ஹாய் Friends,
குட்டியோண்டு தேன் மழை ஆதித்த கரிகாலனுகாக... முயற்சித்து இருக்குறேன்.. படிச்சுடு comment சொல்லுங்க.. Friends..
நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை... இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க ... இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்த புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!
“இளவரசே ...!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பி பார்த்தான் அவன்!
என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!
நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!
மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாக கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரனென கூற,
"சொல் முத்தழகா..." என்றான் ஆதித்த கரிகாலன்.
ஆம்... அருள்மொழி வர்மனுக்கு மூத்தவன்.
வரலாற்றின் சோழத்தின் பக்கங்களிலிருந்து வலுகட்டாயமாக பறிக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் தான் அவன்.
திரும்பிய கரிகலனை கண்ட முத்தழகனின் கண்களில் ரசனையும் பெருமையும் நிறைந்தது. அதை அறிந்த கரிகாலன் சிறு புன்னகையை சிந்தியவாறே, " உமது தமக்கை நந்தினி தேவி கூட என்னை இத்தனை ரசனையுடன் கண்டதில்லை முத்தழகா".
அதனை கேட்ட முத்தழகன் அப்பொழுது தான் சுயம் திரும்பியவன் கரிகாலனை அழைத்த காரணத்தை உணர்ந்து நண்பனை போலியாக முறைத்தவாறே, "யாம் தங்களை அழைத்ததும் எமது தமக்கை அளித்த குற்றபத்திரிக்கையை இளவரசரின் பார்வைக்கு தரவே ".
புன்னகை சிந்திய முகத்துடன் தமது தேவியின் குறும்பை அறிந்தவன்," குற்றம் தான் என்னவோ? சொல் முத்தழகா. இளவரசனின் கடமையை ஆற்ற ஆயத்தமாக உள்ளேன்". என்று கூறினான்.
முத்தழகன், " எமது தமக்கையின் பதி போர் முடிந்து ஒரு திங்கள் முடிந்தும் நாடு திரும்பவில்லையாம். மணாளனை காணமல் பசலை நோய் கண்டுள்ளாளாம். கண்ணாண கண்ணனை என்று காண்பேன் என்று ஏக்கத்தோடு உள்ளாளாம் ஆனால் அவளது பதியோ.. ' மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று நாட்டு மக்களின் நலனை மட்டுமே கருத்தில் வைத்து அவரது சரி பாதியை காண அவா இன்றி இருக்கிறாராம் என்று தூது அனுபியுள்ளார் இளவரசே" என்றான்.
புகாரினை கேட்ட கரிகாலனின் கண்களில் பிரிவின் ஏக்கமும் காதலும் வழிந்தது. அதை உணர்ந்த முத்தழகன் ," இளவரசே! " என்று அழைத்தான்.
கரிகாலன், " புரிகிறது முத்தழகா நாம் நாடு விட்டு வந்து பல திங்கள் ஆகிவிட்டது. போர் முடிந்தாலும் அதன் இழப்புகளை சரி செய்து நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தேவையான ஆயத்தங்களை செய்யவும் வேண்டியது அரசனின் கடமைதானே.. ஆதலால் வைத்தியத்திற்கு தேவையான மூலிகைகளை கொணரவே நாம் இந்த வனத்திற்கு வந்தோம். வந்த வேளையும் இனிதே முடிந்தது. நாடு திரும்ப ஆயத்தங்களை மேற் கொள்ள வேண்டியதுதான் அதற்குள் உமது தமக்கை தூது அனுப்பியுள்ளா?. என்றான்.
"ஆனால் இளவரசே எமது தமக்கை மட்டும் பிரிவு துயரில் வாடவில்லை அவளது பதியும் பிரிவில் தவிப்பதை யான் அறிவேன்" என்றான்.
கரிகாலன் புருவ முடிச்சுடன் அவனை காண முத்தழகனோ கேலி குரலில்.," பின்னே நேற்று இளைபாற மரத்தடியில் சிறிது நேரம் கண்ணயர்ந்த வேளையில் 'தேவி தேவி' என்று அரற்றியது யார் நண்பா? நிவீர் இல்லையோ? எனது கனவா? " என்று வினவினான்.
கரிகாலனோ அவனது கேள்வியில் நாண சிரிப்பை உதிர்த்தான்.
முத்தழகன், "ஆண்களின் நாணம் கூட அழகு என்று இந்த புலவர்களுக்கு உணர்த்த வேண்டும்" என்றான்.
முத்தழகனை போலியாக முறைத்தவாறே "நாட்டிற்கு திரும்பும் ஏற்பாடுகளை மேற் கொள் முத்தழகா "என்றான்.
இரு நாள்கள் பயணம் செய்து சூரியனார் உதிக்கும் நேரத்தில் நாடு திரும்பிய கரிகாலன் நேராக வைத்திய சாலை சென்று முதலில் தலைமை வைத்தியரிடம் வீரர்களை பற்றி அறிந்து மூலிகைகளை ஒப்படைத்து அரண்மனை திரும்பினான்.
அரண்மனையில் அரசரை சந்தித்து நாட்டு நலன் அறிந்து போர் பற்றி விவாதித்து தக்க தகவலை அறிந்து இளவரசனின் கடமையை முடிந்த பின்பே தன் சரிபாதியை காண அந்தி சாயும் நேரத்தில் அந்தபுரம் வந்தடைந்தான் கரிகாலன்.
ஆனால் மணாளனின்
மங்கையோஅந்தபுரத்தின் நந்தவனத்தில் குளிர் நிலவை ரசித்தாலும் சுடும். சூரியனின் . வெப்பத்தின் கனலோடு நின்றிருந்தாள்....
