vasumathi karunanidhi
மண்டலாதிபதி
இடம் : பொழில் கிரகம்..
பரிதி வனத்தைவிட்டு நீங்கள் எங்கும் செல்லக்ககூடாது.. இங்கிருந்து செல்ல உங்களை நான் அனுமதிக்கமாட்டேன் என்று பலதும் மிகிரன் சொல்வான் என்று பூமிவாசிகள் நினைத்திருக்க அவனோ, “பத்திரமாக செல்லுங்கள்..”, என்று தனது கோரப்பற்கள் தெரிய ஒரு பெரிய புன்னகையுடன்..
“மிகிரா..”, திகைப்பில் வெளிவந்தது அத்வைத்தின் குரல்..
“மிகிரன் தான் சொல்கிறேன் அத்வைத்.. பத்திரமாக செல்லுங்கள்..”, என்றான் மீண்டும் ஒரு புன்னகையுடன்..
“நாங்கள் பூமிக்கு செல்கிறோம் என்று உனக்கு முன்னாடியேத் தெரியுமா மிகிரா..??”, இது சாய்..
“தெரியும் சாய்..”
“இந்தச் செய்தியை உனக்கு யார் சொன்னது மிகிரா உனக்கு..??”
“வேறு யார்..?? உன் தங்கை வசிஷ்டரா தான்..”, இன்ஸ்டன்ட்டாக பதில் வந்தது மிகிரிடமிருந்து..
“வசியா..??”, இப்பொழுது திகைப்பாக..
“வசிஷ்டராவேதான் சாய்.. உங்களுக்குத் துணையாய் உங்களுடன் அவள் என்னை இருக்கச் சொன்னாள்..”
“இது எப்பொழுது நடந்தது..??”
“அன்று உங்களை எல்லாம் பார்க்க வந்தாள் இல்லையா..?? அன்று மாலையே என்னையும் வந்து சந்தித்தாள்..”, என்ற மிகிரனின் பார்வை இவ்வளவு தான் என் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது போல் பதிந்தது..
“எங்களை மன்னித்துவிடு மிகிரா.. உன்னிடம் செல்லக்கூடாது என்றெல்லாம் இல்லை.. எங்கே நீ எங்களை தடுத்துவிடுவாயோ என்ற பயத்தில் தான் நாங்கள் உன்னிடம் இவ்விஷயத்தை சொல்லவில்லை..”, என்றான் சாய்..
“நான் உங்களைத் தடுப்பேன் என்று எப்படி நினைத்தீர்கள்..??”
“இல்லை மிகிரா.. உனக்கு இந்த கிரகம் பற்றி நன்றாகத் தெரியும்.. இருந்தும் நீ பொழிலை விட்டு கிளம்பாமல் இருக்கிறாய் என்றால் என்ன அர்த்தம்.. நீ பொழில் கிரத்தின் சட்டதிட்டங்களை மதிக்கிறாய் என்று தெரிகிறது.. அப்படி இருக்கும்பொழுது எப்படி உன்னிடம் நாங்கள் பொழிலைவிட்டு செல்லப்போகிறோம் என்று சொல்ல முடியும்..??”, என்று கேட்டாள் ஆத்யா..
“நீ சொல்வது சரிதான்.. நான் பொழிலை மிகவும் மதிக்கிறேன் தான்.. அதன் சட்டதிட்டங்களையும் சேர்த்துத்தான்.. அதை இல்லை என்று நான் கண்டிப்பாக சொல்லமாட்டேன்..”, என்ற மிகிரன், “ஆனால் நான் அதைவிட நட்புகளை மதிக்கின்றவன்..”, என்றான்..
அவன் பேச்சில் நெகிழ்ந்துபோய் அவனைக்கட்டிக்கொண்ட சாய் ரொம்ப, “நன்றி மிகிரா.. எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பார்த்துப் பழகிய நண்பர்களில் சிறந்தவன் நீ..”, என்றான் உணர்ச்சிவசப்பட்டபடியே..
