• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
அவளிடம் இருந்து பதில் வராத காரணத்தால், ‘அண்ணி ஏன் பதில் பேசாமல் இருக்காங்க..?’ என்ற யோசனையுடன் குளியலறையை பார்த்தபடி குழப்பத்தில் நின்றான் சஞ்சீவ்.. அவனின் பின்னோடு அறையின் உள்ளே நுழைந்த சஞ்சனா, “அண்ணி..” என்று அழைத்தபடி அவளின் அறைக்குள் நுழைந்தாள்..

அங்கே பிரியாவை காணவில்லை என்றதுமே சஞ்சீவ் பக்கம் திரும்பியவள், “டேய் அண்ணி எங்கடா..?” என்றவள் அதட்டல் போட்ட அவளின் குரல்கேட்டு தன்னுடைய கவனம் கலைந்து குளியலறைக்குள் இருந்து வெளியே வந்த பிரியாவின் முகத்தை ஆழ்ந்து கவனித்தான் சஞ்சீவ்..

அவளின் கண்கள் இரண்டும் சிவந்து இருப்பதைப் பார்த்த சஞ்சீவ், ‘அண்ணி எதுக்கு அழுதாங்க..?’ என்ற குழப்பத்துடன் அவளையே இமைக்காமல் பார்த்தான்..

அவனைக் கவனிக்காமல் முதலில் சஞ்சனாவைப் பார்த்த பிரியா, “ஹே சாக்லேட் நீ எப்போ ஊரில் இருந்து வந்த..?” என்றவள் புன்னகையுடன் கேட்டதும், “நாங்க எல்லாம் காலையிலேயே வந்துட்டோம் ஹனி டார்லிங்..” என்றவள் பிரியாவை வம்பிற்கு இழுத்தாள்...

“ஏய் அது அத்து வைத்த பெட் நேம்.. அந்த பெயர் சொல்லி என்னை கூப்பிட்ட உன்னை அடி பிச்சுருவேன்..” என்றவள் மிரட்ட அவளின் மிரட்டலுக்கு எல்லாம் பயத்தால் அவள் சஞ்சனாவே அல்லவே.. அதனால், “வெவ்வேவ்வா..” என்றவளைப் பார்த்து பலிப்பு காட்டிட அவளை அடிக்க துரத்தினாள் பிரியா..

“ஐயோ அண்ணி நான் வேன்னுன்னே தான் பண்ணினேன்.. அடிக்க வாராதீங்க..” என்றவள் கேலியுடன் சொல்லிவிட்டு ஓடிச்சென்று சஞ்சீவ் பின்னாடி நின்று, “டேய் குட்டிப்பையா அக்காவை அண்ணியிடம் இருந்து காப்பாத்துடா..” என்றவள் கெஞ்சிட அவள் சொன்னது எதுவுமே அவனின் காதில் விழவே இல்லை..

“ஓ நீ வேன்னுன்னு என்னை வம்பிற்கு இழுப்ப.. நான் உன்னை அடிக்காமல் விடணுமா..?” என்றவளைத் துரத்திய அண்ணியை நிமிர்ந்து பார்க்க சஞ்சீவ் முற்றிலுமே குழம்பிப்போய் சிலையென நின்றுவிட்டான்..

அவளின் முகத்தில் அழுதத்திற்கு உண்டான எந்த அறிகுறியும் இல்லாததைக் கவனித்த சஞ்சீவ், ‘அண்ணி அழுதாங்களா..? இல்லையா..?’ என்றவன் குழப்பத்தில் ஆழ்ந்திருக்க ஓடி மூச்சிரைத்த பிரியா சஞ்சீவ் முகத்தை கேள்வியுடன் பார்த்து சஞ்சனாவிடம், ‘இவன் ஏன் இப்படி நிற்கிறான்..?’ என்று பார்வையால் கேட்டாள்..

‘எனக்கு தெரியல அண்ணி..’ என்று உதட்டைப் பிதுக்கிய சஞ்சனாவைப் பார்த்துவிட்டு சஞ்சீவ் பக்கம் திரும்பியவள், “என்னடா நின்னுட்டே கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் ஐயா சொன்னாரா..?” என்றவனைக் கேட்டதும் கவனம் கலைந்து நிமிர்ந்த சஞ்சீவ், “என்ன அண்ணி நக்கலா..?” என்றுகேட்டு பிரியாவை முறைத்தான்..