குட்டியோண்டு தேன் மழை ஆதித்த கரிகாலனுகாக... முயற்சித்து இருக்குறேன்.. படிச்சுடு comment சொல்லுங்க.. Friends..
நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை... இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க ... இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்த புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!
“இளவரசே ...!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பி பார்த்தான் அவன்!
என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!
நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!
மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாக கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரனென கூற,
"சொல் முத்தழகா..." என்றான் ஆதித்த கரிகாலன்.
ஆம்... அருள்மொழி வர்மனுக்கு மூத்தவன்.
வரலாற்றின் சோழத்தின் பக்கங்களிலிருந்து வலுகட்டாயமாக பறிக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் தான் அவன்.
திரும்பிய கரிகலனை கண்ட முத்தழகனின் கண்களில் ரசனையும் பெருமையும் நிறைந்தது. அதை அறிந்த கரிகாலன் சிறு புன்னகையை சிந்தியவாறே, " உமது தமக்கை நந்தினி தேவி கூட என்னை இத்தனை ரசனையுடன் கண்டதில்லை முத்தழகா".
அதனை கேட்ட முத்தழகன் அப்பொழுது தான் சுயம் திரும்பியவன் கரிகாலனை அழைத்த காரணத்தை உணர்ந்து நண்பனை போலியாக முறைத்தவாறே, "யாம் தங்களை அழைத்ததும் எமது தமக்கை அளித்த குற்றபத்திரிக்கையை இளவரசரின் பார்வைக்கு தரவே ".
புன்னகை சிந்திய முகத்துடன் தமது தேவியின் குறும்பை அறிந்தவன்," குற்றம் தான் என்னவோ? சொல் முத்தழகா. இளவரசனின் கடமையை ஆற்ற ஆயத்தமாக உள்ளேன்". என்று கூறினான்.
முத்தழகன், " எமது தமக்கையின் பதி போர் முடிந்து ஒரு திங்கள் முடிந்தும் நாடு திரும்பவில்லையாம். மணாளனை காணமல் பசலை நோய் கண்டுள்ளாளாம். கண்ணாண கண்ணனை என்று காண்பேன் என்று ஏக்கத்தோடு உள்ளாளாம் ஆனால் அவளது பதியோ.. ' மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று நாட்டு மக்களின் நலனை மட்டுமே கருத்தில் வைத்து அவரது சரி பாதியை காண அவா இன்றி இருக்கிறாராம் என்று தூது அனுபியுள்ளார் இளவரசே" என்றான்.
புகாரினை கேட்ட கரிகாலனின் கண்களில் பிரிவின் ஏக்கமும் காதலும் வழிந்தது. அதை உணர்ந்த முத்தழகன் ," இளவரசே! " என்று அழைத்தான்.
கரிகாலன், " புரிகிறது முத்தழகா நாம் நாடு விட்டு வந்து பல திங்கள் ஆகிவிட்டது. போர் முடிந்தாலும் அதன் இழப்புகளை சரி செய்து நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தேவையான ஆயத்தங்களை செய்யவும் வேண்டியது அரசனின் கடமைதானே.. ஆதலால் வைத்தியத்திற்கு தேவையான மூலிகைகளை கொணரவே நாம் இந்த வனத்திற்கு வந்தோம். வந்த வேளையும் இனிதே முடிந்தது. நாடு திரும்ப ஆயத்தங்களை மேற் கொள்ள வேண்டியதுதான் அதற்குள் உமது தமக்கை தூது அனுப்பியுள்ளா?. என்றான்.
"ஆனால் இளவரசே எமது தமக்கை மட்டும் பிரிவு துயரில் வாடவில்லை அவளது பதியும் பிரிவில் தவிப்பதை யான் அறிவேன்" என்றான்.
கரிகாலன் புருவ முடிச்சுடன் அவனை காண முத்தழகனோ கேலி குரலில்.," பின்னே நேற்று இளைபாற மரத்தடியில் சிறிது நேரம் கண்ணயர்ந்த வேளையில் 'தேவி தேவி' என்று அரற்றியது யார் நண்பா? நிவீர் இல்லையோ? எனது கனவா? " என்று வினவினான்.
கரிகாலனோ அவனது கேள்வியில் நாண சிரிப்பை உதிர்த்தான்.
முத்தழகன், "ஆண்களின் நாணம் கூட அழகு என்று இந்த புலவர்களுக்கு உணர்த்த வேண்டும்" என்றான்.
முத்தழகனை போலியாக முறைத்தவாறே "நாட்டிற்கு திரும்பும் ஏற்பாடுகளை மேற் கொள் முத்தழகா "என்றான்.
இரு நாள்கள் பயணம் செய்து சூரியனார் உதிக்கும் நேரத்தில் நாடு திரும்பிய கரிகாலன் நேராக வைத்திய சாலை சென்று முதலில் தலைமை வைத்தியரிடம் வீரர்களை பற்றி அறிந்து மூலிகைகளை ஒப்படைத்து அரண்மனை திரும்பினான்.
அரண்மனையில் அரசரை சந்தித்து நாட்டு நலன் அறிந்து போர் பற்றி விவாதித்து தக்க தகவலை அறிந்து இளவரசனின் கடமையை முடிந்த பின்பே தன் சரிபாதியை காண அந்தி சாயும் நேரத்தில் அந்தபுரம் வந்தடைந்தான் கரிகாலன்.
ஆனால் மணாளனின்
மங்கையோஅந்தபுரத்தின் நந்தவனத்தில் குளிர் நிலவை ரசித்தாலும் சுடும். சூரியனின் . வெப்பத்தின் கனலோடு நின்றிருந்தாள்....
Last edited: