• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலரே... Anamika 41 அத்தியாயம் அ6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
ஆன்டி ஹீரோ ஹீரோயின் கதை நால திருவிளா
அலங்கரித்த சோலைவனத்து மலரே...
Anamika 41
அத்தியாயம் 30

சக்தியின் தோளில் சாய்ந்திருந்தாள்..மீனாட்சியின் தந்தை வீட்டுக்கு வந்து ஒருவாரம் ஆகியிருந்தது மீனாட்சியின் தந்தை மட்டுமல்ல தம்பியும் அவரது மேனைவி பிள்ளைகள் என்றும் மீனாட்சியின் அக்கா அவரது கணவர் குழந்தைகள் எல்லோருமே வைஷுவிற்கு இதுவரை காணாதே பாசத்தை அவளுக்குத் திகட்டத் திகட்ட கொடுத்தனர்.

மீனாட்சியின் அக்காக்கும் தம்பிக்குமே பெண் பிள்ளை இல்லை அதனாலும் இன்னும் பாசத்தை அள்ளி கொடுத்தனர் அவள் கர்ப்பம் மூன்று குழந்தைகள் என்று அறிந்தும் மேலும் அவளைத் தாங்கினார்கள்..

அக்கா அக்கா என்று அவளை சுற்றும் பிள்ளைகளிடம் விரும்பியே தொலைந்தாள்..

அவளுக்கோ அத்தனை சந்தோஷம் ..
சக்தி இங்கு விட்டுச் சென்றவன் இன்று தான் வந்திருக்கிறான் ...
அவனிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்


ராஜேஸ்வரிக்கு நிறைய மனசு வலித்தது
மீனாட்சி அருமையானவர் ...தொலைத்த சந்தர்ப்பங்கள் எத்தனை தான் செய்தது மற்றுமின்றி மகன் செய்தது இன்றுமே வலித்தது..

சக்தியின் காட்டுப் பங்களா தீ பற்றிருந்தது ..வைஷாலி வானதி கதிர் மூவருக்குமே தன்னை தானே விடுவிக்க முடியவில்லை

வைஷாலியின் நிலையோ இதிலே எறிந்து சாவது மேல் என்று
வானதிக்கும் அதை எண்ணம் தான்..
சக்திக்குத் தகவல் அறிந்து இங்கு வந்து பார்க்கும் போது எல்லாமே எரிந்து முடியும் தறுவாயிலே அவனது தலையிலே ஒருவன் அடித்திருந்தான் .சக்தி பின்னால் திரும்பினான் முகம் தெரியாத ஒருவன் நின்றிருக்க அவன் பின் பல பேர் இருந்தார்கள்..

சக்தி அத்தனை பேரையுமே அடித்து வீழ்த்திடத் தயாராகினான் ..
அடிக்க அடிக்க எழுந்து வந்தான் கள்..அவர்கள் அத்தனை பேருமே போதை ஏற்றிருந்தார்கள்..

சில மணித்துளிகளில் எவ்வாறோ கதிர் வெளியிலே வந்திருந்தான் வானதியும் தான் ..வானதியும் அவளுக்கு முடிந்த மற்றும் சிலரைத் தாக்கினாள். கதிரும் அடிக்க சக்தியின் தலையிலே இரத்தம் சிந்தத் தொடங்கிருந்தது..

அத்தனை பேரையும் அடித்து ஓய்ந்தாள் கௌதமோ திக்கி திணறி ஏதோ சொல்ல யாருக்குமே புரிய வில்லை ..

சக்தி அவனது வாய் அசைவிலே கண்டுகொண்டான்..வைஷாலியை அங்கிருந்து கடத்திருக்கலாம் என்று கௌதமும் நல்லவன் தான் தவறான நண்பர்களின் பழக்கத்தால் அவர்களது தவறான பழக்கத்திற்குள் போதை அதிகமாகி போனதால் தவறு செய்வதை அறியாமல் வீழ்ந்து போனவனுக்குப் போதை தெளிந்த பின் தவறு செய்ததே நினைவிலே இல்லை தன் மேலும் நண்பர்கள் மேலும் தவறு என்று குற்றம் சாற்றும் போது பொய் என்றும் நண்பர்கள் மேல் அதிக நம்பிக்கையிலுமே தான் அவர்களை வெளியில் எடுத்திருந்தான் பாண்டியனுடனுமே பகையை வளர்த்தது தன் மேலும் நண்பர்கள் மேலிருந்து நம்பிக்கையாலுமே தான்..

