழவிக்கு வேலன் தந்த சுட்ட பழம் போல ஊதி ஊதி, அதை சிறு சிறு துண்டுகளாக பியத்து முடித்து, சால்னாவை ( குருமா ) ஊற்றி.. பிசைகையில் கிளம்புமே ஒரு நறுமணம்.. ஆஹா.. அதை நுகர்ந்து கொண்டே கருங்கல்லை கூட மென்று விடலாம். இந்த சால்னா போல ருசியான சால்னா மாவட்டத்திலேயே கிடையாது என அனைவரும் சொல்வர். மணியிடம் கேட்டால் உலகத்திலே கிடையாது என்பான்.
சாப்பிடுகையில் அவன் சொல்வது தான் சரியென அர்ஜுனும் உணர்ந்தான். இருவரும் வயிற்றை கடந்து தொண்டை வரை பரோட்டாவை தள்ளி கொண்டிருந்தனர்.
" அகுத்து என்ன பண்ண போக.. " வாயை அடைத்த பரோட்டவில் நசுங்கி வினோதமாக வெளிவந்தது மணியின் குரல்.
" என்ன.. " என்றான் அர்ஜுன்.
தண்ணீரை ஊற்றி விழுங்கிய மணி , ஏப்பத்தை விடுவித்து தெளிவாக மீண்டும் சொன்னான்
" அடுத்தது என்ன பண்ண போறனு கேட்டேன். "
" அடுத்து என்ன ஆப்பாயில் தான்."
" டேய் ஆப்பாயில் .. அந்த புள்ள விஷயத்துல என்ன பண்ண போறேன்னு கேட்டேன். "
" அதுல என்ன பண்றது.. பெட் வச்ச.. நான் ஜெய்ச்சிட்டேன் அவ்வளவு தான். "
" அப்போ நீ அந்த புள்ள பின்னாடி சுத்துறது லவ் பண்றதுனுலாம் பண்ண மாட்ட.. ? "
" சீ.. சீ.. நான் போய் ஒரு பொண்ணு பின்னடியா.. அவ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா.. நமக்கு இதெல்லாம் சரி பட்டு வராதுப்பா.. "
" என்னவோ சொல்ற.. அது ஒரு மாதிரி டைப்பு.. நேரா வீட்டுக்கே வந்து போட்டு கொடுத்திடும் அப்புறம்.. "
" என்னல.. மறுபடியும் அதையே சொல்லிக்கிட்டு.. சத்தியமா அவ பக்கமே இனி போகவே மாட்டேன்.. " என கூறிவிட்டு அடுத்த ஆப்பாயிலுக்கு ஆர்டர் கொடுக்கையில் அர்ஜுன் அறிந்திருக்கவில்லை அவன் சத்தியத்தின் ஆயுள் அடுத்த நாள் மதியம் வரை தான் என்று.
அவளை பார்த்த நேரம் நெருங்கியதும் தானாகவே மாற்றங்கள் நிகழ தொடங்கின. மீண்டும் அவளை காண வேண்டுமென உடலின் ஒவ்வொரு அங்கமும் வேலை நிறுத்தம் செய்ய தொடங்கிற்று. காதல் கீதல் என்று பெயர் வைக்கவெல்லாம் அவன் விரும்பவில்லை . ஏதோ அந்த பெண்ணை மறுமுறை பார்க்க தோன்றுகிறது. முடிந்தால் பார்ப்போம், இல்லையென்றால் இரண்டு நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என எண்ணிக்கொண்டான். ஆனாலும் இந்த விஷயம் தன் நண்பர்களுக்கு எக்காரணம் கொண்டும் தெரிந்து விட கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தான்.
ஒரு வழியாக அவளை கண்ட அதேநேரத்தில் அதே இடத்தில் அடுத்த நாளும் சென்றான் , அவள் வரவில்லை, அதற்கடுத்த நாளும் வரவில்லை. அவன் மனமும் மாறவில்லை. பார்க்கவேண்டும் என்ற ஆசை வேட்கையாக வளர்ந்தது. அவள் வீடு எங்கிருக்கிறதென்பதை லாவகமாக மணியிடம் கேட்டறிந்து கொண்டான். அடுத்த நாள் நிச்சயம் அவள் தெருவிற்கே சென்று பார்த்து விட வேண்டுமென முடிவெடுத்தான். பார்த்து விட்டால் அதோடு தொந்தரவு செய்வதை விட்டு விடுவேனென்று மனதும் உறுதியளித்தது.
