vasumathi karunanidhi
மண்டலாதிபதி
இடம் : பூமி..
ம்மா என்று கத்தியபடி தன்னை கட்டிக்கொண்ட குழந்தையைக் கண்டு திகைத்துப்போனாள் யுவஸ்ரீ..
தன் கால்களை குழந்தை கட்டிக்கொண்டிருந்த தினுசில் ஒரு நொடி நெகிழ்ந்து பின் தெளிந்தவள் தன்னிடமிருந்து குழந்தையைப் பிரித்தெடுத்து, “வாட் இஸ் யுவர் நேம்..??”, என்று கேட்டாள்..
“என்னமா பேசற நீ..?? எனக்கு புரியலையே..”, என்றது குழந்தை..
அவள் கேட்ட தினுசில் திருத்திருத்த யுவஸ்ரீ உடைந்த தமிழில், “உன் பெயர் என்ன..??”, என்று கேட்டாள் குழந்தையிடம்..
“ஹான்.. என்னம்மா நீ..?? என் பேர் மறந்து போச்சா.. அச்சோ..”, என்று தன்னைத் தானே தலையில் அடித்துக்கொண்டு குனிந்திருந்த யுவஸ்ரீயின் தலையிலும் ஒரு கொட்டு வைத்து, “வசிஷ்டரா..”, என்றது..
“நைஸ் நேம்..”, என்ற யுவஸ்ரீ வசிஷ்ட்ராவின் ஒரு லேசான துணியில் உடை அணிந்திருப்பது கண்டு பதறி, “நீ ஏன் கூல் ஜாக்கெட் போடல..??”, என்று கேட்டாள்..
“கூல் ஜாக்கேட்டா..?? அப்படி என்றால் என்ன..??”, என்று கேட்டவள், “ம்மா.. நீங்க ஏன் இவ்ளோ பெரிய துணி போட்ருக்கீங்க..??”, கேள்விக்கு மேல் கேள்வியாய்..
“ஸ்கின்ல யூ வீ ரேஸ் படக்கூடாதுன்னு போட்ருக்கேன்.. இது போடலீன்னா ரேஷஸ்ல இருந்து கான்சர் வரைக்கும் வரும் குட்டிப்பாப்பா..”, என்று வசிஷ்ட்ராவிற்கு விளக்கம் அளித்த யூவஸ்ரீ தன்னுடைய ஜாக்கெட்டிற்குள் குழந்தையையும் இழுத்துக்கொண்டாள்..
“குளுமையா இருக்கு ம்மா இந்த... இந்த.. ஹான்.. ஜாக்கெட்..”, என்றது குழந்தை கிளுக்கி சிரித்தபடி..
அதில் மனம் குளிர்ந்தவள், “நீ யார்கூட இங்க வந்த குட்டிமா..??”, என்று கேட்டாள்..
“நானா.. நான் நிவ்யா எல்லோன்.. நேசன் எல்லோன்.. சாகர் எல்லோன்.. ஜானு எல்லோன்.. அப்புறம் இன்னும் ஒரு ஆறு எல்லோன் கூட வந்தேன்..”
நிவ்யா நேசன் சாகர் ஜானு என்று அவள் கூறியது பெயர்கள் என்று புரிந்து கொண்ட ஸ்ரீ, “ஆமா.. இந்த எல்லோன்னா யாரு..??”, என்று கேட்டாள்..
“அதான் சொன்னேனே.. நிவ்யா எல்லோன்.. நேசன் எல்லோன்.. சாகர் எல்லோன்.. ஜானு எல்லோன்..”, என்று சொன்னதையே ரிப்பீட் அடித்தவளைக் கண்டு கண்ணைக்கட்டியது ஸ்ரீக்கு..
தலை உலுக்கியவள், “நிவ்யா நேசன் ஜானு இவங்கெல்லாம் எங்கே குட்டி..??”
“அவங்க அதோ..”, என்றபடி ஒரு பாதையைக் காட்டியவள், “அங்கிருக்க ஒரு சுவரில் அமர்ந்திருக்கின்றனர்..”, என்றாள்..
வசிஷ்ட்ராவை அணைத்தவாறு பிடித்த ஸ்ரீ அவள் காட்டிய பாதையில் நடக்கத் துவங்கினாள்..
ரொம்ப நேரமாக வசியைத் தேடிக்கொண்டிருந்த நிவ்யா அவள் ஒரு பெண்ணுடன் வருவது கண்டு அவசரமாக எங்கே போனே வசீ என்று இருவரையும் நெருங்கினாள்..
“தெரியாமல் ரோட் சைட் வந்துவிட்டாள் இவள்..”, என்ற ஸ்ரீயை அப்பொழுது தான் உற்றுப் பார்த்த நிவ்யாவின் இதழ்கள் திருஷ்டி என்று மெலிதாய் முனுமுனுத்தது..
நிவ்யா எதுவோ முனுமுனுப்பது கண்டு, “என்ன சொன்னீங்க..??”, என்று கேட்டாள் ஸ்ரீ..
“ஒன்றும் இல்லை..”, என்ற நிவ்யா, “இவளை எங்களிடம் அழைத்து வந்ததற்கு நன்றி..”, என்றுவிட்டு வசிஷ்ட்ராவை தன்னிடம் லேசாக இழுத்தாள்..
ஆனால் குழந்தையோ ஸ்ரீயிடம் ஒட்டிக்கொண்டு நிவ்யாவிடம் போக மறுத்தது..
அதை ஒரு இயலாமையுடன் பார்த்த நிவ்யா ஸ்ரீ கேள்வி கேட்கும் முன்பே, “இவளது அன்னை அச்சு அசல் உங்களைப் போல் தான் இருப்பார்.. அதனால் குழந்தை உங்களிடம் ஒட்டுகிறது..”, என்றாள் நிவ்யா..
புரிகிறது என்பது போல் தலையசைத்த ஸ்ரீ, “என் பெயர் யூவஸ்ரீ.. நீங்கள்..??”, கேள்வியாய்..
“நான் நிவ்யா.. இவள் அன்னையின் சகோதரி..”, இன்ஸ்டண்டாய் பொய் உரைத்தாள் நிவ்யா..
“குட்டி பத்து பேர் இருப்பதாக சொன்னாலே.. யாரையும் காணோமே..??”, கேள்வியாய்..
“இவளைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார்கள்..”, என்றவள், “ஜானு.. வசீ கிடைத்துவிட்டாள்.. எங்கே இருக்கீங்க..”, என்று குரல் கொடுத்தார்..
அங்கொருவர் இங்கொருவராய் வந்து சேர்ந்தனர் பெண்கள் எட்டு பேரும்..
நேசனும் சாகரும் இல்லாதது கண்டு ஜானுவிடம், “ஆமாம் இந்த சாகரும் நேசனும் எங்கே..??”, என்று கேட்டார்..
அடுத்தநொடி இரு திசையில் இருந்து அம்மா.. ஐயோ.. என்று சத்தங்கள் ஆண்களிடமிருந்து..
வலப்பக்கம் அவசரமாக சென்ற ஜானுவும் நிவ்யாவும் அங்கு நேசன் அடிப்பட்டிருப்பது கண்டு, “கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் நாம் நினைத்தது போல் அப்பெண் வசியை அழைத்துக்கொண்டு நம்மை நோக்கி வந்துவிட்டாள்.. அவள் மூலமாக எப்படியாவது மக்கள் நடமாடும் இடம் சென்றுவிடலாம்..”, என்றாள் நிவ்யா..
“வலி ஒன்றும் எனக்கு பெரிதாக இல்லை..”, என்ற நேசன், “வசியும் அந்தப் பெண்ணும் எங்கே..??”, என்று கேட்டார்..
“சாகர் இருக்கும் இடம் சென்றிருக்கிறாள்.. வாருங்கள் நாம் அவர்களைக் காணச்செல்லலாம்..”, என்றாள் ஜானு ஏதோ சாதித்து விட்ட புன்னகையுடன்..
