• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர் - 002 - நூல்களும் ஆசிரியர்களும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம் நண்பர்களே,

கொரோனாவை எதிர்த்துப் பாதுகாப்பாக அவரவர் வீட்டிற்குள் பத்திரமாக இருக்கின்றீர்கள்தானே?

கணவன்/மனைவி, குழந்தை குட்டி என்று சமாளிப்பதை மீறிப் பொழுதுபோகாத தருணங்களும் இருக்கின்றனவா?

ஆம் எனில், இதோ அத்தகைய தருணங்களைப் பயனுள்ளதாகக் கழிக்க ஒரு சின்ன வழி...

இன்னொரு குறுக்கெழுத்துப் புதிர்!

இம்முறை ‘நூல்களும் ஆசிரியர்களும்’

விடைகளைக் கருத்தில் இட வேண்டா...
இந்த கூகுள் படிவத்தில் நிரப்புக:
https://forms.gle/7FCGqWM4QyE7b2498

(நினைவிருக்கட்டும், விடைகள் சரியான spelling-இல் இருக்க வேண்டும்! முதலில் குறுக்கெழுத்துக் கட்டங்களில் பொருந்துகிறதா என்று சரிபார்த்துக்கொண்டு, அவ்வாறே இந்தப் படிவத்தில் இடவும், இல்லையேல் தவறான விடை என்று காட்டும்! எடுத்துக்காட்டாய் ‘பாரதி’ என்பதுதான் விடை என்றால் ‘பாரதி’ என்றே இட வேண்டும், ‘பாரதியார்’ என்றோ, ‘மகாகவி’ என்றோ, ‘மகாகவி பாரதியார்’ என்றோ, ‘சி. பாரதி’ என்றோ இட்டால் தவறு என்றுதான் காட்டும்!)


இதோ புதிர்:

CW-Books-Authors.png
இடமிருந்து வலம்

1. ஆண்டாள் அருளியது

2. கணிமேதாவியாரால் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றும், மருந்தின் பெயர் கொண்டதுமான நூல்

5. பௌத்த சமயத்தைக் கூறும் காப்பியம்

6. திருமுருகாற்றுப்படையைப் பாடியவர்

7. பதினெண்மேல்கணக்கைச் சார்ந்த நீண்ட பாடல்கள்.

13. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றும், சமண சமய கொள்கை நூலுமாகும்

14. நிகண்டுகளில் ஒன்று

வலமிருந்து இடம்

12. எட்டு திருமணங்களைக் காட்டுவதால் ‘மணநூல்’ என்றும் அழைக்கப்படும் காப்பியம்.

16. மூத்த திருப்பதிகம் பாடிய அருளாளர் (இயற்பெயர்)

மேலிருந்து கீழ்

1. திருமூலர் அருளியது.

3. மாணிக்கவாசகரால் பாடப்பட்டது

4. நக்கீரரால் எழுதப்பட்ட பதினோராம் திருமுறை நூல்

10. குறிஞ்சித்திணைப்பாடல்களைப் பாடியவர்

கீழிருந்து மேல்

8. இவரை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு.

9. தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மாங்குடி மருதனாரால் பாடப்பட்டது

11. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று

14. தோலாமொழித்தேவரால் இயற்றப்பட்ட ஐஞ்சிறு காப்பிய சமண சமய நூல்

16. பண்டைய தமிழரின் பெருமைகளைக் காட்டும் புதையல்!

:):):cool::cool:(y)(y)(y):coffee::coffee:
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
வாங்க வாங்க எல்லோரும் ஓடியாங்க......
போட்டிகளில் கலந்துக்கிட்டு எல்லோரும் வெற்றி பெறுங்கள்.
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
எங்கேப்பா போனாங்க தமிழ் சூறாவளி??? செல்வா ஜி வாங்க, பதில் சொல்லுங்க:love::love:.
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
விடைகளை இங்கே போடாதீங்க; எல்லாரும் try பண்ணனும் இல்லையா! எடுத்திருங்க
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top