• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews "எனது புன்னகையின் முகவரி" ஒரு பார்வை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

deviprakash6

நாட்டாமை
Joined
Oct 13, 2019
Messages
82
Reaction score
123
?எனது புன்னகையின் முகவரி ?

"எறும்பு ஊரக் கல்லும் தேயும்" இரும்பா இருந்தவன பூவா மாற வச்சிருக்கு ஒரு பொண்ணோட உண்மையான அன்பும் காதலும்..
இந்த கதை மூலமா நான் தெளிவா புரிஞ்சுக்கிட்ட ஒரு விஷயம் மேல சொல்லி இருக்கற பழமொழியே தான் ?? வாழ்க்கைல பல நல்லது கெட்டது மாத்தி மாத்தி நடக்கலாம், காசு பணம் சொத்து எல்லாம் வந்துட்டு போகலாம்.. ஆனா எல்லாத்துக்கும் மேலாக நிரந்தரமான ஒன்னு எல்லாரும் வேணும்னு நினைக்கிற ஒரு விஷயம் அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நமக்கு கிடைக்கற அன்பு மட்டும் தான்.. அது தான் நம்ம உயிர் உள்ள முழு மனுஷனா இருக்கணுமா இல்ல உயிர் இல்லாத ஜடமா ஆகணுமான்னு தீர்மானம் பண்றது..

அந்த அன்பு தேவைப்படும்போது கிடைக்காத போது நாம எவ்வளவு பாதிக்கப்படுறோம்னு வார்த்தையால சொல்லிடவே முடியாது☹☹ ஒவ்வொருத்தரும் ஒரு சூழல்ல அந்த மாதிரி கண்டிப்பா அனுபவிச்சு இருப்போம்.. ஆனா ஒரு சிலர் அந்த வலிகள ரணங்களா சுமந்துட்டு இருப்பாங்க.. அப்படி ஒரு சிலர்ல தான் நம்ம தென்றல் மனோ உம் அடக்கம்?? ஒரே மாதிரியான பிண்ணியில வளர்ர வெவ்வேறு விதமான பண்புகள் கொண்ட ரெண்டு பேரு எப்படி வாழ்க்கைல ஒன்னு சேர்ந்து பயணிக்கிறார்கள் மேலும் வாழ்விலும் ஜெயிக்கிறார்கள்... அதுவே "எனது புன்னகையின் முகவரி"

❤ இளந்தென்றல்❤ அன்பே உருவாமான, அடுத்தவரின் மகிழ்ச்சிக்கு மட்டுமே ஆதாரமாக இருக்கும் அழகு சிலை.. சினிமா கதைநாயகியை போல ஆர்ப்பாட்டம் இல்லாத, நம்ம பக்கத்து வீட்டு பொண்ணா இருக்குமான்னு நினைக்கிற அளவுக்கு எதார்த்தமான பெண்.. பேசற பேச்சுல வாயே வாய் விட்டு அழுதுடும்.. அவ்வளவு பெரிய வாயடி புள்ள..?? மனுசுல ஆயிரம் கவலைகள் வலிகள் இருந்தாலும் மத்தவங்கள சந்தோஷபடுத்தி பார்க்கனும்னு நினைக்கிறது நம்மில் பல பேரு நினைச்சும் பார்க்காத ஒரு விஷயம்.. ஆனா அத ஒரு விஷயமா செஞ்சுட்டு இருக்கற பெருமை நிச்சயம் தென்றல்க்கு மட்டும் தான்..

பிறப்பால அனாதைனு அவ சொன்னாலும், அம்மா அப்பாக்கும் மேல அன்பு குடுக்க அவளுக்குனு நிறையவே உறவுகள் கடவுள் குடுத்துருக்காரு.. அதோட எவ்வளவு விளையாட்டுத் தனமா இருந்தாலும் தன்னோட கடமை எந்த பிசிரும் இல்லாம பாத்துக்கறது அவளோட தனி சிறப்பு.. வாழ்க்கைல உண்மையான உறவுகளை சம்பாதிக்கிறது ரொம்பவும் கஷ்டமான விஷயம்.. ஆனா அவளோட குழந்தைத்தனமான அன்பும் பாசமும் அவளுக்கு உண்மையான உறவுகளை குடுத்துருக்கு..

