• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நியாயம் வேண்டும் .... மச்சான் செய்வது அநியாயம்... என்னோடு தோள்கொடுக்க வாருங்கள் நட்புகளே....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கதிரின் பதிலால் உறைந்து நின்ற தாமரையை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து கொண்டு கிளம்பிய மித்ரனுக்கு திடீரென்று தொல்லைபேசிவழியே வந்த செய்தியால் வேறு வழியில்லாமல் மனைவியை தனியே வீட்டுக்கு அனுப்பியிருந்தான் மித்ரன்..

இவையனைத்தும் நினைவுக்கு வர பாட்டியிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்,தாமரைக்கு கொஞ்சம் டயர்ட்டாக இருக்கலாம், இரண்டு நாளா கொஞ்சம் அலைச்சல் பாருங்க,என்று பாட்டியிடம் சாதாரணமாக சொல்லிவிட்டு, தன் மனைவிக்காக ஃபிளாஸ்க்கில் டீ வாங்கிக் கொண்டே சென்றான் "தி கிரேட் மித்ரன் "..

தாமரையின் அறைவாசலில் வந்து நின்று கதவை தட்டுவதற்காக கை வைக்க அது தானே திறந்தது தாழிடப்படாததால்,கூடவே இருட்டும் வந்து முகத்தில் மோதியது லைட் போடாத காரணத்தால்..

லைட்போடாமல் என்ன தான் பண்ணுறா, என்று நினைத்துக் கொண்டே சுவிட்ச்சை போட்டவன், சற்றே அதிர்ந்து தான் போனான் பெண்ணவளின் தோற்றம் கண்டு..

மெத்தையின் நடுவே கால்கள் இரண்டையும் தன் இரு கைகளால் கட்டி தன் முழங்காலில் தலை சாய்த்து சோக சித்திரமாக காட்சி தந்தாள் மித்ரனின் மங்கை..

பதறிப்போன மித்ரன் ஃபிளாஸ்க்கை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு,தாமரை என பெயருக்கும் வலிக்குமோ என மெதுவே அழைத்தான்..
தாமரையிடமிருந்து பதிலேதும் வராது போகவே,தாமரை என்று தோள் தொட்டு மெதுவே அழைத்தான்.
தட்டி எழுப்பியதில் அலங்கமலங்க முழித்தபடி,என்ன? என்று பதறினாள் தாமரை..

மித்ரனை கண்டவுடன் ஃபாக்டரியில் நடந்தவை அனைத்தும் அவள் மனக் கண்ணில் திரும்பவும் ஊர்வலம் போக, அண்ணா வேலையை விட்டுவிட்டு போகலையே? அங்க தானே இருக்காங்க என்று தவிப்புடன் கேட்டாள் கதிரின் தங்கை..

ஆமாம்.. என்று தலையாட்டிய மித்ரன்,நீ ஏன் சாப்டலை தாமரை,இப்போ டீ குடிக்க கூட கீழே ஏன் வரல என்று கேட்க..
வெடித்து சிதறினாள் பெண்..

"உங்களுக்காக பாத்து நான் இப்போ எனது அண்ணனை இழந்து நிக்குறேன்,இது தேவையா?எனக்கு, தன்னோட சுகம் தான் பெரிசுன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிற இந்த உலகத்தில என்னோட அண்ணன் என்னை தாயாய் தோள் தாங்கினானே!!அவனுக்கு நான் செய்கிற கைமாறா இது"தாமரையின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது..

பெண்ணவளின் கண்ணீர் மித்ரனின் ஆழ்மனது வரை சென்று சுட்டது.
ஏதாவது செய்து அவளை புன்னகைக்கச் செய் என்று அவன் மனமே அவனிடம் மல்லுக்கு நின்றது..

சட்டென்று மெத்தையில் அவள் அருகே அமர்ந்து அவள் முட்டிலிருந்த அவளின் முகத்தை தனது மார்புக்கு இடம்மாற்றிக்கொண்டான் மித்ரன்..
இது எதுவும் தெரியாத பெண்ணவளோ பிதற்றினாள்...பிதற்றினாள்..பிதற்றிக்கொண்டே இருந்தாள்..
மித்ரனின் இடது கை தாமரையை அணைத்திருக்க வலது கை தலையை தடவிக்கொடுக்க,வாயோ எல்லாம் சரியாகிடும் கண்ணம்மா என்ற வார்த்தை யை விடாமல் உச்சரித்தது மந்திரம் போல..

