short and cute“டேய்! ப்ரீத்தி உன் மனசுக்குள்ள வந்துட்டா. அவளை இனி நீ தான் கண் கலங்காம பார்த்துக்கணும், சும்மா என்னை மறக்க முடியலைன்னு, உன்னை நீயே எமத்திக்காத இனி” என்று சஞ்சனா எழுதிய பேப்பர் கையில் கிடைக்கவும், கண்களில் நீர் வழிய சஞ்சனா என்றான்.
மீண்டும் ஒரு பேப்பர், அவன் முன் ஆடியாது. இப்பொழுது, பயம் இல்லை அவனுக்கு.
“என் ஆசை இது தான், அவளை கல்யாணம் பண்ணிக்கோ, நானே உங்களுக்கு மகளா வரேன்” என்று எழுதி இருந்தது.
மனம் சற்று அதிர்ந்தாலும், நிதர்சனம் அவனுக்கு புரிய வைத்தது. தெளிந்த முகத்தோடு, அவன் ப்ரீத்தியை சந்திக்க சென்றான்.
அங்கே ப்ரீத்தி, பெரும் கோபத்தில் இருந்தாள். அவனை மறக்க வேண்டும் என்று நினைக்க, நினைக்க ஒவ்வொரு முறையும் அவனை தான் அதிகமாக நினைத்துக் கொண்டு இருந்தாள்.
அவளால், ஒரு வேலையை கூட நிதானமாக செய்ய முடியவில்லை. எல்லா நேரமும், அவனுடன் இருந்த பொழுதுகள் கண் முன் தோன்றி, அவளை கடுப்பேற்றிக் கொண்டு இருந்தது.
அன்று மருத்துவமனையில் வேலை ஓடாமல், வீட்டிற்கு சீக்கிரம் வந்தவள், அங்கே இருந்த அவனின் உருவ பொம்மை மேல், கத்தியை வீசிக் கொண்டு இருந்தாள்.
அவள் அப்படி வீசிக் கொண்டு இருக்கும் பொழுது தான், அவன் உள்ளே வந்தான். அங்கே இருந்ததை பார்த்து, அவன் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான்.
“வா டா வா! உன்னை தான் தேடிகிட்டு இருந்தேன்” என்று கூறி கத்தியோடு அவள், அவனை துறத்த தொடங்கினாள்.
“நான் என்ன பண்ணேன் உன்னை, எதுக்கு உனக்கு இந்த கொலைவெறி” என்று ஓடிக் கொண்டே கேட்டான்.
“என்ன பண்ணியா? உன்னை மறக்கலாம் நினைச்சா, கனவுல வந்து இம்சை படுத்திகிட்டே இருக்கியே! நானும் என் பாட்டி ஆசையை நிறைவேத்தலாம் பார்த்தா, முடியுதா என்னால” என்று அவளின் நிலைமையை எடுத்துக் கூறவும், அவன் நின்று விட்டான்.
நின்றதோடு மட்டும் இல்லாமல், அவளையும் பிடித்து நிறுத்தினான்.
“மறக்க முடியலை அப்படினா, என்னை கல்யாணம் பண்ணிக்கோ” என்று கூறி கண் சிமிட்டினான்.
“விளையாடாத! நீ சஞ்சுவை எப்படி விரும்பின எல்லாம், எனக்கு தெரியும். நீ இருந்த நிலைமையே அதுக்கு சாட்சி, சும்மா உளராம போ” என்று கூறி எரிச்சல் அடைந்தாள்.
“எரிச்சல் படாம, இப்போ நான் சொல்லுறதை நீ கேளு. இன்னைக்கு தான் நான் மும்பையில் இருந்து வந்தேன். ஆபிஸ் போனேன், அங்க நீ தான் தெரிஞ்ச”.
“வீட்டுக்கு போனேன், நீ எனக்கு கொடுத்த காட்சி இன்னும் என் கண்ணுக்குள்ள நிக்குது. எல்லா நேரமும், இங்க நான் உன்னை பத்தி மட்டுமே நினைச்சேன்”.
“அவ்வளவு ஏன், இங்க வர நான் முதல தயங்கினேன். காரணம் எங்க, உன்னை நான் பார்த்து மீண்டும் உனக்கு என்னோட நினைப்பு அதிகமானா”.
“அப்போ கூட உன்னை பத்தி தான் நினைச்சு இருக்கேன், இப்போ இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சது. சஞ்சனா இப்போ இல்லை, அவ என்னோட கடந்த காலம்”.
“ஆனா, நீ இப்போ நிகழ்காலம். ஐ லவ் யூ ப்ரீத்தி, எப்படி எல்லாம் தெரியல, ஆனா ஏதோ ஒரு விதத்தில் நீ என்னை ரொம்ப பாதிச்சு இருக்க” என்று கூறினான் வருண்.
இதைக் கேட்டவள், இதற்காக தானே இத்தனை நாள் காத்து இருந்தோம் என்ற நினைவு தான் முதலில் வந்தது அவளுக்கு. கனவு நிஜமாக போவதை நம்ப முடியாமல், அவன் கையை கிள்ளி விட்டாள்.
“ஏன் இப்படி ?” என்று அலறினான்.
“சும்மா, கனவா, இல்லை நிஜமான்னு டெஸ்ட் பண்ணேன்” என்றவளை இழுத்து, உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான்.
இதை பார்த்த, சஞ்சனாவும், சாஹித்யாவும் சந்தோசம் அடைந்தனர். தங்கள் வேலை முடிந்தது என்பது போல், இருவரும் முக்தி வேண்டி மேலே சென்றனர்.
ஒரு வருடம் கழித்து:
“ஜோ, ஜோ! அழ கூடாது சாஹி, அம்மா பக்கத்துல தான இருக்கேன். தூங்குங்க செல்லம், ஜோ! ஜோ!” என்று தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
“பாரு டா சஞ்சு, அம்மா சாஹிக்கு தான் இப்போ எல்லாம் அதிக செல்லம் கொடுக்கிறாங்க, நம்மள கண்டுக்கவே மாட்டேங்குறாங்க” என்று கூறிய வருணை முறைத்தாள் ப்ரீத்தி.
“பிள்ளைக்கு தப்பு தப்பா சொல்லிக் கொடுக்காதீங்க. எத்தனை தடவை சொல்லுறது, சாஹி தான் என்னோட ஒரே உறவா கூடவே இருந்தா அப்படின்னு”.
“இந்த வீட்டை சுத்தி, பாட்டி ஆயிறேதெட்டு மந்திரம் போட்டு வச்சு இருந்தாலும், ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கும் எனக்கு, பாட்டி இறந்த பிறகு”.
“சாஹி என் கூட தங்கின பிறகு தான் , திரும்ப நான் பயமில்லாம தூங்கினேன். அதனால, உருவமே இல்லாம என் கூட எனக்கு ஆறுதலா இருந்த சாஹி, எனக்கு ஸ்பெஷல் தான்”.
“அதுக்குன்னு உங்களை ஒதுகிட்டேன், ஸ்பெஷல் கவனிப்பு கொடுக்கலன்னு பொய் சொல்ல கூடாது. ரெண்டு பேருக்கும், என்ன பிடிக்கும்ன்னு என்னை தவிர யாருக்கு தெரியும்” என்று கூறியவளை காதல் பார்வை பார்த்து வைத்தான்.
அந்த பார்வையில், எப்பொழுதும் போல் முகம் சிவந்து போனாள் ப்ரீத்தி. இவர்களை பாட்டி, மேலிருந்து ஆசிர்வதித்தார்.
நிறைந்தது..