Santhana Krishna
புதிய முகம்
உன்னைப்பற்றி வர்ணிக்க வார்த்தைகள் ஏது?
நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையும் ஏது?
காலையில் நான் காணும் முதல் காட்சியும் நீ தான் !
இரவில் நான் உயிரோடு இருந்ததற்கு கடைசி சாட்சியும் நீ தான் !
உன்னைத் தொட்டுப் பார்க்கும்போது என் மனம் குதூகலிக்கும் !
உன்னைப் படித்து முடித்ததும் என் மனம் பரிதவிக்கும் !
எங்கெங்கு சென்றாலும் என் உறவாய் நீ வருவாய் !
என் கைப்பைக்குள்ளும் கட்சிதமாய் கையடக்க வடிவில் நீ அமர்வாய் !
குடும்பமாய் வாழும் யுக்தியையும் கற்றுத்தந்தாய் !
தனித்து வாழவும் தைரியம் தந்தாய் !
என் கேள்விக்கெல்லாம் பதிலளித்தாய் !
என் வாழ்வியலுக்கு வழி மொழிந்தாய் !
பிள்ளைகளை சுமக்கும் சுகம் உன்னை சுமந்ததிலே உணர்ந்தேன் !
கண்ணை விட்டு எடுக்காமல் உன்னை படித்து முடித்தேன் கனவிலும் !
உலகம் என்ன என்று என் கண் முன் காட்டினாய் !
அதில் நான் யார் என்று என் கருத்தில் நிறுத்தினாய் !
காத்திருப்பேன் காதலனாய் உன் வரவிற்க்காக !
கண்டதும் நான் மறந்திருப்பேன் என் உறவுகளையே !
எல்லாப் பொழுதும் என்னுடன் நீயிருக்க
பொல்லாத பொழுதென்று ஏதொன்றும் இல்லை !
பொருளாக நினைத்திருந்தால் போதும் என்று நினைத்திருப்பேன் !
என் உயிராக நினைத்துவிட்டேன் எளிதில் உன்னை விட மாட்டேன் !
என் அன்பின் பாத்திரமே- நீ பத்திரமாய் இருக்க
மாடியில் உனக்கொரு மாளிகை கட்டிவிடுவேன் வரும்காலத்தில் வட்டிக்கு பணம் வாங்கியாவது.....
நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையும் ஏது?
காலையில் நான் காணும் முதல் காட்சியும் நீ தான் !
இரவில் நான் உயிரோடு இருந்ததற்கு கடைசி சாட்சியும் நீ தான் !
உன்னைத் தொட்டுப் பார்க்கும்போது என் மனம் குதூகலிக்கும் !
உன்னைப் படித்து முடித்ததும் என் மனம் பரிதவிக்கும் !
எங்கெங்கு சென்றாலும் என் உறவாய் நீ வருவாய் !
என் கைப்பைக்குள்ளும் கட்சிதமாய் கையடக்க வடிவில் நீ அமர்வாய் !
குடும்பமாய் வாழும் யுக்தியையும் கற்றுத்தந்தாய் !
தனித்து வாழவும் தைரியம் தந்தாய் !
என் கேள்விக்கெல்லாம் பதிலளித்தாய் !
என் வாழ்வியலுக்கு வழி மொழிந்தாய் !
பிள்ளைகளை சுமக்கும் சுகம் உன்னை சுமந்ததிலே உணர்ந்தேன் !
கண்ணை விட்டு எடுக்காமல் உன்னை படித்து முடித்தேன் கனவிலும் !
உலகம் என்ன என்று என் கண் முன் காட்டினாய் !
அதில் நான் யார் என்று என் கருத்தில் நிறுத்தினாய் !
காத்திருப்பேன் காதலனாய் உன் வரவிற்க்காக !
கண்டதும் நான் மறந்திருப்பேன் என் உறவுகளையே !
எல்லாப் பொழுதும் என்னுடன் நீயிருக்க
பொல்லாத பொழுதென்று ஏதொன்றும் இல்லை !
பொருளாக நினைத்திருந்தால் போதும் என்று நினைத்திருப்பேன் !
என் உயிராக நினைத்துவிட்டேன் எளிதில் உன்னை விட மாட்டேன் !
என் அன்பின் பாத்திரமே- நீ பத்திரமாய் இருக்க
மாடியில் உனக்கொரு மாளிகை கட்டிவிடுவேன் வரும்காலத்தில் வட்டிக்கு பணம் வாங்கியாவது.....
Last edited: