அதாவது ஏழைகளாக இருக்கும் ஊமைகள்,காது கேளாதவர்கள் இலவசமாகத் தங்கவும்,அவர்கள் உண்ண உணவும் உடுக்க உடையும் மருத்துவ வசதி கல்வி தொழிற்க் கல்வி பயில வசதி முதலியனவைகளுக்கு அந்தக் காலி இடத்தில் செட்டுகளோ,கட்டிடங்களோ போட வேண்டும்..ஊமைகள் பேசுவதற்குச் சிகச்சையும்,பேச முயல சிகிச்சையும்,பேச்சுப் பயிற்சிகளும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.
இதே மாதிரி காது கேளாதவர்கள் இதே இடத்தில் தங்க வசதியும் காது கேட்கும் கருவிகள் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்தல் வேண்டும்
இந்த எம்.ஜிஆர் ஊமைகள் இல்லத்திற்கு ஷெட்,கட்டிடங்கள் போடுவதற்கும் மற்ற இதர செலவுகளுக்கும் மேலே மூன்றாவது இனம் குறிப்பிட்ட சாலி கிராமத்தில் இருக்கும் சத்தியா தோட்டத்திலிருந்து வரும் வருவாயைக் கொண்டு மேற்கூறியுள்ள செலவுகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்ச்சொன்ன சத்தியா தோட்டமும் எம்.ஜிஆர் ஊமை இல்லம் அறக் கட்டளைக்கு எழுதி வைக்கிறேன்
என்னுடைய வீட்டில் இருக்கம் பரிசு சாமான்களும் ஆற்காடு ரோடில் உள்ள 27 இலக்கமிட்ட கட்டிடத்தில் இருக்கும் பரிசு சாமான்களும் புத்தகங்களும், நூல்களும் மற்றும் மேற்சொன்ன தியாகராய நகர்.ஆற்காட் ரோட்டில் உள்ள 27இலக்கமிட்ட மனையும் கட்டிடமும் என் காலத்திற்குப் பிறகு ”எம்.ஜிஆர் நினைவு இல்லம்” ஏற்படுத்தப் பட்டு.அதில் உள்ள மேற்கூறியுள்ள சாமான்களையும்.இந்த இடத்தையும் மக்கள் பார்வையிட சௌகரியங்கள் செய்ய வேண்டும்..
மேற்ச்சொன்ன எம்.ஜிஆர் இல்லத்தை விற்கவோ,அடைமானம் வைக்கவோ, நன் கொடை கொடுக்கவோ,குத்தகைக்குக் கொடுக்கவோ உரிமை கிடையாது. இந்த இல்லத்தைப் பாது காக்க காவல் காரர் ஏற்படுத்தவும்,மற்றபடி பராமரிக்க,பாதுகாக்க வேண்டிய செலவுகளுக்கு மேற்படி நான்காவது இனமாகக் குறிப்பிட்ட ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்கள் வரும் படியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது.அந்த மார்க்கெட் கட்டிடத்தை இந்த எம்.ஜி.ஆர. இல்லத்திற்கு எழுதி வைத்திருக்கிறேன்
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும்,பெருந் தலைவர் காமராசர் அவர்களுக்கும் நினைவு இல்லங்கள் தமிழக அரசின் செலவில் ஏற்படுத்தப் பட்டன.அரசுக்குச் இச் செலவினைத் தவிர்த்திட என்னுடைய வீட்டையே மேற்படி இல்லமாக ஏற்பாடு செய்திருக்கிறேன்
சத்யா படப் பிடிப்பு நிலையம் பிரைவேட் கம்பெனியில் எனக்கு ஷேர்கள் இருக்கின்றன.அந்தப் பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த “அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்”கட்சிக்கு கீழே சொன்ன நிபந்தனைக்கு உட்பட்டு சேர வேண்டும்.அந்த சத்தியா படப்பிடிப்பு நிலையம்,கட்டிடங்கள் மற்றும் அங்குள்ள பொருட்களையும் கட்சியே கைப்பற்றி நிர்வாகம் செய்து அதில் வரும் வருவாயை கட்சிப் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்
ஒருக்கால் கட்சி பிளவு பட்டோ அல்லது கலைக்கப் பட்டாலோ மேற்படி சத்தியா படப்பிடிப்பு நிலையம் கம்பனி ஷேர்கள் நிர்வாகம் எல்லாம் மேல் குறிப்பிட்ட எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்லம் அறக் கட்டளை செலவுகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.மேற்படி சத்தியா இல்லம் விற்கவோ,குத்தகைக்குக் கொடுக்கவோ செய்ய முயலக் கூடாதுசத்தியா படப்பிடிப்பு நிலையக் கட்டிடத்திற்கு என் தாய் பெயரில் சத்யபாமா எம்.ஜி.ஆர் மாளிகை என்ற பெயர் வைக்க வேண்டும்
இந்த உயில் சாசனத்தை மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ எனக்கு முழு அதிகாரம் உண்டு.இந்த உயில் சாசனத்தை நல்ல தேக ஆரோக்கியத்துடனும் சுய நினைவோடும் கீழே கையொப்பமிட்டிருக்கும் சாட்சிகள் முன்னிலையில் நான் கையொப்பம் செய்து இருக்கிறேன்
இந்த உயில் பத்திரத்தை என் காலத்திற்குப் பிறகு ஆறு மாதத்திற்குள் அமுலுக்குக் கொண்டு வர வேண்டும்