ராஜரிஷி ஜனகர்.... II
அரசர் ஜனகர்
ஓர் மகா யாகம் செய்ய
ஞானிகள் அனைவரையும்
அழைத்திருந்தார்.
அப்படியே தனக்கான குருவையும்
வந்திருக்கும் ஒருவரில் இருந்து
தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்தார்.
தனக்கான குரு, ஞானிகளுக்கு எல்லாம் ஞானியாய் பிரம்மஞானியாக இருத்தல் வேண்டும் என எண்ணினார்.
யக்ஞத்துக்கு ஆயிரம் பசுக்களை .
கொண்டு வரச் செய்தார்.
ஞானிகள் குழுமத்தில் யார் மிக சிறந்த பிரம்மஞானியோ அவர் ஆயிரம் பசுக்களை ஒட்டி செல்லலாம் என்று வேண்டிக்கொண்டார்.
அந்த ஞானிகளின் கூட்டத்தில் இருந்து
யாக்ஞவல்க்யர் எழுந்தார், தன் சீடர்களை கூப்பிட்டு பசுக்களை ஓட்டிப்போக சொன்னார்.
வந்திருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
குழப்பமான சூழ்நிலை உருவானது.
சிலர் கோபப்பட்டனர்.
வந்திருக்கும் தங்களை எல்லாம் விட மிக சிறந்த பிரம்மஞானியோ இவர் என்று சலசலத்தனர்.
அங்கே இருந்த சிற்றரசன் மித்திரன் யாக்ஞவல்க்யரிடம். வந்திருக்கும் அனைவரை காட்டிலும் நீங்கள் சிறந்த பிரம்மஞானியோ?
எவ்வாறு என்று சொன்னால் இந்த சபைக்கு உசிதமாக இருக்கும் என்று கேட்டார்.
நான் தான் சிறந்த பிரம்மஞானி என்று சொல்லவில்லையே என யாக்ஞவல்க்யர் கூறினார்.
பின் ஏன் பசுக்களை ஓட்டி போக
சொன்னீர்கள் என்று மித்திரன் கேட்டவுடன்,
யாக்ஞவல்க்யர் சிரித்தபடி
“எந்த ஞானியாவது தானே சிறந்த ஞானி என்று பிரகடனப்படுத்தி கொள்வாரா, அப்படி செய்தால் அவர் ஞானியே கிடையாது. ஆகையால் இந்த கூட்டத்தில் உள்ள யாரும் முன் வந்து தானே சிறந்த பிரம்மஞானி என்று கூறப்போவது கிடையாது” என கூறினார்.
பின்னே நீங்கள் எப்படி என்று மித்திரன் மீண்டும் கேட்க, எனது யாகசாலைக்கு பசுக்கள் தேவை அதனால் ஓட்டி செல்கிறேன் என்றார் யாக்ஞவல்க்யர்.
ஜனகர் யாக்ஞவல்க்யரே தன் குரு என தீர்மானித்து அனைத்தையும் மௌனமாக பார்த்து கொண்டிருந்தார்.
யாக்ஞவல்க்யர் சபையோரிடம் விடைபெற்று கொண்டு கிளம்புகையில்,
கார்கி எனும் பெண் துறவி முன் வந்து தான் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு ஆயிரம் பசுக்களை ஓட்டி செல்லுங்கள் என கூறினார்.
சரி என்று யாக்ஞவல்க்யர் ஆமோதித்தார்.
“பூமி எதனால் நிரம்பியது?”
“நீரால்”
“நீர் எதனால் நிரம்பியது?”
“காற்றால்”
“காற்று எதனால் நிரம்பியது?”
“ஆகாயத்தால்”
“ஆகாயம் எதனால் நிரம்பியது?”
“சூரியனால்”
“சூரியன் எதனால் நிரம்பியது?”
“நட்சத்திரங்களால்”
இப்படியே ஆயிரம் கேள்விகளுக்கும் பதில் உரைத்து இறுதியில் அனைத்தும் பிரம்மத்திடமே நிறைகிறது என்று முடித்தார்.
அனைத்து ஞானிகளும் யாக்ஞவல்க்யரின் ஞானத்தை கண்டு பாராட்டினார்கள்..
மித்திரனின் மகளும், இளவரசியும் பரம ஞானியுமான மைத்ரேயி, யாக்ஞவல்க்யரின் ஞானத்தால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சத்சிஷ்யையாக சேர வேண்டும் என தந்தையிடம் விருப்பத்தை தெரிவித்தாள்.
அதற்கு மித்திரனோ, ஒரு புருஷனிடம் ஸ்திரீ உறவில்லாமல் சிஷ்யத்துவம் புரியமுடியாது என கூறி, அவரை மணந்து பணிவிடை செய்து வேண்டிய ஞானத்தை பெறுவாயாக என பணித்தார்.
யாக்ஞவல்க்யர் தானமாக ஆயிரம் பசுக்கள், சிஷ்யனாக ஜனகர், துணைவியாக மைத்ரேயியை பெற்றார்.
காலங்கள் ஓடின, ஜனகர் யாக்ஞவல்க்யரிடம் சத்விஷயங்களை கற்று தேர்ந்தார்.
ஜனகரை பரீட்சிக்க எண்ணி தன் யோக பலத்தால் மிதிலையே தீ தீண்டி எரிவது போல் சிருஷ்டித்தார்.
ஜனகர் அமைதியாக அமர்ந்திருப்பதை கண்ட யாக்ஞவல்க்யர், உன் தேசமே பற்றி எரிகிறது, ராஜாவான நீயோ அமைதியாக இருக்கிறாய் என்று கேட்க “என் சரீரமே அநித்தியம், இதில் தேசமாவது, பதவியாவது” என்று ஜனகர் பதில் உரைக்க, யாக்ஞவல்க்யர் மெய் சிலிர்த்து போனார்.
குரு என்றால் யாக்ஞவல்க்யர், சிஷ்யன் என்றால் ஜனகர் எனும் பதம் யுகங்களை கடந்து நிற்கிறது.
யாக்ஞவல்க்யர் அனைத்தையும் துறந்து சந்நியாசம் பெற எண்ணினார்,
இதனை அறிந்த ஜனகர் மிகுந்த துயருற்றார்.
ஆத்ம சிஷ்யனான ஜனகருக்கு பரிசாக ஒரு கணையாழியை தந்து, தன் நினைவு வரும் போதெல்லாம் அதை பார்த்தால் நான் அதில் தெரிவேன் என்று சொன்னார்.
ஜனகரோ கணையாழியில் யாரை நினைக்கிறோமோ அவர்கள் தெரிய வேண்டும் என வேண்டினார். யாக்ஞவல்க்யரும் யோக பலம் கொண்டு அவரது ஆசையை நிறைவேற்றினார்.
