• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 49

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஆழமான வலி


ராகவின் கண்களில் அத்தனை வெறியும் கோபமும் இருந்தது.

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் தன்னை அவள் முட்டாளாக்கி இருக்கிறாள் என்று எண்ணும் போதே அவன் உள்ளமெல்லாம் கொந்தளித்து கொண்டிருந்தது.

அன்று அவளுக்கு தான் செய்த வன்கொடுமை குறித்து இந்நிலையிலும் அவன் வருந்தத் தயராக இல்லை.

அவனுக்கு அவனும் அவன் உணர்வுகள் மட்டுமே முக்கியம். அதை தாண்டி வேறெதையும் அவன் துளியளவும் மதிப்பவன் அல்ல.

அவனின் வெறியே ஜென்னி அவனின் உணர்வுகளோடு விளையாடியிருக்கிறாள் என்பதுதான்.

அப்படி இருக்கும் போது அவளை சும்மா விட தோன்றுமா அவனுக்கு ?

இப்போதும் அவள் மீதான மோகத்தீ அவனுக்கு அணைந்தபாடில்லை.

அது இன்னும் உக்கிரமாகவும் உஷ்ணமாகவும் எரிந்து கொண்டிருக்க,
அன்று அவளை நாசம் செய்தது போல் இன்னும் நூறு மடங்காய் செய்ய வேண்டும் என்று அவன் மனம் அடங்கா ஆத்திரத்தோடு பொறுமி கொண்டிருந்தது.

உள்ளூர அவள் மீதான கோபத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்காய் கூர்தீட்டி கொண்டு அவன் காத்திருக்க
அந்த சமயம் ராகவுக்கு ஜென்னியிடமிருந்து அழைப்பு வந்தது.

உடனே எடுத்து பேசியவன் "எத்தனை மணிக்கு ஏர்போர்டுக்கு வரனும் ?" என்று கேட்க,

"நீங்க வர வேண்டாம்.. நானே வந்து உங்களை மீட் பன்றேன்... " என்று உரைக்க, அவள் சுதாரித்து கொள்கிறாளோ என்று எண்ணியவன்,

"ஏன்டி திடீர்னு பிளானை மாத்திர ?"என்று கேட்டான்.

"ப்ளைட் லேட்டாகுமாம்... நீங்க எதுக்கு ஏர்போர்ட்ல வந்து வெயிட் பண்ணிட்டு... நானே வந்திடுறேன்... எங்க வரனும்னு சொல்லுங்க" என்றவள் சொல்லவும் அவளிடம் தானே வருவதாக அடம் பிடித்தால் அவளுக்கு சந்தேகம் வந்துவிடலாம் என்று எண்ணியவன்

"என் ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்திரு" என்றான்.

"டன்" என்றவள் "வந்துட்டு கால் பன்றேன்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

அவள் எப்போது வந்து சேர்வாள் என்று பித்து பிடித்தவன் போல காத்திருந்தான்.

அவனை பொறுத்துவரை அவளை உண்மையிலயே காதலித்தான். அந்த காதலை அவள் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு என்னவெல்லாம் செய்தால் என்று எண்ணும் போதே கனலாய் எறிந்து கொண்டிருந்தது அவனுக்கு.

அவளுக்கு அவன் செய்த கொடுமைகள் எல்லாம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை.

அவள் தன்னை முட்டாளக்கிவிட்டாள். அவள் தன்னை ஏமாற்றுகொண்டிருக்கிறாள். இப்படியாகவே அவன் மனம் ஓயாமல் சிந்தித்து கொண்டிருக்க, அவளுக்கு அவன் காத்திருப்பு முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனது.

அவள் வராமல் போய்விடுவாளோ என்று உள்ளூர படபடப்பாகவும் இருந்தது.

அதே நேரம் அவள் எங்கே சென்றாலும் அவளை விட கூடாது என்று அவன் சூளுரைத்து கொண்ட போது ஜென்னி வீட்டிற்குள் நுழைந்த தகவல் ராகவை வந்தடைந்தது.

அவள் அவன் அறைகதவை தட்ட,

திறந்தவன் "உள்ளே வா" என்று தன் கோபத்தை மறைத்து கொண்டு அழைக்க,

"வெளியவே உட்கார்ந்து பேசலாமே" என்றாள் அவள்.

உடனடியாக கோபத்தை காட்டிவிட கூடாது என்ற எண்ணத்தோடு "உன்கிட்ட நம்ம மேரேஜுக்கான டெக்கரெஷன் டிசைன்ஸ் லாம் காட்டனும்... வா" என்றவன் கரத்தை பற்றி அவன் உள்ளே இழுக்க, அவன் கோபத்தை காட்டிவிட கூடாதென்று எண்ணினாலும் அவன் கரம் அவள் கரத்தை இறுகபற்றியது.

அவள் கரத்தை உதறியபடி "கையை விடுங்க ராகவ்... நானே வர்றேன்" என்று ஜென்னி உள்ளே நுழைய மறுகணமே அவன் அறைகதவை மூடி தாழிட்டான்.

அவள் துணுக்குற்று திரும்பி பார்த்தாள்.

"நம்ம பெர்ஸனலா பேசும் போது யாரும் டிஸ்டர்ப் பண்ணிட கூடாது... அதுக்குதான்" என்றவன் மேலோட்டமாய் புன்னகையித்து சமாளிக்க,

"தட்ஸ் ஒகே ராகவ்" என்று எந்தவித பதட்டமுமின்றி உள்ளே நுழைந்தாள்.

அவன் தன் படுக்கையில் அமர்ந்துவிட்டு அவளிடமும் "உட்காரு ஜென்னி" என்று அருகில் அழைத்து அமரச் சொன்னான்.

அவள் எதிர்புறத்தில் நின்றபடி "டைம் இல்ல ராகவ்... நீங்க டிஸைன்ஸை காண்பிங்க... நான் கிளம்பிறேன்" என்றாள்.

"ஏன் ? இங்கே உட்கார்ந்தா பழசை எல்லாம் ஞாபகத்துக்கு வந்திருமோ ?!" என்று கூறியவன் வன்மமாய் ஒரு புன்னகையை உதட்டில் தவழவிட,

"என்ன ஞாபகம் வரும்? புரியலயே" என்றவள் முகத்தை குழப்பமாய் வைத்து கொண்டு கேட்டாள்.