அழுது ஓய்ந்து தானே தெளிந்த தாமரை அவன் நெஞ்சத்தில் நாடியை ஊன்றி "எல்லாம் சரியாகிடுமா?"என்று சிறு பிள்ளையாய் உதடு பிதுக்கி எல்லாம் அவனுக்குத் தான் தெரியும் என்கின்ற பாவனையில் கேட்டாள்..

அவளின் உதடுகள் பிதுங்கிய பாவனையில் மொத்தமும் தொலைந்த மித்ரன் தாமரையின் கண்ணோடு கண் பார்த்து இரு கன்னங்களையும் தன் கையில் ஏந்தி,சிறு பிள்ளைக்கு சொல்வது போல் கண்டிப்பாக கண்ணம்மா ,இல்லைன்னா மச்சானை தூக்கிடலாம் என்று கேலிக்குரலில் கூறினான்..

மச்சானா!!..என்று தனது புருவத்தை உச்சிக்கு தூக்கிய மனைவியிடம் ,"நீ என் பொண்டாட்டி என்றால்,அந்த தடியன் எனக்கு மச்சான் தானே என்று சத்தமாக சிரித்தான் மித்ரனவன்..

இதில் சற்றே புன்னகை முகமான பெண்ணவள்,என்னங்க, என்றழைக்க..
எ..ன்..ன..ங்..க என்று கேலியாக நீட்டி முழங்கி பதிலுக்கு ராகமிழுந்தான் மித்ரன்.
அவன் கேலியில் மெல்லச்சிணுங்கிய பெண்ணிடம்,
ஏங்க,காலையிலே யாரோ ஒரு அழகான பொண்ணு என்னைப் பார்த்து அத்தான் னு கூப்டுச்சே அந்த பொண்ணை நீங்க பாத்தீங்ளாங்க" என்று வம்பிழுத்தான் மித்ரன் கணவனாக..

இவனின் கேலியில் மலர்ந்து சிரித்த மங்கையவள் தன் வெட்கத்தை மறைக்க மன்னவன் மார்பிலேயே முகம் மறைந்தாள்..
பெண்ணவளின் இந்த செயலில் தன்னை மறந்த மித்ரனோ,வாகாய் தோளணைத்து குழைந்து நிற்கும் தாமரையின் கன்னங்களில் பக்கத்திற்கொன்றாய் தன் அச்சாரத்தை மெல்லவே பதித்தான் ஆசையோடு...

பெண்ணவளோ மனம் மயங்கி மன்னவன் தோள் சேர,தன் சொர்கத்தை சேர்த்தணைத்த மித்ரனின் காதுகளில் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த

"வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக...

வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே

பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்
காமாக்ஷியோ மீனாக்ஷியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து உலவி நடந்து...

நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூ வண்ணம்
கண்டேன் சிங்கார கை வண்ணம்
தொட்டால் எல்லாமே பொன் வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன் சபாஷ்

என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
என் வழி நேராக ஆக்கி வைத்தால்
என்னையும் சீராக மாறி வைத்தால்

தெய்வீகமே பெண்ணானதோ
நான் காணவே தேர் வந்ததோ
மங்கலம் பொன்கிடும் மந்திர புன்னகை
இதழில் வழிய இனிமை விளைய
---
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே"

என்ற பாடல் ஆணவனின் உதடுகளில் புன்னகையை விரியச் செய்தது..

தாமரை-மித்ரன் வாழ்வு இனி துலங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு நாமும் விடைபெறுவோம் நட்பூக்களே...
நல்லாயிருக்கு, சுவிதா டியர்
 




ananyathilak

நாட்டாமை
Joined
Jul 27, 2018
Messages
64
Reaction score
223
Location
Chennai
@Zainab எனக்கு ஒரு டவுட்... நடுராத்திரியில என்னைய இப்படி யோசிக்க வைச்சுவிட்டியே....?? புலம்ப விட்டீயே... இது நியாயமா.... இது தர்மமா...

இந்த மித்ரன் தடால்அடி தாண்டவராயன் மாதிரி சட்டுனு கல்யாணம் பண்ணி எங்களை எல்லாம் சப்புனு ஆக்கிவிட்டான்... சரி கல்யாணம் முடிஞ்சு குடும்பம் நடத்துவான் என்ற class எடுக்கிறான் மட பையன்... ஒரு பிரியாணி எபி அடுத்தாவது வரும் என்றா ... அதுக்குள்ள அபி மூலமாக அட்டாக் பண்ண பிலான் பண்ணுற... அடுத்து இவனை ஹஸ்பிட்டல் அனுப்ப வழி பார்க்கிற...???