ஆம்.. சாதித்து விட்ட புன்னகைதான் அது..
ம்மா என்று கத்தியபடி தன்னை கட்டிக்கொண்ட குழந்தையைக் கண்டு திகைத்துப்போனாள் யுவஸ்ரீ..
தன் கால்களை குழந்தை கட்டிக்கொண்டிருந்த தினுசில் ஒரு நொடி நெகிழ்ந்து பின் தெளிந்தவள் தன்னிடமிருந்து குழந்தையைப் பிரித்தெடுத்து, “வாட் இஸ் யுவர் நேம்..??”, என்று கேட்டாள்..
“என்னமா பேசற நீ..?? எனக்கு புரியலையே..”, என்றது குழந்தை..
அவள் கேட்ட தினுசில் திருத்திருத்த யுவஸ்ரீ உடைந்த தமிழில், “உன் பெயர் என்ன..??”, என்று கேட்டாள் குழந்தையிடம்..
“ஹான்.. என்னம்மா நீ..?? என் பேர் மறந்து போச்சா.. அச்சோ..”, என்று தன்னைத் தானே தலையில் அடித்துக்கொண்டு குனிந்திருந்த யுவஸ்ரீயின் தலையிலும் ஒரு கொட்டு வைத்து, “வசிஷ்டரா..”, என்றது..
“நைஸ் நேம்..”, என்ற யுவஸ்ரீ வசிஷ்ட்ராவின் ஒரு லேசான துணியில் உடை அணிந்திருப்பது கண்டு பதறி, “நீ ஏன் கூல் ஜாக்கெட் போடல..??”, என்று கேட்டாள்..
“கூல் ஜாக்கேட்டா..?? அப்படி என்றால் என்ன..??”, என்று கேட்டவள், “ம்மா.. நீங்க ஏன் இவ்ளோ பெரிய துணி போட்ருக்கீங்க..??”, கேள்விக்கு மேல் கேள்வியாய்..
“ஸ்கின்ல யூ வீ ரேஸ் படக்கூடாதுன்னு போட்ருக்கேன்.. இது போடலீன்னா ரேஷஸ்ல இருந்து கான்சர் வரைக்கும் வரும் குட்டிப்பாப்பா..”, என்று வசிஷ்ட்ராவிற்கு விளக்கம் அளித்த யூவஸ்ரீ தன்னுடைய ஜாக்கெட்டிற்குள் குழந்தையையும் இழுத்துக்கொண்டாள்..
“குளுமையா இருக்கு ம்மா இந்த... இந்த.. ஹான்.. ஜாக்கெட்..”, என்றது குழந்தை கிளுக்கி சிரித்தபடி..
அதில் மனம் குளிர்ந்தவள், “நீ யார்கூட இங்க வந்த குட்டிமா..??”, என்று கேட்டாள்..
“நானா.. நான் நிவ்யா எல்லோன்.. நேசன் எல்லோன்.. சாகர் எல்லோன்.. ஜானு எல்லோன்.. அப்புறம் இன்னும் ஒரு ஆறு எல்லோன் கூட வந்தேன்..”
நிவ்யா நேசன் சாகர் ஜானு என்று அவள் கூறியது பெயர்கள் என்று புரிந்து கொண்ட ஸ்ரீ, “ஆமா.. இந்த எல்லோன்னா யாரு..??”, என்று கேட்டாள்..
“அதான் சொன்னேனே.. நிவ்யா எல்லோன்.. நேசன் எல்லோன்.. சாகர் எல்லோன்.. ஜானு எல்லோன்..”, என்று சொன்னதையே ரிப்பீட் அடித்தவளைக் கண்டு கண்ணைக்கட்டியது ஸ்ரீக்கு..
தலை உலுக்கியவள், “நிவ்யா நேசன் ஜானு இவங்கெல்லாம் எங்கே குட்டி..??”
“அவங்க அதோ..”, என்றபடி ஒரு பாதையைக் காட்டியவள், “அங்கிருக்க ஒரு சுவரில் அமர்ந்திருக்கின்றனர்..”, என்றாள்..