அவன் எரிச்சலான பார்வையோடு ,

"இங்க என்னஆஸ்கார் அவார்டா கொடுக்கிறாங்க... இப்படி ஆக்ட் பண்ணிட்டிருக்க" என்க,

"ஆக்டிங் எல்லாம் என்னை விட உங்களுக்குதான் நல்லா வரும் ராகவ்... நான் உங்களுக்கு ஜுனியர்தான்" என்றவள் எள்ளலாய் நகைத்து கூறவும் அவனுக்கு கடுப்பானது.

"ஏய்... உன் மேட்டரெல்லாம் எனக்கு நல்லா தெரியும் டி" என்று சொல்லும் போதே

இடைமறித்தவள் "என் மேட்டரா? அதென்ன ராகவ்?" புரியாத பார்வையோடு அவள் கேட்கவும்,

அவளை கோபத்தோடு நெருங்கியவன்,

"உன் உண்மையான பேரு சாக்ஷிதானே" என்க,

"யாரு சாக்ஷி ?" என்றவள் கேட்க, உச்சபட்சமான கோபத்தை எட்டியவன் அவள் முகத்தில் பளாரென்று அறைந்துவிட்டு "என்ன கடுப்பேத்திறியா?" என்று வினவ, அவள் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் சிலையாய் சமைந்திருந்தாள்.

அவள் பார்வையில் எந்தவித உணர்வுகளும் தென்படவில்லை. அது கோபமோ வலியோ எதையுமே காட்டிக் கொள்ளாமல் அவள் வெறுமையான விழிகளோடு அவனை பார்க்க,
அவன் வியப்போடு "என்னடி ? அடிச்சிருக்கேன்... ரியாக்ட் பண்ணாம... அப்படியே மரம் மாதிரி நிற்கிற" என்று பல்லை கடித்து கொண்டு கேட்டவனை,

ஆழ்ந்து நோக்கியவளின் பார்வையில் அத்தனை சீற்றம்.

நிதானமாய் மூச்சை இழுத்துவிட்டு கொண்டவள் "நீதான் என் உணர்ச்சிகளை எல்லாம் கொன்னுட்டியே... அப்புறம்... மரம் மாதிரி நிற்காம... வேறெப்படிறா?" அவள் உதடுகள் உதிர்த்த வார்த்தைகளை விட பார்வையில் அத்தனை வெறி.

அதோடு விழிக்குள் நின்றிரூந்த கண்ணீர் எரிகுழம்போ என்றவளுக்கு அவனை சாம்பாலிக்கிட காத்திருக்க,

"அப்போ நீதான் அந்த ப்ளைன்ட் கெர்ள் சாக்ஷி... இல்ல " என்றவன் கேட்க,

"இல்லை" என்றாள் அழுத்தமாக !

"என்னடி பொய் சொல்றியா ?"

"நீதானடா சாக்ஷியை கொன்ன ? மறந்துட்டியா ?" என்றவள் கேட்டு அனலாய் அவனை பார்க்க,

குழப்பமாய் தலைமுடியை பிய்த்து கொண்டவன் "என்னடி உளறிட்டிருக்க ?" என்று வினவினான்.

"உளறல... நான் அவ இல்லைன்னு சொல்றேன்... அவளை நீ சாகடிச்சிட்டன்னு சொல்றேன்... அவ மனசை... அவ உடம்பை... அவ கனவை... அவ காதலைன்னு... எல்லாத்தையும் கொன்னுட்ட...

நவ் ஷீ இஸ் நோ மோர்... ப்ளடி பாஸ்டட்" என்று சொல்லியவளின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி சீற்றமாய் அவன் சட்டையை இழுத்து பிடித்து கொண்டு நின்றாள்.

அவள் முகத்தில் அத்தனை வேதனையும் தவிப்பும் வலியும் தெரிந்தது.

அவள் எந்தளவுக்கு காயப்பட்டிருக்கிறாள் என்பதை அவள் முகம் அப்பட்டமாய் காட்டி கொடுக்க, மெல்ல அவள் விழியிலிருந்து இறங்கி வர இருந்த கண்ணீரை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அவன் சட்டையை அவசரமாய் விடுத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அவளின் கோபம் அவன் சாக்ஷியிடம் நடந்து கொண்டதை அவன் கண்முன்னே நிறுத்த அவன் மௌனமாய் நின்றுவிட்டான்.

அவளோ தன் கண்ணீரை அந்த நொடி உள்வாங்கி கொண்டிருந்தாள். அவன் முன்னே ஒருபோதும் உடைந்துவிட கூடாதே என்றவள் தன் மனதை திடப்படுத்தி கொண்டிருக்க,

ராகவ் அவள் முன்னே வந்து நின்று "நான்தான் உன்னை ரேப் பண்ணன்னு உனக்கெப்படி தெரியும் ?" என்றவன் கேட்டு இளக்காரமாய் பார்க்க,

"சாக்ஷி ப்ளைன்ட்தான்... ஆனா அவ இயர்ஸும் ப்ரைனும் செம ஷார்ப்" என்று அவனை கூர்மையாய் பார்த்து உரைத்தவள் அவளே தொடர்ந்தாள்.