“உன்னை பார்த்த அப்படிதான் தோணுது குட்டிப்பையா..” என்று சிரித்துக்கொண்டே கூறிய பிரியா, “ஆமா நீ வந்திருக்க என்றால் மில்க் வந்திருப்பாளே.. எங்கே மில்கி..?” என்றவள் சஞ்சனாவிடம் ஆர்வத்துடன் கேட்க அவளோ அறையின் வெளியே கையைக் காட்டினாள்..

அவளின் அறையின் வாசலில் நின்றிருந்த மதுபாலாவைப் பார்த்ததும், “ஏண்டி அங்கேயே நிக்கிற..” என்றவள் கேள்வியெழுப்ப, “ம்ம் அவளுக்கு வேண்டுதல் அண்ணி அதான் உங்க அறையின் வாசலில் நிற்கிற..” என்று சஞ்சனா சிரிக்காமல் சொல்ல, “சாக்லேட் உனக்கு வாய் ரொம்ப அதிகம்..” என்று திட்டியவளின் கைகளைப் பிடித்தாள் சஞ்சனா..

“நீங்க முதலில் கீழே வாங்க அண்ணி..” என்று வலது கையை சஞ்சனாவும், இடது கையை சஞ்சீவும் பிடித்து அழைத்துச் செல்ல, “என்னடா கைதியைப் போலீஸ் ஸ்டேசன் கூட்டுட்டு போற மாதிரியே கூட்டிட்டு போறீங்க..” என்றவள் சிணுங்கினாள்..

“ஆமா இந்த காதல் கைதிக்கு இன்னைக்கு பிறந்தநாள் இல்ல.. உங்களுக்கு விடுதலை கொடுக்க சொல்லி மேலிடத்தில் இருந்து அறிவிப்பு வந்திருக்கு.. அதுதான் உங்களை வெளியே கூட்டிட்டு போறோம்..” என்று கூறிய மதுபாலா வேகமாக அந்த அறைக்குள் சென்று மறைந்தாள்..

அந்த அறைக்கு அருகில் வரும் வரையில் அவளுடன் வந்த சஞ்சீவைப் பார்த்து சஞ்சனா கண்ஜாடை செய்ய, “அண்ணி நீங்க போய் அந்த கதவைத் திறங்க நாங்க உங்க பின்னாடியே வருகிறோம்..” என்று கூறியவன் முன் வாசலை நோக்கிச் செல்ல, “இவனுக்கு என்ன ஆச்சு..?” என்று தனக்குதானே கேள்வி கேட்டு திரும்பிப் பார்க்க அவளின் அருகில் சஞ்சனாவும் இல்லை..

“இவ எங்க போனா..?” என்றவள் யோசித்துக்கொண்டே அந்த அறையின் கதவைத்திறந்து உள்ளே நுழைய அந்த அறையின் பின்பக்க கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்தவள் உதட்டில் புன்னகையுடன் அந்த அறையின் கதவுகள் வழியாக வெளியே சென்றாள்..

அங்கிருந்த மரத்தில் ஒரு ஹார்ட் பலூன் இருப்பதைக் கண்ட பிரியா ஓடிசென்று அந்த பலூனை உடைக்க அதிலிருந்து விழுந்த ஒரு காகிதம் கீழே விழுக அதை கையில் எடுத்ததும், “இங்கிருந்து பத்தடி சென்று வலது பக்கம் திரும்பவும்..” என்று எழுதியிருக்க புன்னகையுடன் அங்கிருந்து பத்தடி நடந்து வலதுபக்கம் திரும்பிப் பார்த்தாள்..

அங்கிருந்த ஒரு சிமிண்ட் பெஞ்சின் மீது பிங்க் கலரில் ஒரு டெடிபியர் இருப்பதை பார்த்தவளின் முகம் தாமரையென மலர்ந்துவிட அதனருகில் சென்று டெடிபியரைக் கையில் எடுத்ததும் அதனடியே ஒரு பேப்பர் இருப்பதை பார்த்து அதை எடுத்து படித்தாள்..