வசிஷ்ட்ராவை அணைத்தவாறு பிடித்த ஸ்ரீ அவள் காட்டிய பாதையில் நடக்கத் துவங்கினாள்..
ரொம்ப நேரமாக வசியைத் தேடிக்கொண்டிருந்த நிவ்யா அவள் ஒரு பெண்ணுடன் வருவது கண்டு அவசரமாக எங்கே போனே வசீ என்று இருவரையும் நெருங்கினாள்..
“தெரியாமல் ரோட் சைட் வந்துவிட்டாள் இவள்..”, என்ற ஸ்ரீயை அப்பொழுது தான் உற்றுப் பார்த்த நிவ்யாவின் இதழ்கள் திருஷ்டி என்று மெலிதாய் முனுமுனுத்தது..
நிவ்யா எதுவோ முனுமுனுப்பது கண்டு, “என்ன சொன்னீங்க..??”, என்று கேட்டாள் ஸ்ரீ..
“ஒன்றும் இல்லை..”, என்ற நிவ்யா, “இவளை எங்களிடம் அழைத்து வந்ததற்கு நன்றி..”, என்றுவிட்டு வசிஷ்ட்ராவை தன்னிடம் லேசாக இழுத்தாள்..
ஆனால் குழந்தையோ ஸ்ரீயிடம் ஒட்டிக்கொண்டு நிவ்யாவிடம் போக மறுத்தது..
அதை ஒரு இயலாமையுடன் பார்த்த நிவ்யா ஸ்ரீ கேள்வி கேட்கும் முன்பே, “இவளது அன்னை அச்சு அசல் உங்களைப் போல் தான் இருப்பார்.. அதனால் குழந்தை உங்களிடம் ஒட்டுகிறது..”, என்றாள் நிவ்யா..
புரிகிறது என்பது போல் தலையசைத்த ஸ்ரீ, “என் பெயர் யூவஸ்ரீ.. நீங்கள்..??”, கேள்வியாய்..
“நான் நிவ்யா.. இவள் அன்னையின் சகோதரி..”, இன்ஸ்டண்டாய் பொய் உரைத்தாள் நிவ்யா..
“குட்டி பத்து பேர் இருப்பதாக சொன்னாலே.. யாரையும் காணோமே..??”, கேள்வியாய்..
“இவளைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார்கள்..”, என்றவள், “ஜானு.. வசீ கிடைத்துவிட்டாள்.. எங்கே இருக்கீங்க..”, என்று குரல் கொடுத்தார்..
அங்கொருவர் இங்கொருவராய் வந்து சேர்ந்தனர் பெண்கள் எட்டு பேரும்..
நேசனும் சாகரும் இல்லாதது கண்டு ஜானுவிடம், “ஆமாம் இந்த சாகரும் நேசனும் எங்கே..??”, என்று கேட்டார்..
அடுத்தநொடி இரு திசையில் இருந்து அம்மா.. ஐயோ.. என்று சத்தங்கள் ஆண்களிடமிருந்து..
வலப்பக்கம் அவசரமாக சென்ற ஜானுவும் நிவ்யாவும் அங்கு நேசன் அடிப்பட்டிருப்பது கண்டு, “கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் நாம் நினைத்தது போல் அப்பெண் வசியை அழைத்துக்கொண்டு நம்மை நோக்கி வந்துவிட்டாள்.. அவள் மூலமாக எப்படியாவது மக்கள் நடமாடும் இடம் சென்றுவிடலாம்..”, என்றாள் நிவ்யா..
“வலி ஒன்றும் எனக்கு பெரிதாக இல்லை..”, என்ற நேசன், “வசியும் அந்தப் பெண்ணும் எங்கே..??”, என்று கேட்டார்..
“சாகர் இருக்கும் இடம் சென்றிருக்கிறாள்.. வாருங்கள் நாம் அவர்களைக் காணச்செல்லலாம்..”, என்றாள் ஜானு ஏதோ சாதித்து விட்ட புன்னகையுடன்..
ஆம்.. சாதித்து விட்ட புன்னகைதான் அது..