"சென்னைக்கு நான் ரீஓபனிங்காகவோ சையத்தை பார்க்கவோ வரல... ஐ கேம் ஜஸ்ட் பாஃர் யூ... அப்சானா சையத்தை பத்தி சொன்னதும் அவர் படத்தை தேடி பார்க்க போய்தான் படத்தில உன் குரலை கேட்டேன்... அப்பவே மண்டையில உறைச்சது... நீதான் அவன்னு... ஆனா வெறும் குரலை மட்டுமே வைச்சி நீதானான்னு ஸ்டிராங்கா என்னால
அப்படி யோசிக்க முடியல... உன்னை பத்தி விசாரிச்சேன்... ஆனா உன்னை பத்தி ராங்கா ஒரு விஷயம் கூட என் காதில விழல... அங்கதான் நான் கன்புஃயூஸ் ஆனான்... இவ்வளவு பெரிய ஹீரோ எப்படின்னு... அதனாலதான் உன்னை நேரடியா பார்க்கனும்னு நான் நினைச்சேன்... அதுக்காகதான் சென்னை ரீஓபனிங்கு வர ஒத்துக்கிட்டேன்... அதுக்குள் நீயா என் செகரட்டிரிக்கு கால் பண்ண... உன் முகத்தை பார்க்காம உன் குரலை கேட்க நான் விருப்பப்படல... அது இன்னும் எனக்கு பழைய விஷயங்களை ஞாபகபடுத்துமே... அதனாலதான் உன்கிட்ட பேசாம அவாயிட் பண்ணேன்... அட் தி சேம் டைம் உன்னை பார்க்க வந்தேன்... நம்ம பர்ஸ்ட் மீட்டிங்கலயே எனக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் வரல... அதுக்கப்புறம் நடந்த மீட்டிங் எல்லாமே நான் ப்ளேன் பண்ணது... ரீஓபனிங் பங்கஷன் உட்பட... அங்கதான்டா நீதான்னு கன்பர்ஃம் பண்ணேன்... நீ என் கையை பிடிச்சிட்டு தாறுமாறா பேசினியே அப்பவே நான் ஸ்டிராங்கா முடிவுபண்ணிட்டேன்... அப்புறம் சையத்தோட வந்த அன்னைக்கு என்னை நீ கிஸ் பண்ண வந்தியே... அப்போ உன் நெருக்கம் உன் மேல வீசின வாசனைன்னு முடிவே பண்ணிட்டேன்... அதுக்கப்புறம்தான் சையத் படத்தில நடிக்க ஓத்துக்கிட்டேன்... ஆனா இதுல நான் எதிர்பாராம நடந்தது நீ என்னை வீடு தேடி திரும்பியும் ரேப் பண்ண வந்தது" என்றவள் அளவில்லா கோபத்தில் நிறுத்தி அவனை பார்க்க, அவன் நடந்தவற்றை கேட்டபடி திகைப்புற்றிருந்தான்.

அவள் மேலும் "அன்னைக்கு திரும்பியும் அப்படி ஒரு நாள்... சாக்ஷி மாறி உணர்ச்சிவசப்பட கூடாது ரொம்ப கேர்புஃல்லா பொறுமையா டீல் பண்ண... ஆனா அன்னைக்கும் நீ என்னை கெஞ்ச வைச்சிட்ட... தோற்று போயிட்டோமோன்னு நினைக்கும் போதுதான்... பைத்தியகானாட்டும் காதலிக்கிறேன்னு... என் முன்னாடி வந்து நின்ன... உன்னை அடிக்கிறதுக்கான ஆயுதத்தை நீயே எடுத்து கொடுக்கும் போது அதை நான் யூஸ் பண்ணாம எப்படி விடறது " என்றவள் சொல்லி உரக்க சிரிக்க அவனுக்கு பற்றி எரிந்தது.

"நீ என் காலில் விழல... அவ்வளவேதான்... மத்தபடி நான் எப்படியெல்லாம் ஆட்டிவைச்சேனோ அப்படியெல்லாம் ஆடின" என்றவள் பரிகசித்து புன்னகையிக்க, அவன் முகமெல்லாம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.

உள்ளுர அவமானத்தில் அவன் துடித்தாலும் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டு இறங்கிய குரலில் "பைஃன்... அன்னைக்கு நான் அப்படி உன்கிட்ட நடந்திருக்க கூடாதுதான்... அது தப்புதான்... நீ வேற அன்னைக்கு என்னை ரொம்ப இரிடேட் பண்ணிட்டியா? அதனாலதான் கொஞ்சம் அரகென்ட்டா நடந்துக்கிட்டேன்... இல்லாட்டி போனா நான் அவ்வளவு மோசமானவன் எல்லாம் இல்ல" என்று சமாளிப்பாய் பேசியவன் எதற்காக அடி போடுகிறான் என்ற நோக்கம் புரியாமல் அவள் மௌனமாய் நிற்க அவன் மேலே தொடர்ந்தான்.

"அந்த இன்ஸிடென்டுக்காக நீ என்கிட்ட என்ன காம்பன்ஸேஷன் கேட்டாலும் தர்றேன்" என்று குற்றவுணர்வே இல்லாமல் அவளின் வலிக்கும் அவன் சீரழித்த அவள் பெண்மைக்கும் விலை பேச, அவளூக்கு அவனை கொன்றுவிடலாமா என்றளவுக்கு ஆத்திரம் பொங்கியது.

ஆனால் அவள் பொறுமையோடு "என்ன மாதிரியான காம்பேன்ஸேஷன் கொடுப்பீங்க மிஸ்டர். ராகவ் ?" என்றவள் எகத்தாளமாய் பார்த்து கேட்க,

"என்ன வேணா கேளு தர்றேன் ?... ஆனா இந்த பட டயலாக் மாறி என் பறிபோன கற்பை திருப்பி கொடுன்னு மொக்கையா ஏதாச்சும் கேட்காதே... கொஞ்சம் பிராடிக்க்கலா கேளு" என்று திமிரான பார்வையோடு அவன் சொல்ல,

அவனை நிதானமாய் ஏறிட்டவள்,

"யூ ஆர் ரைட்... இந்த இமோஷன்ஸ்... பீலிங்ஸ்.. இதெல்லாம் டோட்டல் வேஸ்ட்... ஸோ பிரக்கட்டிக்கலா யோசிக்கிறதுதான் பெஸ்ட்... நீயே எனக்கு என்ன காம்பன்ஸேஷன் கொடுக்க முடியும்னு சொல்லு... அதை அக்செப்ட் பண்ணிக்கிறதா வேண்டாமான்னு நான் முடிவுபண்றேன்" என்றவள் சொல்ல,
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அந்த கணமே அவளிடம் நெருக்கமாய் வந்தவன் "நான் உன்னை கல்யாண பண்ணிக்கிறேன் பேபி... அதை விட பெட்டர் காம்பென்ஸேஷன் என்ன இருக்க முடியும் ?!" என்றவன் சொல்லும் போதே அவள் மீதான காமவெறி இன்னும் அவனுக்குள் தேங்கி நின்று கொண்டிருப்பதை அவன் பார்வை பளிச்சிட்டது.