இக்கணையாழியே இராமர் சீதா கல்யாணத்தின் போது ஜனகர் இராமருக்கு சீர்ராக அணிவித்தார். அதுவே அனுமனின் தூதுக்கு ஆதாரமாக அமைந்தது.
ஒருசமயம் சுகபிரம்மர் ஞான பாடம் கற்க ஜனக மகரிஷியை தேடி வந்தார்.
ஜனகர் ஞானப் பாடம் கேட்க சுகபிரம்மர் தன் மாளிகைக்கு வந்திருப்பதை அறிந்து மாளிகை வாயில் காக்கும் பணியில் இருக்கும் ஊழியரிடம் இருக்கச் சொல் என்று சொல்லிவிட்டு அரசு பணிகளை கவனிக்க சென்று விட்டார்.
வாசலில் நின்ற சுகப்பிரம்மரிடம் காவலாளி ஜனக மன்னர் இருக்கச் சொன்னார் என்று சொன்னான்.
என் பாக்கியம் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வாசலிலேயே குரு கூப்பிடுவார் என்ற திடமான நம்பிக்கையுடன் ஒதுக்குப்புறமாக நின்றார் சுகப்பிரம்மம்.
ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் என்று இப்படி அவர் பசி தாகம் ஓய்வு உறக்கம் இல்லாமல் நின்ற நிலையிலேயே இடத்தை விட்டு அசையாமல் முகத்தில் முழு நம்பிக்கை ஒளி வீச புன்னகை மாறாமல் நின்று கொண்டிருந்தார்.
குருவின் வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கை.
பத்து நாளாக நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்த சுகபிரம்மத்திற்கு எந்தவித களைப்போ வெறுப்போ சலிப்போ ஏற்படவல்லை.
சுகப்பிரம்மம் நின்று கொண்டிருந்த இடத்திலேயே காவல் காத்துக் கொண்டிருந்த காவலாளிக்கு இதனை கண்டு தர்மசங்கடமாக இருந்தது
பத்து நாளாக பசி தாகம் தூக்கம் ஓய்வு என்று இல்லாமல் நின்ற இடத்தில் நின்றிருந்த அவரைக் கண்டு தாங்க முடியாத வேதனை அடைந்தார் வாயில் காக்கும் காவலன்.
காவலாளி
மன்னரிடம் சென்று என்னை மன்னியுங்கள் அரசே,
பத்து நாளாக ஆடாமல் அசையாமல் சோறு தண்ணீர் உறக்கம் ஓய்வு இல்லாமல் நின்ற இடத்திலேயே நின்று நிற்கும் அவரை கூப்பிட்டு விசாரியுங்கள் இல்லை என்றால் என்னை வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்யுங்கள் அவரை பார்க்கும் பொழுதெல்லாம் தினமும் உண்டு உறங்கி ஓய்வு எடுக்கும் எனக்கு சித்திரவதையாக இருக்கிறது என்று சொல்லி கண்ணீர் வடித்தான்.
கவலைப்படாதே இன்று பார்க்கிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார் ஜனக மகாராஜா.
காவலாளி போனாதும் குலகுரு சதாநந்தரை அழைத்து சதானந்தரே.. நான் சொன்ன ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன என்று கேட்டார் ஜனக மகரிஷி.
ஏற்பாடுகள் நீங்கள் சொன்னபடி தயாராக இருக்கின்றன என்றார் சதானந்தர்.
என்ன ஏற்பாடு என்றால் சுகரின் மனக் கட்டுப்பாட்டை பரிசோதிக்க,
நீண்ட சாலையை குண்டும் குழியுமாக வெட்டிப்போட்டு கால் வைத்து நடந்தால் தடுக்கி தடுமாறி விழும் அளவுக்கு சாலையை வெட்டி வைத்து,
சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளில் வீட்டின் வாசலிலும்
மாடிகளிலும் அழகிய ஆடல் மங்கையரை கவர்ச்சி தெரியும்படி ஆடை அணிவித்து ஆடிப்பாடி அடுத்தவர் மனதை கவரும் இளமை குறும்புகள் செய்யச் சொல்ல வேண்டும்.
அந்த நேரம் சுக பிரம்மத்தின் கையில் விளிம்பில்லாத ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நிரப்பி அதை சுகபிரம்மத்தின் கைகளில் ஏந்திக்கொண்டே குண்டும் குழியுமாக இருந்த தெரு வழியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் நடந்து அந்த தெருவை தாண்டி வர வேண்டும் கையிலிருக்கும் எண்ணெய் ஒரு துளி கூட சிந்தக்கூடாது அப்படி சிந்தினால் பிரம்மத்தின் பின்னால் உருவிய வாளுடன் வரும் வீரன் அவர் கழுத்தை வெட்டி விடுவான்.
இந்த நிபந்தனையை சொன்னதும் சுகப்பிரம்மம் மகிழ்ச்சியடைந்து ஏற்றுக்கொண்டு குண்டும் குழியுமாக இருந்த அந்த வீதி வழியே நடந்தார்.
மேலே மாடியில் கவர்ச்சியாக ஆடிப்பாடும் பாடல் மங்கையர் அவர்களின் ஆசையை தூண்டும் மெல்லிய ஆடைகள்,
இனிமையாக கேட்கும் இசைக்கருவிகள்,
பின்னால் தலைமீது உருவிய வாளுடன் வரும் காவலன் இத்தனை இருந்தும் பிரம்மத்தின் மனம் ஒரே நிலையில்,
கையில் இருக்கும் வாணலியில் உள்ள எண்ணெயில் சிந்தக் கூடாது என்பதிலும் கால்நடை தடைபட்டாலும் சமாளித்து குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைய வேண்டும் என்பதிலும் இருந்தது.
அவருக்கு இலக்கு நிர்ணயத்த இடத்தில் ஜனக மகாராஜா நின்று கொண்டிருந்தார்.
சொன்னபடி சுகப்பிரம்மம் செயலை நிறைவேற்றியதும் பெருமகிழ்ச்சி அடைந்தார் ஜனகர்.
குருதேவா இனி எனக்கு ஞானப் பாடம் கற்றுத் தருவீர்களா என்று ஜனக மன்னரின் திருவடிகளில் விழுந்து கை கூப்பி அடக்கத்துடன் கேட்டார் சுகப்பிரம்மம்.
இனிமேல் நீ கற்பதற்கு என்ன இருக்கிறது கற்க வேண்டியது எல்லாம் கற்று விட்டாயே என்றார் ஜனக மன்னர். புரியாமல் அவரை நோக்கினார் சுகப்பிரம்மம்.
ஜனக மன்னர் புன்னகையுடன் சொன்னார் மனதை ஒருமுகப்படுத்தும் கலையில் ஒருவன் தேர்ந்து விட்டால் அவன் கற்கவேண்டிய கலைகளே உலகத்தில் இல்லை.
உனக்கு ஒரே குறி ஒரே எண்ணம். அந்த குண்டும் குழியுமாக இருந்த நடைபாதையும் மாடியில் பருவ கவர்ச்சி காட்டி பாடி ஆடிய ஆடல் மங்கையும் மாற்றவில்லை உன் குறிக்கோள் சேர வேண்டிய இலக்கை அடைய கொடுத்த கெடுவில் கையில் ஏந்திய எண்ணை நழுவி சிறிதும் சிந்தக் கூடாது என்ற கவனத்தில் ஒருமுகப்பட்டது ஆகியன எல்லாம் பிரம்ம நிலையை அடைபவரால் தான் முடியும்.
நீ சாதித்தாய். நீ சுகப்பிரம்மம் அதாவது உன் பெயரில் சுகம் என்ற சுகத்தை குறிக்கும் வார்த்தை இருந்தாலும் உன் மன நிலையில் ஆசை அணுவளவும் இல்லை நீ போகலாம் உனக்கு எல்லா கலைகளிலும் தேர்ச்சி வந்துவிட்டது என்றார்.
தாங்கள் கூறினால் ஏற்க வேண்டும் ஏற்கிறேன் ஒரு சிறு விண்ணப்பம் என்றார் சுகர்.
என்ன என்றார் ஜனகர்
குருதட்சினை என்ன தரவேண்டும் எனக்கேட்டார் சுகர்.
பூரண ஞானியான ஜனகமகரிஷி வாய்விட்டு சிரித்தார்.
குருதட்சிணை வாங்கிக் கொண்டு தானே உனக்கு பாடம் கற்றுக் கொடுத்தேன் என்றார் ஜனகர்.
அதன் உள்ளர்த்தம் புரியாமல் ஜனக மன்னரைப் பார்த்தார் சுகர்.
நீ வந்தவுடன் உன்னை இருக்க சொல் என்று வாசலில் இருக்க சொன்னேன். நீ எதுவும் கேட்காமல் இருந்த இடத்தை விட்டு அசையாமல் பசி தூக்கம் இல்லாமல் ஓய்வில்லாமல் நின்றாயே அதுதான் நீ எனக்குத் தந்த குருதட்சிணை என்றார்.
மிதிலை ராஜசபையில் அரியாசனத்தில் அமர்த்திருந்தார் மாமன்னர் ஜனகர். அவர் அருகே வீற்றிருந்தாள் மகாராணி சுனயனா.
அயோத்தியிலிருந்து தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தி முற்றிலும் வித்தியாசமான ஒரு செய்தி. ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் எதுவும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன மனைவியிடம் கொடுத்தார்.
அவர் முகத்தில் அந்த செய்தி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் ஓலையை படித்த சுனயனாதேவியின் விழிகளிலிருது சரசரவென கண்ணீர் அருவியென வழியத்தொடங்கியது.
சீதை திருமணம் முடிந்ததில் இருந்து
அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகளால்
மனதால் கஷ்டப்பட்ட சனயனா,
பட்டாபிஷேகம் முடிந்து தன மகள் சீதை பட்டத்து ராணியாகப் பொறுப்பேற்றபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
ஆனால் சிறிது காலத்திலேயே ஏதோ ஒரு துணிவெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டபோது அவள் மாளாத துயரமடைந்தாள்.
பிறகு லவ குசன் என்ற இரண்டு ஆண்மக்களைப் பெற்றெடுத்து அவர்களை வளர்த்து சிறுவர்களாகத் தன் கணவர் ராமனிடம் ஒப்படைத்த சீதை,
அயோத்தி வராமல் கனகத்திலேயே மண்ணுக்குள் புகுந்து மறைந்தாள். சீதை மறைந்த துயரம் அவளின் வளர்ப்புத்தாய் சுனயனாவை மிகவும் பாதித்தது.
லட்சுமணன் சிறிது காலத்திற்கு முன் சரயு நதியில் இறங்கி சித்தி அடைந்தான்.
லட்சுமணனை பிரிந்த தன் மகள் ஊர்மிளையின் நிலையை எண்ணி எண்ணி சுனயனா அளவற்ற துக்கமடைந்தாள்.
இதெல்லாம் முடிந்ததே, இனியாவது சற்று நிம்மதியாக இருக்கலாம் என்றால் இதோ இப்போது அயோத்தியிலிருந்து வந்திருக்கிறது மிக கடுமையான செய்தியைத் தாங்கிய ஓலை.
ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்களாம்.
சீதை காலமானாலும் தன் மகனைப் போன்ற ராமனை அடிக்கடிப் போய்ப் பார்த்து ஆறுதல் அடைந்தாள் சுனயனா.
இனி அதுவும் இல்லை என்ற போது மனது தாங்கமாட்டாமல் அழுதாள். .
அவளது புதல்வி ஊன்மிளை மற்றும் தனது தங்கை மகள்கள் மாண்டவி, சுருதகீர்த்தி மூவரும் கணவரை இழந்தவர்களாய்த்தான் இனி வாழவேண்டும்.
‘ராமனும், பரதனும், சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பதுதான் நல்லது என்றார் ஜனகர்.
அவர்கள் இருவரும் தேரில் அயோத்தி மாநகரை வந்தடைந்த போது, அயோத்தி வீதிகள் மக்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
மக்கள் அனைவரும் சரயு நதிக்கரையில் கூடி இருந்தனர்.
தேரை சரயு நதிக்கரைக்கு விடச் சொன்னார் ஜனகர்.
நதியின் கரையில் ராமனும் பரதனும் சத்ருக்கனனும் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள்.
மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும் இல்லை.
அவர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் மாமனார் ஜனகரை வணங்கினார்கள்.
பின்னர் சுனயனாவிடமும் ஆசிபெற்றனர்.
பரதன், சத்ருக்கனன் இருவரும் மாண்டவியிடமும் சுருதகீர்த்தியிடமும் விடை பெற்றுக் கொண்டார்கள்.
அவர்கள் மூவரும் ஒன்றாக சரயு நதியின் பெருகிய வெள்ளத்தில் இறங்கி அதன் ஓட்டத்தோடு சேர்ந்து வெள்ளத்திலேயே மெல்ல மெல்ல நடக்கலானார்கள்.
சிறிது நேரத்தில் சரயு நதி நீர் அவர்கள் தலைக்குமேல் ஓடத்தொடங்கியது.
அவர்கள் ஆற்றில் மறைந்ததும் “ராமா ! ராமா !” என கத்தி கதறினர்.
ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி மூவரிடமிருந்தும் பெரிய விம்மல்கள் வெடித்தெழுந்தன.
அவர்கள் தங்கள் தாயைக் கட்டிக் கொண்டார்கள்.
தாய் சுனயனா அவர்கள் மூவரின் தோள்களையும் தட்டி தன்னால் இயன்ற அளவு அமைதிப்படுத்த முயன்றாள்.
அவள் விழிகளிலிருந்தும் கண்ணீர் இடைவிடாமல் வழியத் தொடங்கியது.
ஆனால் ஜனகர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
ஊர்மிளை வியப்போடு :
“தந்தையே ! ஸ்ரீராமர் நம்மைவிட்டு நிரந்தரமாய் பிரிந்துவிட்டாரே ! இனி நாம் அறத்தின் திருவுருவாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரைப் பார்க்கவே இயலாதே ! உங்களுக்கு வருத்தமாக இல்லையா ?”
ஜனகர் புன்னகையோடு சொன்னார்,
“மனித உடல் என்பது உறை,
ஆன்மா என்பது அந்த உறையிலிருக்கும் வாள்.
உடலுக்குத்தான் அழிவுண்டே தவிர ஆன்மாவுக்கு அழிவு கிடையாது.
உடல் பயன்படாத நிலை தோன்றுமானால் இறைச் சக்தி உடல் என்ற உறையிலிருக்கும் வாளை உருவித் தன கையில் வைத்துகொள்கிறது. அவ்வளவுதான்.
வாழ்க்கை அநித்தியமானதுதான்.
பிறக்கும்போதே இறப்பும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது.
எந்த நாள் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் எல்லோரும் ஒருநாள் இறக்கப் போவது உறுதி.
இதை என் மாப்பிள்ளைகள் உணர்ந்து விட்டார்கள்.
இந்தப் பிறவியில் நிறைவடைந்து விட்டார்கள்.
தாங்கள் வந்த கடமை முடிந்துவிட்டதை உணர்ந்து கொண்டு விட்டார்கள்.
அதனாலேய தாங்களே விரும்பி சித்தி அடைந்து விட்டார்கள்.
ஆனால் அவர்களுக்கு மரணமென்பது இல்லை.
ஏனென்றால் என் மாப்பிள்ளைகள் நால்வரும் என் வளர்ப்பு மகள் சீதையும் தெய்வ வடிவங்களே என்ற பரம இரகசியத்தை நான் முன்பே அறிவேன்.
அவர்கள் மண்ணுலகில் மானிடர்களாக வசிக்கும்போது அந்த ரகசியத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை வழங்கப்படவில்லை.
இப்போது அவர்கள் விண்ணுலகம் சென்று விட்டதால் நான் அதைப் பகிரங்கப்படுத்தலாம். !”
சுனயனா வியப்போடு கேட்டாள் .
“அப்படியானால் நம் மாப்பிள்ளைகள் தெய்வங்களா ? என் செல்ல வளர்ப்பு மகள் தெய்வமேதானா ? “
“ஆமாம். ஒன்றை யோசி. அவர்கள் தெய்வங்களாய் இல்லாவிட்டால் இத்தனை துன்பங்களை எப்படிச் சாந்தமாகத் தாங்கியிருக்க முடியும் ?. மானிடர்கள் அறநெறியில் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே திருமால் இவ்விதம் அவதாரமெடுத்து வந்தார். அவதார நோக்கமும் காலமும் பூர்த்தியடைந்து விட்டதால் தெய்வங்கள் விண்ணுலகிற்கு சென்றுவிட்டன. ஆனால் மண்ணிலும் அவர்கள் சக்தி நிரந்தரமாய்க் குடியிருக்கும். அவர்களை பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். இனி அவர்களுக்கு ஊர்கள் தோறும் ஆலயங்கள் எழும். அந்த ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களில் அவர்களின் அருள் சக்தி குடி கொள்ளும்.”
“இதெல்லாம் உண்மைதானா ? இதற்கு உங்களால் சாட்சி காட்ட முடியுமா ?”
“சாட்சி என்ன என் தெய்வம் ராமன் திருவருளால் உங்களுக்கு ராமனையே நேரில் காண்பிக்கிறேன். எல்லோரும் அண்ணாந்து ஆகாயத்தை பாருங்கள் !”
ஜனகர் ஒரு கட்டளைபோல் இந்த வாக்கியத்தை கூறினார். பிரமிப்போடு மக்களும், அவரின் மனைவியும், மகள்களும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள்.
வானில் சடாரென மேகங்கள் விலகி ராமபிரானும் சீதா தேவியும் லட்சுமணனும் பரத சத்துருக்கனர்களும் வலக்கரம் உயர்த்தி அனைவருக்கும் ஆசி கூறினார்கள்.
எல்லோரும் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் போதே விந்தையான பல சம்பவங்கள் நிகழ்ந்தன.
லட்சுமணன் உடல் ஒரு கனத்தில் ஆதி சேஷனாக மாறியது. ராமன் திருமாலாய் மாறி அந்தப் பாம்பணையில் பள்ளி கொண்டான்.
மறுகணம் பரத சத்துருக்கனர்கள் சங்கு சக்கரங்களாக மாறி திருமாலின் கரங்களில் பொருத்திக் கொண்டார்கள்.
ஜனகரின் வளர்ப்பு மகளான சீதை இப்போது லட்சுமி தேவியாக விண்மகளானாள்.
அவள் திருமாலின் பாதங்களைப் பிரியமாய்ப் பிடித்துவிடத் தொடங்கினாள்.
மெல்ல மெல்ல அந்த காட்சி மறைந்தது. மேகங்கள் மீண்டும் வைகுண்டத்திற்குத் திரையிட்டன.
மக்களனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு
‘ ஜெய் ஸ்ரீராம் ‘
என உரத்து முழங்கினார்கள்.
அந்த முழக்கம் அந்த பிரதேசமெங்கும் நிறைந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரின் குரல்களும் அந்த முழக்கத்தில் ஒன்றாய் இணைந்தன.
ஜனகரின் மனைவி சுனயனாதேவி புதல்விகள் மாண்டவி, ஊர்மிளை, சுருதகீர்த்தி அனைவரின் மனங்களும் இன்னதென்றறியாத சாந்தியிலும் நிறைவிலும் ஆழ்ந்தன.
அவர்கள் இந்த அற்புத காட்சியைத் தங்களுக்குத் தரிசனம் செய்வித்த ஜனகரை நோக்கிக் கரம் கூப்பி வணங்கினார்கள்.
ராஜரிஷி ஜனகரின் மனம் ‘ராம ராம’ என ஓயாமல் ஸ்ரீராமபிரானைத் தியானம் செய்யத் தொடங்கியது.
