• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Netru | Sci-Fi Short Story | Vijayanarasimhan | Part 2/3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஞாயிறு காலை, ரகுநந்தன் தனது முதல் காலப்பயணத்தை மேற்கொள்ள கதிர்வேலனின் ஆய்வுகூடத்தை நோக்கித் தயக்கமும் உற்சாகமும் கலந்த மனநிலையில் சென்றுகொண்டிருந்தார். உண்மையிலேயே காலப்பயணம் செய்யப்போகிறோம் என்கிற உற்சாகம், காலப்பயணம் செய்யப்போவது உண்மைதானா என்கிற தயக்கம்!

இடையில் வந்து அந்தச் சிறுவன் கொடுத்த துண்டுக் காகிதத்தை அவர் மதிக்கவில்லை, ‘பார்க் போகாதே’ என்றால்? அவர்தான் நேற்றே பார்குக்குப் போய்விட்டாரே, ‘கதி—’ கதிர்வேலன்? ‘கதிர்வேலனைச் சந்திக்காதே’ என்று எழுத நினைத்திருப்பானோ? ஏன் முடிக்கவில்லை? கதிர்வேலனைத்தான் சந்தித்தாகிவிட்டதே! கதிர்வேலன் சந்திப்பு என்றதும் அவருக்கு மீண்டும் அந்த உற்சாகம் + தயக்கம் கலந்த பரபரப்பு தோன்றிவிட, அந்தத் துண்டுக் காகிதத்தைக் கசக்கி சாலையோரத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தார்.

”டைம் மெஷின்” தனது ஆய்வுக்கூடத்தில் கண்கள் அகல நின்றிருந்த ரகுநந்தனிடம் கதிர்வேலன் காட்டிய அந்தக் ‘காலப்பயண இயந்திரத்தை’ உங்களுக்கு விவரிக்க நான் அதிகம் முயலப்போவது இல்லை! நீங்கள் அப்படி ஒன்றை எப்போதும் எங்கேயும் (இந்தக் கதை எழுதப்பட்ட காலத்திற்கு உட்பட்ட ‘எப்போதும் எங்கேயும்’) பார்த்திருக்கமாட்டீர்கள்! ஒரு கார் அளவு பெரிய உலோகக் கோழிமுட்டையைச் சுற்றி ஒன்றுக்கொன்று செங்குத்தான அச்சில் சுழலக்கூடியதாக மூன்று வளையங்கள் என்பது அந்த இயந்திரத்தின் முக்கிய அமைப்பு. அந்தக்கோழிமுட்டையும், வளையங்களும் வெவ்வேறு வண்ண ஒளிகளைப் புகை போல ஒழுகவிட்டுக்கொண்டிருந்தன. ‘இது எப்படி வேலை செய்கிறது’ என்று கேட்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் நின்று அதை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ரகுநந்தன்.

“எப்படி இருக்கு?” புதிதாய் வாங்கிய காரை நண்பனுக்குக் காட்டுபவரைப் போலக் கேட்டார் கதிர்வேலன், ரகுநந்தனிடமிருந்து பதிலை எதிர்ப்பார்க்காதவராய் தானே தொடர்ந்தார்,

“நண்பா, காலத்தைப் பற்றி நீ நேற்று எழுதிக்கொண்டிருந்தாய் அல்லவா, அது ஏறத்தாழ உண்மையே! ந்யூட்டன் அறிந்த காலம், ஐன்ஸ்டைன் அறிந்த காலம் என்றாய், நீ அறிந்த காலத்தைப் பற்றி எனக்குத் தெரியாது, நான் அறிந்த காலத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேட்டுக்கொள்...” கதிர்வேலன் நாடக ஒத்திகை போல பேசினார்,

“காலம் நதியா சாலையா என்றாய், அது இரண்டுமே! அது ஒரு நதி ஓடும் சாலை, சாலையில் நானும் நீயும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் காலத்தில் நான் நடப்பது உன்னையும் சேர்த்து இழுக்கும், நமக்கு குறுக்கே காலத்தின் புலம், Time Field, என்கிற நதியும் ஓடுகிறது, என் அசைவுகளின் அலைகள் உன்னைத் தள்ளும் உன் அசைவுகளின் அலைகள் என்னைத் தள்ளும்... நம்மைச் சுற்றி நமக்கான என்ட்ரோபி புலம் ஒன்று...” சற்று நிறுத்தி ரகுநந்தனை உற்றுப் பார்த்தார், “புரிகிறதா?”