அவள் அந்த நொடி பயங்கரமாய் சிரிக்க, அவன் முகம் வெறுப்பாய் மாற தன் சிரிப்பை பிராயத்தனப்பட்டு கட்டுபடுத்தியவள்,

"என்ன ராகவ் நீ ?... பிராக்டிக்லா கேளுன்னு சொல்லிட்டு நீ இப்படி ஒரு மொக்கை கம்பன்ஸேஷனை கொடுக்கிறேங்கிற... கெடுத்தவனையே கல்யாணம் பண்ணிக்கிறதெல்லாம் ஓல்ட் ஸ்டைல்" என்றவள் சொல்ல,

அவளின் பேச்சும் செயலும் அவனுக்கு பிடிபடவேயில்லை. மீண்டும் மீண்டும் அவள் வலையில் தான் சிக்கி கொள்கிறோமோ என்று அவன் யோசித்திருக்க, அவள் அவனிடம் இருந்து நகர்ந்து வந்து

அவன் படுக்கையில் கால் மீது கால் போட்டு அமர்ந்தவள் "ரொம்ப யோசிக்காதே ராகவ்... நீ எனக்கு என்ன மாதிரியான கம்பேன்ஸேஷன் கொடுக்கனும்ங்கிறதை நான் எப்பவோ டிசைட் பண்ணிட்டேன்..." என்றாள்.

அவன் மனம் பதட்டத்தை ஆட்கொள்ள, "என்னடி அது?" என்றவன் தவிப்புற கேட்க,

"சொன்னா எப்ஃக்ட் இருக்காது... அதை பிக்சைரஸ் பண்ணாதான் நல்லா இருக்கும்" என்று அவள் அந்த அறையை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு டிவி ரிமோட்டை எடுத்து ஆன் செய்தாள்.

அவன் நகத்தை கடித்து கொண்டு என்னவென்று யூகிக்க முடியாமல் விழிகளை கூர்மையாய் மாற்றி கொண்டு பதட்டத்தின் உச்சத்தில் நிற்க, ஆன் செய்த டிவியில் ஜே செய்திகளில் ஜென்னி பேசி கொண்டிருந்தது ஒளிபரப்பானது.

சேனலுக்கு கீழே 'பிரபல நடிகர் ராகவை திருமணம் செய்ய விருப்பமில்லை - ஜென்னித்தா பேட்டி' என்று ஓடி கொண்டிருந்தது.

அவன் அதிர்ந்து அவளை பார்க்க அவள் புன்னகை ததும்ப,."வாட்ச் இட்" என்றாள்.

அவன் பார்வையை மீண்டும் டிவியின் புறம் திருப்ப ஒரு பெண் நிருபர் ஜென்னியிடம் "திடீர்னு ஆக்டர் ராகவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றீங்களாமே... அப்படியா ?" என்றவள் கேட்க,

"எஸ்" என்றாள் சலிப்போடு !

"ஏன் ? உங்க இரண்டு பேருக்குள்ள மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்கா ? என்று அங்கே நின்றிருந்த வேறொரு சேனல் நிருபர் கேட்க,

"அதெல்லாய் இல்ல... நான் மிஸ்டர். ராகவை ரொம்ப நல்லவர் ஒழுக்கமானவர்னு... நம்பி ஏமாந்துட்டேன்... ஆனா அவர் அப்படி இல்லை" என்றாள்.

அங்கே இருந்த பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி நிருபர்கள் எல்லோரும் அதிர்ந்து "என்ன சொல்ல வர்றீங்க. ? ஆக்டர் ராகவோட கேரெக்டர் சரியில்லைன்னா ?" என்று கேட்க,

"எஸ்... அவருக்கிட்ட இல்லாத கெட்ட பழக்கமே இல்லை... மோரோவர் பொண்ணுங்க விஷயத்தில ரொம்ப ரொம்ப மோசமானவர்... அப்படி ஒரு ஓழுக்கங்கெட்ட ஒருத்தரை என்னால மேரேஜ் பண்ணிக்க முடியாது... இதுக்கு மேல எந்த கேள்வியும் கேட்காதீங்க... நானே ரொம்ப நொந்து போயிருக்கேன்" என்று அவர்களை கடந்து செல்ல பார்க்கவும்,

"ஒன் லாஸ்ட் க்விஷன்" என்று அங்கிருந்தவர்கள் கேட்கவும், அவள் ஒரு நொடி நின்று அவர்களை பார்த்தாள்.

"நீங்க ஆக்டர் ராகவ் பத்தி சொல்றதெல்லாம் உண்மைதானா? அதை எப்படி நாங்க நம்பிறது... ஆக்டர் ராகவோட பேரை கெடூக்க நீங்க இப்படி பன்றிங்களா ?" என்று அழுத்தம் திருத்தமாய் கேட்க,

"அவர் பேரை கெடுக்கிறதினால எனக்கென்ன யூஸ்?நான் ஜஸ்ட் நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்... இதுக்கு மேல எதுவாயிருந்தாலும் நீங்க ராகவ்கிட்ட கேட்டுக்கோங்க" என்றவள் முடிக்க ராகவின் நாளங்கள் வெடித்து சிதறியது போலிருந்தது.

அவன் இந்த உலகத்திலயே அதிகமாய் நேசிப்பது அவனையும் அவன் இமேஜையும்தான். அதை இப்படி அவள் தரைமட்டமாக்குவாள் என்று கனவிலும் அவன் எதிர்பார்க்கவில்லை.

"எவ்வளவு திமிரு இருந்தா என்னை பத்தி மீடியால தப்பு தப்பா சொல்லி இருப்ப" என்று கேட்டு அவன் வெறியோடு பார்க்க.

அவள் "இதேதானே நீ சையத்துக்கு பண்ண ... அப்போ அவருக்கு வலிக்கும்னு நீ யோசிக்கலயே... அதென்ன ? உனக்கு வந்தா இரத்தம்... மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா ?" என்று கிண்டலான பார்வையோடு கேட்க,

கோபத்தின் உச்சத்தை தொட்டவன் "அடிங்க உன்னை" என்று அவளை நெருங்கி கழுத்தை நெறித்து படுக்கையின் மீது தள்ளி வெறியோடு அழுத்த அவள் சிரமப்பட்டு "இது வெறும் டிரெயலர்தான் ராகவ்... மெயின் பிக்சர் இன்னும் ரீலாஸாகல... அதுக்குள்ள இவ்வளவு டென்ஷனான்னா எப்படி ?" என்று கேட்க அதிர்ச்சியில் தன் கரத்தை சற்று தளர்த்தி,

"வேறென்னலான்டி பண்ணி வைச்சிருக்க ?" என்று அச்சம் மேலிட அவன் வினவ,

"முதல்ல கழுத்தை விடுடா... சொல்றேன்" என்றாள்.