ஹேமா மேல் உயிரையே வைத்திருந்தான் ..அவள் மரணிக்கும் முன் சக்தியோடு பேச்சிருந்தாள் அவன் தான் இவளது மரணத்திற்குச் சக்தி தான் காரணம் என்று பலி தீர்த்திட நினைத்து அத்தனையும் செய்து விட்டான் ..

ஆனால் பிள்ளைகள் வளர வளரத் தான் தன் தோழர்கள் மேலும் தன் மேலும் சந்தேகம் வலு பட்டது..என்ன செய்வது காலம் கடந்தபின் தானே புத்திக்குச் சரி பிழை விளங்குகிறது..சக்தி மேல் வீணாகச் சந்தேகம் கொண்டு கதிரையும் வானதியையும் சக்தி மேல் பகையை அதிகப்படுத்தி எத்தனை தவறு செய்து விட்டான்..

சக்தி கார்த்திக்கு அழைத்து வைஷாலியை காப்பாற்றிடச் சொல்லி மயங்கிச் சரிந்து விட்டான்..
தலையில் இரத்தம் ஆறாகச் சிந்தியது

வானதியும் கதிரும் தான் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றார்கள்..

அவசர பிரிவில் சேர்க்கப்பட்டது .. கதிர் ஜானவேலுக்கு தகவல் சொன்னான் ..அவர் வந்ததும் மருத்துவர் சொன்னார். அதிக இரத்தம் சிந்தி விட்டதால் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் இரத்தம் தேவை ஏற்ற வில்லை எனில் கோமாக்கு செல்ல வாய்ப்பு உண்டு எனச் சொல்லப்பட்டதுமே ஜானவேல் தவித்துப் போனார்..


இரத்தம் தேவை எனப் பலவிதமாய் ஏற்பாடு செய்தார் ...

தகவல் கேள்விப் பட்டு கணேசனும் ராஜேஸ்வரி அவர்கள் பிள்ளைகள் அனைவருமே வந்திருந்தனர்..

வைஷு இருக்கும் இடம் இவர்கள் யாருக்குமே தெரிந்திருக்க வில்லை சக்திக்கு இரத்தம் தேவை என்று விளம்பரம் அதிகம் அதிகமாகப் போட்டிருந்தனர்..

மணி வைஷு கேட்டால் என்று மாங்காய் பறித்து வரச் சென்றவர் வழியில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததைப் படித்து விட்டுப் பயந்து போனவர் ஓடோடி வீட்டுக்கு வர அந்நேரம் எப்போதுமே தூங்கி இருப்பாள் வைஷு ..
மணியோ மருமகளிடம் ஓடோடி வந்து பார்த்ததைச் சொன்னவர் பயத்துடன் வைஷு அறைக் கதவைப் பார்த்தார்.. அந்நேரம் வைஷுவின் அறையில் ஏதோ சப்தம் கேட்டு இருவருமே பயந்து உள்ளே சென்று போய் பார்த்தார்கள் வைஷு ஆழ்ந்த தூக்கத்தில் தான் இருந்தாள்..

மணி மகனை அவசரமாய் வரவைத்து வைஷுவையும் ஒன்றுமே சொல்லாது அழைத்துச் சென்றார் மகள், மருமகன் பிள்ளைகள், மகன் மருமகள் பிள்ளைகள் என்று அனைவரையும் அழைத்துக்கொண்டே புறப்பட்டு விட்டார்..