‘ஆமாம்’ ‘இல்லை’ இரண்டையும் கலந்து தலையை அசைத்தார் ரகுநந்தன்,

”சாரி... என் நண்பா, நான் விஞ்ஞானிதான், ஆசிரியன் இல்லை...” என்றார் கதிர்வேலன்,

“பரவால்ல சார்! கொஞ்சம் கொஞ்சம் புரியுது!”

“ம்ம்ம்... நன்று! இப்படி ஒட்டுமொத்தமா இயங்குற இந்த என்ட்ரோபி-டைம் பீல்டுலேர்ந்து ஒருத்தனை நாம விடுவிச்சு நிறுத்தி வெச்சா அவனை மட்டும் விட்டுட்டு மத்தவங்க எல்லாரும், அதாவது மொத்த யுனிவெர்ஸே, காலத்துல போவாங்க, கொஞ்சம் கழிச்சு இவனை விட்டா அவன் அவங்களின் எதிர்காலத்துல இருப்பான்...”

ரகுநந்தனுக்கு உண்மையிலேயே இப்பொழுது கொஞ்சம் புரிந்தது, “ஆனா?”

”என்ன? கேளு... ம்ம்ம்...” கதிர்வேலன் உற்சாகமானார்,

“ஆனா, ஒருத்தனைக் கால ஓட்டத்துல நகராம பிடிச்சு வெச்சு அப்புறம் விட்டா அவன் பின்னால, அதாவது இறந்தகாலத்துலதான இருப்பான்? எப்படி எதிர்காலத்துல?...”

கதிர்வேலன் வாய்விட்டுச் சிரித்தார், “நண்பா, அந்த நதி உருவகம் உன்னோடது, நான் சொன்னதில்ல, நீ அதை வெச்சே திங்க் பண்ற, ஆனா அது அப்படியில்ல... ஆக்சுவலி...” என்று தொடர்ந்தவரை ரகுநந்தன் இடையிட்டு தடுத்தார், “இருக்கட்டுங்க, இன்னொரு நாள் சாவகாசமா பேசிக்கலாம்!”

“இன்னொரு நாள்! இன்னொரு நாள்!” கதிர்வேலனின் முகம் போனபோக்கைப் பார்க்க கொஞ்சம் அச்சமாகக் கூட இருந்தது ரகுநந்தனிற்கு, “இன்னொரு நாள்! இந்த வார்த்தைக்கு எத்தன பொருள் புரியுது எனக்கு இப்போது?” என்று தன் முகத்தை வெறித்துப் பார்த்த கதிர்வேலனைக் கண்டு தான் தவறான இடத்தில் இருக்கிறோம் என்று தோன்றியது ரகுநந்தனிற்கு.

“சார், நான் கிளம்பவா? கொஞ்சம் வேலை இருக்கு எனக்கு, என் வொய்ஃப்...”

“அட, பயந்துட்டியா நண்பா?” என்று இடைவெட்டிய கதிர்வேலன் பழையபடி சகஜநிலையில் தோன்றினார், “இங்க வா...”

ரகுநந்தனின் தோள்களில் நட்போடு கைபோட்டுக்கொண்டார் கதிர்வேலன், “லுக், இதில பயப்பட ஒன்னுமே இல்ல, ஃபிளைட்ல போயிருக்கியா?”

“இல்லங்க...”

“சரி விடு, லிஃப்ட்ல?” போயிருக்கிறேன் என்பது போல் தலையசைத்தார் ரகுநந்தன், “ம்ம்ம்... அது கிளம்புறப்ப ஒரு மாதிரி ஜிவ்வுனு வெயிட்லெஸ்ஸா இருக்கும்ல?” ரகுநந்தன் தலையசைக்க “அப்படித்தான் இருக்கும்!” என்று முடித்தார்.