இந்த அபி அஞ்சலியேவே ஐந்து piece ஆ கூப்பிட்டுவிட்டு உடனே பாக்டரிக்கு போகனும் கணக்கு செட்டில் பண்ணனும் என்கிறான்... இப்ப தான் வாய்கட்டு, கைகட்டு எல்லாம் எடுத்தாங்க... புது பொண்டாட்டி கூட ஹனிமூன் போகாமல் எதுக்கு அவ்வளவு அவசரம்... ம்ம்ம்...

கால் கட்டு போட்டும்
கைகட்டு வாய்கட்டு எடுத்தும்
நீ ஏன்டா மரக்கட்டையா இருக்க இன்னும்
அபி உன்னால் ஏறுது எங்க பீபி????

இங்க பாரு ஒரு ஹீரோ இருந்தாலே கல்யாணம் முடிஞ்ச கச்சேரி வேண்டும் எங்களுக்கு. இங்கையோ இரண்டு கல்யாணம் பண்ணியும் இவ்வளவு டிரையாக கதை போகுது... இது ரொம்ப அநியாயம்??? @smteam சசி ஜி எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க எங்கள் சார்பில் பேசுங்க...

தயவு செய்து நீ ஷியாம்க்கு மாமியார் என்று சொல்லாதே... அவனே இந்த கதையை படிச்சுவிட்டு மாமி நீ யார் என்று தான் கேட்பான்....???

எனக்கு தெரியாது நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியே...
அந்த அபிய டைவர்ட் பண்ணி வேற எங்கேயாவது அனுப்பு
இந்த மித்ரன் லோட்ஸ்க்கு நல்ல hot n spicy ? aaa briyani epi kudu...
இல்ல SM site ல நாளையில் இருந்து கால வரையற்ற போராட்டம் நடக்கும் சொல்லிவிட்டேன்.dot

@Riha @Kavyajaya @jeyalakshmigomathi @Suvitha @banumathi jayaraman @Manikodi @lakshmi2407 @Pashni78 @Pashy2k @Maha @ORANGE @Yasmine
@Chitra srinee @vidya narayanan @Karthika Sankar @karthika manoharan @Kaaviyahesham

தெரிந்த பெயரை tag பண்ணி இருக்கேன் ... எல்லாரும் வாங்க வந்து கேளுங்கள் ....வாய் இருக்கிற பிள்ளைதான் பிழைக்குமாம்.... எங்க பாட்டிசொல்லிச்சு??
My dear darlings நான் சொல்லுவது சரி தானே..
யாருக்கும் எல்லாம் பிரியாணி வேண்டும் ...
கையை தூக்குங்கள்....??????

மச்.....சான் உனக்கு சேக் எப்புடி நீ ஸ்ஸ்ஸ் ஆக முடியாது????
Prem...really you are a best reader........Really encouraging the writers so well in innovative way..........vazhga valamudan valarga umathu pani..
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
நண்பர்களே!!
'மயங்காதே மனமே' இன் வாசகர்களுக்கு மித்ரன், தாமரை ஜோடியை நான் அறிமுகப் படுத்தத் தேவையில்லை. அவர்களின் இன்றைய நிலை நீங்கள் அறிந்ததே. கடமைக்காக செய்த அந்தக் கல்யாணத்தில் இனி....
நீ என்னதான் சொல்ல வருகிறாய்? என்று கேட்கிறீர்களா? ஒன்றுமில்லை. மித்ரனுக்கும், தாமரைக்குமான ஒரு சீன்... கொஞ்சம் ரொமாண்டிக்காக.....
நீங்கள் எல்லோரும் முயற்சி செய்யலாமே! என்னடா? பிரியாணியை பக்கா காப்பி அடிக்கிறாளே என்று யோசிக்க வேண்டாம். தலையின் அனுமதியோடு தான் அறிவிக்கிறேன். மனங்கவர்ந்த ஸீனை என் கதையோடு சேர்த்துக் கொள்கின்றேன்.
இத்தலத்தின் புதிய எழுத்தாளர்களின் பிரியாணியை சுவைக்க நாங்கள் தயார் எழுத்தாளர்களே நீங்கள் தயாரா (y):)
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இத்தலத்தின் புதிய எழுத்தாளர்களின் பிரியாணியை சுவைக்க நாங்கள் தயார் எழுத்தாளர்களே நீங்கள் தயாரா (y):)
இரண்டு பிரியாணியை ஆல்ரெடி சுவைத்தாகி விட்டது சித்ரா.??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top