அவன் மூச்சிறைக்க அவளை முறைத்தபடி விலகிவந்து நிற்க "சொல்லு டி" என்றான்.

அவள் எழுந்து சம்மேளம் போட்டு அமர்ந்து "கதையில சஸ்பென்ஸை உடைச்சிட்டா இன்டிரஸ்டா இருக்காது ராகவ்" என்றவள் சொல்ல,

அவன் கடுப்பாகி "இதோட உன் விளையாட்டை நிறுத்திக்கோ... நான் சொன்னதெல்லாம் தப்புன்னு மீடியா முன்னாடி ஒத்துக்கிற... இல்லன்னு வைச்சுக்கோ... "

"இல்லைன்னா ?!" என்றவள் எகத்தாளமாய் பார்க்க

அவன் அவள் முகத்தின் அருகில் வந்து "ஏய்... இப்ப நீ டிவில சொன்னதெல்லாம் ஜஸ்ட் நத்திங்.. நான் ஊதி தள்ளிட்டு போயடுவேன்.. ஆனா நான் உன் இமேஜை டேமஜ் பண்ண நினைச்சன்னு வைச்சுக்கோ... வெளியே நீ தலைகாட்ட முடியாது... அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிற்ப... உன் போட்டோஸை மார்ஃப் பண்ணி அசிங்க அசிங்கமா ட்விட்டர்ஸ் பேஸ் புக் வாட்ஸ்அப்னு எல்லா ஸோஸியல் மீடியாவிலயும் உலாவ விடுவேன்... பார்த்துக்கோ?!" என்றவன் மிரட்டி அவளை குரூரமாய் பார்த்தவனை அவள் சிறு சலனமே இல்லாமல் எதிர்கொள்ள,

அவள் பார்வையில் அச்சமோ கோபமோ இல்லை. மாறாய் அலட்சியம் தென்பட,

அவன் மீண்டும் "என்னடி ? செய்ய மாட்டன்னு நினைக்கிறியா ?!" என்றவன் கேட்க,

அவள் இளக்காரமாய் பார்த்து "நீ எதையும் செய்வடா... என்னை இல்லை... உன் சொந்த அம்மாவை கூட மார்ஃப் பண்ணி போடுவ... அப்படிபட்ட கேடுகெட்ட பிறவிடா நீ" என்றதும் அவன் கோபம் அதிகரிக்க அவள் கன்னத்தில் அறைந்துவிட அவள் படுக்கையில் விழுந்தாள்.

அவன் வெறியோடு, "நீ அடங்கமாட்ட... உன்னை எப்படி அடக்கனும்னு எனக்கு தெரியும் டி.. உன் வீக்னஸ் என்னன்னும் எனக்கு நல்லா தெரியும்... உன்னை அணுஅணுவா சித்ரவதை செஞ்சி உன்னை அனுபவிக்கிறேன்டி" என்றவன் தன் மேல்சட்டையை களைந்து அவளை நெருங்கவர,

அவள் துளியளவும் பயமின்றி எகத்தாளமாய் அவனை பார்த்து சிரித்தாள்.

அவன் புரியாத பார்வையோடு "எதுக்குடி சிரிக்கிற. ?" என்று கேட்க,

அவள் வஞ்சமாய் புன்னகையித்து,

"யூ கான்ட் ஈவன் பிளக் மை சிங்கிள் ஹெர் டேமிட்" என்று வெடித்து அவள் சொன்ன விதத்தில் தெரிந்த தீவிரமான துணிச்சல் அவனை மிரட்சிக்குள்ளாக்கியது.

அவளின் இந்த தைரியத்திற்கும் நிதானத்திற்கும் பிண்ணனியில் வேறெதோ இருக்கிறது என்று பட்டது அவனுக்கு.

அவளை நெருங்க முடியாமல் உள்ளூர ஏதோ ஒன்று தடுத்து கொண்டிருக்க, உணர்ச்சிவசப்பட்டு தான் எதையாவது செய்ய போக அது தன் பேருக்கும் புகழுக்கு இழுக்காகிவிட்டால் என்று அவளிடமிருந்து பின்வாங்க,

அவனின் பலம் அவளின் மனோபலத்தில் முன்னிலையில் குன்றி கொண்டே வந்தது.

அவள் பேசும் பேச்சுக்கு அவளை எதுவும் செய்ய முடியாத இயலாமையில் நிற்கிறோமே என்று அவமானமாகவும் வலியாகவும் இருந்த அதே சமயம் நடப்பது நடக்கட்டும் என்று அவளை சிதைத்துவிட சொல்லி ஒரு குரல் உள்ளே வெறி கொண்டு கத்தியது.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அவள் மெல்ல எழுந்து அமர, அவன் குழப்பமுற்று நெற்றியை தேய்த்தபடி அவளையே உற்று பார்த்தவன் "என்னடி ப்ளேன் பண்ணிட்டிருக்க. ?" என்று கூர்மையான பார்வையோடு அவளை நோக்க,

"சொல்ல மாட்டேன்" என்று வஞ்சமாய் புன்னகையித்தாள்.

அவன் முகமெல்லாம் வியர்த்திருந்தது. ஏதோ அவனுக்கு எதிராய் பெரிய சதி நடக்கின்றது என்பது மட்டும் அவன் மூளைக்கு உறைக்க, அவள் என்ன யோசிக்கிறாள் என்பதை கூட அவள் முகம் பிரதிபலிக்காததில் அவன் ரொம்பவும் மனஉளைச்சலானான்.

இவ்விதம் அவன் யோசித்தபடி அந்த அறைக்குள்ளேயே நடக்க, அந்த அறையை நிசப்தம் சூழ்ந்து கொண்டது.

ஜென்னியின் காதில் இருந்த ப்ளூடூத்தில் "ஜென்னி போதும்.. அங்கிருந்து கிளம்பு" என்க, அவள் "உம்ஹும்" என்று மெலிதாய் உரைத்தாள்.

"உனக்கெதாவது பிரச்சனை வந்திர போகுது... முதல்ல கிளம்பு" என்று டேவிட் சொல்ல அவள் பதிலுரைக்காமல் இருக்க, ராகவ் அவளை பார்த்தபடி அந்த அறையை கடந்து சென்றான்.

