மக்களே இன்னொரு ஜீவன் anonymous லவ் லெட்டர் எழுதி இருக்காப்ள. படித்துவிட்டு அந்த ஜீவனை கண்டுபிடித்து செய்முறைகளை செய்யவும்.
*****************************************************************************************************************
என் மனதை கொள்ளை கொண்டவனுக்கு?? (தீபன் - பூவும் நானும் வேறு - க்ருஷ்ணப்ரியா நாராயண்)
நீ நிஜமல்ல நிழல் என்று அறிவு சொல்கிறது ஆனால் உன்னில் மயங்கி கிடக்கும் என் மனத்தின் தேடல் இந்த மடல்
எந்த கணத்தில் உன்னில் என்னை இழந்தேன் என்பதைத் தேடித்தேடி களைத்து விட்டேன்..?? இதோ என் தேடல்களைப் பட்டியலிடுகிறேன்... ??
ஆறடி உயரம் அழகிய புருவம் ஆப்பிள் போல இருப்பானே என்று உன்னை எனக்கு அறிமுகப்படுத்தவில்லை..
பணக்காரர்களின் அந்த கேளிக்கை விடுதியில் உன் அறிமுகம் அதில் தெரிந்த உன் சுயதிமிரா?
முயற்சியும் பயிற்சியுமே எனது தன்னம்பிக்கை என்ற உன் உழைப்பா?
சில வல்லூறுகளின் செயலால் மாறிய உனது சுயசிந்தனையா?
அந்த சுயசிந்தனையிலும் மாறாத உன் சமூக சிந்தனையா?
நண்பர்களின் நம்பிக்கையை பெற்ற உன் நட்பின் உறுதியா?
வஞ்சத்தால் பாதித்த தங்கைக்கு அரணாய் நின்றாயே அப்போதா?
தீபப்பிரகாஷனான நீ இருளில் அரங்கேற்றும் செயலுக்கு வெளிச்சம் போடாத உனது தன்னடக்கமா?
இரும்பு பெண்மணி திவ்யபாரதியையே அயரவைக்கும் உனது செயலா? அல்லது அவருடனான உனது உரையாடலா?
வஞ்சகனின் தங்கை என்றாலும் நியாயத்தை பார்த்த உனது குணமா?
எந்த சூழ்நிலையிலும் அசராத உனது குறிக்கோளா?
எதில் வீழ்ந்தேன் என்று அறிய முடியவில்லை...
இந்த கற்பனை உலகம் சொந்தமல்ல என்று தெரிந்தும் என் பேதை மனத்திற்கு உன் மேல் தான் காதல் வருகிறது.. இதில் உன் மேல் குற்றமில்லை உன்னை படைத்த ஆத்தர்
@KPN அவரது எழுத்து வடிவம் என்னை உன்னில் மயங்க செய்கிறது.. மீளவும் விருப்பம் இல்லை..
கனவிலாவது என் கரம் சேர்வாயா தீபனே???
இப்படிக்கு
ஏந்திழையின் மனம்