அவனைத் தட்டிக்கொடுத்த மிகிரன், “நேரமாகுது பூமிவாசிகளே.. கிளம்புங்கள்..”, என்றான் மீண்டும் புன்னகைத்தபடியே..
எப்பொழுதும் அவன் புன்னகையில் பயம்கொள்ளும் ஆத்யாவிற்கு இன்று ஏனோ அது தோன்றவில்லை.. அதற்கு பகரமாக இதயத்தின் ஓரத்தில் ஒரு வலி.. ஒரு சிறிந்த மனிதனை இனி காணமுடியாதோ என்ற வலி..
லேசாகத் தன் தொண்டையை சரி செய்துகொண்டவள், ”நீயும் எங்களுடன் வந்துவிடு மிகிரா..”, என்றாள்..
அவள் அன்பில் நெகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “அது சாத்தியப்படாத ஒன்று ஆத்யா.. நீங்கள் பத்திரமாகக் கிளம்புங்கள்..”, என்றான் ஆம்பல் கிரகத்தவன் மிகிரன்..
ஒருமுறை அவனை அனைவரும் அணைத்து விடுவித்தவர்கள் அவனைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே சென்றனர்..
*****************************************************************
இடம் : மாலி கிரகம்..
பொழில் கிரகத்தின் பாதுகாப்புக் கூட்டம் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது.. அனைவரும் தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்..
ஆனால் வசியின் மனம் மட்டும் அங்கு நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் லயிக்க மறுத்தது..
பூமிவாசிகள் சுற்றியே அவள் நியாபகம்..
இரண்டு மூன்று முறை அருகில் அமர்ந்திருந்த விபு அவளது கையை சுரண்டினான் கவனி என்பதுபோல்..
அதையெல்லாம் அவனிக்கும் நிலையில் வசிஷ்டரா இல்லை இப்பொழுது..
சற்று நேரம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் தாங்கமுடியாமல் சட்டென்று எழுந்து வெளியே போயிருந்தாள்..
அவள் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்ததால் அவள் செல்வதை பெரிதாக யாருக்கும் தெரியவில்லை..
வெளிக்காற்று முகத்தில் பட்டவுடன் தான் வசிக்கு மூச்சுமுட்டும் உணர்வு நின்றது..
ஆழமாக ஒரு மூச்சை எடுத்துவிட்டவள் மெதுவாக இலக்கில்லாமல் நடக்கத்துவங்கியவளது மனது அன்று விபுவின் காப்பு கழண்டு ஓடையில் உருண்டு விழுந்தது போல் உருண்டோடியது அன்றைய தினத்தை நோக்கி..
கையில் இருந்து நழுவி விழுந்த காப்பு ஒவ்வொருப்படியாய் வேகமாகக் கடந்து நீருக்குள் விழுந்து சில நீர்த்துளிகளை வெளியேத் தெறிக்கவிட்டது..
“அண்ணா.. உன் காப்பு..”, விபுவை முந்திக்கொண்டு நீருக்குள் கைவிட்டுத் தேடத்துவங்கினான்..
“பொறுமையாத் தேடலாம் வசீ..”, என்று சாவகாசமாக சொன்னவன் தன் முதுகில் மறைத்துவைத்திருந்த ஒரு சுருளை எடுத்து வசியிடம் கொடுத்தான்..
“காப்பு விழுந்திருச்சுன்னு.. நீ சாவதானமா எதையோ எடுக்கற.. என்னது அது..??”, என்ற கேள்வியுடன் தனது தேடலை நிறுத்திவிட்டு அவன் கையில் இருப்பதை வாங்கினாள்..
அந்தச் சுருளைப் பிரித்தவளுக்கு ஏதோ கோடு இழுத்துவிட்டதுபோல் இருந்தது.. ஆனால் அது என்ன என்று தான் புரியவில்லை..
“என்னன்னா இது..??”, அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே கேட்டாள்..
“இது பூமிவாசிகள் இப்பொழுது இருக்கும் குடிலில் இருந்து பீது வனம் செல்வதற்கான வழிக்காட்டி..”