ஜென்னி அவர்களிடம் "எனக்கெந்த பிரச்சனையும் வராது... நான் பார்த்துக்கிறேன்" என்று உரைத்தாள்.

"வேண்டாம் நீ கிளம்பு" என்று அவன் கட்டளையாய் உரைக்க,

"நோ...டேவிட்... எனக்கு பத்தல... அவனை ஏதாச்சும் பண்ணனும்... அவன் நான் துடிச்ச மாறி துடிக்கனும்"

"உணர்ச்சிவசப்படாதே... ப்ளீஸ்... நீ கிளம்பு"

"மூடியாது" என்றவள் நிறுத்தி மேலும்...

"இந்த ரூம்ல இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஐம் கெட்டிங் மேட்... என்னை குடிக்க வைச்சி.. என்னை துடிக்க துடிக்க..."என்று அழுதவள்,

மேலும் "ரொம்ப வலிச்சுது... ஆனா அதை வாய்விட்டு சொல்ல முடியாம பிணம் மாறி கிடந்த என்னை .. சே... இப்ப நினைச்சாலும் என் உடம்பெல்லாம் நடுங்குது" என்றவள் தழுதழுத்த குரலில் உரைக்க

"சாக்ஷி" என்று அழுகை தொனியில் மகிழ் அழைத்தான் அந்த நொடி அவள் தேகமெல்லாம் பதறியது.

மகிழ் அப்போது டேவிடுடன்தான் இருந்தான். ஜென்னி வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததில் டேவிட் தன் கைப்பேசியை மகிழிடம் கொடுத்து பேச சொல்ல அப்போதுதான் அவள் தன் வலியை விவரித்தாள்.

யாரிடம் சொல்ல கூடாது என்றிருந்தாலோ இப்போது அவனிடமே எல்லாவற்றையும் போட்டு உடைத்த வேதனையில் அவள் உள்ளம் அந்த நொடி வெதும்ப,

அவள் சொன்னதை கேட்ட அவனுக்கும் உயிர் போகும் வலி உண்டானது.

அவன் மௌனமாய் கண்ணீரில் கரைய

அவள் அதனை உணர்ந்து, "மகிழ்" என்று அழைக்க,

ராகவ் பின்னோடு வந்து அவள் முடியை பற்றி "என்னடி சொன்ன? யூ கான்ட் ஈவன் ப்ளக் மை ஹேர் இல்ல" என்று சொல்லி அவள் காதிலிருந்த ப்ளூடூத்தை பிடுங்கி எறிந்தான்.

அதோடு அல்லாது அதனை தத் காலால் மிதித்துவிட்டு, அவள் பேகிலிருந்த போஃனை பார்த்துவிட்டு தூக்கியடிக்க அது சிதறியது. அதோடு அவள் பேகையும் தூக்கிவீசிவிட்டு படுக்கையின் மீது தன் ஒற்றை காலை தூக்கி வைத்தவன்,

"இப்ப காட்டிறி உன் ஹேட்டிட்டியும் திமிரையும்" என்க,

அவள் அப்போதும் சிரித்த முகத்தோடு "நீ இதையெல்லாம் உடைச்சிட்டா... என் தைரியமும் உடைஞ்சிரும்னு நினைச்சியா? ! அது உன்னால முடியாதுடா... திரும்பியும் சொல்றேன்... யூ கான்ட் ஈவன் ப்ளக் மை ஹேர்" என்க,

அவன் தன் விரல்களால் சுடக்கிட்டபடி "இப்ப உடைச்சி காட்டிறேன்டி உன் தைரியத்தை" என்றவன்

வேகமாய் கதவை திறந்து வெளியேறி நொடி பொழுதில் திரும்பி வர, அவன் தன் கரத்தில் எடூத்து வந்ததை அவளும் கவனிக்கலானாள்.

"என்னதுன்னு தெரியுதா ?!" என்றவன் வினவ,

அவள் பதில் பேசாமல் மௌனமாய் நின்றாள்.

"இப்போ பயமா இருக்கா ?!" என்றவன் கேட்க, அவள் கூர்மையாய் அவனையே பார்த்திருக்க,

"உன் மூஞ்சில இந்த ஆசிடை ஊத்தினன்னு வைச்சுக்கோ... உன் முகம் சர்வநாசமாயிடும்... இந்த அழகு ஒண்ணுமே இல்லாம உருகுலைஞ்சி போயிடும்... இந்த அழுதானடி என்னை மயக்குச்சு... இருக்க கூடாது... அந்த அழகு இனி உனக்கு இருக்க கூடாது" என்று அவன் வெறியோடு வார்த்தைகளை கடித்து துப்ப, அவள் அசராமல் நின்றபடி,

"செய் ராகவ்... ஆனா அதுக்கு முன்னாடி ஒரு செகண்ட் நான் சொல்றதை கேட்டுட்டு செய்" என்றதும் அவன் தலையசைத்து "மாட்டேன்டி... நீ பேசிறது எதையும் கேட்க மாட்டேன்... உன் முகத்தில இதை ஊத்தி நீ அணுஅணுவாய் துடிக்கிறதை ரசிச்சி பார்க்கிறதுதான் எனக்கு நிம்மதி" என்று சொல்லும் போது மனோ அவசரமாய் ஓடிவந்து,

"பாஸ் வேண்டாம்" என்று தடுத்து நிறுத்த,

அவன் எரிச்சலோடு "மனோ இங்கிருந்து போ" என்று மிரட்டலாய் உரைத்த மறுகணம் "பாஸ் நீங்க இந்த ரூம்ல பேசிறது ஜென்னி மேடமை அடிச்சதெல்லாம் லைவ்வா ஜே சேனலில் டெலிக்காஸ்ட் ஆகுது" என்றான்.

ராகவ் அதிர்ச்சியுற ஜென்னி புன்முறுவலோடு "நீ என் மூஞ்சில ஆசிட் ஊத்தினா அதுவும் டெலிகாஸ்ட்டாகும்... லைவ் ரிலே ஆனா கொஞ்சம் டீலே... ராகவை ஹீரோவா பார்த்துவங்க எல்லோரும் வில்லனா பார்த்திருப்பாங்க" என்றவள் உரைக்க,

அவனுக்கு அப்போதுதான் ஆரம்பித்திலிருந்து நடந்தவை எல்லாம் புரிந்தது.