சாலை ஓரம் கடைகள் எங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது

ஹாஸ்பிடல் வளாகத்தில் வண்டியை நிறுத்தினார்.. வைஷுவோ நல்ல தூக்கம் ..வரும்போதே தூங்க மாத்திரை கொடுத்துத் தான் அழைத்தே வந்திருந்தார் மணி எங்கேனும் சக்தியின் சுவரொட்டியைக் கண்டு ஆபத்தாகிடக் கூடாது என நினைத்தே செய்திருந்தார்..

வைஷுவை எழுப்பாது பாதுகாப்பாக மீனாட்சி அக்கா இருந்துகொண்டார்....

மணி முன்னால் செல்ல பின்னால் மற்றவர்கள் சென்றார்கள்..

மணியை கண்டு விட்ட கணேஷனோ ராஜேஸ்வரிக்கு கை தட்டி கண்ணால் காட்டினார்.. ராஜேஸ்வரிக்கோ அவர் தன் மகளைக்கேட்டாளோ தன் மகளின் வாரிசைப் பற்றிக் கேட்டால் எண்ணாகுமோ என்று பயந்து போனார்..

மணியோ ஜானவேல் அருகில் வந்து தம்பிக்கு மருத்துவர் என்னே சொன்னாங்கே பா தம்பிக்கு இரத்தம் வேண்டுமாமே பா என் இரத்தமும் என் புள்ளைங்க இரத்தமும் அதே தான் பா நங்கே கொடுக்கலாமா பா என்று கேட்டார்..

ஜானவேலுக்கோ உயிரே கிடைத்த நிம்மதி அவசரத்திற்கு அதே இரத்தம் கிடைக்குமா ஏங்குமே அவசரத்திற்கு இரத்தம் கிடைக்கத் தான் இல்லை

இப்போது மணி சொன்னது கேட்டவரோ உன்மையாவா நீங்க ..நீங்க யாருனே தெரியலையே என் பயனைத் தெரியுமா என்று கேட்டார்..

நான் கிராமத்தில் இருந்து வந்திருக்கிறேன் ..
சக்தி தம்பியும் வைஷு மாவும் என் வீட்டில் தான் இருதாங்கே வைஷுமா வையுமே அழைத்துக்கொண்டுதான் வந்திருக்கிறேன் பெரிய மகள் கூடே இருக்கிறாள் வாகனத்தில்

இப்போது கொடுக்கலாமா

மருத்துவரிடம் சொல்லப் பட்டது மணியும் அவரது மகனும் மகனது மூத்த மகனும் இழைய மகன் என்று எல்லோரும் கொடுக்க முதலில் எல்லோரது இரத்தமும் செக் செய்யப்பட்டது .. எந்தவித நோய் நொடி எதுவுமே இல்லை என்று எல்லாமே செக் செய்த பின் இரத்தம் ஏத்தினர் ..

வைஷுவோ முழிப்பு வந்து கண் முன் குமாரைக் கண்டு விட்டு மெதுவாகக் காரை விட்டு இரங்கி அவரது பின் நடந்தாள்
மீனாட்சி அக்காவோ அவளுக்குப் பசிக்குச் சாப்பாடு வாங்கி வரச் சென்றிருந்தார்..

வைஷு குமாரது பின்னால் வருவதை ராஜேஸ்வரி தான் கண்டு விட்டார்..
கணேசனைத் தட்டி காட்டி விட யாருக்குமே என்ன செய்வது என்றே புரியாத நிலை

வைஷுவோ மீனாட்சி தம்பியினதும் அக்காயினதும் பிள்ளைகளிடம் வந்து

இங்கே ஏன் வந்திருக்கிறோம் என்று கேட்டவளது பார்வை சக்தி அட்மிட் ஆன அறையில் பட்டது ..அவ்வறை நோக்கிச் சென்றவள் கதவின் கீழ் ஏதோ கண்டு விட்டு முடியாமல் குனிந்து எடுக்க முயன்றால் குனிந்திடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போதே மீனாட்சி அக்கா மகனில் ஒருவன் வந்து எடுத்துக் கொடுத்தான் ..