தன்னவனை சந்திக்கிறது முதல் அவனோட இருக்கற ஒவ்வொரு நாளும் அவனுக்காக அவனோட சிரிப்பு சந்தோஷத்துக்காக பார்த்து பார்த்து இவ செய்யறது ஒவ்வொண்ணும் அவன்மேல தென்றல் வச்சு இருக்க அளவுகடந்த காதல வெளிப்படுத்துது.. ஆரம்பத்துல ராட்சஸி, கடுவன் பூனையா இருந்தவங்க, அவங்களோட காதல் புரிதல் ஊடல்னு எல்லாம் வச்சு அழகான தென்றல் காற்றோட சாட்சியா பயணிச்சு, புயல்போல தென்றலான வாழ்ற அழகு பார்க்கவே கண்கோடி வேண்டும் தான் ??

எப்போதும் மத்தவங்களை சந்தோஷ படுத்தி பார்க்கனும்னு நினைக்கறவங்க தான் ரொம்பவும் காயங்களை அனுபவிப்பார்கள் அப்படினு சொல்வாங்க.. அது தென்றல் விஷயத்தில் ரொம்பவும் உண்மை.. மனோவோட சந்தோஷத்துக்காக அவ நிறைய விஷயங்கள் செஞ்சுமே அவனோட வீண்கோவம் அதுனால வெளிப்பட்ட வார்த்தைகள் எல்லாம் சேர்ந்து அவளை அளவுக்கு அதிகமா காயப்படுத்தினாலும் அவன்மேல வச்சு இருந்த அன்பும் காதலுமே அதுக்கு மருந்தாவும் மாறிடுச்சு??? இது தான் அன்போட சக்தி

❤மனோரஞ்சன்❤ சிரிச்சா சொத்து குறைந்து போய்டுமொனு அஞ்சு பைசாக்கு சிரிக்காம சுத்தற சிடுமூஞ்சி பாஸ்...?? தொட்டதும் ஷாக் அடிக்கற கரெண்ட் மாதிரி நினச்சதும் மூக்குக்குமேல கோவம் வந்து குடி இருக்குது.. இவன எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்காளா அப்படினு யோசிக்கிற அளவுக்கு சுத்தி வர ஒரு ரோபோ மேன்?? ஆனா உண்மையாவே ரொம்ப நல்ல பையன் மக்களே.. பாவப்பட்ட ஒரு ஜீவன்.. அன்புக்காக ஏங்கி தவிச்சு அது கிடைக்காம போன வெறுப்பு அவனோட இன்றைய நிலைக்கு காரணம்..

தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டாளும் கூட, மனசுல எப்போதும் ஒரு வெறுமையோட வளம் வர அவனோட இயந்திர வாழ்க்கைல தென்றல் புயலா வந்த நேரம், தானும் ஒரு சராசரி மனிதன்தானு உணர்ந்து வாழ்க்கைய அனுபவிக்கிற சமயம் உண்மையாவே தன்னவள் புயல் அடிக்க வச்சு அவன அலைய விடுறது, அதுக்காக அவன் கவலைப்பட்றதும், காதல் துளிர் விடும் அழகை அழகாய் பறைசாற்றி இருக்கு.. மோதலில் ஆரம்பிச்சா அது காதல்தான், இவங்களுக்கு அருமையா பொருந்தி இருக்கு???

அறியா வயசுல அனுபவிச்ச வலிகள், வடுவாய் இருந்து தந்த வலிகளை, தனக்கே உரித்தானவள் வந்து சேரும் போது மருந்தாய் அதை ஏற்று அவளை உயிரா நினைச்சு வாழ ஆரம்பிக்கறப்போ தன்ன மீறி போற விஷயங்களை எல்லாம் அழகா கையாண்டு இருக்கான்.. தனக்காக அவ செய்யற ஒவ்வொரு விஷயமும் தெரிஞ்சு அவமேல அன்பு கோட்டை கட்டி அவளுக்கு எல்லாமுமாக இருப்பேன்னு சொல்லாம சொல்லி இருக்கான்... நானும் நீயும் வேற இல்லனு அவளுக்கு புரிய வச்சு அவளுக்கு எப்போதும் துணையா இருந்துருக்கான்..