“இங்கிருந்து இருபது அடிகள் எடுத்து வைத்து இடதுபக்கம் திரும்பவும்..” என்று எழுதியிருக்க அங்கிருந்து நடக்க ஆரம்பித்தவள் அதிலிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததும் அவள் சுற்றிலும் பார்வையை சுழற்ற அங்கிருந்த செடியில் பூத்திருந்த ரோஜா செடியில் காகிதம் ஒன்று காற்றில் ஆடியது..

அதன் அருகில் சென்ற பிரியா அந்த காகிதத்தை வாசிக்க, “வாசமுள்ள ரோஜாவைப் பறித்துக்கொண்டு நேராக இருக்கும் தார் ரோட்டில் நடந்து செல்லவும்..” என்று எழுதி இருக்க, “இன்னும் எவ்வளவு தூரம்..?” என்று தனக்குதானே கேள்வி எழுப்பிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்..

அந்த பாதையில் கொஞ்சதூரம் சென்றதுமே அந்த பாதை எங்கே செல்கிறது என்றவளுக்கு புரிந்துவிட வேகமாக அந்த இடத்தை நோக்கி நடந்தாள்.. அவள் கேட்டை திறந்து உள்ளே சென்றதும், “அண்ணி வந்தாச்சு..” என்று சஞ்சீவ் குரல்கொடுத்தான்..

அவள் வீட்டின் உள்ளே நுழைந்திட வீட்டில் இருக்கும் எல்லா லைட்டும் பளிச்சென்று எரிந்திட அவளைச்சுற்றி நின்றிருந்த சங்கமித்ரா, மதுபாலா, சஞ்சனா, சஞ்சீவ், மணிகண்டன், சீதாலட்சுமி எல்லோரும் நின்றிருக்க ஐஸ்கிரீம் கேக்கை கொண்டு வந்து வைத்த சங்கமித்ரா புன்னகையுடன் நிமிர்ந்தாள்..

“பிரியா நீ ரொம்ப மூட் அவுட்டா இருந்த.. அதனாலதான் உன்னோட ரிலாக்ஸ்க்கு உன்னை இவ்வளவு தூரம் நடக்க வெச்சோம்.. ஸாரி தர்ஷி..” என்று கூறிய சங்கமித்ரா, “கேக் கட் பண்ணு..” என்று சொல்ல மெழுகுவர்த்தி ஊதி கேக்கை வெட்டிட, “ஹாப்பி பர்த்டே டூ யூ..” என்று வாழ்த்து பாடினார்..

முதல் கேக் பீஸை எடுத்து மித்ராவிற்கு ஊட்டிவிட்ட பிரியா, “தேங்க்ஸ்டா மிதுமா..” என்று புன்னகையுடன் கூறியவளின் கன்னத்தில் கேக் கிரீமை எடுத்து பூசிய மதுபாலா, சஞ்சனா இருவரும், “இதுதான் எங்க அண்ணி..” என்று அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தனர்.. அவர்களின் ஒற்றுமையாக பார்க்க பெரியவர்களின் மனம் நிறைந்தது..

அபிநந்தன், அர்ஜூன், விக்ரம், சந்துரு, கொடுத்த பரிசுகளைக் கொடுத்துவிட்டு அன்று இரவு பிரியாவுடன் தங்கிவிட்டு மறுநாள் காலையில் கிளம்பிச் சென்றனர்.. பிரியாவைத் தவிர மற்ற நால்வருமே சந்தோஷ் மீது சரியான கோபத்தில் இருந்தனர்.. சந்தோஷிடம் கேள்வி கேட்கவே நால்வரும் சென்னை நோக்கி பயணமாயினர்..

இவர்களின் கேள்விக்கு சந்தோஷ் பதில்தான் என்ன..? பிருந்தாவின் கேள்விக்கு எல்லாம் பதில் கிடைக்குமா..???


Nice update
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Very nice epi Sandhiya.. Santhosh Priya ku Birthday wish pannirukalam.. ippa paru nalu puyal Unnai nokki varuthu nee matuna..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top