அவள் ஒவ்வொரு இடத்திலும் வரிசையாய் அவனை கோபப்படுத்தி அடிக்க வைத்து தவறாக நடந்து கொள்ள வைத்திருக்கிறாள் என்பதை அறிந்தவன் முகமெல்லாம் வியர்வை துளிகள் படர நடுக்கமுற்று நின்றான்.

மனோ அந்த அறையை சுற்றி கேமராவை தேடி கொண்டிருக்க, அவள் அவனிடம் "இனிமே அதை எடுத்து என்ன பண்ண போற... உன் பாஸோட வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடுச்சே" என்றவள் மேலும் "அன்னைக்கு உன் ரூமுக்குள்ள வந்தேனே... ஞாபகம் இருக்கா? அப்பவே கேமராவை வைச்சுட்டேன்... அன்வார்ச்சுனேட்லி நேற்று நீ என்னை பத்தின உண்மையெல்லாம் கண்டுபிடிச்சி மனோகிட்ட பேசிட்டிருந்தியே... அது கூட ரெகார்டாயிருந்ததே" என்றவள் சொல்ல,

ராகவ் அதீத உக்கிரத்தோடு "இதெல்லாம் நீயும் டேவிடும் பண்ண வேலையா ?" என்று கேட்க

"ப்ளேன் என்னோடது... இம்பிளிமன்ட் பண்ணது டேவிட்" என்க,

ராகவுக்கு எல்லாம் தன் கைமீறி போய்விட்டது என்று புரிய "பைஃன்... என் இமேஜை நீ ஒட்டுமொத்தமா டேமேஜ் பண்ணிட்ட இல்ல... உன்னை நான் டேமேஜ் பண்ணாம விட போறதில்லை" என்று சொல்லும் போது மனோ "பாஸ் ரெகார்ட் ஆகுது வேண்டாம்" என்று தடுக்க,

ராகவ் கேட்காமல் அதனை அவள் முகத்தில் ஊற்ற யத்தனித்தான்.

அந்த சில நொடிகளில் அந்த அறையில் பெரிய களேபரமே நிகழ்ந்துவிட்டது.

ராகவின் பின்னே வந்த டேவிட் அவனை கீழே தள்ளிவிட அதை எதிர்பாராதவன் ஆசிட் பாட்டிலோடு தரையில் சரிய பாட்டில் நொறுங்கி அந்த ஆசிட் அவன் முகத்திலயே தெறித்தது.

"ஆ எறியுதே" என்றவன் துடித்து கதற,

ஜென்னியோ அவன் அமிலத்தை ஊற்ற போகிறானோ என தன் முகத்தை மூடி கொண்டவள் விழிகளை திறக்க, "உனக்கு ஒண்ணுமில்லையே" என்று தவிப்போடு கேட்க, அவள் "உம்ஹும்" என்றபடி ராகவ் தரையில் துடித்து கதறுவதை அப்போதுதான் பார்த்தாள்.

மனோ அவன் அருகில் அமர்ந்து "பாஸ்" என்று பதறி துடிக்க, டேவிட் ஆம்புலன்ஸிற்கு தன் கைப்பேசியின் மூலமாய் அழைப்பு விடுத்தான்.

ஜென்னி ராகவின் அருகில் அமர்ந்து அவன் நிலையை பார்த்தவளுக்கு உண்மையிலயே துளி கூட இரக்க வரவில்லை.

மாறாய் களிப்புற்றவள்

"இது என் ப்ளேன் இல்ல ராகவ்... உனக்கு நீயே போட்டுக்கிட்ட ப்ளேன்... இதே இடத்தில நான் வலில துடிச்சி அழுத போது என்ன சொன்ன?

தன் வினை தன்னை சுடும் இல்ல..
இப்ப உன்னை சுடுது உன் வினை... நீ எடூத்த ஆயுதம் உனக்கே திரும்பிருச்சு பார்த்தியா ?" என்றவள் சொல்லி புன்னகையோடு அவன் துடிப்பதை ஆழ்ந்து ரசிக்க

டேவிட் ஜென்னி தோளை பற்றி "எழுந்திரு ஜென்னி போகலாம்" என்க,

அவனை நிமிர்ந்தவள் "இன்னைக்குதான் எனக்கு கண்ணு வந்ததுக்காக நான் ரொம்ப ரொம்ப சந்தோஷபடிறேன்" என்றரைக்க, அந்த சந்தோஷத்தில் தெரிந்ததும் அவளின் ஆழமான வலிதான்.

மகிழும் அந்த நொடி கோபத்தோடு அவன் வலியால் துடித்து அவதியுறுவதை ரசித்து நிம்மதி பெருமூச்சொன்றை வெளியேவிட்டான்.

*****--

வார்த்தைகளுக்கு வேலையில்லை


ராகவ் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட, காரில் மகிழ் டேவட் முன்னே அமர ஜென்னி பின்னே அமர்ந்து கொள்ள மூவரும் புறப்பட்டனர்.

மூவரும் அழுத்தமான மௌனத்தை கடைப்பிடிக்க ஜென்னி இருவரிடமும் பேச்சு கொடுக்காமல் ஜன்னல் புறம் எதையோ வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

காற்றாடி போல் காற்றடிக்கும் திசையெல்லாம் பறப்பது போல் அவள் மனம் ரொம்பவும் லேசாகி இருந்தது.

அப்போது மகிழின் குரல் அதனை தடைப்படுத்த "சாக்ஷி" என்றழைத்தான்.

"ஹ்ம்ம்" என்றவள் ஒருவித தயக்கத்தோடு குரலெழுப்ப,

"என்கிட்ட எல்லாத்தையும் சொல்லாம மறைச்சிட்ட இல்ல நீ" என்று கேட்க அவள் டேவிடை நோக்கினாள். அவன் அவள் பார்வை புரிந்து அவள் புறம் திரும்பவேயில்லை.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மகிழ் மேலும் அவள் மௌனமாய் இருப்பதை பார்த்து "நான் உனக்கு மூணாவது மனிஷனாய் போயிட்டேனா சாக்ஷி... உன் வலியிலும் வேதனையிலும் எனக்கு பங்கில்லையா ?" என்று வினவ,

அவள் தவிப்புற "நீங்க தாங்கமாட்டீங்க மகிழ்... அதுவும் இல்லாம நீங்க வேதனை படிறது என்னால பார்க்க முடியாது... " என்றவள் குரல் தழுதழுக்க,

"நீ இவ்வளவு வலியையும் கஷ்டத்தையும் தனியா தாங்கிக்கிட்டியே... உன்னால எப்படிறி முடிஞ்சிது ?!" என்றவன் கேட்டு கண்ணீர் விட,

டேவிட் மகிழ் தோளை தொட்டு அவனை அமைதிபடுத்த முற்பட்டான்..

