உலக தண்ணீர் தினம்
கார்மேக வடிவான மங்கை ஒருத்தி
இயற்கை பிள்ளை(மரங்கள்)
கதறல் குரல்கேட்டு வானில்
இருந்து இறங்கி வருகிறாள்
பிள்ளைகளின் தாகம் தீர்க்கும்
சிறுதுளியின் வடிவில் வரும்
மழையான தாயவள்!
சிறுதுளியே வானில் இருந்து
பொழிந்து மழையாக மாறினாள்..
நிலத்தில் குளமென்று தேங்கி
நின்றவள் பொங்கி எழுந்து
மலையில் இருந்து இறங்கும்
பொழுதினில் அருவியாக மாறினாள்..
நாடெங்கும் ஓடி வையகத்தின்
வறுமை போக்கி பயிர்களை
செழிக்க வைத்து கடலோடு
சங்கமிக்கும் பொழுதினில்
உப்பென்று மாறிப்போனாள்..
பிறப்பில் இருந்து இறப்பு வரை
பயணிக்கும் அவளின் வாழ்வில்
தான் எத்தனை துயரங்களோ ..
ஒரு நொடி கூட கலங்காமல்
சூரியனின் வெப்பச் சூட்டில்
மீண்டும் உயிர்தெழுகிறாள்..
ஆவியின் வடிவாக வானம் சென்று
மேகமாக உருவாகி மீண்டும்
தன் மழழைகளைக் காணவே
மீண்டும் மழையேன மாறி
மண்ணைத் தொடுகிறாள்..
நீயின்றி உயிர்வாழ முடியாதடி
இந்த வையகத்தில் யாரும்..
நீரின்றி அமையாது என்ற வள்ளுவனின்
வாக்கு ஒரு நாளும் மாறி போகாதடி..
நாளைய சந்ததிக்கு சொத்துகளை
சேர்க்க நேரம் இல்லை என்றாலும்
அவர்கள் உயிர்வாழ தேவையான
நீரையாவது அவர்களுக்காக
சேமித்து வைப்போம் என்ற
உறுதிமொழி எடுப்போமே இன்று..!
உலக தண்ணீர் தினம் நல்வாழ்த்துகள்..
சந்தியா ஸ்ரீ
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
மழைநீர் வீணாக போவதை தடுக்க முயற்சி செய்யலாம்.. அடுத்து நம்மால் முடிந்த மரங்களை நடுவோம்.. ரோட்டில் செல்லும் நேரத்தில் தண்ணீர் வீணாக போவதைப் பார்த்தால் அதை நிறுத்துவிட்டு செல்வோம்.. வீட்டில் மரங்கள் இருந்தால் நாம் சமையல் செய்த பிறகு வீணாகும் நீரை மரங்களுக்கு பயன்படுத்துவோம்..
நீரின் அருமை அறிந்து அதை சிக்கனமாக உபயோக்கிவும் பழகலாம்...
இன்றிலிருந்து நாமும் சரி, நமது பிள்ளைகளுக்கும் சரி, சின்ன சின்ன விஷயத்தை நீரின் தேவையும், அதை சேமிக்கும் வழி முறைகளையும் கற்பிப்போம் என்று உறுதிமொழி எடுக்கலாமே..
Last edited: