வீட்டை கோவிலாக்கும் தெய்வீக தீப சுடரும்,
வீட்டையும் நாட்டையும் பொசுக்கும் எரிமலை குழம்பும் போல...
வண்டுகளை தன்பால் ஈர்க்கும் பூக்களும்,
அப்பூக்களுக்கு வேலியாக அமையும் முட்களும் போல...
வண்ண மயில் தோகை விரித்து ஆடுவதைக் காண குவியும் கரு மேகங்களும்,
சுட்டெரிக்கும் சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் வெண்மேகங்களும் போல...
உளிக்கு அசைய மாட்டேன் என்று வீராப்பாய் இருந்த பாறையும்,
சிற்பியின் உழைப்பாய் பக்தர்களின் நம்பிக்கையாய் திகழும் தெய்வ உருவமும் போல...
காடுமலைகளோடு ரகசியம் பேசி மூலிகைகளை திருடி கொண்டு வரும் அருவியும்,
இருக்கும் பின்பு மறைந்து கண்வித்தைகளை பல காட்டும் கானல் நதிகளையும் போல...
செல்வங்களும் இன்பங்களும் குவிந்து கிடக்கும் சொர்க்கமும்,
ஒப்பாரிகளும் தீமைகளும் அசுர குணம் படைத்தவர்களும் வாழும் நரகமும் போல...
எதிரும் புதிருமாய்...
இருவேறு துருவங்களாய்...
நீயும் நானும் இருந்த போதிலும்...
காதல் என்ற ஒற்றை காந்த பூ
நம்மிடையே பூக்க...
ஊடலும் கூடல் ஆனதே!
நம் வாழ்வும் வசந்தமானதே!
நம் இல்லறமும் தித்திக்கின்றதே!
வீட்டையும் நாட்டையும் பொசுக்கும் எரிமலை குழம்பும் போல...
வண்டுகளை தன்பால் ஈர்க்கும் பூக்களும்,
அப்பூக்களுக்கு வேலியாக அமையும் முட்களும் போல...
வண்ண மயில் தோகை விரித்து ஆடுவதைக் காண குவியும் கரு மேகங்களும்,
சுட்டெரிக்கும் சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் வெண்மேகங்களும் போல...
உளிக்கு அசைய மாட்டேன் என்று வீராப்பாய் இருந்த பாறையும்,
சிற்பியின் உழைப்பாய் பக்தர்களின் நம்பிக்கையாய் திகழும் தெய்வ உருவமும் போல...
காடுமலைகளோடு ரகசியம் பேசி மூலிகைகளை திருடி கொண்டு வரும் அருவியும்,
இருக்கும் பின்பு மறைந்து கண்வித்தைகளை பல காட்டும் கானல் நதிகளையும் போல...
செல்வங்களும் இன்பங்களும் குவிந்து கிடக்கும் சொர்க்கமும்,
ஒப்பாரிகளும் தீமைகளும் அசுர குணம் படைத்தவர்களும் வாழும் நரகமும் போல...
எதிரும் புதிருமாய்...
இருவேறு துருவங்களாய்...
நீயும் நானும் இருந்த போதிலும்...
காதல் என்ற ஒற்றை காந்த பூ
நம்மிடையே பூக்க...
ஊடலும் கூடல் ஆனதே!
நம் வாழ்வும் வசந்தமானதே!
நம் இல்லறமும் தித்திக்கின்றதே!