படித்ததில் பிடித்தது
அரசர் ஜனகர்
ஓர் மகா யாகம் செய்ய
ஞானிகள் அனைவரையும்
அழைத்திருந்தார்.
அப்படியே தனக்கான குருவையும்
வந்திருக்கும் ஒருவரில் இருந்து
தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்தார்.
தனக்கான குரு, ஞானிகளுக்கு எல்லாம் ஞானியாய் பிரம்மஞானியாக இருத்தல் வேண்டும் என எண்ணினார்.
யக்ஞத்துக்கு ஆயிரம் பசுக்களை .
கொண்டு வரச் செய்தார்.
ஞானிகள் குழுமத்தில் யார் மிக சிறந்த பிரம்மஞானியோ அவர் ஆயிரம் பசுக்களை ஒட்டி செல்லலாம் என்று வேண்டிக்கொண்டார்.
அந்த ஞானிகளின் கூட்டத்தில் இருந்து
யாக்ஞவல்க்யர் எழுந்தார், தன் சீடர்களை கூப்பிட்டு பசுக்களை ஓட்டிப்போக சொன்னார்.
வந்திருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
குழப்பமான சூழ்நிலை உருவானது.
சிலர் கோபப்பட்டனர்.
வந்திருக்கும் தங்களை எல்லாம் விட மிக சிறந்த பிரம்மஞானியோ இவர் என்று சலசலத்தனர்.
அங்கே இருந்த சிற்றரசன் மித்திரன் யாக்ஞவல்க்யரிடம். வந்திருக்கும் அனைவரை காட்டிலும் நீங்கள் சிறந்த பிரம்மஞானியோ?
எவ்வாறு என்று சொன்னால் இந்த சபைக்கு உசிதமாக இருக்கும் என்று கேட்டார்.
நான் தான் சிறந்த பிரம்மஞானி என்று சொல்லவில்லையே என யாக்ஞவல்க்யர் கூறினார்.
பின் ஏன் பசுக்களை ஓட்டி போக
சொன்னீர்கள் என்று மித்திரன் கேட்டவுடன்,
யாக்ஞவல்க்யர் சிரித்தபடி
“எந்த ஞானியாவது தானே சிறந்த ஞானி என்று பிரகடனப்படுத்தி கொள்வாரா, அப்படி செய்தால் அவர் ஞானியே கிடையாது. ஆகையால் இந்த கூட்டத்தில் உள்ள யாரும் முன் வந்து தானே சிறந்த பிரம்மஞானி என்று கூறப்போவது கிடையாது” என கூறினார்.
பின்னே நீங்கள் எப்படி என்று மித்திரன் மீண்டும் கேட்க, எனது யாகசாலைக்கு பசுக்கள் தேவை அதனால் ஓட்டி செல்கிறேன் என்றார் யாக்ஞவல்க்யர்.
ஜனகர் யாக்ஞவல்க்யரே தன் குரு என தீர்மானித்து அனைத்தையும் மௌனமாக பார்த்து கொண்டிருந்தார்.
யாக்ஞவல்க்யர் சபையோரிடம் விடைபெற்று கொண்டு கிளம்புகையில்,
கார்கி எனும் பெண் துறவி முன் வந்து தான் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு ஆயிரம் பசுக்களை ஓட்டி செல்லுங்கள் என கூறினார்.
சரி என்று யாக்ஞவல்க்யர் ஆமோதித்தார்.
“பூமி எதனால் நிரம்பியது?”
“நீரால்”
“நீர் எதனால் நிரம்பியது?”
“காற்றால்”
“காற்று எதனால் நிரம்பியது?”
“ஆகாயத்தால்”
“ஆகாயம் எதனால் நிரம்பியது?”
“சூரியனால்”
“சூரியன் எதனால் நிரம்பியது?”
“நட்சத்திரங்களால்”
இப்படியே ஆயிரம் கேள்விகளுக்கும் பதில் உரைத்து இறுதியில் அனைத்தும் பிரம்மத்திடமே நிறைகிறது என்று முடித்தார்.
அனைத்து ஞானிகளும் யாக்ஞவல்க்யரின் ஞானத்தை கண்டு பாராட்டினார்கள்..
மித்திரனின் மகளும், இளவரசியும் பரம ஞானியுமான மைத்ரேயி, யாக்ஞவல்க்யரின் ஞானத்தால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சத்சிஷ்யையாக சேர வேண்டும் என தந்தையிடம் விருப்பத்தை தெரிவித்தாள்.
அதற்கு மித்திரனோ, ஒரு புருஷனிடம் ஸ்திரீ உறவில்லாமல் சிஷ்யத்துவம் புரியமுடியாது என கூறி, அவரை மணந்து பணிவிடை செய்து வேண்டிய ஞானத்தை பெறுவாயாக என பணித்தார்.
யாக்ஞவல்க்யர் தானமாக ஆயிரம் பசுக்கள், சிஷ்யனாக ஜனகர், துணைவியாக மைத்ரேயியை பெற்றார்.
காலங்கள் ஓடின, ஜனகர் யாக்ஞவல்க்யரிடம் சத்விஷயங்களை கற்று தேர்ந்தார்.
ஜனகரை பரீட்சிக்க எண்ணி தன் யோக பலத்தால் மிதிலையே தீ தீண்டி எரிவது போல் சிருஷ்டித்தார்.
ஜனகர் அமைதியாக அமர்ந்திருப்பதை கண்ட யாக்ஞவல்க்யர், உன் தேசமே பற்றி எரிகிறது, ராஜாவான நீயோ அமைதியாக இருக்கிறாய் என்று கேட்க “என் சரீரமே அநித்தியம், இதில் தேசமாவது, பதவியாவது” என்று ஜனகர் பதில் உரைக்க, யாக்ஞவல்க்யர் மெய் சிலிர்த்து போனார்.
குரு என்றால் யாக்ஞவல்க்யர், சிஷ்யன் என்றால் ஜனகர் எனும் பதம் யுகங்களை கடந்து நிற்கிறது.
யாக்ஞவல்க்யர் அனைத்தையும் துறந்து சந்நியாசம் பெற எண்ணினார்,
இதனை அறிந்த ஜனகர் மிகுந்த துயருற்றார்.
ஆத்ம சிஷ்யனான ஜனகருக்கு பரிசாக ஒரு கணையாழியை தந்து, தன் நினைவு வரும் போதெல்லாம் அதை பார்த்தால் நான் அதில் தெரிவேன் என்று சொன்னார்.
ஜனகரோ கணையாழியில் யாரை நினைக்கிறோமோ அவர்கள் தெரிய வேண்டும் என வேண்டினார். யாக்ஞவல்க்யரும் யோக பலம் கொண்டு அவரது ஆசையை நிறைவேற்றினார்.