“என்னண்ணா சொல்ற..?? வழிக்காட்டியா..??”
“ஆமாம் வசீ.. அவர்கள் பூமிக்குச் செல்வதற்கான வழிக்காட்டி இது..”, என்றவன், “நாளை நீ பூமிவாசிகளைப் பார்க்கச் செல்லும்பொழுது அவர்களிடம் கொடுப்பதற்கு..”, என்றான்..
“என்ன சொல்கிறாய் அண்ணா.. அவர்களைப் பார்க்க அனுமதி கிடைத்துவிட்டதா..??”, சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு..
“கிடைத்துவிட்டது வசீ.. சிறிது நேரத்திற்கு முன்பு தான் விலாசி எல்லோன் செய்தி அனுப்பினார்கள்.. பூமிவாசிகளை நீ வந்து பார்த்துசெல்லலாம் என்று..”
ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தவள் சடனாக தனது ஆட்டத்தை நிறுத்தி, “அண்ணா.. இதனால் உனக்கு..??”, திக்கத்துவங்கியது வசியின் இதழ்கள் இப்பொழுது..
“எனக்கும் மட்டும் இல்லை உனக்கும் எதுவும் ஆகாது வசிஷ்டரா..”, என்றான் விபு அழுத்தமாக..
வசிக்கு ஏனோ அப்பொழுது மனதில் இருந்த பாரம் முழுவதும் இறங்கிய உணர்வு..
“ஆனால் நீ ஒன்றை மட்டும் நியாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் வசீ.. நீ பூமிவாசிகளுடன் கதைக்கும் பொழுது உன்னை உளவு பார்க்க ஆட்கள் இருக்கலாம் ஜாக்கிறதை..”, என்று எச்சரிக்கை செய்துவிட்டு, ”நான் காப்பு அணிந்த பிறகு இதைப்பற்றி நாம் பேசவேண்டாம்..”, என்று விட்டு நீருக்குள் கைவிட்டு தனது காப்பைத் தேடத்துவங்கினான்..
பரிதி வனத்தைவிட்டு நீங்கள் எங்கும் செல்லக்ககூடாது.. இங்கிருந்து செல்ல உங்களை நான் அனுமதிக்கமாட்டேன் என்று பலதும் மிகிரன் சொல்வான் என்று பூமிவாசிகள் நினைத்திருக்க அவனோ, “பத்திரமாக செல்லுங்கள்..”, என்று தனது கோரப்பற்கள் தெரிய ஒரு பெரிய புன்னகையுடன்..
“மிகிரா..”, திகைப்பில் வெளிவந்தது அத்வைத்தின் குரல்..
“மிகிரன் தான் சொல்கிறேன் அத்வைத்.. பத்திரமாக செல்லுங்கள்..”, என்றான் மீண்டும் ஒரு புன்னகையுடன்..
“நாங்கள் பூமிக்கு செல்கிறோம் என்று உனக்கு முன்னாடியேத் தெரியுமா மிகிரா..??”, இது சாய்..
“தெரியும் சாய்..”
“இந்தச் செய்தியை உனக்கு யார் சொன்னது மிகிரா உனக்கு..??”
“வேறு யார்..?? உன் தங்கை வசிஷ்டரா தான்..”, இன்ஸ்டன்ட்டாக பதில் வந்தது மிகிரிடமிருந்து..
“வசியா..??”, இப்பொழுது திகைப்பாக..
“வசிஷ்டராவேதான் சாய்.. உங்களுக்குத் துணையாய் உங்களுடன் அவள் என்னை இருக்கச் சொன்னாள்..”
“இது எப்பொழுது நடந்தது..??”
“அன்று உங்களை எல்லாம் பார்க்க வந்தாள் இல்லையா..?? அன்று மாலையே என்னையும் வந்து சந்தித்தாள்..”, என்ற மிகிரனின் பார்வை இவ்வளவு தான் என் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது போல் பதிந்தது..