ஜென்னி அப்போது அழுத்தமாக "நான் தனியா இல்ல மகிழ்... என் கூட டேவிட் இருந்தாரு... என்னோட எல்லா கஷ்டத்தையும் என் கூட இருந்து தாங்கிக்கிட்டாரு... என்னையும் சேர்த்து" என்றவள் உரைக்க மகிழ் டேவிடை நிமிர்ந்து பார்த்து அவன் கரத்தை அழுத்தமாய் கோர்த்து .பார்வையாலயே நன்றியுரைக்க அவர்கள் வார்த்தைகளால் பரிமாறிக் கொள்ள முடியாதவற்றை அவர்கள் விழிகள் பேசி கொண்டன.

மெல்ல அவர்களுக்கிடையில் இருந்த சோகமான சூழ்நிலை மாறியிருக்க, டேவிட் தன் காரை சாரதா இல்லத்தின் வாசலில் நிறுத்தினான்.

ஜென்னி அந்த இடத்தை பார்த்து அதிர்ந்தவள் டேவிடிடம் தன் பார்வையை திருப்ப, "ஏன் இங்க வந்தீங்க"என்று தயக்கமாய் கேட்க,

மகிழ் பின்னே வந்து கார் கதவை திறந்து "வா சாக்ஷி" என்றழைத்தான்.

"உம்ஹும் ... நான் உள்ளே வரல" என்க,

அவள் கரத்தை பிடித்து வெளியே இழுத்தவன் "நீ வந்துதான் தீரனும்" என்றான்.

"எதுக்கு ?" என்றவள் கேட்க,

"ஹ்ம்ம்...என் பொண்டாட்டி உன்னை பார்க்காம சாப்பிடாம தூங்காம இருக்கா ? வந்து அவகிட்ட பேசு" என்றான்.

அவனை ஏற இறங்க பார்த்தவள் "உங்க பொண்டாட்டி சாப்பிடாம தூங்காம இருந்தா நீங்க போய் சமாதானபடுத்துங்க... அதுக்கு நான் ஏன் வரனும் ?" என்றவள் கேட்க,

"அவ அவளோட ப்ரண்டை பார்த்தாதான் சாப்பிடுவாளாம்" என்று சொல்ல, அவள் மகிழை ஆழ்ந்து பார்க்க, "வருவியா மாட்டியா ?" என்று முறைப்பாய் கேட்டான்.

அவள் பதில் பேசாமல் சாரதா இல்லத்திற்குள் நுழைய அவளை அறியாமல் கண்ணீர் வடிந்து கொண்டிருக்க, டேவிடும் அவர்கள் பின்னோடு வந்து கொண்டிருந்தான்.

யாழ் அவள் உள்ளே நுழைவதை பார்த்து அணைத்து உச்சிமுகர்ந்து கொள்ள மாதவனும் ஆனந்த கண்ணீரை வடித்து அவள் தலையை தடவி கொடுத்தார்.

அவர்களிடம் பேசியவள் பின் "மாயா எங்கம்மா ?" என்று கேட்க

"உன் ரூம்லதான் இருக்கா ?" என்றதுமே அவளுக்கு ஒருவித படபடப்பும் தவிப்பும் ஏற்பட டேவிடும் மகிழும் பின்தங்கிய நிலையில் அவள் மட்டும் அறைக்குள் நுழைந்தாள்.

முதல்முறையாய் அவள் அறையை அவளே பார்த்தபடி நுழைய மாயா அவள் வீணையின் மீது தலைசாய்த்தபடி அழுத மேனிக்கு சாய்ந்து கிடந்தாள்.

அந்த காட்சியை பார்த்த ஜென்னியின் விழிகள் கண்ணீரை ஊற்றாய் பெருக்கிட

அழுகையில் தொண்டை விக்கித்தவள் பிராயத்தனப்பட்டு "மாயா" என்று குரலெழுப்ப, அவள் நிமிர்ந்து பார்த்த மறுகணமே தன் தோழியை ஓடிவந்து அத்தனை இறுக்கமாய் கட்டிகொண்டு "சாக்ஷி" என்று அழ ஆரம்பித்தாள்.

இத்தனை நாள் பிரிவை சமன்படுத்த அவர்கள் பிரியாமல் ஓருவரை ஒருவர் உணர்வுபூர்வமாய் தழுவி கொண்டிருக்க, அந்த தோழிகளுக்கிடையில் கண்ணீர் மட்டுமே பேசிக் கொண்டிருந்தது.

அங்கே வார்த்தைகளுக்கு வேலையில்லை. அவர்களின் நட்பை புரிந்து கொள்ள அந்த மௌனம் மட்டுமே போதும். ஆயிரஆயிரமாயிரம் வார்த்தைகள் வடிக்க முடியாததை ஒரு நொடி பொழுதில் அது விளக்கிவிடும். அதுவே ஆழமான அழுத்தமான நட்பு.

அந்த நட்பு எங்கேயும் போய்விடவில்லை. அவர்களுக்குள்ளேதான் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, இன்று மீண்டும் உணர்வுபூர்வமாய் ஒருவரை ஒருவர் தேடி கண்டறிந்து கொண்டது.

Hi friends,
பெரிய ud படிச்சிட்டு உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க.

டேவிட் ஜென்னியின் காதலுக்காக இன்னும் சில அத்தியாயங்கள் வரும்.

 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மோனிஷா டியர்
 




Last edited:

Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Hi sis
Timely update. Thanks for the update. Very Happy for jenny (a) sakshi.
டேவிட் ஜென்னியின் காதலுக்காக இன்னும் சில அத்தியாயங்கள் வரும்.
Varattum varattum innum yethana uds david and jenny kaga vanthalum mahilchiye. ☺☺☺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top