இக்கணையாழியே இராமர் சீதா கல்யாணத்தின் போது ஜனகர் இராமருக்கு சீர்ராக அணிவித்தார். அதுவே அனுமனின் தூதுக்கு ஆதாரமாக அமைந்தது.
ஒருசமயம் சுகபிரம்மர் ஞான பாடம் கற்க ஜனக மகரிஷியை தேடி வந்தார்.
ஜனகர் ஞானப் பாடம் கேட்க சுகபிரம்மர் தன் மாளிகைக்கு வந்திருப்பதை அறிந்து மாளிகை வாயில் காக்கும் பணியில் இருக்கும் ஊழியரிடம் இருக்கச் சொல் என்று சொல்லிவிட்டு அரசு பணிகளை கவனிக்க சென்று விட்டார்.
வாசலில் நின்ற சுகப்பிரம்மரிடம் காவலாளி ஜனக மன்னர் இருக்கச் சொன்னார் என்று சொன்னான்.
என் பாக்கியம் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வாசலிலேயே குரு கூப்பிடுவார் என்ற திடமான நம்பிக்கையுடன் ஒதுக்குப்புறமாக நின்றார் சுகப்பிரம்மம்.
ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் என்று இப்படி அவர் பசி தாகம் ஓய்வு உறக்கம் இல்லாமல் நின்ற நிலையிலேயே இடத்தை விட்டு அசையாமல் முகத்தில் முழு நம்பிக்கை ஒளி வீச புன்னகை மாறாமல் நின்று கொண்டிருந்தார்.
குருவின் வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கை.
பத்து நாளாக நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்த சுகபிரம்மத்திற்கு எந்தவித களைப்போ வெறுப்போ சலிப்போ ஏற்படவல்லை.
சுகப்பிரம்மம் நின்று கொண்டிருந்த இடத்திலேயே காவல் காத்துக் கொண்டிருந்த காவலாளிக்கு இதனை கண்டு தர்மசங்கடமாக இருந்தது
பத்து நாளாக பசி தாகம் தூக்கம் ஓய்வு என்று இல்லாமல் நின்ற இடத்தில் நின்றிருந்த அவரைக் கண்டு தாங்க முடியாத வேதனை அடைந்தார் வாயில் காக்கும் காவலன்.
காவலாளி
மன்னரிடம் சென்று என்னை மன்னியுங்கள் அரசே,
பத்து நாளாக ஆடாமல் அசையாமல் சோறு தண்ணீர் உறக்கம் ஓய்வு இல்லாமல் நின்ற இடத்திலேயே நின்று நிற்கும் அவரை கூப்பிட்டு விசாரியுங்கள் இல்லை என்றால் என்னை வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்யுங்கள் அவரை பார்க்கும் பொழுதெல்லாம் தினமும் உண்டு உறங்கி ஓய்வு எடுக்கும் எனக்கு சித்திரவதையாக இருக்கிறது என்று சொல்லி கண்ணீர் வடித்தான்.
கவலைப்படாதே இன்று பார்க்கிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார் ஜனக மகாராஜா.
காவலாளி போனாதும் குலகுரு சதாநந்தரை அழைத்து சதானந்தரே.. நான் சொன்ன ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன என்று கேட்டார் ஜனக மகரிஷி.
ஏற்பாடுகள் நீங்கள் சொன்னபடி தயாராக இருக்கின்றன என்றார் சதானந்தர்.
என்ன ஏற்பாடு என்றால் சுகரின் மனக் கட்டுப்பாட்டை பரிசோதிக்க,
நீண்ட சாலையை குண்டும் குழியுமாக வெட்டிப்போட்டு கால் வைத்து நடந்தால் தடுக்கி தடுமாறி விழும் அளவுக்கு சாலையை வெட்டி வைத்து,
சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளில் வீட்டின் வாசலிலும்
மாடிகளிலும் அழகிய ஆடல் மங்கையரை கவர்ச்சி தெரியும்படி ஆடை அணிவித்து ஆடிப்பாடி அடுத்தவர் மனதை கவரும் இளமை குறும்புகள் செய்யச் சொல்ல வேண்டும்.
அந்த நேரம் சுக பிரம்மத்தின் கையில் விளிம்பில்லாத ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நிரப்பி அதை சுகபிரம்மத்தின் கைகளில் ஏந்திக்கொண்டே குண்டும் குழியுமாக இருந்த தெரு வழியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் நடந்து அந்த தெருவை தாண்டி வர வேண்டும் கையிலிருக்கும் எண்ணெய் ஒரு துளி கூட சிந்தக்கூடாது அப்படி சிந்தினால் பிரம்மத்தின் பின்னால் உருவிய வாளுடன் வரும் வீரன் அவர் கழுத்தை வெட்டி விடுவான்.
இந்த நிபந்தனையை சொன்னதும் சுகப்பிரம்மம் மகிழ்ச்சியடைந்து ஏற்றுக்கொண்டு குண்டும் குழியுமாக இருந்த அந்த வீதி வழியே நடந்தார்.
மேலே மாடியில் கவர்ச்சியாக ஆடிப்பாடும் பாடல் மங்கையர் அவர்களின் ஆசையை தூண்டும் மெல்லிய ஆடைகள்,
இனிமையாக கேட்கும் இசைக்கருவிகள்,
பின்னால் தலைமீது உருவிய வாளுடன் வரும் காவலன் இத்தனை இருந்தும் பிரம்மத்தின் மனம் ஒரே நிலையில்,
கையில் இருக்கும் வாணலியில் உள்ள எண்ணெயில் சிந்தக் கூடாது என்பதிலும் கால்நடை தடைபட்டாலும் சமாளித்து குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைய வேண்டும் என்பதிலும் இருந்தது.
அவருக்கு இலக்கு நிர்ணயத்த இடத்தில் ஜனக மகாராஜா நின்று கொண்டிருந்தார்.
சொன்னபடி சுகப்பிரம்மம் செயலை நிறைவேற்றியதும் பெருமகிழ்ச்சி அடைந்தார் ஜனகர்.
குருதேவா இனி எனக்கு ஞானப் பாடம் கற்றுத் தருவீர்களா என்று ஜனக மன்னரின் திருவடிகளில் விழுந்து கை கூப்பி அடக்கத்துடன் கேட்டார் சுகப்பிரம்மம்.
இனிமேல் நீ கற்பதற்கு என்ன இருக்கிறது கற்க வேண்டியது எல்லாம் கற்று விட்டாயே என்றார் ஜனக மன்னர். புரியாமல் அவரை நோக்கினார் சுகப்பிரம்மம்.