அவளோ அவனது தலையைத் தடவி விட்டுச் சிரித்து விட்டு அதைப் பார்த்தாள் அது சக்தியின் வாகனம் சாவி மாமூடே இங்க எப்படி என்று கேட்டுக் கொண்டிருக்கையிலே சக்தியின் அறையிலிருந்து வந்த மருத்துவர் இப்போது அவருக்கு இரத்தம் ஏற்றிற்று இருக்கிறது எப்படியும் 24மணி நேரம் ஆகும் எதுவேணாலும் நடக்கும் என்று சொல்லிச் சென்றிருந்தார்..

வைஷுவோ என்நாச்சு யாருக்கு என்னே இங்கே ஏன் எல்லாரும் இருக்கிறீர்கள்.எல்லாருமே இருக்கிறீர்கள் மீனாம்மா எங்கே என்று கேட்ட போது அனைவருமே அவளைத் தான் பார்த்திருந்தார்கள் ..மாமூ வந்தால் போனார்கள் மாமூடே வாகனம் சாவி இங்கே எப்படி என்று கேட்டு நின்றவள் மனதிலே சிறு சிறு வலியும் அடி வயிற்றிலும் சிறு சிறு வலி வந்து வந்து போனது சக்தியின் அறையிலே இருந்து வெளியிலே வந்த தாதி பெண் கதவைச் சரியாக மூடாது சென்று விட வைகோவின் பார்வை அவ்வறையில் படுத்தவற்றைத் தான் தொட்டு மீண்டன வைஷு அவ்வறை நோக்கிச் சென்றவளை யாரும் தடுக்கும் வழி மறந்து நின்று விட்டார்கள்.. பெண்ணாவாளும் கால் பக்கம் நின்றுகொண்டாள் ..அவளது கைப்பற்று சக்தியின் கையில் அசைவு அவள் அதைக் காண வில்லை ..ஆனால் வயிற்றில் அசைவுகள் தெரிந்தது ..பெண்ணாவாளோ முகம் அருகினில் வந்து விட்டு முகத்தைக்கண்டு மாமூ மாமூ என்னை மறந்துகொண்டு படுத்திருக்கிறிங்க மாமூ நான் நான் கேட்டேன் மணி தாத்தா சொன்னதையும் கேட்டேன் ..மாமி கொடுத்ததை நான் குடிக்கவே இல்லை தெரியுமா மாமூ வயிறு வலிக்கிறது மாமூ அப்போது வயிறு அடிபட்டுடுச்சி நிறைய வலிக்கிறது மாமூ
மாமூ பாலைவனத்தை அலங்கரித்த சோலைவனத்து மலர் நீங்க தான் தெரியுமா? என் வாழ்க்கைப் பாலைவனம் போலத் தான் இருந்தது என் வாாழ்க்கையையே அழங்கரிச்சதே நீங்க தான் மாமூ என அவன் மேல் மயங்கிச் சரிந்த போனால் சக்தியோ பதரி எழுந்தவனோ கண்ணம்மா எனக் கத்தி விட்டான்...

மருத்துவர்களும் குடும்பத்தினரும் உள்ளே வரும்போது சக்தி எழுந்திருந்தான் பெண்ணாவாளைத் தூக்கக் கால்கள் இரத்தமாகி இருந்தது வைஷுவை அவசர சத்திர சிகிச்சை பிறிவிற்குச் சேர்க்கப்பட்டது ..
சக்திக்குப் பரிசோதனை பண்ண கொண்டிருந்தது அவனோ அதற்கு இடம் தர வில்லை ..மயக்க ஊசி ஏற்றி அவனுக்கான பரிசோதனை நிகழ்த்தினர்..

கார்த்திக் வைஷாலியை அடத்தி வைத்திருந்த இடத்திற்குச் சென்றார்..அங்கு அடி ஆட்களை தன் ஆட்களுடன் சேர்ந்தும் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்..