மறுநாள் மாலை அவளை பார்க்க போகிறோம் என்று முடிவெடுத்ததிலிருந்து காலை நத்தையாய் ஊர்ந்து கொண்டிருந்தது, ஒருவழியாக மதிய உணவுக்கு பின், சிம்ரன் குளித்து குளித்து வாங்க சொன்ன சோப்பையும், சாருக்கானும் சல்மான்கானும் போட்டி போட்டு விற்ற சாம்புவுமாக குளிக்க சென்றவன் திரும்பி வரும் பொழுது இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது, ஆறுமுறை சோப்பு போட்டு குளித்ததில் அரவிந்த்சாமி நிறத்திற்கு வந்து விட்டாதாக தோன்றிய எண்ணம் கண்ணாடியை பார்த்ததுமே கலைந்து போனது, சரியாக சொனால் ஆடி கழிவிற்கு வாங்கிய துணி, துவைப்பில் சாயம் இழந்தது போல முகமெங்கும் வெளுத்திருந்தான், இருபத்தாறு முறை குளிப்பதெல்லாம் சிம்ரனால் மட்டுமே முடியும் என இவன் உணர்வதற்குள் சோப்பு கரைந்தது தான் மிச்சம். இதற்கெல்லாம் சோர்ந்து விட முடியுமா,
கடிகாரத்தை ஏறிட்டான், நிமிட முள் நகர்ந்திவனை வினாடி முள்ளாக துரத்த தொடங்கிற்று, விடாமல் ஓடினான். ஒரு மணிநேரம் தலை சீவி, அரை மணி நேரம் வெளிறிய முகத்தை கழுவி, கால் மணி நேரம் வேவு பார்த்து கடைசியில் பத்து நிமிட பெருமூச்சுக்கு பின் வீட்டை விட்டு வெளியேறினான், இவன் நினைத்தது போலவே நண்பர்கள் யாருமில்லை, விறுவிறுவென தன் வீடு தொலைவில் சிறுத்து மறையும் தூரம் வரை நடந்து விட்டான். அவள் தெரு இவன் தெருவிலிருந்து நடந்து செல்லும் தொலைவு தான் என்பதால் நினைத்ததை விட வேகமாகவே நெருங்கி விட்டான்.
இதோ இந்த சந்தினை கடந்து திரும்பினால் அவள் தெரு தான், மனதிற்குள் மௌதார்கன் தானாய் இசை எழுப்பியது, அவன் திரும்பியதும் அவள் வருவாள், காற்று இதமாக வீசி அவள் தலையை கலைக்கும், யாரோ கோவில் மணி அடிப்பார், பூக்காரி கால் இடறி இருவர் மேலும் பூமாரி பொழிவாள். சே.. அதற்குள் இத்தனை கனவு காண செய்கிறாளே இவள்.. என லேசான கோவமும் கூட வந்தது,
சந்தும் முடிந்தது, அவள் தெருவும் வந்தது, விழியின் அகலம் வரை விரித்து பார்த்தான், அங்கே அவன் நினைத்தது போல் எதுவுமே இல்லை, ஜெராக்ஸ் கடைகாரன் கட்டியது போல ஒரே சைசில் அடுத்தடுத்து வீடுகள், ஒவ்வொன்றின்ற்கும் நேர் எதிரில் வளைந்து நிமிர்ந்த தென்னை மரங்கள், கரண்டு கம்பிகளில் காக்கைகள், தூரத்தில் மோர் விக்கும் கிழவியை தவிர அங்கு ஆள் அரவமே இல்லை. இருந்தும் அர்ஜுனுக்கு யாரோ உற்று பார்ப்பது போலவே ஓர் உணர்வு, ஐந்தாவது போஸ்ட் கம்பத்தை தாண்டி முதல் வீடு அவளது என்ற மணியின் வார்த்தைகள் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன, நடையின் வேகம் கூட்டினான், வேறெங்கும் பார்ப்பதை தவிரத்தான்,
இந்த தெருவின் முனையில் ஒரே ஒரு பொட்டி கடை உண்டு, யாராவது பார்த்து யார் நீ .. ? இங்க எதுக்கு வந்த ? என்று கேட்டு விட்டால் அந்த பொட்டி கடை தான் இவன் காவல் தெய்வம், சாமான் வாங்க வந்தது போல காட்டிக் கொள்ள வேண்டும். பாக்கெட்டில் தடவி பார்த்தான், தான் எழுதி வைத்திருந்த சீட்டு அதே இடத்தில் தான் இருந்தது.அதற்குள் ஐந்தாவது கம்பமும் கடந்து போக, அவள் வீடும் வந்து விட்டது, நடையின் வேகத்தை குறைத்து விட்டான் ஆனால் இதயம் ஓட்டம் பிடித்தது.
" ஏய்.... " என்ற ஒரு அதிகார குரல் கேட்டதும் பக்கென இருந்தது, முகத்தை மாற்றிக் கொண்டு சாதாரணமாக திரும்பினான்.