ஜனக மன்னர் புன்னகையுடன் சொன்னார் மனதை ஒருமுகப்படுத்தும் கலையில் ஒருவன் தேர்ந்து விட்டால் அவன் கற்கவேண்டிய கலைகளே உலகத்தில் இல்லை.
உனக்கு ஒரே குறி ஒரே எண்ணம். அந்த குண்டும் குழியுமாக இருந்த நடைபாதையும் மாடியில் பருவ கவர்ச்சி காட்டி பாடி ஆடிய ஆடல் மங்கையும் மாற்றவில்லை உன் குறிக்கோள் சேர வேண்டிய இலக்கை அடைய கொடுத்த கெடுவில் கையில் ஏந்திய எண்ணை நழுவி சிறிதும் சிந்தக் கூடாது என்ற கவனத்தில் ஒருமுகப்பட்டது ஆகியன எல்லாம் பிரம்ம நிலையை அடைபவரால் தான் முடியும்.
நீ சாதித்தாய். நீ சுகப்பிரம்மம் அதாவது உன் பெயரில் சுகம் என்ற சுகத்தை குறிக்கும் வார்த்தை இருந்தாலும் உன் மன நிலையில் ஆசை அணுவளவும் இல்லை நீ போகலாம் உனக்கு எல்லா கலைகளிலும் தேர்ச்சி வந்துவிட்டது என்றார்.
தாங்கள் கூறினால் ஏற்க வேண்டும் ஏற்கிறேன் ஒரு சிறு விண்ணப்பம் என்றார் சுகர்.
என்ன என்றார் ஜனகர்
குருதட்சினை என்ன தரவேண்டும் எனக்கேட்டார் சுகர்.
பூரண ஞானியான ஜனகமகரிஷி வாய்விட்டு சிரித்தார்.
குருதட்சிணை வாங்கிக் கொண்டு தானே உனக்கு பாடம் கற்றுக் கொடுத்தேன் என்றார் ஜனகர்.
அதன் உள்ளர்த்தம் புரியாமல் ஜனக மன்னரைப் பார்த்தார் சுகர்.
நீ வந்தவுடன் உன்னை இருக்க சொல் என்று வாசலில் இருக்க சொன்னேன். நீ எதுவும் கேட்காமல் இருந்த இடத்தை விட்டு அசையாமல் பசி தூக்கம் இல்லாமல் ஓய்வில்லாமல் நின்றாயே அதுதான் நீ எனக்குத் தந்த குருதட்சிணை என்றார்.
மிதிலை ராஜசபையில் அரியாசனத்தில் அமர்த்திருந்தார் மாமன்னர் ஜனகர். அவர் அருகே வீற்றிருந்தாள் மகாராணி சுனயனா.
அயோத்தியிலிருந்து தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தி முற்றிலும் வித்தியாசமான ஒரு செய்தி. ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் எதுவும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன மனைவியிடம் கொடுத்தார்.
அவர் முகத்தில் அந்த செய்தி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் ஓலையை படித்த சுனயனாதேவியின் விழிகளிலிருது சரசரவென கண்ணீர் அருவியென வழியத்தொடங்கியது.
சீதை திருமணம் முடிந்ததில் இருந்து
அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகளால்
மனதால் கஷ்டப்பட்ட சனயனா,
பட்டாபிஷேகம் முடிந்து தன மகள் சீதை பட்டத்து ராணியாகப் பொறுப்பேற்றபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
ஆனால் சிறிது காலத்திலேயே ஏதோ ஒரு துணிவெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டபோது அவள் மாளாத துயரமடைந்தாள்.
பிறகு லவ குசன் என்ற இரண்டு ஆண்மக்களைப் பெற்றெடுத்து அவர்களை வளர்த்து சிறுவர்களாகத் தன் கணவர் ராமனிடம் ஒப்படைத்த சீதை,
அயோத்தி வராமல் கனகத்திலேயே மண்ணுக்குள் புகுந்து மறைந்தாள். சீதை மறைந்த துயரம் அவளின் வளர்ப்புத்தாய் சுனயனாவை மிகவும் பாதித்தது.
லட்சுமணன் சிறிது காலத்திற்கு முன் சரயு நதியில் இறங்கி சித்தி அடைந்தான்.
லட்சுமணனை பிரிந்த தன் மகள் ஊர்மிளையின் நிலையை எண்ணி எண்ணி சுனயனா அளவற்ற துக்கமடைந்தாள்.
இதெல்லாம் முடிந்ததே, இனியாவது சற்று நிம்மதியாக இருக்கலாம் என்றால் இதோ இப்போது அயோத்தியிலிருந்து வந்திருக்கிறது மிக கடுமையான செய்தியைத் தாங்கிய ஓலை.
ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்களாம்.
சீதை காலமானாலும் தன் மகனைப் போன்ற ராமனை அடிக்கடிப் போய்ப் பார்த்து ஆறுதல் அடைந்தாள் சுனயனா.
இனி அதுவும் இல்லை என்ற போது மனது தாங்கமாட்டாமல் அழுதாள். .
அவளது புதல்வி ஊன்மிளை மற்றும் தனது தங்கை மகள்கள் மாண்டவி, சுருதகீர்த்தி மூவரும் கணவரை இழந்தவர்களாய்த்தான் இனி வாழவேண்டும்.
‘ராமனும், பரதனும், சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பதுதான் நல்லது என்றார் ஜனகர்.
அவர்கள் இருவரும் தேரில் அயோத்தி மாநகரை வந்தடைந்த போது, அயோத்தி வீதிகள் மக்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
மக்கள் அனைவரும் சரயு நதிக்கரையில் கூடி இருந்தனர்.
தேரை சரயு நதிக்கரைக்கு விடச் சொன்னார் ஜனகர்.
நதியின் கரையில் ராமனும் பரதனும் சத்ருக்கனனும் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள்.
மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும் இல்லை.
அவர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் மாமனார் ஜனகரை வணங்கினார்கள்.
பின்னர் சுனயனாவிடமும் ஆசிபெற்றனர்.
பரதன், சத்ருக்கனன் இருவரும் மாண்டவியிடமும் சுருதகீர்த்தியிடமும் விடை பெற்றுக் கொண்டார்கள்.
அவர்கள் மூவரும் ஒன்றாக சரயு நதியின் பெருகிய வெள்ளத்தில் இறங்கி அதன் ஓட்டத்தோடு சேர்ந்து வெள்ளத்திலேயே மெல்ல மெல்ல நடக்கலானார்கள்.
சிறிது நேரத்தில் சரயு நதி நீர் அவர்கள் தலைக்குமேல் ஓடத்தொடங்கியது.
அவர்கள் ஆற்றில் மறைந்ததும் “ராமா ! ராமா !” என கத்தி கதறினர்.
ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி மூவரிடமிருந்தும் பெரிய விம்மல்கள் வெடித்தெழுந்தன.