பிறகும் நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர், அவ்வப்போது தைரியம் வந்தும் அவ்வப்போது பயம் வந்தும் ‘இவருடன் போகலாமா வேண்டாமா’ என்பதில் ஊசலாடிக் கொண்டிருந்தார் ரகுநந்தன். இறுதியாய் ‘சரி ய்யா, இன்னிக்கு வேண்டாம்’ என்று புள்ளிவைத்த கதிர்வேலன் ரகுநந்தனை இருந்து தன்னோடு சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு வற்புறுத்தினார். இருவரும் கொஞ்சம் சாப்பிட்டனர், உணவு சிலது கதிர்வேலனால் சமைக்கப்பட்டதும் சிலது உணவகத்தில் வாங்கப்பட்டதுமாய் இருந்தது. உணவு முடிந்து கொஞ்சம் மதுவையும் இருவரும் ருசித்தனர். ’காலத்தின் துளி’ (Droplets of Time) என்று கதிர்வேலனால் கண்டுபிடிக்கப்பட்டு(!) கதிர்வேலனாலேயே பெயரிடப்பட்டிருந்த மதுக்கலவை (Cocktail) அது! கொஞ்சம் கொஞ்சமாய் கொஞ்சம் என்பது அதிகம் ஆனது. “ஃப்யூச்சர் ஆஃப் பாஸ்ட்’னு இன்னொரு காக்டெயில் கூட கண்டுபிடிச்சிருக்கேன் அதையும்...” கலந்து கொடுத்தார் கதிர்வேலன்.

போதையில் இருந்த ரகுநந்தனை பேச்சின் இடையில் ’கோழை’ என்று கதிர்வேலன் உசுப்ப, ரகுநந்தனின் ‘ரியாக்‌ஷன்’ பலமாய் இருந்தது. ஒரு கட்டத்தில் ‘இப்பவே கிளம்பிக் காலப் பயணம் போகலாம்’ என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கிவிட்டார் ரகுநந்தன். போதையில் இருப்பதால் வேண்டாம் என்ற கதிர்வேலனைக் ‘கோழை’ ‘ஏமாற்றுக்காரன்’ என்று ரகுநந்தன் உசுப்ப இருவரும் அப்போதே காலப்பயணம் மேற்கொள்வது என்று உறுதி பூண்டார்கள்.

அந்தக் கோழிமுட்டை இயந்திரத்தில் ஒரு கதவைத் திறந்து ரகுவை உள்ளே ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்ட கதிர்வேலன், இருவருக்கும் தானே ‘சீட் பெல்ட்டை’ அணிவித்துவிட்டு, இயந்திரத்தின் விசைகளை வரிசையாய் இயக்கத் தொடங்கினார். அதன் உள்ளும் வெளியிலும் ’பீப்’ ‘டிக்’ ‘க்ளின்’ ‘க்ரக்’ என்று பலவித ஓசைகளும் மாறி மாறிக் கேட்டன, எல்.சி.டி. திரைகளும் எல்.ஈ.டி. விளக்குகளும் உயிர்பெற்று ஒளிர்ந்தன. கதிர்வேலன் போதையில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இன்றி மிகத் தெளிவாகவே இயந்திரத்தை இயக்கத் தொடங்கியிருந்தார். அவர் போதையிலேயே இல்லை!

இராட்டினத்தில் சுழல்வது போன்ற உணர்வில் கொஞ்சம் கொஞ்சமாய் போதை தெளிந்து வந்த ரகுநந்தன் தன்னைச் சுற்றி நடப்பதை மெல்ல புரிந்துகொள்ளத் தொடங்கினார், கதிர்வேலனையும் அந்த இயந்திரத்தையும் அடையாளம் கண்டுகொண்டார். அதற்கு வெளியில் தெரிந்த எதுவும் அவராலோ என்னாலோ வருணிக்க இயலாததாய் இருந்தன!

(தொடரும்...)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயநரசிம்மன் தம்பி
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

selvipandiyan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
191
Reaction score
621
Location
chennai
காலத்தின் துளி!பொருத்தமா இருக்கு!கோழைன்னு சொல்லிட்டா ஒரு வீரம் வந்துடுது!
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
காலத்தின் துளி!பொருத்தமா இருக்கு!கோழைன்னு சொல்லிட்டா ஒரு வீரம் வந்துடுது!
:giggle::giggle: ‘Droplets of Time' :coffee::coffee: என்று ஆங்கிலத்தில்தான் முதலில் தோன்றியது, அதைத் தமிழ்ப்படுத்தி வைத்தேன்... :giggle::giggle:

ஆம், அது ‘ரிவர்ஸ் சைக்காலஜி’! செய்யாதே என்பதைத்தான் செய்ய முனைவோம்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top