அவருடன் கதிரும் வந்திருந்தான் ...அனைவரையும் அடித்து விலாசி விட்டு அங்கிருந்த போதை பொருள்காணப் பொருள்கள் எல்லா வற்றையுமே அடித்து நொறுக்கி விட்டு சுரங்க அறை ஒன்றிலே இருந்து வைஷாயை மீட்டு எடுத்து நடக்கையில் அவரது தலையில் அடி வீழ்ந்தது வைஷாலியை தவற விடப் போனவளைக் கதிரிடம் கொடுத்தவரோ இவளே அழைத்துக்கொண்டு போ என்றார்..
நீங்கச் சேர்
டேய் இந்த முகரை போல எத்தனை டா நானும் தூக்கத் தூக்க முளைக்குதுங்கே சொன்னானிது வரை தேடிக்கொண்டிருந்த போதை கடத்தல் தலைவன் காயத்திரியின் கணவன்

டேய் போ
என்னைப் பார்க்காதே இவனுக்கும் எனக்கும் பாக்கி இருக்கிறது இவனை முடிக்காமல் நான் சாக மாட்டேன் என்றவரைப் பார்த்துச் சேர் சக்தி சார்க்கு என்ன பதில் சொல்கிறது
சொல்லு நான் எப்பேயும் கூடவே தான் இருப்பேனும்

ம் என்று சென்று விட்டான் ..முன்னால் இருந்தவனைப் பார்த்தவர் டேய் என அடித்திட அவனோ தூரம் போய் விழுந்தான் என் அண்ணன்களை வீணா கொண்டுட்டியேடா உன்னை சும்மா விடுகிறதா இல்லை உன்னை அழித்துக்கொண்டு தான் மறு வேலை என அவனை அடித்து அடித்து அவனும் அடித்தான் அவரோ மீண்டும் மீண்டும் அடித்து அவனை மயங்கச் செய்திருந்தார்..

அவனை மயக்கத்தில் போட்டு விட்டு வெளியில் வரும்போது அக்கட்டிடமே வெடித்துச் சிதறிப் போனது

கதிரும் வைஷாலியை விட்டு அவ்விடம் வருகையில் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த கட்டிடம் தான் பட்டது
.
கார்த்திக் சார்ர்ர்ர் எனக் கத்தி விட்டான் ...

வைஷுக்கு சர்ஜரி செய்து குழந்தைகளை மீட்டனர் பிள்ளைகள் மூச்சென்றிருந்ததால் இங்குப் பெட்டியில் வைக்கப்பட்டது ..வைஷுவுமே மயங்கியிருந்தாள் ..

அவளது மயக்கம் தொழிய குடும்பத்தினரைப் பேசச் சொல்லப்பட்டது ..யார் யாரோ அவளிடம் பேசியும் முழித்தால் இல்லை ..அவளோ சக்தி தன்னை விட்டுச் சென்று விட்டால்தானும் போக வேண்டும் என்ற நிலைக்குச் சென்றிருந்தாள்..

அங்குப் பரபரப்பு தொத்தியதும் எல்லோரும் பார்த்தனர் மீனாட்சி தான் வந்தார்.. அவரை கண்டதுமே குமார் எழுந்து விட்டார்.. மீனாட்சி யாரையுமே நிமிர்ந்தே பார்க்க வில்லை ..வைஷுவின் அறைக்குச் சென்றவரோ அவளது கையை பிடித்துக் கொண்டு செல்லம் யார் வந்திருக்கிறேன் பாறேன் நான் உன் அம்மாடா செல்லம் அம்மாவை பார்க்கமாட்டாயா கண்திறந்து தான் பாறேன் செல்லம் அம்மாவை பிடிக்கவில்லையா டா என்று பேசப் பேச கண்ணீர்த் துளிகள் அவள் கையை நனைத்தது அவரது அவ்வார்த்தைகள் அவளைப் பாதித்தனவோ கண்ணிலிருந்து கண்ணீர் வீழ்ந்தது ..சக்திக்கு கார்த்திக்கின் நிலை புரிந்தனவோ திடுக்கிட்டு எழுந்தான் ..நீங்களும் விட்டு போய்விட்டீர்களா என அரட்டினான்.. அவனது பேச்சு சப்தம் கேட்டு கணேசன் வந்தவரோ தம்பி வைஷுமா கண்ணு விழிக்கவில்லை என்றதுமே எழுந்து அவளுக்குள் நுழைந்தான்..
மீனாட்சியைக் கண்டு விட்டு
உங்களுக்கு இவள் நினைவு வரலைத் தானே தூரமா போயிட்டிங்கே இவள் பாசத்துக்காக ஏங்கி ஏங்கி ஏமாந்து போரது தான் விதி போல
என்று சொல்ல
என் புள்ளை கிட்ட எந்த மூஞ்சி வச்சுகிட்டு வந்து பார்க்க இவள் கூட இருந்து மார் அனைத்துப் பால் கொடுக்கும் வரமே கிடைக்கவில்லையே
மடியிலே வைத்துக் கொஞ்சி சோறு ஊட்டும் வரமே இல்ல நான் பாவி நான் எந்த முகத்தை வசு வர என்று கேட்டே கதறி விட்டார். அவர் பேசியது வைஷுக்கு கேட்டதோ வெளியிலே அனைவருக்குமே கேட்டது ..

கண்ணம்மா கண்ணம்மா நான் நல்லா இருக்கேன்டா நீ என்னை விட்டுப் போக நினைக்றல்லடா
என் மேல் கோவமா இரிக்கியா டா அதக்கு தண்டிக்கிறாயா டா. எனக்கு நீ தான் உயிர் மூச்சடி நீ இல்லை என்றால் எதுவுமே இல்லை கண்ணம்மா என அழுதே விட்டான் ..வந்து என்னை தண்டிச்சுடா தடி கண்ணம்மா என அழுதவனை வேடிக்கை பார்க்க விரும்பாதவளோ விழித்தவளோ அவனை அருகிலே அழைத்திருந்தாள்..

மாமூ மாமூ அம்மா அம்மா..எனக்கு ..எனக்கு ..மீனாம் மாவா?

ம்ம் என்றான் புன்னகையுடனும் அழுகையுடனும்..

வைஷுவோ மீனாட்சியைப் பார்த்து ம்மா எங்கேயும் போகக்கூடாது..
ம் இல்லை டா நான் போகல என்று சொல்லி அழுகையோடு சிரித்தார்..
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
அருமை சகி👌👌👌👌
வைஷுக்கு மீனாட்சிதான் அம்மான்னு தெரிஞ்சிடிச்சு😬😬😬
மூனு குட்டீஸும் பிறந்தாச்சு 🤩🤩🤩
இனிமே எல்லாம் ஹப்பிதானே😁😁😁
 




DhruvAathavi

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
211
Reaction score
303
Location
Kanchipuram
Superrrr....

Find vishu🧐🧐

Three baby's...

Nice going...

Oru ammava antha fella solie azhutha place sema..

Roma bonding ka iruthathu...

Finally title kana meaning solitiga... 😇
Waiting for next epi
 




Last edited:

அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
அருமை சகி👌👌👌👌
வைஷுக்கு மீனாட்சிதான் அம்மான்னு தெரிஞ்சிடிச்சு😬😬😬
மூனு குட்டீஸும் பிறந்தாச்சு 🤩🤩🤩
இனிமே எல்லாம் ஹப்பிதானே😁😁😁
நன்றி நன்றி 😍😍
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அப்ப இப்ப எல்லாரும் ஹேப்பி🤩🤩🤩

அந்த தலைவன், காயத்திரி கணவன் ஆ????

அவங்க கிட்ட தானே வைஷு வளர்ந்த???

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
அப்ப இப்ப எல்லாரும் ஹேப்பி🤩🤩🤩

அந்த தலைவன், காயத்திரி கணவன் ஆ????

அவங்க கிட்ட தானே வைஷு வளர்ந்த???

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
நன்றி மா😍😍😘
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
மீனா ம்மா தான் அம்மா னு வைஷு க்கு தெரிஞ்சிடுச்சு.... 🥰

வைஷு க்கும் ஒன்னும் ஆகல....
சக்தி க்கு சரியாயாகிடுச்சு.... 😌

இனிமே ஒன்னாவே இருங்க ப்பா.... 😊
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top