“எங்களை மன்னித்துவிடு மிகிரா.. உன்னிடம் செல்லக்கூடாது என்றெல்லாம் இல்லை.. எங்கே நீ எங்களை தடுத்துவிடுவாயோ என்ற பயத்தில் தான் நாங்கள் உன்னிடம் இவ்விஷயத்தை சொல்லவில்லை..”, என்றான் சாய்..
“நான் உங்களைத் தடுப்பேன் என்று எப்படி நினைத்தீர்கள்..??”
“இல்லை மிகிரா.. உனக்கு இந்த கிரகம் பற்றி நன்றாகத் தெரியும்.. இருந்தும் நீ பொழிலை விட்டு கிளம்பாமல் இருக்கிறாய் என்றால் என்ன அர்த்தம்.. நீ பொழில் கிரத்தின் சட்டதிட்டங்களை மதிக்கிறாய் என்று தெரிகிறது.. அப்படி இருக்கும்பொழுது எப்படி உன்னிடம் நாங்கள் பொழிலைவிட்டு செல்லப்போகிறோம் என்று சொல்ல முடியும்..??”, என்று கேட்டாள் ஆத்யா..
“நீ சொல்வது சரிதான்.. நான் பொழிலை மிகவும் மதிக்கிறேன் தான்.. அதன் சட்டதிட்டங்களையும் சேர்த்துத்தான்.. அதை இல்லை என்று நான் கண்டிப்பாக சொல்லமாட்டேன்..”, என்ற மிகிரன், “ஆனால் நான் அதைவிட நட்புகளை மதிக்கின்றவன்..”, என்றான்..
அவன் பேச்சில் நெகிழ்ந்துபோய் அவனைக்கட்டிக்கொண்ட சாய் ரொம்ப, “நன்றி மிகிரா.. எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பார்த்துப் பழகிய நண்பர்களில் சிறந்தவன் நீ..”, என்றான் உணர்ச்சிவசப்பட்டபடியே..
அவனைத் தட்டிக்கொடுத்த மிகிரன், “நேரமாகுது பூமிவாசிகளே.. கிளம்புங்கள்..”, என்றான் மீண்டும் புன்னகைத்தபடியே..
எப்பொழுதும் அவன் புன்னகையில் பயம்கொள்ளும் ஆத்யாவிற்கு இன்று ஏனோ அது தோன்றவில்லை.. அதற்கு பகரமாக இதயத்தின் ஓரத்தில் ஒரு வலி.. ஒரு சிறிந்த மனிதனை இனி காணமுடியாதோ என்ற வலி..
லேசாகத் தன் தொண்டையை சரி செய்துகொண்டவள், ”நீயும் எங்களுடன் வந்துவிடு மிகிரா..”, என்றாள்..
அவள் அன்பில் நெகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “அது சாத்தியப்படாத ஒன்று ஆத்யா.. நீங்கள் பத்திரமாகக் கிளம்புங்கள்..”, என்றான் ஆம்பல் கிரகத்தவன் மிகிரன்..
ஒருமுறை அவனை அனைவரும் அணைத்து விடுவித்தவர்கள் அவனைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே சென்றனர்..
*****************************************************************
இடம் : மாலி கிரகம்..
பொழில் கிரகத்தின் பாதுகாப்புக் கூட்டம் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது.. அனைவரும் தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்..
ஆனால் வசியின் மனம் மட்டும் அங்கு நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் லயிக்க மறுத்தது..
பூமிவாசிகள் சுற்றியே அவள் நியாபகம்..
இரண்டு மூன்று முறை அருகில் அமர்ந்திருந்த விபு அவளது கையை சுரண்டினான் கவனி என்பதுபோல்..
அதையெல்லாம் அவனிக்கும் நிலையில் வசிஷ்டரா இல்லை இப்பொழுது..
சற்று நேரம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் தாங்கமுடியாமல் சட்டென்று எழுந்து வெளியே போயிருந்தாள்..
அவள் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்ததால் அவள் செல்வதை பெரிதாக யாருக்கும் தெரியவில்லை..
