• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - இன்னிசை பாடிவரும்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
இசையில் மனம்
லயித்து போவது ஏனோ?

வார்த்தையின் தாக்கமா?
சூழ்நிலையின் ஆட்சியா?

இருவிழியும் கலங்கி
கண்ணீர் வடிப்பது ஏனோ?

பூட்டி வைத்த நினைவுகள்
கண் முன் தோன்றுவதாலா?
உடலின் ரோமங்கள் எழுந்து
நின்று வரவேற்பதனாலா?

கருவறையின் இருட்டிலும்
இசை சென்று கை கோர்த்ததே,
தாயின் தாலாட்டில்...

கண் கூசும் மின்னல்
ஒளியிலும் இசை வந்து
சிரித்ததே மழையில் கானப்பாட்டில்...

மழலையின் கொஞ்சும்
மொழி இசையில்
மனம் துள்ளி குதித்தாடும்...

மாவிலை தோரணம்
அசையும் நேரம்
இதயமும் புத்துயிர் பெறும்...

தொட்டில் முதல்
சுடுகாடு வரை,
வாழ்வின் அங்கமாய்
நல்லதோர் வீணையின்
தமிழ் இசை...
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
ஆமாம் பா இசை எங்கும் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அருமை மா ? ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top