அவளோட வாழ்க்கைய பகிர்ந்து அவளோட மொத்த சொந்தமுமா இருந்தது மட்டும் இல்லாம, தன்னோட சுயத்தையும் அவளோட சந்தோஷத்துக்காக மாத்தி அவளவனாவே மாறி தன்னோட காதல்ல அவள முழுமையா நினைய வச்சுருக்கான்.. காதலுக்கு கண் இல்லை போல கண்மூடித்தனமாக அவமேல பாசம் காட்டி அவ இழந்த மொத்த சந்தோஷத்தையும் ஒன்னா ஒரே ஆளா திருப்பி கொடுத்து அன்பான கணவனா அவள அரவனைச்சுட்டு வரான் ??

நண்பர்கள் வட்டம் தென்றல்க்கு ரொம்பவும் பலம்.. தனிமைய அனுபவிக்க விடாம அவளை எப்போதும் அரணா காத்துகிட்டு வந்த பெருமைக்கு சொந்தம் நிவாஸ், பிரதாப், சுனில், ராகுல், ஷிவானி, அனு இவங்கள தான் கண்டிப்பா சேரும்.. வெறும் அன்பு பாசதுக்காக மட்டுமே இவ மேல உயிரையே வச்சு அவளோட சந்தோஷம் துக்கம் எல்லாத்துலயும் கூட இருக்கறது ரொம்பவும் பெரிய விஷயம்.. அதேபோல மனோக்கு சாரு குடுத்த சப்போர்ட் கண்டிப்பா பாராட்டபடவேண்டிய விஷயம் ????

பெத்தவங்க இல்லாம இவங்கள வளர்த்து இவ்வளவு தூரம் தூக்கி விட்ட மனோவோட தாத்தாக்கும் தென் ஓட ஷீலம்மாக்கும் உண்மையாவே ரொம்பவும் தைரியம் அதோட பெருமையும் சேரும்.. எல்லாரோட அன்பையும் சேர்த்து ஒரு ஆளா தந்து, குறைகள் ரொம்ப தெரியாம பாத்துக்கறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லையே.. அப்பறம் சூர்யா காரணம் இல்லாம வன்மத்த வளர்த்துக்கிட்டாலும் கடைசில அன்புக்கு கட்டுப்பட்டு மனசு மாறி எல்லாரோட மனசொன்றி இருக்கறது அவனோட பாத்திரத்துக்கு அழகு..

மொத்தத்தில் வலிகளின் உருவாக வாழ்ந்த ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் அன்பு காட்டி காயங்களுக்கு மருந்தாகவும், அவங்களோட புன்னகைக்கு முகவரியாவும் இருந்து வாழ்க்கைய ரசிக்க வச்சுருக்காங்க.. அருமையான கதை டா ஸ்ரீ மா??? ரசிச்சு படிக்க வேண்டிய ஒரு படைப்பு????
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
:love::love::love::love:thanks Devi akka:love::love::love::love:

Mano - thendral story eluthi one year complete akiruchu. But ippavum intha storykku review naan ethirpaarkkala.???

Unga review romba azhaga irukku.??????❤❤❤athe nerathil manasukku niraivaa irukku.. thank you so much akka.?????
 




deviprakash6

நாட்டாமை
Joined
Oct 13, 2019
Messages
82
Reaction score
123
:love::love::love::love:thanks Devi akka:love::love::love::love:

Mano - thendral story eluthi one year complete akiruchu. But ippavum intha storykku review naan ethirpaarkkala.???

Unga review romba azhaga irukku.??????❤❤❤athe nerathil manasukku niraivaa irukku.. thank you so much akka.?????
??? Varusham evalo aanalum kadhai onnu dane da.. adhoda padika padika mano bava mela ore loves ah vandhuruchuna pathukoyen???? thendral ku tough kudukalam nu nanum kalam yerangiten?????
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
??? Varusham evalo aanalum kadhai onnu dane da.. adhoda padika padika mano bava mela ore loves ah vandhuruchuna pathukoyen???? thendral ku tough kudukalam nu nanum kalam yerangiten?????
Adapavikala Mano thendral Jodi avanai ippadi site adikkapadathu
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
தென்றலாவது சுண்டலாவது.. ??? பாவா எனக்கு மட்டும் தான் ????
சுத்தம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top