வெளிக்காற்று முகத்தில் பட்டவுடன் தான் வசிக்கு மூச்சுமுட்டும் உணர்வு நின்றது..
ஆழமாக ஒரு மூச்சை எடுத்துவிட்டவள் மெதுவாக இலக்கில்லாமல் நடக்கத்துவங்கியவளது மனது அன்று விபுவின் காப்பு கழண்டு ஓடையில் உருண்டு விழுந்தது போல் உருண்டோடியது அன்றைய தினத்தை நோக்கி..
கையில் இருந்து நழுவி விழுந்த காப்பு ஒவ்வொருப்படியாய் வேகமாகக் கடந்து நீருக்குள் விழுந்து சில நீர்த்துளிகளை வெளியேத் தெறிக்கவிட்டது..
“அண்ணா.. உன் காப்பு..”, விபுவை முந்திக்கொண்டு நீருக்குள் கைவிட்டுத் தேடத்துவங்கினான்..
“பொறுமையாத் தேடலாம் வசீ..”, என்று சாவகாசமாக சொன்னவன் தன் முதுகில் மறைத்துவைத்திருந்த ஒரு சுருளை எடுத்து வசியிடம் கொடுத்தான்..
“காப்பு விழுந்திருச்சுன்னு.. நீ சாவதானமா எதையோ எடுக்கற.. என்னது அது..??”, என்ற கேள்வியுடன் தனது தேடலை நிறுத்திவிட்டு அவன் கையில் இருப்பதை வாங்கினாள்..
அந்தச் சுருளைப் பிரித்தவளுக்கு ஏதோ கோடு இழுத்துவிட்டதுபோல் இருந்தது.. ஆனால் அது என்ன என்று தான் புரியவில்லை..
“என்னன்னா இது..??”, அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே கேட்டாள்..
“இது பூமிவாசிகள் இப்பொழுது இருக்கும் குடிலில் இருந்து பீது வனம் செல்வதற்கான வழிக்காட்டி..”
“என்னண்ணா சொல்ற..?? வழிக்காட்டியா..??”
“ஆமாம் வசீ.. அவர்கள் பூமிக்குச் செல்வதற்கான வழிக்காட்டி இது..”, என்றவன், “நாளை நீ பூமிவாசிகளைப் பார்க்கச் செல்லும்பொழுது அவர்களிடம் கொடுப்பதற்கு..”, என்றான்..
“என்ன சொல்கிறாய் அண்ணா.. அவர்களைப் பார்க்க அனுமதி கிடைத்துவிட்டதா..??”, சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு..
“கிடைத்துவிட்டது வசீ.. சிறிது நேரத்திற்கு முன்பு தான் விலாசி எல்லோன் செய்தி அனுப்பினார்கள்.. பூமிவாசிகளை நீ வந்து பார்த்துசெல்லலாம் என்று..”
ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தவள் சடனாக தனது ஆட்டத்தை நிறுத்தி, “அண்ணா.. இதனால் உனக்கு..??”, திக்கத்துவங்கியது வசியின் இதழ்கள் இப்பொழுது..
“எனக்கும் மட்டும் இல்லை உனக்கும் எதுவும் ஆகாது வசிஷ்டரா..”, என்றான் விபு அழுத்தமாக..
வசிக்கு ஏனோ அப்பொழுது மனதில் இருந்த பாரம் முழுவதும் இறங்கிய உணர்வு..
“ஆனால் நீ ஒன்றை மட்டும் நியாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் வசீ.. நீ பூமிவாசிகளுடன் கதைக்கும் பொழுது உன்னை உளவு பார்க்க ஆட்கள் இருக்கலாம் ஜாக்கிறதை..”, என்று எச்சரிக்கை செய்துவிட்டு, ”நான் காப்பு அணிந்த பிறகு இதைப்பற்றி நாம் பேசவேண்டாம்..”, என்று விட்டு நீருக்குள் கைவிட்டு தனது காப்பைத் தேடத்துவங்கினான்..