அவர்கள் தங்கள் தாயைக் கட்டிக் கொண்டார்கள்.
தாய் சுனயனா அவர்கள் மூவரின் தோள்களையும் தட்டி தன்னால் இயன்ற அளவு அமைதிப்படுத்த முயன்றாள்.
அவள் விழிகளிலிருந்தும் கண்ணீர் இடைவிடாமல் வழியத் தொடங்கியது.
ஆனால் ஜனகர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
ஊர்மிளை வியப்போடு :
“தந்தையே ! ஸ்ரீராமர் நம்மைவிட்டு நிரந்தரமாய் பிரிந்துவிட்டாரே ! இனி நாம் அறத்தின் திருவுருவாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரைப் பார்க்கவே இயலாதே ! உங்களுக்கு வருத்தமாக இல்லையா ?”
ஜனகர் புன்னகையோடு சொன்னார்,
“மனித உடல் என்பது உறை,
ஆன்மா என்பது அந்த உறையிலிருக்கும் வாள்.
உடலுக்குத்தான் அழிவுண்டே தவிர ஆன்மாவுக்கு அழிவு கிடையாது.
உடல் பயன்படாத நிலை தோன்றுமானால் இறைச் சக்தி உடல் என்ற உறையிலிருக்கும் வாளை உருவித் தன கையில் வைத்துகொள்கிறது. அவ்வளவுதான்.
வாழ்க்கை அநித்தியமானதுதான்.
பிறக்கும்போதே இறப்பும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது.
எந்த நாள் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் எல்லோரும் ஒருநாள் இறக்கப் போவது உறுதி.
இதை என் மாப்பிள்ளைகள் உணர்ந்து விட்டார்கள்.
இந்தப் பிறவியில் நிறைவடைந்து விட்டார்கள்.
தாங்கள் வந்த கடமை முடிந்துவிட்டதை உணர்ந்து கொண்டு விட்டார்கள்.
அதனாலேய தாங்களே விரும்பி சித்தி அடைந்து விட்டார்கள்.
ஆனால் அவர்களுக்கு மரணமென்பது இல்லை.
ஏனென்றால் என் மாப்பிள்ளைகள் நால்வரும் என் வளர்ப்பு மகள் சீதையும் தெய்வ வடிவங்களே என்ற பரம இரகசியத்தை நான் முன்பே அறிவேன்.
அவர்கள் மண்ணுலகில் மானிடர்களாக வசிக்கும்போது அந்த ரகசியத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை வழங்கப்படவில்லை.
இப்போது அவர்கள் விண்ணுலகம் சென்று விட்டதால் நான் அதைப் பகிரங்கப்படுத்தலாம். !”
சுனயனா வியப்போடு கேட்டாள் .
“அப்படியானால் நம் மாப்பிள்ளைகள் தெய்வங்களா ? என் செல்ல வளர்ப்பு மகள் தெய்வமேதானா ? “
“ஆமாம். ஒன்றை யோசி. அவர்கள் தெய்வங்களாய் இல்லாவிட்டால் இத்தனை துன்பங்களை எப்படிச் சாந்தமாகத் தாங்கியிருக்க முடியும் ?. மானிடர்கள் அறநெறியில் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே திருமால் இவ்விதம் அவதாரமெடுத்து வந்தார். அவதார நோக்கமும் காலமும் பூர்த்தியடைந்து விட்டதால் தெய்வங்கள் விண்ணுலகிற்கு சென்றுவிட்டன. ஆனால் மண்ணிலும் அவர்கள் சக்தி நிரந்தரமாய்க் குடியிருக்கும். அவர்களை பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். இனி அவர்களுக்கு ஊர்கள் தோறும் ஆலயங்கள் எழும். அந்த ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களில் அவர்களின் அருள் சக்தி குடி கொள்ளும்.”
“இதெல்லாம் உண்மைதானா ? இதற்கு உங்களால் சாட்சி காட்ட முடியுமா ?”
“சாட்சி என்ன என் தெய்வம் ராமன் திருவருளால் உங்களுக்கு ராமனையே நேரில் காண்பிக்கிறேன். எல்லோரும் அண்ணாந்து ஆகாயத்தை பாருங்கள் !”
ஜனகர் ஒரு கட்டளைபோல் இந்த வாக்கியத்தை கூறினார். பிரமிப்போடு மக்களும், அவரின் மனைவியும், மகள்களும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள்.
வானில் சடாரென மேகங்கள் விலகி ராமபிரானும் சீதா தேவியும் லட்சுமணனும் பரத சத்துருக்கனர்களும் வலக்கரம் உயர்த்தி அனைவருக்கும் ஆசி கூறினார்கள்.
எல்லோரும் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் போதே விந்தையான பல சம்பவங்கள் நிகழ்ந்தன.
லட்சுமணன் உடல் ஒரு கனத்தில் ஆதி சேஷனாக மாறியது. ராமன் திருமாலாய் மாறி அந்தப் பாம்பணையில் பள்ளி கொண்டான்.
மறுகணம் பரத சத்துருக்கனர்கள் சங்கு சக்கரங்களாக மாறி திருமாலின் கரங்களில் பொருத்திக் கொண்டார்கள்.
ஜனகரின் வளர்ப்பு மகளான சீதை இப்போது லட்சுமி தேவியாக விண்மகளானாள்.
அவள் திருமாலின் பாதங்களைப் பிரியமாய்ப் பிடித்துவிடத் தொடங்கினாள்.
மெல்ல மெல்ல அந்த காட்சி மறைந்தது. மேகங்கள் மீண்டும் வைகுண்டத்திற்குத் திரையிட்டன.
மக்களனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு
‘ ஜெய் ஸ்ரீராம் ‘
என உரத்து முழங்கினார்கள்.
அந்த முழக்கம் அந்த பிரதேசமெங்கும் நிறைந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரின் குரல்களும் அந்த முழக்கத்தில் ஒன்றாய் இணைந்தன.
ஜனகரின் மனைவி சுனயனாதேவி புதல்விகள் மாண்டவி, ஊர்மிளை, சுருதகீர்த்தி அனைவரின் மனங்களும் இன்னதென்றறியாத சாந்தியிலும் நிறைவிலும் ஆழ்ந்தன.
அவர்கள் இந்த அற்புத காட்சியைத் தங்களுக்குத் தரிசனம் செய்வித்த ஜனகரை நோக்கிக் கரம் கூப்பி வணங்கினார்கள்.
ராஜரிஷி ஜனகரின் மனம் ‘ராம ராம’ என ஓயாமல் ஸ்ரீராமபிரானைத் தியானம் செய்யத் தொடங்கியது.
படித்ததில் பிடித்தது